ADS 468x60

29 June 2017

குறும்படத்தின் வெளியீட்டு நிகழ்வு..

ஜோயல் J.R  இன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ள  ''தேவதை Returns'' குறும்படத்தின்  வெளியீட்டு நிகழ்வு, நேற்று   25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கல்முனைநெற் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில் கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை நல்லதம்பி மண்டபத்தில் சிறப்பாக  நடைபெற்றது.

திரு. சபா. சபேசன் தலைமையில் இடம்பெற்ற   இந் நிகழ்வில் என்னுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் திரு. வீ.தவராசாவும், கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர்  ஆர். முரளீஸ்வரனும்  கலந்து கொண்டு வெளியீட்டு வைத்தனர்.
குறும்படத்தின் விமர்சன உரையை எழுத்தாளர் உமாவரதராஜன் அவர்களும், வெளியீட்டு உரையை அதிபர் திரு. ஜெ.டேவிட் அவர்களும், நிகழ்த்தினர். . அத்துடன் வரவேற்புரை ஓய்வு பெற்ற அதிபர்   திரு. சந்தரலிங்கம் அவர்களும், நன்றியுரையினை திரு. சௌவியதாசன் அவர்களும் நிகழ்த்தினர். நிகழ்ச்சியை பீ.எஸ். புவிராஜா தொகுத்து வழங்கினார்.

 ''தேவதை Returns''''  குறும்படம் ஜோயலின்  எழுத்து இயக்கத்தில், ரொமிஸின் தயாரிப்பில், ஜோயல், பேபி ஏஞ்சல் ஆகியோரின் நடிப்பில்  மிகவும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் கலைஞர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள், கல்விமான்கள் என பெருந்திரளானோர் கலந்து சிறப்பித்தனர்.  



0 comments:

Post a Comment