ADS 468x60

28 December 2015

மட்டு மண்ணே வணக்கம்

காடு மலை மேடு எல்லாம்
கண்ட படி நடந்தேன்
நாடு விட்டு நாடு போயி
நாலு பேரை அறிந்தேன்
கூடு விட்டு கூடு பாய்ந்து
உன்னைத் தேடும் மனமே

வளம் பொங்கும் வயலினில் கால்பட அலைந்தேன்

22 December 2015

பேசு

உன் சிரிப்பொலி கேட்டு பழகிப் போனவன் உன் சினுங்குதல் கேட்டு பருகிப் போனவன்

13 December 2015

அட மடயா!

அட மடயா அறிவிருக்கா
அர குறயா காதலா
பெண் இனமே பூவனமே!
அழகான வலிதான்டா!!

12 December 2015

மாற வைத்தவள்!

நான் வாழ வைக்கப் பிறந்தவன்
வாழத் தவறியவன்
மெல்லிய சிரிப்பில்
மென்மையான பேச்சில்
தூக்கத்தை துலைத்து
இன்பத்தை பருகியவன்

காறை எலும்பு வரை
கறுத்திருந்த குருதிகளை
மாற வைத்தவள்!

கண்கள் இரண்டினுள்ளும்
கண்ணாடி மாட்டிக்கொண்டு
காணும் காட்சியானவள்!

04 December 2015

மற்றவரும் பின்பற்றும் தமிழ் நாகாிகம்..

எல்லோருக்கும் அவரவர் பண்பாடுகள், உணவுவகைகள், கலாசாரம் என்பன மீது ஒரு இறுக்கமான விருப்பு இருப்பது அவர்களது உன்மையான தோற்றத்தை காட்டுவதாய் அமையும். சிலர் அவரவர் இனத்துவத்தினை, கலாசாரத்தினை பேணிக்கொள்ள வெட்க்கப்படுவதனையும் மறைத்துக்கொள்வதனையும் ஒரு நாகரிகமாகக் கொள்ளுகின்றனர்.

இன்றய தமிழ் இளந்தலைமுறையினர் அவற்றை காணமத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை போற்றிவந்த பல நிகழ்வுகள் யுத்தத்துடன் யுத்தமாக அடிபட்டுப் போயிற்று.

எல்லாமாகி!

எதிரியாகின்றேன் சிலநேரம்
உதிரியாகின்றேன்
பிச்சையாகின்றேன் பலருக்கு
கச்சையாகின்றேன்

என்னை உலுக்கிய செய்தி!

















என்னை உலுக்கியது சென்னைச் செய்தி!
விண்ணை பிழந்த மழை
மண்ணை இழுத்துப் போகுது
"கூவங்களை கழுவி
குடியிருப்புகளை கூவமாக்கியுள்ளது"