ADS 468x60

29 June 2017

மட்டக்களப்பில் கேடு விளைவிக்கும் புற்றுநோய்க்கு சூடு வைக்கும் கருவி அன்பளிப்பு..

"இலங்கையிலயே கிழக்கு மாகாணத்தில்தான் அதிகளவான புற்றுநோயளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்னும் சுகாதார அமைச்சின் அதிர்ச்சி தகவல் அனைவருக்கும் தெரிந்த விடயமே'" இருப்பினும் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களுக்குள் பாரிய உட்கட்டுமான வளர்ச்சிகள் ஏற்ப்பட்ட போதிலும் சுகாதாரம், வாழ்க்கைத்தர உயர்வு என்பன பெரிய அளவில் ஏற்படவில்லை என்பது கசப்பான உன்மை.

உலகில் வளர்ந்த நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து காணப்படுவதற்கு அவர்களால் அனுபவிக்கப்படும் தரம் வாய்ந்த அடிப்படை வசதிகளே காரணங்களாகும். கடந்த யுத்த காலத்தில் குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழுகின்ற மக்கள் இடப்பெயர்வு, வாழ்வாதார இழப்பு, உயிர் இழப்புக்கள், காரணங்களாக தங்களது அடிப்படை வசதிகளைக்கூட அனுபவிக்க முடியாதவர்களாக இருந்து விட்டமை துரதிஸ்ட்டமே.

குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு..

ஜோயல் J.R  இன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  ''தேவதை Returns'' குறும்படத்தின்  வெளியீட்டு நிகழ்வு, நேற்று   25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனைநெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

திரு. சபா. சபேசன் தலைமையில் இடம்பெற்ற   இந் நிகழ்வில் என்னுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. வீ.தவராசாவும், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  ஆர். முரளீஸ்வரனும்  கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தனர்.

28 June 2017

எல்லைக் கிராமங்களை எடுத்தேத்துதல்- 40ம் கொலனி

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையானது மற்றுமொரு தொகுதி இசைக்கருவிகளை 40 ஆம் கொலனியிலுள்ள வம்மியடியூற்று சிவசக்தி கலாமன்றத்திற்கு 26.06.2017ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக பல கலையாற்றுகை நிகழ்வுகளையும் சிறுவர்கள் அரங்காற்றுகை செய்தனர். அந்தச் சிறுவர்களுக்கு செய்த சிறுவர்களுக்கு பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

27 June 2017

சத்துணவுத் திட்ட மீளாய்வு- சுரவணையடியூற்று பாலா் பாடசாலை

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் ஒருங்கிணைப்பில் Nick & Nelly foundation  நிதியுதவியுடன் சுமார் ஒரு மாத காலமாக ஆரம்பிக்கப்பட்ட பாலர் பாடசாலைக்கான சத்துணவு வழங்கும் திட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்யுமுகமாக இன்று பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரகள்;, சங்கங்கள், கழகங்களின் பிரதிநிதிகள் போன்றோரைச் சந்தித்து இந்நிகழ்ச்சித் திட்டத்தின் குறை நிறைகள் பற்றி கலந்துரையாடப்பட்டது. 

24 June 2017

தலைவர்களாக வரத் தகுதியானவர்கள்!

இந்த முகங்களில் நீங்கள் எதை படித்துக் கொள்ளுகிறீா்கள்! இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.

21 June 2017

பெற்றவா்கள் எல்லாம் அப்பாக்கள்!

கூடு கட்டும் குருவி
வயலில் பாயும் அருவி
தோகை விரிக்கும் மயில்
தொடர்ந்து பாடும் குயில்

வண்டி இழுக்கும் காளை
பொதி சுமக்கும் கழுதை
நிழல் தரும் மரம்
நிலவினை தொட்டவர்
அத்தனையும் அப்பாக்கள் தான்

இருந்தும்,

16 June 2017

நஞ்சை உண்ணுகிறோம்!

எம்மைப் பொறுத்தளவில் உழவுத் தொழில் அல்லது விவசாயம்; என்பது உணவு மற்றும் பிற பயன்பாடுகளுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், கால்நடை வளர்ப்பையும் குறிக்கும். வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவ்வியற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான். 

நம்புங்கள் முருகன் நல்லவன் .


நான் சிறு வயதில் அப்பாவுடன் மாரிப்போக வேளாண்மை செய்வதன் நிமித்தம், ஆலயடி முன்மாாிக்குள்ள உழவுவதற்காக கலப்பையை கொழுவி இரண்டு வெள்ளை மாடுகளை விரட்டிக்கொண்டு மதிரங்கேட்டியை மரத்தில் வெட்டி எடுத்து, காலைவேளையில் கட்டோரமாக வில்லுக்குளம் நோக்கி நடந்த நாட்கள் ஞாபகம் வருது.

06 June 2017

நதியாக நான் மாறவேண்டும்

நதியாக நான் மாறவேண்டும்-அதில்
சுதியோடு மீன்பாட அலை பாய வேண்டும்
கதிராக நான் மாற வேண்டும்-களத்தில்
கவிவந்து செவியோரம் தேன்பாய வேண்டும்
கடலாக நான் மாற வேண்டும்-மறவர்
துயில்கொள்ள மடி தந்து தாலாட்ட வேண்டும்..

04 June 2017

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 02

என்னதான் இருந்தாலும் '''பழையன கழிதலும், பதியன புகுதலும் வழுவல.'' என்கிறது தொல்காப்பியச் சூத்திரம் சொல்லுவதுபோல் காலத்திற்கும், தேவைக்கும், சூழலுக்கும் பொருந்தாதவற்றை தவிர்த்துவிடுவதும், உகந்தவற்றை புதிதாக உள்வாங்கிக் கொள்வதும் தவறல்ல. ஆக இது பண்பாட்டிற்கும் பொருந்தும். இன்னுமொருபடி சொல்வோமானால் மாற்றம் என்ற சொல் வேண்டுமானால் மாறாமல் இருக்கலாம். ஆனால் மாற்றம் நிகழ்ந்துகொண்டேயிருக்கும். என்றார் கால்மாக்ஸ்.

இதைத்தான் மானிட இயங்கியல் என்கிறார்கள். பண்பாடும் இவ் மனிதஇயங்கியல் வயப்பட்டதுவே. இன்றைய காலத்தின் தொழில் நுட்பவளர்ச்சி, உலகமயமாக்கம், மனிதத் தேவைகள், அரசியல், பொருளாதார சமூகவியல் நிலைகள். பண்பாட்டியல் கூறுகளில் மாற்றங்களையும், மருவல்களையும் ஏற்படுத்துவது தவிர்க்கமுடியாதது.

மட்டக்களப்பின் வரலாற்றுப் புத்தகத்தில் புரட்டிப் படிக்கவேண்டிய ஒருவா்.

நெடு நாள் ஆசை ஒன்று, அது மட்டக்களப்பின் முது பெரும் அரசியல், இலக்கிய, கலை ஆர்வமிக்க ஒரு பேராளன் ஒருவரை பார்க்க வேண்டும் என்றுதான். அது தானாகவே எனக்கு கனிந்து வந்தது ஒரு நாள். அவரின் வாழ்க்கை பற்றி அறிய ஆசைப்பட்டேன், நேரில் சந்தித்தேன், நிறையவே பகிர்ந்து கொண்டார், அது வேறு யாருமில்லை சொல்லின் செல்வர், நாவல்லவர் செல்லையா இராசதுரை அவர்கள் தான். 

அந்த நாட்களை தேடிப்பார்கின்றேன்- தொடர் 01

 'நாங்கெல்லாம் அந்தக்காலத்தில ஒரு கிணற நாலுபேரு சேந்து தோண்டி முடிப்பம், பக்கத்தில ஒரு கள்ளுக் கொடம் இருக்கும், மரவள்ளிக் கிழங்கு அவியல், கச்சான், கடல இதெல்லாம் வந்தவண்ணம் இருக்கும், கிணறும் முடிய கள்ளுக் கொடமும் முடியும்' என வீர தீரமாய் அப்போ வேலை செய்தாங்களாம் இப்படி  ஒருவர் சொன்னார். 

சனத்தொகை குறைந்த காலம், இயந்திர மயமாக்கல் இல்லாதிருந்த காலம் மனித நாகரிகம் வளர்ச்சியின் ஆரம்பத்தில் மனிதாபிமானத்தை மாத்திரம் கொண்டிருந்த காலம், இவன் என்ன செய்யுறான், அவள் என்ன செய்யிறாள் என யாரும் நோட்டமிட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அன்று சிசிரிவி கமறா, கூகுள் மப், ஸ்மாட்போன் என்பன வந்திருக்கவில்லை, ஆனால் இன்று மாறிப்போச்சி உலகமே ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு வகையில் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

02 June 2017

சிலப்பதிகார பாட்டுடைத் தலைவிக்கு மட்டக்களிப்பில் மண்மணக்கும் சடங்கு..

கோடை மழை பெய்ய வேண்டும், கொடும்பாவம் அகல வேண்டும், நாடிவரும் அடியவர்கள் துன்ப துயரம் அறவேண்டும். பாடி ஓடி ஆடி வரும் அடியவர்கள் தேடி தேடி கண்ட பொருள், உன்மை, அறம், ஒழுக்கம் என பல உன்மைகளை இந்த சடங்கு விழாக்களுக்குள் புதைத்து மக்களை ஒன்றுபடுத்தி,  சகோதரத்துவம், ஒத்தாசை, விட்டுக்கொடுப்பு, விருந்தோம்பல், கொல்லாமை போன்ற நல்ல பண்புகளை புகட்டும் இந்த பண்பாட்டு மரபுகள் அன்று மட்டமல்ல இன்றும் நின்று நிலைப்பதை மீன் பாடும் தேனாட்டில் எங்கும் காணலாம்.

01 June 2017

மட்டக்களப்பு தமிழ் எல்லைக் கிராமங்களை எடுத்தேத்த என்ன வழி செய்கிறார்கள்!!

கானல்நீர் ததும்பும் காய்ந்த வயல்வட்டைகள், குன்றும் குழியுமான உடைந்த வீதிகள், தலையில் மொக்காடு போட்டு தண்ணீருடன் செல்லும் மங்கையர், கொம்பை நீட்டி குளத்தில்; குளிக்கும் எருதுகள் இடையிடையே வரண்டு போய் வாடி நிற்கும் விருட்சங்கள் என பல காட்சிகளை கடந்து தும்பங்கேணி வம்மியடி சந்தியில் கிறுகி ஒரு தீவகற்பமாக இருக்கும் துரவந்தியமேடு கிராமத்தினை அடைந்தோம். 'கண்களில் வரட்சி இருந்தாலும் சின்னக் கைகளில் செவ்வரத்தம் மாலையுடன் எங்களை வரவேற்க ஆரம்பமான சிறார்களின் சுதந்திரமான ஆரோக்கியமான அந்த பாடசாலை நாட்களை தேடும் கண்களை அடையாளங்காட்டிக்கொண்டிருந்தது அவர்களது முகங்கள்'