ADS 468x60

11 November 2016

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை, இல்லாமல் மாறும் பொருள் தேடி, அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம், இருந்திடும் என்னும் கதை மாறும். இந்தக் கனவோடு மட்டும் வாழாமல் சமநீதி பெற்று மற்றவரையும் சமநீதியுடன் வாழவைக்க எண்ண வேண்டும். போடுங்க போடுங்க பார்க்கலாம் என்று சொல்ல இது என்ன கிடுகு மட்டை வியாபாரமா? பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே!. யாரிடம்போய்ச் சொல்லட்டும். ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க, இயற்கை தந்த பரிசாகும், இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க, நினைத்தால் எவர்க்கும் அழிவாகும். நல்லதை வளர்ப்பது அறிவாற்றல், அல்லதை நினைப்பது அழிவாற்றல்... நல்லதை நினைக்க எல்லோரும் தலைப்படுங்கள்

0 comments:

Post a Comment