ADS 468x60

01 October 2010

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும்

இன்றய சிறுவர்களே நாளைய தலைவர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு அவர்கள் தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிநடத்தும் துர்ப்பாக்கிய நிலையில் இருப்பது வருத்தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும். சிறுவர்கள் சார்பாக இன்று உலகலாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்தப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது. அவர்களுக்கென்று புதிய சட்டங்கள், உரிமைகள் மற்றும் உரித்துடமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவ்விடயம் சரியாக மக்களை சென்றடயவில்லை என்பதையே மேலைத்தேய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது தரவுகள் வெளிக்காட்டுகின்றன.


சிறுவர்களுக்கான ஒளிமயமான எதிர்காலத்தினை உருவாக்குதற்கும் அதற்க்கான திட்டங்களை வரைவதற்குமான நேரம் இப்பொழுது கனிந்துள்ளது என்பதனை நாம் அனைவரும் உணரவேண்டியுள்ளது. ஏனெனில் பிள்ளைகள் எங்களது எதிர்காலம் அத்துடன் அவர்கள் தேடமுடியாத அரிய சொத்துக்களுமாகும்          

சிறுவர்கள் என்னும்போது எமது கண்முன் தோன்றுகின்ற சில குறிப்பிடத்தக்கனவாக சிறுவர்களை வேலைக்கமர்த்துதல்,  சிறுவர்களை படையினில் இணைத்துக்கொள்ளல் அதுபோன்று சிறுவர் துஸ்பிரயோகம்  என்பனவற்றுக்கு அப்பால் பாதிக்கப்பட்ட சிறுவர்களது ஒட்டுமொத்த பிரச்சனைக்கு மூலகாரணம்  என்ன என்பதனை நாம் அலசி ஆராய வேண்டும்.

சிறுவர்களை அடையாளங்காணல்.

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் சர்வதேச வாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். எல்லா பிள்ளைகளுக்கும் உள்ள உரிமையை அது வரையறுத்துள்ளது. குறிப்பாக சமவாயத்தில் முதலாம் அத்தியாயத்தில் கூறப்பட்டதற்க்கிணங்க 18 வயதிற்குட்பட்ட ஒவ்வொருவரும் பிள்ளையாவர். சமவாயத்தில் குறிப்பிட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் ஒவ்வொரு பிள்ளையும் அனுபவித்தல் வேண்டும். இச்சமவாயத்தில் சிறுவர்கள் சிறப்பான மதிப்பிற்குரியவர்கள் என்பதனை ஏற்றுக்கொண்டு அவர்களுக்குரிய நன்மைகள், அவர்கள் பெறவேண்டிய பாதுகாப்பு ஆகியவற்றை வரைமுறைப்படுத்துகிறது.

இலங்கையில் சிறுவர்கள் நிலை.

இங்கையினைப் பொறுத்தவரை சிறுவர்கள் சம்பந்தமான வளர்சிக்கான அணுகுமுறையில் முன்னேற்றம் கொண்டிருப்பதை ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது பெருமைப்படவேண்டியிருக்கிறது. குறிப்பாக கல்வி, சுகாதாரம் என்பனவற்றினைக் குறிப்பிடலாம். எமது நாடு 5 வயதுக்கு குறைந்தவர்களின் இறக்கும் வீதத்தினை 1960 ஆண்டு 13மூ இல் இருந்து 15மூ ஆக 2003 ஆம் ஆண்டிலேயே குறைந்துள்ளது என்பது பெருமைப்படத்தக்கது.

அடுத்து வரும் விடயத்தினை நோக்குவோமானால் 100 வீதமும் ஆரம்பக்கல்வியினை பெறும் வாய்ப்பு இலங்கைச் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவையெல்லாம் நலன்புரித்திட்டத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டு வருவதனை நாங்கள் சுட்டிக்காட்டலாம்;. இதனை இலவசக்கல்வி, இலவச சுகாதார வசதிகள்  என்பன உறுதிப்படுத்தி நிற்கின்றன. 

ஆனால் எமது சிறுவர்கள் பெறும் இலவசக்கல்வி, சுகாதாரம் என்பன  ஒரு திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காரணம் வறுமை என்று சொன்னால் அது மிகையாகாது. வறிய மக்களை பலமான முறையில் பாதிக்க வைக்கும் ஒருமார்க்கம்தான் அவர்களது சுகாதாரத்துறை மீதான முதலீட்டினை மட்டுப்படுத்துவதாகும். அதேநேரம் எமது வரவுசெலவுத்திட்டத்தில் சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடு தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்பொழுது அதன் சராசரிக்கும் குறைவாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறார்களின் கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்.

இலங்கையில் கிட்டத்தட்ட 1/5 பங்கினர் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்ந்து வருகின்றனர். இதிலும் குறிப்பாக இக்கொடூரமான வறுமைக்கான சம்பவங்கள் கூடுதலாக யுத்த பூமியாகக் காணப்படும் வடகிழக்குப் பிரதேசங்கள், கிராமியப்பகுதிகள் அத்துடன் மலையக மக்கள் வாழ்கின்ற பகுதிகளில் இடம்பெறுவது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உன்மையாகும். 

சர்வதேச ரீதியில் பார்க்கும்பொழுது, கிட்டத்தட்ட 60,000 மாணவர்கள் ஆரம்பக் காலங்களிலேயே வறுமையின் நிமித்தம் இடைவிலகி விடுகின்றனர் (னுசழி ழரவ). போசாக்கு அவர்களது கல்வியில் செல்வாக்குச் செலுத்தும் மற்றுமொரு காரணியாகும். மலையக மக்களிடையே காணப்படும் பொருட்களின் தொடர்சியான  விலைவாசி அதிகரிப்பு., வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் என்பன காரணமாக பல மாணவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு இடைவிலக நேரிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களது வறுமையில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள்.

எமது எதிர்காலச் சொத்துக்கள் முழுமை பெறாமல் நாசமாகப் போவதற்கு பிரதான காரணங்களாக வறுமை, யுத்த சூழல், தொடர்சியான விலையேற்றம் என்பனவற்றினால் சிறுவயதிலேயே வேலைக்கு செல்கின்ற அளவு அதிகரித்துச் செல்வதனை அவதானிக்கக்கூடியதாய் உள்ளது. ILO இன் 2000 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை பார்ப்போமானால் 35000 சிறுவர்கள் (10 வயது – 14 வயது) கடைகள், விவசாயப் பண்ணைகள், மீன்பிடி மற்றும் உள்நாட்டு கைத்தொழில் நிலையங்கள் என்பனவற்றில் கூலிவேலை செய்துவருகின்றனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர 12000 சிறுவர்கள் தகாத முறையிலான விடயங்கள் மற்றும் விபச்சாரம்  என்பனவற்றில் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இவ்விவச்சாரத்தில் 2000 ஆம் ஆண்டில் மட்டும் 20000 சிறுவர்கள் பலராலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும் இவ்வறிக்கை சான்று கூறுகின்றது.

அனர்த்தங்களும் சிறுவர்களும்.

அத்துடன் 40மூ மான 9 தொடக்கம் 18 வயதுக்குட்ப்பட்ட ஆண், பெண் பிள்ளைகள் இலங்கைப்போர்க்களத்தினில் ஆயுதபாணிகளாக பயன்படுத்தப்படுகின்றனர். இதுதவிர வீதி ஓர சிறுவர்கள் இவர்கள் பல்வேறுபட்ட கிரிமினல் குழுக்களுடன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் மேலாக உள்ள உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர் இழந்து, உறவிழந்து நாதியற்று வாழுகின்ற சிறுவர்கள் எண்ணற்றவர்கள். யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக இலட்ச்சக்கணக்கான சிறுவர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை இழந்து வாழ்ந்து வருகின்றமை அனைவரும் அறிந்த உன்மை. குறிப்பாக அனர்த்தங்கள் ஏற்ப்படுகின்ற போது அவர்களது கல்வி, விளையாட்டு என்பனவற்றில் பாரிய துஸ்ப்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இன்னொரு விடயத்தினை நாங்கள் அவதானிப்போமானால் சிறுவர்கள் மீதான துஸ்ப்பிரயோகம் வீட்டிலும் சரி, பாடசாலையிலும் சரி இடம்பெற்று வருகின்றது. ஆனால் அவை அனேகமாக தடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் இவைகளில் அனேகமானவை ஆசிரியர்களாலும்,  பெற்றோர்களாலும் மறைக்கப்பட்டே வருகின்றன.

இவைதவிர ஒரு பெற்றோரைக்கொண்ட பிள்ளைகளை உடைய குடும்பங்கள் யுத்தம், அனர்த்தம், இடம்பெயர்வு மற்றும் வேலை நிமிர்த்தம் இடம்மாற்றல் என்பன போன்ற சந்தர்ப்பங்களினால் பிள்ளைகள் பலவழிகளிலும் துஸ்ப்பிரயோகம் செய்யப்படுகின்றனர். அத்துடன் இச்சிறுவர்கள் துஸ்ப்பிரயோகம் இன்றய நவீன யுகத்தில் ஊடகங்கள் மூலம் நடாத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக வன்முறைகள், பாலியல் விவகாரங்கள் என்பன தொலைக்காட்சியில் காண்ப்பிக்கப்படுகின்றன. அத்துடன் சினிமாப்படங்கள், இன்ரநெற் வசதிகள் மூலமாக விபச்சாரப்படங்கள் காண்பிக்கப்படுவதனால் சிறுவர்கள் உளவியல் ரீதியில் தொடர்சியாக பாதிக்கப்படுகின்றனர். ஆனால் துரதிஸ்ட்டவசமாக அவர்கள் செய்முறைமூலம் தூண்டப்படுவதற்க்கான பொருட்கள் இல்லை என்பது சந்தோசப்படக்கூடியது.

சிறுவர் உரிமைகளுக்கான சாசனங்கள்.

ஆரம்ப கால சிறுவர் கருசனைகள். 
'சிறுவர் உரிமைகள்' எனும் துறைச்சொல் வழக்கு இலங்கைக்குப் புதிதாய் இருப்பினும் குழந்தைகளின் பாதுகாப்பில் இலங்கை நீண்டதொரு பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. நாட்டின் வழமையான சட்டங்கள் பாதுகாவல், மகவேற்பு ஆதாரத்துக்கான கடப்பாடு ஆகிய ஏற்பாடுகள் மூலமாக குழந்தைகள் பாதுகாப்புக்கு ஏற்பிசைவு அளித்தன. ஓல்லாந்தர் காலத்தில் அறிமுகம் செய்யப்படதும், மீந்திருக்கும் பொதுச்சட்டமாக இன்னும் தொடர்ந்து பிரயோகி;க்கப்பட்டுவருவதுமான 'உரோமானிய ஒல்லாந்துச் சட்டத்தில்', பராயத்துக்கு வராத பிள்ளைகள் தொடர்பாக அரசுக்கும் நீதிமன்றங்களுக்கும் ஒரு பாதுகாப்புப் பங்கினை வகிக்க வகை செய்யும் 'உயர் பாதுகாவலர்' எனும் கருத்துப்படிவம் காணப்படுகின்றது.

பிரித்தானியர் காலத்தில் சுகாதாரம், கல்வி, இளம்பராயத்தினர் நீதிநெறி பற்றியும், அனாதைகள் என்ற காரணத்தினாலோ அல்லது தகுந்த பெற்றோர் பராமரிப்பை இழந்திருந்த குழந்தைகள் பற்றியும் செயல் தொடர்பு கொள்ளும் நடைமுறைச் சட்டவாக்கமொன்று புகுத்தப்பட்டது. மிக  அண்மைக்காலத்தில், சிறுவர்களும், இளைஞர்களதும் நலன்கள் மிக விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

சர்வதேச உரிமைப் பிரகடனமும் சிறுவர்களும்..

உரிமைகள் மனுக்குலம் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழ்வதற்கு வரையறுக்கப்பட்டவையே ஆகும். குறிப்பாக உலகில் பலவழிகளிலும் இலகுவாகப் பாதிக்கப்படுகின்ற வர்க்கம் என்று சொன்னால் அது சிறுவர்கள், பெண்கள் என்றே சொல்லப்படுகின்றது. எனவே இவர்களும் சமுதாயத்தில் சமத்துவமாக நடாத்தப்படும் வகையில் இவர்களுக்கென உள்ள சிறப்புரிமைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்க்கான சில சட்டவாக்க ஏற்பாடுகள் உலகலாவிய மற்றும் உள்நாட்டு மட்டத்தினில் அவசியமாக உள்ளது.

அதன் அடிப்படையில் சர்வதேச ரீதியில் 1989ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சிறுவர் உரிமைப்பட்டயம் முதன்மை பெறுகின்றது. இதனை ஒட்டியே இலங்கை உட்ப்பட பல்வேறு உள்நாட்டுச் சட்டங்களும் சிறுவர்களின் உயரிய நலனையே முதன்மைப்படுத்தி சிறுவர் பாதுகாப்புச் சட்டங்களை ஆக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம் 1989 ஆம் ஆண்டு சிறுவர்கள் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக சர்வதேசிய, தேசிய மட்டத்தில் மிக முக்கியம் வாய்ந்த சட்டமூலமாகக் குறிப்பிடப்படுகின்றது.

 சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகள் சமவாயம் எல்லாப்பிள்ளைகளும் பின்வரும் நான்கு பிரிவுகளில் வரும் உரிமைகளுக்கு உரித்துடையவர்கள்.

உயிர் வாழ்வதற்க்கான உரிமை 
குறிப்பாக ஒரு நாட்டில் உள்ள குழந்தைகள் உயிர்வாழ்வதற்க்காக அந்நாட்டு அரசாங்கம் அவர்களுக்கு தேவையான சுகாதார வசதிகள், இருப்பிட வசதிகள், சேவைகள், உணவு, குடிநீர் வசதி என்பனபோன்ற குறிப்பிடத்தக்க உரிமைகளை உறுதிப்படுத்தவேண்டும்.

மேம்பாட்டுக்கான உரிமைகள் 
ஓவ்வொருவரதும் தனித்திறமைகளுக்கு அமைவாக அனைத்துச் சிறுவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது, கல்வி, சுகாதாரம், பொழுதுபோக்கு மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்க்கான உரிமையை வழங்குதல் என்பனவற்றை இது உள்ளடக்குகின்றது.

பாதுகாப்பு உரிமை .
உடல் உள ரீதியில் ஊனமுற்ற சிறுவர்கள், அநாதைகள், பெற்றோரை விட்டுப் பிரிந்த சிறுவர்கள் மற்றும் சிறுவர் தொழிலாளர்கள் போன்றோரின் பாதுகாப்பினையும், பாலியல் ரீதியான சுரண்டலுக்கு இலக்கான சிறுவர்களது பாதுகாப்பினையும் இது குறிக்கின்றது.

பங்குபற்றும் உரிமை 
பங்குபற்றுதல் என்பது பிள்ளைகள், யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என்போர்
சுயமாகச் சிந்தித்தல்
தம் கருத்துக்களை வலுவாக வெளிப்படுத்தி, தம் அக்கறைக்குரிய விடயற்களில் பெரியவர்களை ஈடுபடச் செய்தல்.
ஏனைய மக்களுடன் ஆக்கபூர்வமாக கூடிப்பழகுதல்.
தம் வாழ்வு, தம் சமுகத்திலும், சமுதாயத்திலும் உள்ள மக்களின் வாழ்வு ஆகியன தொடர்பான தீர்மானங்களில் தீவிர ஈடுபாடு கொள்ளுதல்.
ஏனைய பிள்ளைகளினது கருத்துக்கு மதிப்பளித்தல் ஆகியன அடங்குகின்றன.  

இலங்கையும் சிறுவர் உரிமைகள் சமவாயம்.

1992 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைச்சமவாயத்துக்கு ஏற்புடையதான ஒரு சிறுவர்கள் உரிமைச்சாசனத்தினை இலங்கை அரசு வெளியிட்டது. இதன் மூலம் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பாக தொடர்சியாக கண்காணிப்பதற்க்கான குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் ஜனாதிபதியின் தெரிவிற்கு இணங்க கல்வி அமைச்சின் செயலாளர், நீதி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் மகளிர் பணிகள், சமுக சேவை, திட்டமிடல், மகாண சபைகள் என்பனவற்றைச் சேர்ந்த செயலாளர்களும் சிறுவர் உரிமைகளைப்பாதுகாக்கும் அதிகாரிகளும் நியமிக்கப்படுவர். இவர்கள் ஐ.நா இன் சமவாயத்திற்கிணங்க சட்ட சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், அவற்றை சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பிட்டுக் கருத்துக்களை வெளியிடல், சமவாயத்தின் சட்டதிட்டங்களை அமுல்ப்படுத்துதல், அவற்றைக் கண்காணித்தல் என்பன இக்குழுவுக்கு உரிய பணிகளாகும்.

சிறுவர்களுக்கான பிரத்தியேக சட்டங்கள். 
பிள்ளைகள் இளைஞர்கள் சட்டம்.
குற்றவியல் நடவடிக்கோவை 1998ம் ஆண்டின் 29ம் இலக்கச் சட்டம்.
தண்டனை சட்டக் கோவையும் அதன் திருத்தங்களும்.
பெண்கள் இளைஞர்கள் பிள்ளைகள் வேலைக்கமர்த்தல் சட்டம்.
சிறுவர்களை ஆபத்தான வேலைக்கமர்த்துவதற்கு எதிரான சட்டம்.
பராமரிப்புச் சட்டம்.
நெறிமுறைப்படுத்தல் சட்டம்.

குறிப்பாக சிறுவர்களால் செய்யப்படுகின்ற கொலைகள், கொலைமுயற்சிகள், திட்டமிட்ட கொலைகள் போன்ற பாரிய குற்றவியல் நடவடிக்கை தவிர்ந்த ஏனைய குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரனைகள் இச்சிறுவர் நீதிமன்றங்களிலேயே இடம்பெறுகின்றன. சிறுவர், இளவயதினர் தொடர்பான சட்ட நடவடிக்கைகளின்போது அவர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிப்பது நீதிமன்றங்களின்  நோக்கமாகும். சிறுவர்களுக்கு பொருத்தமான இடங்களில் குறிப்பிட்ட சுற்றுச் சூழலில் அப்புறப்படுத்துதல், கல்வியும் பயிற்சியும் பெறுவதற்கு வழிவகுத்தல் போன்றவற்றின் மூலம் சிறுவர் நலனைப் பேணுவதற்கு சிறுவர் நீதிமன்றங்கள் வழிவகுக்கும்.

சிறுவர் குற்றவாளியை கையாழும் முறை.

ஏனைய குற்றவாளிகளில் இருந்து சிறுவர்கள் குற்றவாளியாக கருதப்படும் இடத்து அவர்கள் பிரத்தியேகமாகக் கையாளப்படுதல் வேண்டும். இவர்களை நீதிமன்றங்களில் நிறுத்தமுன்னர் இது தொடர்பாக அப்பிரதேசத்துக்குரிய சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டும். சிறுவர்கள், இளவயதினர் போன்றோரை தடுத்துவைத்து நீதிமன்றங்களுக்கு ஆஜர்படுத்துவதற்கு முன்னர், நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்கின்றபோது அவரது உறவினர்கள் அல்லது குடும்ப அங்கத்தவர்கள் தவிர்ந்த ஏனையோருடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கக் கூடாது.

குற்றவாளி பெண்பிள்ளையாக இருக்கின்ற பட்சத்தில் பெண் பாதுகாவலருடன் வைத்திருத்தல் வேண்டும். குறிப்பாக சிறுவர்கள் சம்பந்தமாக வழக்குகள் சடைபெறுகின்றபோது அவர்களது வழக்குச் சம்பவங்கள் பத்திரிகைகளிலோ, சஞ்சிகைளகிலோ பிரசுரிக்கப்படலாகாது. சிறுவர்கள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றில் மாத்திரம் இச்சம்பவங்களை பிரசுரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் யார் எனச் சுட்டிக்காட்டும் வகையில் ஒன்றையும் பிரசுரிக்க முடியாது.
சிறுவர்கள் செய்கின்ற குற்றங்களுக்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முறைகள்.

1. சிறுவர்கள் அல்லது இளையவர்கள் குற்றம் இளைக்கின்றபோது அவர்கள் விசேடமாக நடத்தப்படவேண்டும் என நீதிமன்றங்கள் வலியுறுத்துகின்றது. அவ்வாறு சிறுவர்கள் தொடர்பாக  அமுல்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்கள் பின்வருமாறு.

2. பொலிஸ், நீதிமன்றம், வேறு இடங்களில் சிறுவர் இளவயதினரை ஏனைய வயது வந்த குற்றவாளிகளிடம் இருந்து பிரித்து வைத்தல்.

3. பிணை வழங்கும் சந்தர்ப்பங்களில் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பிணையில் விடுதலை செய்தல்.

4. பிணை வழங்க முடியாத சந்தர்ப்பங்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறுவர்களை சிறைச்சாலைக்கு அனுப்பாமல் நன்நடத்தை இல்லங்களில் அல்லது பொறுப்பானவர் ஒருவரின் பாதுகாப்பில் தடுத்து வைத்தல்.

5. வழக்குத்தொடர்பான விடயங்கள் இடம்பெறுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் சிறுவர்ளின் பெற்றோர் அல்லது  பாதுகாவலர் நீதிமன்றங்களுக்கு செல்ல அனுமதியளித்தல்.
6. நீதி மன்றில் நிறுத்தப்பட்ட சிறுவருக்கு பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் பிரதேச சிறுவர் பாதுகாப்பு அதிகாரிக்கு அறிவித்தல்.

7. சிறுவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கும் போது வழக்குடன் தொடர்புடையவர்கள் தவிர்ந்த ஏனையவர்களை நீதிமன்றில் இருந்து அகற்றுதல்.

8. சிறுவர் தொடர்பான நீதிமன்ற அறிக்கையினை பத்திரிக்கைகள், சஞ்சிகைகளில் பிரசுரிப்பதனை தடைசெய்தல்.

9. சிறுவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்படுமிடத்து அதனை ஏதேனும் ஒரு விடயத்துக்கு பொருத்தமற்றதாகக் கருதலாகாது

10. குற்றவாளியாகக் கருதப்படும் சிறுவர்கள், இளவயதினருக்கு தண்டனை வழங்கும்போது அவர்களுக்கு நன்மைபயக்கும் விதத்திலான தண்டனைகளை வழங்க வேண்டும். 

11. அவர்களுக்கு அளிக்கப்படும் தீர்ப்பிற்கிணங்க சிறைச்சாலைக்கு அனுப்ப்படுவோரை தடுப்புச்சட்டம் அலலது பதிவு செய்யப்பட்ட பாடசாலைகள் அனுமதிக்கும் பாடசாலைக்கு அனுப்புதல்.

12. குற்றத்திற்கு அபராதம் விதிக்கும் சந்தர்ப்பத்தில் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அபராதத் தொகையை செலுத்தக் கூடியதாக இருத்தல்.

13. சிறுவர் இளவயதினருக்கு உடல் ரீதியான தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு சிறு பிரம்பினால் ஆறு அடிகள் வழங்குவதற்கு நியமித்தல் வேண்டும்.

14. சிறுவர் இளவயதினர் தொடர்பான வழக்குகளின் போது குற்றவாளி, வழக்குத் தீர்ப்பு எனும் சொற்களுக்கு பதிலாக தவறு செய்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அக்கண்டுபிடிப்பின் விளைவாக ஆணை இடப்படுகின்றது எனும் சொற்பிரயோகங்களைக் பயன்படுத்துவது.

சிறுவர் சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும் இடங்கள்.

சிறுவர் நீதிமன்று.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை.
பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் மேசை.
சிறுவர் பரிவாச திணைக்களம்.

சுனாமி சட்டத்தில் சிறுவர் தொடர்பான ஏற்பாடுகள்.

பிள்ளைகளினதும் இளம் ஆட்களினதும் கட்டுக்காவல்.
அதிகார சபை இடாப்பு ஒன்றைப் பேணுதல்.
நிகழ்கால கட்டுக்காப்பாளராகப் பதிவு செய்தல்.
அதிகார சபை பாதுகாவலராக இருத்தல்.
சுவிகாரப் பெற்றோராக இருப்பதற்க்கான விண்ணப்பமும் கடமையும்.
மகவேற்பு.


ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் உரிமைப்பட்டயத்தினை இலங்கையில் அங்கிகரித்ததன் பின்னர் இச்சட்டங்கள் காலத்துக்கு காலம் மாற்றம் செய்யப்பட்டன. குறிப்பாக 1995 இல் நடைமுறைப்படுதடுத்தப்பட்ட 22ம் இலக்கச் சீர்திருத்தம் உட்பட பல சீர்திருத்தங்கள் மூலம் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள், துஸ்ப்பிரயோகங்ள் இவற்றைத்தடுப்பதற்கும், அத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டனைக்குட்படுத்துவதற்கும் பொருத்தமான சட்டங்களும் தண்டனைச் சட்டக்கோவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சீர்திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட சட்டங்கள் உட்பட சிறுவர் உரிமைகளுடன் தொடர்புடைய தண்டனைச் சட்டக் கோவையில் உள்ளடக்கப்பட்டுள்ள தண்டனைக்குரிய சட்டங்கள் கீழே தரப்படுகின்றன.

1. முறைகேடான உறவுகளில் சிறுவர்களை ஈடுபடுத்தல்.
2. பன்னிரண்டு வயதிற்கு குறைந்த ஒரு பிள்ளையை கைவிட்டு நிர்க்கதி ஆக்குதல்.
3. சிறுவர்களை இம்சைப்படுத்துதலும் சித்திரவதை செய்தலும்.
4. சிறுவர் துஸ்ப்பிரயோகமும் கடத்தலும்.
5. பாலியல் வாரியான நடவடிக்கைகளில் சிறுவர், சிறுமியரை ஈடுபடுத்தல்.
6. ஆவர்களை பாலியல் வாரியான சுரண்டலுக்கு உட்படுத்தல்.
7. சிறுவர்க்கெதிரான பாலியல் ரீதியான குற்ற நடவடிக்கைகள்.
8. உறவினர் அல்லது சிறுவர்களைத் தத்தெடுப்போர் சிறுவர்களை பாலியல்   ரீதியில் துன்புறுத்தல்.
9. சிறுவர்களுக்கு ஆபாச சஞ்சிகைகளை விற்பனை செய்தலும் ஆபாசப் படங்களைக் காண்பித்தலும். 

ஆகவே சிறுவர்கள் செயற்ப்பாட்டு கணிப்பீட்டுக்கிணங்க  எமது நாட்டில் உள்ள 18,639,000 மக்கள் தொகையில் 6,163,000 பேர் சிறுவர்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 15.3மூ மானவர்கள் பாடசாலைக்கல்வியை விட்டு விட்டு தங்கள் வறுமையை நீக்க பொருளாதார நடவடிக்கைகளிலும், வீட்டு வேலையிலும் ஈடுபட்டு தங்கள் எதிர்காலத்தினை தொலைத்து விட்டு நிற்பதனையே இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. எமது எதிர்காலமாக உள்ள சிறுவர்களுக்கு இன்றைக்கு தேவையான வழி சமாதானமும், சாந்தியும் உள்ள புனித மார்க்கமே ஆகும். 

0 comments:

Post a Comment