ADS 468x60

19 December 2016

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ??

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
'உங்கள் உறுப்பினர்கள் இந்த மிகவும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு வாஞ்சையுடன் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதற்க்கிணங்க பாடசாலைக்கு கொண்டு செல்லும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் களிமடு மற்றும் கற்ப்பக்கேணியில் இருந்து பாவக்கொட்டிச்சேனை மற்றும் இருட்டுச்சோலைமடு போன்ற தூர இடங்களுக்கு பாடசாலைக்கு செல்லும் 79 பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தமை உண்மையில் எங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது' என இங்கு வந்திருந்த கிராமசேவகர் பாராட்டினார். மேலே குறித்த கிராமங்கள் வவுனதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அழகான அதுபோல் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் மிகப் பின்தங்கிய கிராமங்களாகும். 'பாலும் தேனும் பனைக்கதிர் நெல்லும், சாலும் சாலும் எனத்தகு நாடு' என்பதற்க்கிணங்க பாலும் தேனும் மேவி வழிந்து கிழக்கு கரையில் இருந்து வருகின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த போடிமார்கள் வாழ்ந்த இடத்தில் இன்று கூலிவேலை செய்யும் கூட்டங்களை உருவாக்கி விட்டிருக்கும் கடந்த மூன்று தசாப்த கசப்பான காலங்கள் அதே மூன்று தசாப்த காலம் பின்னிற்கின்ற ஒரு பாவப்பட்ட மக்களாக எம்மினத்தை மாற்றியுள்ளமை கொடுமையிலும் கொடுமை. Feb, 22.2013.





0 comments:

Post a Comment