ADS 468x60

18 November 2014

எங்க ஊரில் மழை.

மழையே -நீ
முகில்களை உதிர்த்தவில்லை
முத்துக்களை உதிர்த்துகிறாய்
இன்னும் பிரபஞ்சத்தின்
பச்சைக்கெல்லாம்
பிச்சை போடுகிறாய்
ஆக மொத்தம்- நீ
கொடுப்பவன் அதனால்
மேலேயும்- நாம்
பெறுபவர் அதனால்
கீழேயும் இருக்கிறோம்.

08 October 2014

வயல் குழந்தாய்

வயல் குழந்தாய்
நீ அருந்தும் மார்புகள்
பிய்த்து எறியப்படுகிறது
வயல் கொஞ்சும் எங்கள்
பசுமை நிலங்களை
பாலைகளாக்கவோ
வேலை செய்கிறீர்கள்.....

உனக்கு மட்டும்
கைகால் இருந்திருந்தால்
இந்த இயந்திர இதயங்களை
இழுத்தெறிந்திருப்பாய்...

01 October 2014

மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்.

வகுப்பறையில் வாசிக்கவேண்டியவர்கள்
வழிகலெல்லாம் யாசிக்கிறார்கள்
மட்டக்களப்பு ஏழைகளின் பூமியாம்
புள்ளிவிபரம் காட்டி
போட்டி போட்டு பேசிகிறார்கள்!!! ஐயகோ!!

வயிற்றை நிரப்ப முடியாமல்
வாடியபோதெல்லாம் கழுத்தில்
கயிற்றை இறுக்கி கொலை
செய்யவேண்டியவர்கள் இவர்கள் அல்ல,

16 September 2014

மண்ணில் பிறந்தாலே

மன்னவனானாலும் மாடோட்டும் சின்னவனானாலும்
மண்ணில் பிறந்தாலே மறுபடி மண்ணுக்கிரைதானே!!

உன்னில் இருப்பானடா இறைவன் என்னிலிருப்பானடா
எண்ணி உதவிசெய்தால் அதுபோல் இன்பங்கள் வேறுஉண்டோ

சட்டம் படித்தாலும் பெரிய பட்டம் கிடைத்தாலும்
இட்டதே சேருமையா இதற்குள் எத்தனை பேதமையா

கூழ்காச்சி கொடுக்கிறான் அவனே ஆள்வைச்சிம் அடிக்கிறான்
வீழாமல் வாழ்வதுபோல் காட்டியே பாழாகிபோவதைப் பார்.....

31 August 2014

நல்லூர் கந்தன் சந்நிதானம்

நல்லூர் கந்தன் சந்நிதானம்
பார்த்தேன் குலைந்தது எந்நிதானம்
ஈக்கூட நுழையாத இடைவெளி
பார்கும் இடமெலாம் அழைக்கும் கடைவெளி
மக்கள் முகத்தினில் சந்தோசம் கண்டேன்
அகத்தினில் எந்தோசம் கொண்டேன்.

30 August 2014

இது முல்லை வேளை


தங்கம் கலந்த மணல்- அருகே
தாலாட்டும் வங்கப் புனல்
கூட்டமாய் வரும் மீன்கள்- அதை
நோட்டமிடும் மீனவர் கண்கள்
மயிலிறகாய் வருடும் தென்றல்- இது
வருவோர்க்கு வாய்த்த முன்றல்
சூரியனைக் குழைத்து எறிந்த வானம்
நீள் பனைகள் ஒட்டடை துடைக்க
நிலா வருகைகண்டு
உலாவும் பறவைகள் கானம்
இந்த வேளை நமக்கெல்லாம்
பொது உடமைதான்
ஆனாலும் மாற்றான் வீட்டு
மல்லிகைப்போல் இன்னும்
வேலிகள் கடந்து நிற்கும்
வேரற்ற எம்மக்கள்.

23 August 2014

நீ மட்டும் ஏன் கோபிக்கிறாய்!

மழைமேகம் நீரள்ள கடலுக்கு கோபமா
மலைமுகடு கூந்தல் காய காற்றுக்கு கோபமா
உலைமூட்ட எரிவதனால் நெருப்புக்கு கோபமா
மதிவளர்ந்து எறிக்கிறதே வானமே கோவமா
மரமூன்றி வேர்விட்டால் ம
ண்ணுக்கு கோபமா
மனம்மயங்கி இடங்கேட்டால் பெண்ணுக்கு கோபமோ!

மூடுவதால் கண்ணுக்கு கோபமா!
பாடுவதால் இசைக்கு கோவமா!
ஆடுவதால் காலுக்கு கோபமா!
ஓடுவதால் கங்கைக்கு கோபமா!

மலர்ந்து மலர்ந்து மணந்து மணந்து
உலர்ந்து போகுதே மலருக்கு கோவமா!
வானத்தில் திங்கள் வந்தால்
இரவுக்கு கோவமா!
வார்தையில் பங்கம் வந்தால்
வாய்கு கோவமா!
நீயும் நானும் சண்டையிட்டால்
காலத்தின் கோபமா!!!, சாபமா இல்லை பாவமா!!!!

20 July 2014

மட்டக்களப்பு பூர்வீகக் கலைகள் அந்நிய மோகத்தில் ஆடிப்போகும் ஆபத்து...

நாடுகளின் காட்டுவெள்ளம் போன்ற பெருவளர்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் நாம் வாழுகின்ற ஆசிய நாடுகள் 50 வருடங்களுக்கு பின்னால் நிற்ப்பதற்கு நிறையவே காரணங்கள் இருக்கின்றன. அவைகள் மதவாதம், இனவாதம், மொழிப்பிரிவினை, சாதிச்சண்டை இன்னும் எத்தனையோ.. இவைகள் உழைக்கும் ஆற்றல், கண்டுபிடிப்பாற்றல், புதிது புனையும் ஆற்றல் என்பனவற்றையெல்லாம் அடியோடு அழித்திருக்கின்றது.

19 July 2014

மட்டக்களப்பு வெற்றிலைக்கு இப்படியும் மகிமையுண்டா!! ஆச்சர்யம்!

கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று.  வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது.  திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது..

செழுமை நிறை மட்டக்களப்பு மாநிலத்தின் தென் பகுதியில் கடல், வற்றாத ஆறு மற்றும் குளங்கள் நிறைந்த தேத்தாத்தீவு, மாங்காடு, செம்டிபாளையம், குருக்கள்மடம் மற்றும் களுதாவளை போன்ற பிரதேசங்களில் ஆர்வத்தோடு செய்கை பண்ணப்படும் ஒரு பாரம்பரியப் பயிர், கற்ப்பக மூலிகையாக புராணங்களில் கருதப்படும் வெற்றிலை செடி என்றால் அது மிகையாகாது. வெற்றிலை (வெத்தில) எண்டு ஊர் வழக்கில் சொல்லுவர்).மண்ணை இடமாற்றி மிக இலகுவாக செய்யப்படும் இத்தொழில் மிக கவனமாக கண்காணிக்கப்பட வேண்டியதொன்றாக உள்ளது. இங்கு இதை வெற்றிலைத் தோட்டம் (Betel Garden) என்றே அழைப்பர்.

13 July 2014

காலமும் சந்தர்ப்பமும்..

இன்னும் அதிகரிக்கிறது
உன் நினைவினை
இந்த இடைவெளி,
ஏனோ தெரியவில்லை
பொதுவான உனக்கான
பிரார்த்தனைகள்
நீளுகின்றது -அது
என் இயலுமைக்குட்பட்டு....

யாரும் அன்பை இழக்க
ஆசைப்படுவதில்லை!
காலமும் சந்தர்ப்பமும்
அதில் கால் வைக்கிறது.
எனக்கும் அந்தக் காலம்
கைக்கொடுக்குமா!
இன்னும் புரியவில்லை
அதனால்தான்,
ஒரு மொழியில்லாமல்
மௌனமாகிறேன்!!

06 April 2014

வாழ்க்கையில் விடி வெள்ளி

நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு. கடலில் தவித்தேன் சிலநாள்- பெரும் இடரில் களைத்தேன் மறுநாள் எடுப்பார் கையில் பிள்ளை- அன்று எனக்கோர் துணையும் இல்லை காத்ததால் நீயொரு அன்னை களைப்புக்கு நீர்தரும் தென்னை ஏழைக்கும் இரங்கிடும் ஏழை ஏனக்குநீ மணம்தரும் சோலை கேட்டால் கிடைக்கும் உதவி- யாரும் போட்டால் வருமே பதவி பார்த்தால் அறியும் குணத்தால்- எனை பார்த்தாய் உயரும் மனத்தால் தமிழ்என்றால் நீயொரு சிங்கம் தருவதில் குறையாத தங்கம் இரக்கத்தில் நீதான் அரசி இரப்போர்க்கு பசிதீர்க்கும் அரிசி நீதானே வாழ்க்கையில் விடி வெள்ளி வாழ்த்திடும் ஒரு பள்ளி வானவில் கோலங்கள் போல் வசந்தங்கள் தரும் உறவு.

04 April 2014

பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,

வறுமை ஒளிப்பதற்கு 
வாய்த்த வளம் இருந்தும்
திறமை உள்ளவர்கள்-வாய்
திறவாமல் உள்ளனரோ!

வாய்க்காலிலும் வயல்நிலத்திலும்
வள்ளம் ஓடும் வாவிகளிலும்
வானரங்கள் தாவும்
வனங்களிலும் மலையிலும்
வளர்ந்துவிட்ட நீங்கள்....

கறைபட்ட போரால்
கரையற்ற எம்மவரை
யாரோ என்பதுபோல்
பாராமல் நிற்பதுதான் நியாயமா!!!,?

30 March 2014

திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு

நம்ம மக்கள் தொகையில பெரும்பான்மையானவர்கள் நடுத்தர வர்க்கம். நிறையக் கனவுகள் நிறைய ஆசைகள், வாழ்க்கையில ஜெயிக்கனும் என்றுதான் வாழ்க்கைய ஆரம்பிக்கிறாங்க. ஆனா எங்கயோ சின்னச் சின்ன ஆசைகளுக்கு சின்ன சின்ன வெற்றிகளுக்கு திருப்தி அடைந்துவிடுவார்கள். ஆசைக்கும் தேவைக்கும் நடவில ஓடிட்டே இருப்பாங்கள். திடிர்எனப்பார்த்தால் அந்த வேகம் குறைந்திருக்கும். 

அந்த பயர் இல்லாம இருக்கும். பார்த்திருக்க தலையெல்லாம் நரைத்திருக்கும் ஒரு சின்னதா ஒரு வீடு, அங்க ஒரு கலர் ரீவி, ஒரு ஸ்கூட்டர் வைக்கு அதில முன்னாடி ஒரு குழந்தை பின்னாடி ஒரு குழந்தை அதற்கு பின்னால மனைவி. இந்த வசதி கிடைத்தா போதும் என்று முடங்கிப்போன எத்தனையோ திறமைசாலிகள நாளாந்தம் பார்க்க கிடைக்கிதுங்க. திறமை என்கிறது நமக்குள்ள எரியிற நெருப்பு அது அணையாம காப்பாத்தனும் பாத்துக்கனும்.

29 March 2014

இன்னும் காத்திருப்புகளுடன்

எத்தனையோ அன்னையர்
பிள்ளை இழந்தவர்களாய்
உறவை இழந்தவர்களாய்
அத்தனைபேர்க்கும் நான் பிள்ளை

09 March 2014

நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள்!!


நேற்றய சிங்கப்பூரைப் பாருங்கள் அது 1950களில் இலங்கை மற்றும் இந்தியாவை விட ஏழை நாடாகத்தான் இருந்தது ஆனால் இன்றய சிங்கப்பூர் முற்றிலும் வேறுபட்டது, அதன் மொத்த மக்கள் தொகை கிட்டத்தட்ட 43 லெட்சம் மற்றும் கிட்டத்தட்ட 644 கிலோமீற்றர் பரப்பளவு கொண்ட குட்டித்தீவு இது. இந்தியாவின் வெங்குழூரை விட சிறிய நகரம். ஒரு சிங்கப்பூர் குடிமகனின் சராசரி வருமானம் நம்மை விட பன்மடங்கு அதிகம். 80 சதவீதம்பேர் தனி பிளட் வைத்திருக்கின்றார்கள். இது இருபத்தைந்தே ஆண்டுகளில் ஏற்ப்பட்ட முன்னேற்றம்.

இரண்டாம் தரப்பு

நீ எதை செய்யவில்லை
நீ எதை அடையவில்லை
ஐக்கிய நாடுகள் கோடுபோட்டுக்காட்ட
நீ ஒன்றும் இரண்டாம் தரப்பல்ல

27 February 2014

அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல

அடியே பொண்ணு ஐயாரெட்டு
அம்பாரக் கரும்புக் கட்டு
அத்தானுக்கு ஆசையெல்லாம் ஒன்மேல
ஒன்னப் பாத்து பாத்து ஏங்கிறனே தன்னால

04 January 2014

கடவுளாப்பாத்து அனுப்பி இருக்கிறாரு

 கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் . 

'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.

01 January 2014

முடியுமானால் முன்னுக்கு வா !!

என் நூறாவது கவிதை... மகிழ்சியுடன்  மண் வாசம் சேர்த்தவாறே!!







ஜலதரங்கம் பாடும் கடற்கரை வெற்றிலை போட்ட கிழக்குவாணம் வீடு சென்று திரும்பும் தென்னறல்
நெழிந்து நெழிந்து
வளைந்து வளைந்து ஒளிந்து ஒளிந்து ஓடுகின்ற வாவி
சங்கீதம் பாடும் மழை-அதில் நனைந்து நனைந்து சலங்கை ஒலிக்குத் வேளான்மை வயல்

என்னதான் என்றாலும் எண்ட ஊர்போலில்லை

தங்க மணல் ஜொலிக்கும் கடற்கரை
தாவி மீன் பாடிடும் குளக்கரை
செல்லும் இடம் எல்லாம் ஆற்றங்கரை
சேர்ந்து மணம் பரப்பும் தாமரை

ஒரு தாய்மக்கள் நாம்!

நெறிப்படுத்தும் மதம்
நேசிக்கும் இனம்
தொழிலுக்கான சாதி
பிரிந்து வாழும் பிரதேசம்
இவையெல்லாம்
மனிதாபிமானத்தின் வேர்கள்