ADS 468x60

28 April 2018

திருக் கொம்புச் சந்தி முதல்வா!

திருக் கொம்புச் சந்தி முதல்வா
திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
அறுபதடி உயர்ந்து 
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!

ஆடி வரும் அழகை
பாடி நிதம் தொழவே
கூடாத மனம் என்ன மனமோ
உலகெல்லாம் உனைத் தேடி வரவே!
உயர்ந்தாயே திருக் கோயில் தனிலே
கணநாதா நின் பாதம் பணிந்தேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!

0 comments:

Post a Comment