ADS 468x60

17 January 2017

எங்கள் நாட்டின் எருமைக்கும் இங்கிதம் தெரியும்-

எம்மக்கள்
கருமையாக இருந்தாலும்
வெள்ளை உள்ளம் படைத்தவர்கள்
நாடி வருவோரை எல்லாம்
ஓடி ஓடி உபசரிப்போர்
இதனாலோ எம்மை
வந்தோரை வாழவைப்போர்- என
சொந்தம் கொண்டாடுகிறார்

எல்லாம் இருக்கிறது -இங்கு
நில்லாமல் ஓடும் நதி
நினைப்போர்க்கு அருளும் பதி
நீள்கடலில் உதிக்கும் மதி
நெல்மணிகள் கூடடும் சுதி
இல்லை,
கல்வியில் மாற்றம்
தொழிலில் ஏற்றம்
அரசியலில் மேன்மை
அறிக்கையில் உன்மை
நடத்தையில் விழிப்பு
மதுவில் ஒழிப்பு
இன்னும் இன்னும் வேண்டும் மாற்றம்- இதுவே
மட்டக்களப்புக்கு தரும் அழகிய தோற்றம்.

0 comments:

Post a Comment