எத்தனை துன்பத்துக்குள் எம்மக்கள் அகப்பட்டு அடிமைப்பட்டு வாழ்க்கை தேய்வடைந்து இன்றும் ஒன்றை பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், அதுதான் அவர்களது "சுயமுயற்ச்சி". இருந்தும் என்ன நிறைந்து கிடக்கும் வளமார்ந்த பூமியில் முதலீட்டு செறிவின்மையால் பிறருடைய கழுகுக் கண்களுக்கு எழும்புத்துண்டாகும் துர்ப்பாக்கியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதல்லவா!!
"ஏழை என்ற இல்லாத ஜாதி யாராலே உண்டானது?
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது!
சில கோழை கும்பல் தான் வாழவேண்டி
பேதங்கள் கொண்டாடுது!
இந்த மக்களை வழிப்படுத்த, உற்ப்பத்தி திறன் மிகு தொழிலாளர்களாக்க என்ன முயற்ச்சிகளை எமது மக்களுக்காக செய்யலாம் நண்பர்களே!!! இப்படியே விட்டால் பிச்சை எடுக்கும் நிலை கூடத் தோன்றாலாம்!!
உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது. என்ற நாள் வர போராடுவோம்!!
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது. என்ற நாள் வர போராடுவோம்!!
0 comments:
Post a Comment