ADS 468x60

29 September 2017

எமது சிறுவர்களே எதிர்கால சமுகத்தின் முண்டுகோல்!

  உலகநாடுகளில் வாழுகின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொதுநலத் திட்டங்களுக்கும் செயல்வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக, 1954ம் திகதி ஒக்டோபர் முதலாம் திகதியை உலக சிறுவர் தினமாகப் பிரகடனப்படுத்தியது. 'இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள்', நாளைய எதிர்காலம் நன்றாய் அமைய இன்றய சிறுவர்கள் நல்ல பிரஜையாக உருவாக்கப் படவேண்டியது மிக அவசியமானதொன்றாகும். 

19 September 2017

கிராமப்புற சமுகத்தினிடையே விழிப்பேற்படுத்தும் மாணவர் எழுச்சி நிகழ்வு

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் எல்லைப்புறக் கிராமமான காக்காச்சிவட்டையில் உள்ள, பலாச்சோலை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (17.09.2017) ஒரு தொகை இசைக்கருவிகள், போஷாக்கு உணவு, மற்றும் அப்பியாசப் புத்தகங்கள் அத்துடன் சான்றிதழ்களும் என்பன வழங்கி பாராட்டி ஊக்குவிக்கப்பட்டனர்.

கிழக்கிலங்கை இந்து சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருணைமலைப்பிள்ளையார் ஆலய பிரதம குரு, களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின், மனிதவள அபிவிருத்தி சபையின் உதவிப்பணிப்பாளர் சி.தணிகசீலன், திரு.செ.ரமேஸ்வரன் சூழலியலாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், ஆலயத்தலைவர், மற்றும் நலன்விரும்பிகள், நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

18 September 2017

மட்டக்களப்பில் பத்தாயிரம் பனைமரம் விதைப்பு

யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலங்கையில் மனித உயிர்கள் மாத்திரமல்லாமல் வடகிழக்கின் தாயகப் பிரதேசத்தில் தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகக் கருதப்படும் பல மில்லியன் பனைமரங்கள் (கற்பக விருட்சம்) அழிக்கப்பட்டுள்ளன.
பனைமரம் தமிழ் மக்களின் வாழ்வாதாரமாக மாத்திரமல்லாமல் இயற்கையின் அழகாகவும், அனர்த்தப் பராமரிப்பு அரணாகவும் விளங்கியது என்றே சொல்லலாம். தாயகப் பகுதிகளில் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்கு பனை மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனால், இயற்கை அனர்த்தம் தவிர்ந்து கடந்தகால யுத்தம் காரணமாக மட்டும் வடகிழக்குப் பகுதிகளில் சுமார் 4 மில்லியன் பனைமரங்கள் அழிக்கப்பட்டுள்ளன என தரவுகள் கூறுகின்றன. 

11 September 2017

சமுகத்துக்கு பயன்படும் திறன்களை மாணவர்களிடையே வளர்க்கவேண்டும்.

'ஒரு மனிதனின் நல்வாழ்க்கைக்கான பெரிய பாதை கல்வியே, கல்விதான் இன்று வாழ்க்கைக்கான ஆதாரமாகிவிட்டது. எமது பிரதேசங்களில் காணப்படும் பாரபட்சம், வறுமை, கடந்து சென்ற அனர்த்தங்கள், அக்கறையீனம் போன்றவற்றால் மெது மெதுவாக எம்மினத்தை விட்டு கல்வி வழுவி கூலிக்காரர்களாகிவிடும் நிலையில் உள்ளமை கண்கூடு. அதிகரித்துவரும் முதியோர் இல்லங்கள் மட்டுமல்ல, கள்ளக்காதல் கொலை கொள்ளை, மோசடி, விபச்சாரம், பாலியல் பலாத்காரங்கள், இலஞ்சம், ஊழல், அடக்குமுறைகள், வன்முறைகள் என அனைத்து கொடுமைகளும் அதிகரித்து வருவது கல்வியில் காணப்படும் பின்னடைவாலேயாகும். 

06 September 2017

மட்டக்களப்பு கிராமப் புறங்களில் அறநெறி பாடசாலைகள் ஆரம்பித்து வைப்பு.

பல தசாப்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களிடையே, குறிப்பாக தமிழ் இந்துக்களின் அறநெறிப் பண்பாடு பல வழிகளிலும் சிதைவடைந்து வந்துள்ளது. இலங்கையில் கிழக்குப் பகுதியில் பல புராதன பெருமைமிக்க இந்து நாகரிகத்துக்கு சொந்தக்காரரான தமிழர்கள் அசைக்கமுடியாத நல்ல விழிமியங்களை அவர்களது மரபுகளில், பண்பாட்டில், ஏட்டில் புதைத்து அதற்கொழுகவே வாழ்க்கை முறையினை அமைத்து மற்றவரும் பெருமைகொள்ளும் வகையில் வாழ்ந்து வந்தனர் என்பது எனது கருத்து.

பொருளாதார விருத்திக்கான திறன்கள் மற்றும் போட்டித்தன்மையை கட்டியெழுப்புதல்.

இன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, 'வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கலாமா!' புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ப பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க. இங்கு மட்டும்தான்..