ADS 468x60

27 November 2017

எனது ஊர்க்குருவியின் உலா கவிதை நூல் மற்றும் கவிதைகளடங்கிய இறு வட்டு வெளியீடு.

எனது 'ஊர்க்குருவியின் உலா' எனும் கவிதை நூல் வெளியீடானது 2ம் திகதி டிசம்பர் மாதம் 2017 சனிக்கிழமை அன்று மட்டக்களப்பு மகஜனக் கல்லூரி கலையரங்கில், மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவர் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்களின் தலைமையில் இடம்பெற உள்ளது. 

இந்த நூலின் முதற்பிரதிகள் 25.11.2017 அன்று கௌரவ எதிர்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சட்டத்தரணி கௌரவ இரா. சம்மந்தன் அவர்களிடம் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் அடுத்த பிரதி தமிழ் அரசிக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ மாவை சேனாதிராசா அவர்களிடமும், அடுத்த பிரதி ஜனாதிபதி சட்டத்தரணியும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சுமேந்திரன் அவர்களிடமும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

20 November 2017

ஏழ்மையைக் காரணம் காட்டிப் படிக்க முடியவில்லையென்பது சமுதாயக் குற்றமாகும்!

இன்றய சிறந்த மாணவர்கள் நாளைய நற்பிரஜைகள், நாம் அனைவருக்கும் கல்வி என்னும் காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம் அதுபோல் நாம் கல்வியின் மகத்துவத்தினை நன்கு அறிந்துள்ளோம்.

மொட்டுக்கள் மலர்ந்து விரியும் பொழுது மணம் பரப்பும், அதே போலவே மாணவர்களும் சிறந்த கல்வியை பெற்று திகழும்பொழுது அச்சிறப்பு நாட்டையே மேன்மையுறச் செய்யும். மாணவர்களிடையே கல்வி பற்றிய விழிப்புணர்வினை ஏற்ப்படுத்தவும், பாடசாலையின் அவசியத்தினை எடுத்துக்கூறவும் சர்வதேச மாணவர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஆண்டுதோறும் நவம்பர் 17இல் அனுஸ்ட்டிக்கப்பட்டு வருகின்றது. இன்று சர்வதேச மாணவர் தினமாகும். எமது தமிழ் பிரதேசங்களிலும் மாணவர்கள் கல்வியில் ஈடுபடுவதனை அதிகரிக்க அனைவரும் ஒன்றாகுவோம். சுரவணையூற்று பாடசாலைச் சிறார்களை சந்தித்தபோது

16 November 2017

பெண்களின் அரசியல் மற்றும் தொழில்படையில் அதிகரிப்பின் அவசியம்.

வெறும் 10% விகிதம் தான் அரசியலில் பெண்களின் பங்களிப்பு இலங்கையில் இருந்து வருகின்றது. அத்துடன் மொத்த ஊழியப்படையில் 32% விகிதமாக மாத்திரம் இவர்களது பங்களிப்பு கணிக்கப்பட்டுள்ளது. இதனை குறைந்தது 40% விகிதத்துக்கு 2020 ஆண்டளவில் உயர்த்த வேண்டும் என்பதே பிரதமரின் குறிக்கோளாகும். என கௌரவ பா.உறுப்பினர் #ரோசி #சேனநாயக்க அவர்கள் பெண்களின் முயற்சியாண்மை பற்றி #BMICH இல் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.

13 November 2017

கிழக்கிலங்கையின் அடையாளத்தினை உறுதிப்படுத்திய தமிழ் இந்து எழிச்சி விழா 2017.

இருமருங்கும் குளங்கள் எங்கு சென்றாலும் வளங்கள் வருவிருந்து பார்த்து வாழவைக்கும் அருமருந்த மக்கள் வாழும் படுவானில் எமது பிரதேசங்களில் விழிப்பிழந்து போகும் எமது பாரம்பரிய அடையாளத்தினை செழிப்புறவைக்கும் நிகழ்வு, நல்ல மனிதர்கள் வாழ்ந்து நாட்டுக்கு தொண்டு செய்த வெல்லாவெளியில் இனிதே எழுச்சியுடன் நடந்தேறியது.

06 November 2017

சொந்த மண்ணில் சொந்த மரங்களை விதைப்போம்!

சுனாமி யுத்தத்தினால் வடகிழக்கில் சொந்த மண்ணின் சொந் மரங்கள் வகை தொகையின்றி அழிந்து போயின. இந்த நவீன காலத்தில் அவற்றில் நாட்டம் கொண்டு, நடுகை செய்வோர் அருகிவிட்டனர். இதனை மீளுருச் செய்யும் வகையில் கிழ்க்கில் மரம்நடுவதற்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் தேத்தாத்தீவில் ஒரு தொகை பழவிதைகள் விதைக்கப்பட்டன.
எமது மண்ணுக்கு அதிக மழைவீழ்ச்சி தரும் மாதம் கார்த்திகை. 

05 November 2017

மேலைத்தேய நாடுகளில் கல்வி செயற்பாட்டு ரீதியானது.

Image may contain: 1 person, flower and text"நான் அமெரிக்காவில் படித்தவள் என்ற முறையில் சொல்லுகின்றேன். ஒரு மாணவன் இந்தியாவில் கல்வி கற்பதனைவிட அமெரிக்காவில் கல்வி கற்பதனால் அவனுடைய ஆற்றல் விரிவடைகின்றது, சிந்தனை மேலோங்குகின்றது. செயற்பாட்டு ரீதியான ஒரு மாணவனாக வெளிவரும் உத்தி கற்ப்பிக்கப்படுகின்றது. இதனால் அவர்கள் வேலையில் சேர்ந்தவுடனே அதிக பட்ச உற்பத்தியினை, வினைத்திறனான செயற்பாட்டினை அந்த ஊழியப்படை வெளியிட்டு அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இவர்கள் திகழ்கின்றனர்".

எல்லோருக்கும் ஒரு சமுகப்பொறுப்புண்டு; மறந்துவிடுகின்றனர்

தேத்தாத்தீவு, களுதாவளை செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி, எருவில், குறுமண்வெளி போன்ற கரையோர நடுத்தர கிராமங்களுக்கு அழகு சேர்ப்பவை, நிலக்கீழ் நீரை ஏந்தி வைத்திருப்பவை அங்குள்ள நீண்டு நிலைத்திருக்கும் மரங்களே!.

அவை ஒரு சில மனிதர்களின் கீழ்த்தரமான தந்திரங்களாலும், கோயில்களின் பெயர்களினாலும் கொன்றழிக்கப்டும் அளவுக்கு அவற்றை மீள்நடுகை செய்கின்ற, பாதுகாக்கின்ற மனப்பாங்கு உள்ளவர்கள் மிக அரிதானதாகவே காணப்படுகின்றனர்.

04 November 2017

ஒரு பச்சை சமிக்சையாக பார்க்கப்படும் பெரும்பான்மை இன அமைச்சர்களின் உரை.

'ஓற்றை நாடு என்ற கொள்கைக்குள் பௌத்த மதத்தினை முன்னுரிமை அளித்துக்கொண்டு விட்டுக்கொடுப்போடு ஒரு தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துவரும் ஒரு தமிழ் மக்களின் தலைவரான திரு சம்பந்தன் அவர்களது காலத்துக்குள் நாம் ஒரு தீர்வினை வளங்காவிடின், ஒரு போதும் அது சாத்தியமாகாது' என அமைச்சர் டிலான் மன்றில் நின்று உரத்துரைத்தது சிங்கள மக்களிடையே சம்பந்தரை இன்று ஒரு கீரோவாக தூக்கி நிறுத்தியுள்ளது எனச்சொல்லாம்.