ADS 468x60

25 November 2018

இலங்கை அரசியலில் உருவெடுக்கும் மூன்றாவது சக்தி!

Related imageஇன்று தொடர்ந்து நடந்தேறிவரும் அபகீர்த்தியான மக்கள் மன்றச் செயற்பாட்டில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளமையை நாட்டில் ஆரம்பித்திருக்கும் எதிர்பு அலை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் யு.என்.பி மற்றும் எஸ்.எல்.எப்.பி ஆகிய இரு பெரும்பாண்மை கட்சிகளுக்கும் இருந்து வந்த மதரீதிhன மற்றும் இனரீதியான ஆதிக்க வாக்கு வங்கியில் அவர்களது நேர்மையின்மை, உண்மைத்தன்மை இழப்பு காரணமாக மக்களிடத்திருந்து எதிர்மறையான அபிப்பிராயத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலமை இப்பொழுது ஜனத்தா விமுத்தி பெரமுனைக்கு பெரும்பாண்மை மக்களிடையே தோன்றியுள்ள இடைவெளியை நிரப்பவதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.

24 November 2018

வயல்காரன்!

Indian agriculture must modernise if it stands to keep up with population growth

உழுதிய விழைநிலத்தின்
புழுதியில் விதையாக்கி
வியர்வையில் தழையாகி
மழையினில் பயிராக்கி
பசியினில் வயிராறும்
படியரிசின் சொந்தக்காரன்!

22 November 2018

ஏறுமுகமான வாழ்க்கைச் சுமை, இறங்கு முகமான இலங்கையின் பணப் பெறுமதி

Sri Lankan Rupee depreciates further
இன்று இலங்கையின் மிகப்பிரதான பிரச்சினைகளாக ரூபாவின் விலைக்குறைவு மற்றும் எண்ணை விலையின் அதிகரிப்பு என்பன விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அதில் இந்த ரூபாவின் மதிப்பு குறைந்திருப்பது பாரிய குழப்படியினை மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது இவை பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.. எமது நாட்டின் வரலாற்றில் 1948ம் ஆண்டில் ரூபாயினுடைய நாணய மாற்று விகிதமானது 4.76 ஆகக் காணப்பட்டது. ஆயினும் அந்த நாணய மாற்று விகிதத்தை நீண்ட நாட்களிற்கு காப்பாற்ற முடியவில்லை. 1977ம் ஆண்டிற்கு முன்னர் ரூபாய் மதிப்பினை அவ்வப்போது மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் வெளிப்பாய்ச்சலை கட்டுப்படுத்தி அதனூடாக இறக்குமதி மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தினர். 

20 November 2018

பிட்டும் தேங்காப்பூவுமாய் = களுதாவளை + தேத்தாத்தீவு


களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையார் சந்நிதானம் சென்றுபாருங்கள். பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மதுரை மரக்கீற்று மண்ணைத் துடைக்கும், தாமரை பூத்து இருமருங்கும் சாமரம் வீசும், பசுமாட்டுப் பட்டி அழகுசேர்க்க, மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும். 

இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, வாவியின் ஓரத்தில் சலசலவென  வயலின் ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவை தனித்தனியாக இருந்திருந்தால் கற்பனை பண்ணி இரசிப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும். அது போல்தான் இன்று ஒரு பெரிய நிகழ்வில் களுதாவளை கிராமத்தவர் எமது தேத்தாத்தீவு கிராமத்தினையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது ஒரு அழகு, பெருமை, மகிழ்ச்சி. 

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது- அமரர் ஊர்தி சேவை.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது அதுக்கு ஒரு மனசும் சேவை செய்யும் இதயமும் தேவை. அதனால் திருப்தியடைகின்ற ஒரு சேவகரைப்பற்றி எழுதியே ஆகணும். இன்றய நவீன பரபரப்பான உலகில் யாரையும் யாரும் கவனிக்காத அல்லது கண்டுகொள்ளாத நிலையிலேயே வாழ்க்கையைப் பழக்கிக் கொள்ளுகின்றனர். ஒருத்தருக்கொருவர் ஒத்தாசையாய் தமது நேரத்தினை பணத்தினை செலவு செய்த காலம் இன்று இல்லாமல் போயுள்ளது. அதுபோக இன்னொருவர் செய்யும் நல்லவற்றை முகப்புத்தகத்தில் கூடியிருந்து குறைகூறும் மக்களிடையே இவற்றை மனத்தயிரியத்துடன் முன்னெடுப்பதென்பது பாராடடுதற்குரியது.

15 November 2018

இலங்கைக்கான புதிய ஆட்சி முறையின் தேவைப்பாடும், அணுகுமுறைகளும்.

இன்று இந்தச் சூழலில் நமது நாட்டிற்கு தேவையாக இருப்பது, எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வெளியில் மீதமுள்ள காலத்தில் குறித்த உடன்பாடுகளுடன் சமமாக செய்யும் ஆட்சி முறை (bi-partisan) ஒன்றுதான். இந்த முறையில் நாட்டின் தலைவர் உட்பட எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்குகொண்டு ஒரு தேசிய அமைச்சரவை கௌன்சிலை (The National Council of Ministers) ஸ்த்தாபித்து அதல் 25 கபினற் அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள 14 மாதங்களையும் நாட்டை நல்ல முறையில் நடாத்திச் செல்வது இன்று சாலப் பொருத்தமாக இருக்கும். இதில் பிரதி அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இருக்க மாட்டார்கள். இந்தக் காலத்தில நீண்டகால எமது நாட்டின் மற்றும் எமது மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் செயற்படவேண்டும். 

14 November 2018

இன்று இலங்கையில் நடக்கப் போவது என்ன?

இன்று மகிந்த அணிக்கு இருக்கும் பலம் மக்கள் செல்வாக்கு, ரணில் அணிக்கு இருக்கும் பலம் பாராளுமன்ற செல்வாக்கு.

மகிந்த பாராளுமன்றம் சென்றால் வெல்ல முடியாத நிலையும் ரணில் மக்களிடம் சென்றால் தோற்றுப் போகும் நிலையும் காணப்படுகின்றது.

11 November 2018

வடகிழக்கில் பெண்களின் அரசியல் நுழைவு- காலத்தின் தேவை

Image result for woman in politics north east sri lankaபெண்கள் உயர் பதவிகளிலும், அரசியல் பீடத்திலும், தீர்மானமெடுக்கும் குலாமிலும் இருப்பது ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதனால் அவர்கள் பல இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் உலகம் கற்பிக்கும் சில விடயங்கள் எம்மை, பெண்களின் சமமான அரசியல் பிரயோகம் பற்றி சிந்திக்க வைக்கின்றது. அது குறிப்பாக உடல் உழ ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படும் வடக்கு கிழக்கில் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக பரவலாகப் பேசப்படுகின்றது. 

09 November 2018

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

இந்தா வந்துவிடும் இந்தா வந்துவிடும் என போய்க்கொண்டே இருந்தோம் காடுகள், மேடுகள், களணிகள் என கடந்தபோதும் வீடுகளைக் கண்ட பாடில்லை. ஆம் சிங்கபுரத்தினூடான ஒரு பாதையில் பொலன்னறுவையின் எல்லையில் பயணிக்கத் துவங்கி பின் நீண்ட நேரத்தின் பின் இடத்தினை அடைந்தோம். அதன் பெயர் குடா பொக்குண என்பதாகும். இந்த இடம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்ற இடமாக இருந்தது. இங்கு வாழுகின்ற அனேக குடும்பங்கள் விவசாயத்தினையே நம்பி வாழுகின்றதனை அவதானித்தோம். இங்குள்ள மக்கள் கல்வியில் முன்னேறி தம்மை பீடித்துள்ள துன்பங்களில் இருந்து விடுபட அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக குறைவாகக் காணப்பட்டதகாலேயே, அங்கு 'நுண்ணறிவை வழங்கும் நூலகத்திட்டம்' இங்கு அமுலாக்கப்பட்டது.

05 November 2018

நாம் தட்டிக்கேட்கும் ஆழுமைப்பண்பு இல்லாத சமுகத்தை படைத்துள்ளோம்!

நாம் சிறுவயது முதலே மாணவர்களிடையே எமது சூழலை பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்களை விதைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அவற்றை பிரயோகப்படுத்த கற்றுக்கொடுக்கவும் வேண்டும். எமது பாரதூரமான சூழல் பிரச்சினை நமக்கு சேய்மையில் இல்லை, அவை மிக மிக அண்மையிலேயே உள்ளது. நாம் இன்று விதைப்பவைதான் நாளை முளைத்து பயன்தரும். அதனை அடிப்படையாகக்கொண்டு மரம் நடும் நல்லெண்ணத் திட்டத்தினை பாடசாலை, கிராம மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மண்டூர் 40ம் கொலணி கிராம பாடசாலை வளாகத்துள் நடைமுறைப்படுத்தி வைத்த வேளை!

04 November 2018

பாதிக்கப்பட்ட மக்களிடையே நுண்ணறிவை வளர்க்கும் நூலகத்திட்டம்

'இன்று வாசிப்பவர்களே நாளைய தலைவர்களாகின்றனர்' என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப நாளைய தலைமுறைகளை இன்றே உருவாக்கும் நுண்ணறிவினை வளர்க்கும் நூலகத்திட்டம் இலங்கை மற்றும் அவஸ்த்திரேலிய விருதுபெற்ற மாணவர் சங்கத்தினால் (Sri Lanka Australia award alumina  association )  மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயத்தில் அமைந்துள்ள மண்டூர் 40, ஜீ.ரி.எம் பாடசாலைக்கு ஒரு தொகை நூலகத்துக்கான தளபாடங்களும் மாணவர்களுக்கான புத்தகங்களும் 3.11.2018 அன்று அந்தப் பாடசாலையில் வழங்கிகைப்பப்பட்டது. மட்டக்களப்பில் இத்திட்டத்தினை இந்த அமைப்பின் உறுப்பினரான சி.தணிகசீலன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைக்கான புதிய நூலகம் திறப்பு வைபவத்துடன் இந்தப் பாடசாலையை பசுமையாக்கும் நல்லநோக்கத்துக்கான ஆரம்ப கட்டமாக பலவகை பயன்தரும் மரங்கன்றுகள் நடப்பட்டு மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பாங்கினை வளர்பதற்கான ஊக்குவிப்பு செயற்பாடாகவும் இது அமைந்திருந்தது.