ADS 468x60

19 December 2016

மட்டக்களப்பு மக்களின் மறுமலர்ச்சி

//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு // 
இக்கட்டான நிலையில் வாழும் மக்களின் கல்வியினை மேம்படுத்தும் திட்டத்தினை சரியாக இனங்கண்டு மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருமலை மாவட்டங்களில் உள்ள யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை மீள் எழுச்சி செய்யும் வண்ணம் கனடாவில் நிறுவப்பட்டுள்ள ChiDAES Canada (Children Development Association of Eastern Sri Lanka – Canada) எனும் நிறுவனத்தினரால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 5 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள பெறுமதிமிக்க புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகள் என்பன வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக உறுகாமம் மட்/ சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 89 மாணவர்களுக்கு இவை 10.02.2013 அன்று சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளையும் எமது குழுமத்தினர் சிரமம் பாராது சிடாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஏற்பாடு செய்ததுடன், அந்த நிகழ்வை சிறப்பிக்க எமது குழுவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அங்கத்துவர்கள் பிரசன்னமாகி இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் புதிய நம்பிக்கையினை எமது தமிழ் குழந்தைகள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்மை தெட்டத்தெளிவாகும்.




0 comments:

Post a Comment