ADS 468x60

16 November 2016

கொம்புச்சந்தியானின் இசைக்கப்படாத எழுத்துகள்!!

கொம்புச்சந்தி அப்பன் மீது பாடிய எனது இசைக்கப்படாத எழுத்துகள்!!

இலங்காபரி உயர்ந்த இறைவா

காவல் நீயே கலியுக வரதா
காலடி நிதம் வந்து தொழுதேன்- உன்
காலடி நிதம் வந்து தொழுதேன் -நின்
அருள் மழையில் தினம் நனைவேன்

நித்தமுன் தரிசனம் நீங்காத பாக்கியம்
நான் என்றும் பாடனும் நாம சங்கீர்த்தனம்
நாயகனே நானுன் பாதம் அர்ப்பணம்
இலங்காபரி உயர்ந்த இறைவா  நின் சந்நிதானம்
(கவல் நீயே கலியுக வரதா)

ஓம் எனும் பொருளே ஓங்கார நாதனே
ஓளவைக்கு அருள் செய்த ஆனை முகத்தோனே
ஆறுமுகன் அண்ணன் ஆறுதல் தருவோனே
கொடியவர் கூடியே இடர் தரும் எனக்கு
(கவல் நீயே கலியுக வரதா)

மேலுயர் தெய்வமே பிள்ளையாரப்பா

மீன்மகள் பாடிடும் மட்டு மண்ணிலே-புவி
மேலுயர் தெய்வமே பிள்ளையாரப்பா
சுவாமியே சரணம் ஐங்கரனே!!
அப்பமொடு முப்பழம்
ஆசையோடு உண்பவா
ஆறுமுக வேலனுக்கு
ஆண்ணனாக நின்றவா

மீன்மகள் பாடிடும் மட்டு மண்ணிலே-புவி
மேலுயர் தெய்வமே பிள்ளையாரப்பா

அங்குசம் கையிலே
அன்பெலாம் கண்ணிலே
மோதகம் வாயிலே
மோனமோ என்னிலே
ஓளவைக்கும் கைலாசம் காட்டியவன் நீ
ஓம் சரணம் சரணம் சரணம் சரணம் சுவாமியே
ஓம் சரணம் சரணம் சரணம் சரணம் ஐயனே கணேசா

வேள முகத்தானே-ஓம்
வேத முதல்வனே
வேண்டுவோர்கு அருள்கொடுத்து
வுpனைகள் தீர்க்கவேண்டும்
ஞான முதல்வனே
குணநாத மங்களம்
உள்ளம் உருகப் பாடுகிறேன்
ஓடி வரவேண்டும் ஐயா
கலியுக ரட்சகனே காட்சிதர வேண்டுமையா
ஓம் சரணம் சரணம் சரணம் அப்பா சரணம் சுவாமியே
ஓம் சரணம் சரணம் சரணம் அப்பா சரணம் ஐயனே கணேசா

சிலையென உயர்ந்த நின் திருவுருவம்

தேற்றாத்தீவினில் உந்தன் திருநாமமே
தேவர்கள் தொழுதிட அபிஷேகம்
பக்தர் கோடி ஒன்றுகூடி வந்தனம் செய்வோம்
பக்தியாலே சேர்ந்துபாடி பஐனை செய்வோம்

கலையினில் ஒளிரும் இன்ப தேனூரில்- பெரும்
சிலையென உயர்ந்த நின் திருவுருவம்
மலையென அருளும் உந்தன் மனம்வேறு- எங்கும்
விலை கொண்டு கொடுத்தாலும் கிடையாது
மூவுலகம் தொழும் முழுமுதலே எம் ஐயனே
முதல் முதலாக உலகிலுயர்ந்த என் மெய்யனே
மூத்தவனே ஐயா கணேசா!
முழுமுதலே ஐயா கணேசா!!

இகபர சுகம் தரும் மறையோனே- நீ
எழிமையின் இலக்கணம் இறையோனே
எதைக் கொண்டு படைத்தாலும் விருப்பமுடன்- உண்டு
ஏற்றமிகு வாழ்வு தரும் கணணாதா
கொம்புச்சந்தி ஆண்டவனே எம் கணபதியே!
கொம்பு முறித்து வேதம் தந்த வித்தகனே
கணநாதா சரணம் கணநாதா
கணநாதா சரணம் கணநாதா

வந்தமர் சொந்தமே கணேசா

வந்தனம் வந்தனம் கணேஷா அப்பா
வந்தமர் சொந்தமே கணேசா
மண்ணெல்லாம் மகிமையானதே- எங்கள்
மனம் இன்று மகிழ்ந்தாடுதே இன்பம்.

ஒருதரம் நீ வணங்கிவிட்டால்
உள்வந்து உன்துன்பம் பனிபோல நீங்கும்
ஓங்காரப் பேரருள் அல்லோ
கொம்புச்சந்தி ஐயனென பேரெடுத்து
கோபுர வாசலிலே நீ அமர்ந்தாய்
வந்தோரை வாழவைக்கும் தேனகத்தில்
மட்டக்களப்புக்கு இது பெருமை- என்றும்
மட்டில்லா அருள் கலியுகனே

குறையுடன் நீ இருந்து விட்டால்
கும்பிட்டு வந்துபாரு நிறைசெல்வம் பெருகும்
கோபுரக் கணபதி அல்லோ
அழுதவர்கு அருள்கொடுத்த பிள்ளையாரப்பா
அற்புதம் நிறைந்த பேர் ஒளியே- என்றும்
வற்றாத இன்பம் நல்கும் இறையோனே
வாரிக் கொடுப்பதில் இவன் வள்ளல்
வாழ வழிதரும் பிள்ளையாரே

0 comments:

Post a Comment