ADS 468x60

17 March 2017

அற்புதம் பல கூறும் கதிர்காம யாத்திரை,


இப்பொழுது அடியவர்கள் எல்லாம் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற தலமான கதிர்காமத்துக் வனங்களின் மத்தியால் நடந்து செல்லத் தொடங்கியுள்ளனர். அங்கு அருள்பாலிக்கும் கந்தனை வழிபடச் செல்வதை கதிர்காம யாத்திரை என்பர். கிட்டதட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழ் மன்னனான எல்லாளனுடனான போரில்இ சிங்கள மன்னனான துட்டைகைமுனு இக்கோயிலில் நேர்த்திக்கடன் வைத்ததாகவும்இ போரில் வென்றப் பின்னர்இ இக்கோயிலில் நேர்த்திக்கடனை நிறைவேற்றியதாகவும் மகாவம்சம் நூலில் குறிப்புகள் உள்ளன. அதேவேளை இக்கோயிலின் வரலாறு அதற்கும் முன்னதான நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

என்னாலும் இன்னொருவரை அப்படியே பார்த்து அதேபோன்று வரைய முடியும்.

ஒரு காலத்தில் நானும் ஓரளவு வரை கலையில் வல்லவன்தான். ஆலயங்கள், பாடசாலை, பல்கலைக்கழகம், மற்றும் விளையாட்டுப் போட்டிகள் என்ற எல்லா இடங்களிலும் என் கைவண்ணம் இருந்தது. என்னால் நிறைய நிறைய போஸ்ட்டர்கள், வன்னர்கள், கலைத் தோரணங்கள் என்றெல்லாம் படைப்புகள் நீண்டு சென்றன.
முந்திய தசாப்தத்தில் எனது பொழுதுபோக்கு சித்திரம் வரைதலாகவே இருந்தது. எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இருப்பினும் அதனை மேம்படுத்த போதிய வசதிகள் என்னிடம் இருந்ததில்லை, அதுபோல் எனக்குள் இருந்த இந்த சிறு திறமையை யாரும் கண்டுகொள்ளவும் இல்லை. அதனால் அது பெரிதாக நிலைக்கவில்லை. இருப்பினும் அது எனக்கு இறைவன் தந்த கொடையாக நினைக்கிறேன். நான் 90ம் ஆண்டுகளில் வரைந்த மகாத்மதகாந்தி. இதுதான் எனது முதல் படம். அதை இங்கு பிரசுரிக்கிறேன்.

04 March 2017

கனிவின் பொக்கிசம்,

என்னை பிள்ளை என்று
சொல்லும் போதே
எல்லை இல்லாது போகுது மனம்

அன்பினால் ஆசுவாசப்படுத்தும்
கனிவின் பொக்கிசம்,
கரைகள் இல்லாத பாராட்டை
திரைகள் போடாமல் தெரிவிக்கும்
உங்கள் உத்தமம் எப்பொழுதும்
உங்களை ஆசிர்வதிக்கும் தாயே!