ADS 468x60

21 June 2017

பெற்றவா்கள் எல்லாம் அப்பாக்கள்!

கூடு கட்டும் குருவி
வயலில் பாயும் அருவி
தோகை விரிக்கும் மயில்
தொடர்ந்து பாடும் குயில்

வண்டி இழுக்கும் காளை
பொதி சுமக்கும் கழுதை
நிழல் தரும் மரம்
நிலவினை தொட்டவர்
அத்தனையும் அப்பாக்கள் தான்

இருந்தும்,வந்த நேரங்களை வயல்காட்டில் கடத்தி
சொந்தக் குழந்தை எமை
முந்தி இருக்க வைத்து
தந்தை மகற்காற்றும் செயலை
விந்தையாய் செய்தவர் அப்பா!

பிள்ளைகளை
பெற்றவா்கள் எல்லாம்
அப்பாக்கள் தான்- ஆனால்
பிள்ளைகளை ஆளாக்கியவா்கள்
மட்டும் தெய்வங்கள்!!

எல்லா அப்பாக்களுக்கும் இனிய வாழ்த்துகள்!

0 comments:

Post a Comment