ADS 468x60

18 April 2017

கல்வியில் முன்னிற்கும் இலங்கைப் பெண்களின் ஊழியச்சந்தையின் நிலைப்பாடு

உலகலாவிய ரீதியில்; கிழக்கின் நாகரிகம் எப்பொழுதும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. பெண்னே குடும்பத்தின் தலைவியாகவும், அந்தக் குடும்பத்தின் பாரங்களை சுமக்கும் ஒருத்தியாகவும் இருந்து வந்துள்ளாள். அதனால்தான் பல கீழைத்தேய நாடுகள் பெண்களை தெய்வமாக வணங்கி வருகின்றமை ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது. 

இதனால் பண்டைக் காலத்தில் சமுகத்தில் அவர்கள் மதிப்பினையும், முக்கிய வகிபாகத்தினையும் கொண்டிருந்தனர். இந்த நிலை மேலைத்தேயத்தவர்களின் வருகையின் பின்னரே அவர்களது எழுத்துக்களால், சிந்தனைகளால் மற்றும் விமர்சனங்களால் மாற்றடைய ஆரம்பித்தது. அத்துடன் பல நாடுகளை அவர்கள் கைப்பற்றி ஆளத்துவங்கியதுடன் சமுக அந்தஸ்த்து ஆண்களிடம் கைமாறியது. இவர்கள் மதம், மற்றும் ஆயுதம் என்பனவற்றினை கருவியாக கையிலெடுத்து போராடியமையூடாக அவர்களை சமுகத்தில் ஆஐானபாகுவாக காட்டியது எனலாம்.

மக்களின் மனதில் நிற்பவர் யார்?

'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்?'  என்கின்ற கேள்விக்கு பதிலாக மனிதன் மனிதனாக, மனிதனுக்காக வாழுகின்றபோதுதான் பிறர் மனதில் நீங்காத ஞாபகத்தினை விதைத்துவிடுகிறான் என்பது பொது. இவ்வாறு அகமும் புறமும் நேர்மறையான முறையில் அனைத்து காரியங்களையும் செய்து, சாதித்து எமது பிரதேச மக்களின் மனதில் என்றும் நீங்காத இடத்தினைப் பிடித்து, மறைந்தும் மறையாமல் அனைவரதும் நன்மதிப்பினைப் பெற்று நிற்பவர்தான் இறைபதம் அடைந்த அமரர் பெ.வ.ஆறுமுகம் ஐயா அவர்கள்.

அன்னாருடன் இரண்டாவது தலைமுறையின் வரிசையில் பல காலம் கலை மற்றும் ஆண்மீகப் பயணத்தில் ஒருங்கே செயலாற்றியவன் என்ற முறையில், இவர் இன்றும் எவ்வாறு மக்கள் மனதில் நிலையாக நிற்கின்றார் என்பதனை அன்னாரது கலை, கல்வி மற்றும் சமூக ஆண்மீகப் பணிகளின் ஊடாக நிறுவலாம் என எண்ணுகிறேன்.