ADS 468x60

27 December 2016

இத்தனையும் மனிதர்களாம்...

புரிந்து நடப்பவரும்
புரியாமல் கிடப்பவரும்
தெரிந்து கொடுப்பவரும்
திட்டமிட்டு கெடுப்பவரும்

துன்பத்தை துடைப்பவரும்
இன்பத்தை படைப்பவரும்
உறவை உடைப்பவரும்
உன்மைகளை அடைப்பவரும்

சாத்திரம் என்று சொல்லி
ஆத்திரமூட்டுவோரும்
பாத்திரங்கள் மாறி மாறி
பண்பாடு பிறள்வோரும்

ஏற்றதை நடத்த எண்ணி
எடுத்து நடத்தாதோரும்
இல்லாததை சொல்லி சொல்லி
உள்ளதெல்லாம் மறைப்போரும்

சில்லறை குறைகள் சொல்லி
சிறப்பை  சிதைப்போரும்
வருவோன் போவோனைக் கேட்டு
வாழ்கையை மாற்றுவோரும்

வெண்ணை திரளும்போது
பானையை உடைப்பவரும்
கண்ணை மூடிக்கொண்டு
காலை வாருவோரும்

சொன்ன வார்தையை துலைத்து
துரோகி ஆனோரும்
சொல்லாததை செதுக்கி
இல்லாத பொய் புனைவோரும்

வாலையும் தலையும் காட்டி
வேஷங்கள் போடுவோரும்
எத்தனை எத்தனை பேர்கள்
இத்தனையும் மனிதர்களாம்...

0 comments:

Post a Comment