ADS 468x60

29 September 2016

இயலுமானவரை இயன்றவரிடமிருந்து இயலாதவர்களுக்காய்!!!!


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் எல்லா வகையான கிராமப்புற மக்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணமிது. பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து இங்கு ஊழிய வளம் புறக்கணிக்கப்படுவதனாலும், காலநிலை மாற்றம், புதிய நவீன இயந்திர இறக்குமதி, தொழில்நுட்ப வசதி இவற்றினால் பாரம்பரியமாக  நிலத்தினையும் நீரினையும் நம்பி இருந்த ஒரு பரம்பரை படிப்படியாக முடமாக்கப்பட்டு வருவதனையும் அதுபோல் அவர்கள் மாற்றுவழி இன்றி மன உழைச்சலுக்குள்ளாகி பல தீய விடயங்களில் திசை மாறிக்கொண்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

20 September 2016

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள்

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள் மக்களிடையே மிக்க அதிர்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. ஏனைய விபத்துக்கள்போல் வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள்  அதிகாித்துள்ளன.

அந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல், உள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.