ADS 468x60

28 January 2021

தடுப்பூசியின் வருகை அனைவருக்கும் பொருளாதார வளர்சியைக் கொண்டுவருமா?

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 வீதம் குறைந்துள்ளது.

•ஆசியா வேகமாக மீண்டு வருவதைக் காட்டுகின்றது.

•நுகர்வோர் செலவு பழக்கம் மாறுகிறது. ஜூலை மாதத்திற்குள் 300 மில்லியனை நோய்த்தடுப்பு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி இலங்கைக்கு வந்துள்ளதனால், விரைவான நோய்த்தடுப்பு மருந்துகள் அறிமுகமாகி வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கை கொள்ளத் துவங்கியுள்ளோம். குறிப்பாக எமது நாட்டில் ஏற்றுமதிகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் தொற்றுநோயால் தட்டுத்தடுமாறின. இருப்பினும், கொள்கை வகுப்பாளர்கள், பிரத்தியேகமாக பெரிய அளவிலான பொது தடுப்பூசி வசதிகளை செய்வதற்கான நிதியைப் திரட்டுவதற்கு முனையவேண்டும் எனவும் அதேபோல இந்தத் தொற்றினால் அதிகம் நலிவுற்றுள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் மற்றும் புதிய வைரஸ் உருவாக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வளர்ச்சி வழிகளைக் கட்டமைப்புக்களை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

22 January 2021

கொவிட்-19 வாசனை நுகர்வில் இழப்பை ஏற்படுத்துமா!

அண்மைய தசாப்தத்தங்களில் மிகக் கொடிய நோயாக உருவெடுத்திருக்கும் கொவிட்-19 உலகநாடுகளை ஒன்றும் செய்ய முடியாமல் உறையவைத்துள்ளது. இதன் தாக்கம் புதிது புதிதான பாதிப்புக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொவிட் -19 தாக்கத்தின் அச்சுறுத்தலைக் குறைத்து, இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இலங்கை உறுதிப்படுத்தும் நம்பிக்கையுடன் புத்தாண்டு மலர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு குறைந்துபோன கவலைகளை புதுப்பித்து மேலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

06 January 2021

கொள்ளை இலாபம் தரும் கோழி வளர்ப்பு

இன்று பலரது விருப்பத்திற்குரிய உணவாக கோழி மாறிவருகின்றதனை, அதற்கான நாளாந்த விலை ஏற்றத்தினை வைத்தே நாம் அறிந்துகொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் கோழி வளர்ப்பு பலருக்கு வெற்றியினையும் பலருக்கு நஷ்ட்டத்தினையும் கொடுத்துள்ளது நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் அதனை முறையாக செய்து முகாமை செய்யாமையே! 

அதனை எவ்வாறு முறையாகச் செய்து இலாபமீட்டலாம் எனப் பார்க்கலாம் வாருங்கள்.

கோழிப்பண்ணை இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கால்நடைத் தொழிலாகும். 2019 ஆம் ஆண்டில் கோழி உற்பத்தி மூலம் 0.38 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களித்தது, இது இலங்கையின் மொத்த கால்நடை உற்பத்திப் பங்களிப்பில் 64 வீதமாகும் ஆகும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அதன் உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்தியது.

04 January 2021

பணம் தரும் மரங்கள்

இன்று பலர் உலகலாவிய தொற்றுக் காரணமாக தமது வாழ்வாதாரங்களை, தொழிலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மறுபுறம் இலங்கை போன்ற நாடுகளில் இந்த நிலைக்கு மாற்றுத்திட்டமாக உள்ளுர் உற்பத்தியினை அதிகரிக்க அரசு அதன் புதிய கொள்கைகளை உருவாக்கி அதற்கான மாற்றீடுகளை பெருக்கும் வழிவகைகளை செய்து வருவதனை நாம் அவதானிக்கின்றோம். அந்த வகையில் நாம் இலகுவாக உழைக்கும் பல மரங்களை தெரிந்துகொள்வது அவசியம். அதில் ஒரு பகுதிதான் பணம் காய்க்கும் மரங்கள் என்ன என்ன என இன்று உங்களுக்கு செல்ல எத்தணிக்கின்றேன். அந்த வகையில் பப்பாளி, கொய்யா, மாதுளை, பொரு நெல்லி, எலுமிச்சை, பலா போன்றவைகளை இங்கு பார்க்கலாம்.

02 January 2021

அரசாங்கத்துக்கு 2021 இல் இருக்கும் மூன்று சவால்கள்!

இன்று நாம் எமது நாட்டை மற்றும் எமது பிராந்தியத்தினை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமானால், அதற்காக அரசாங்கம் மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவினை ஏற்படுத்தல் அதற்கான சமுக இடைவெளியினை பேணுவதனை கட்டாயமாக்கல் மற்றும் அதற்கான சுகாதார வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல் இவற்றுக்கெல்லாம் மேலாக எமது நாட்டு மக்களுக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியினை விரைவாகக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

மட்டக்களப்பின் கிராமப்புறப் பெண்ணகளின் எதிர்பார்ப்பு நிறைவேற!

நமது கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தங்களது தினசரி பயன்பாட்டிற்காக அவர்களது மொத்த குடும்பங்களுக்குமான உணவு, நீர் மற்றும் அடுப்பெரிப்பதற்கான விறகுகளை சேமிப்பதில் பெரும்பாலும் அவர்களே பொறுப்பாக இருந்து கவனிக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பின் வறண்ட பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வறட்சி நிலவுவதால், பெண்கள் சுத்தமான நீரினைப் பெற்றுக்கொள்ள அதிக தூரம் பயணிக்க வேண்டும், இது இன்னும் அவர்களது வேலையை சிரமத்துக்குள்ளாக்கி அவர்களது நேரசூசியை இன்னும் இறுக்கிவிடுகின்றது.

01 January 2021

வெள்ளிச்சர இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

'வெள்ளிச்சரம்' இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நீங்கள்தான் எனது எழுத்தின் பலம்! நீங்கள்தான் சிந்தனையின் வெளிச்சவீடு! 'நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதை உண்மையாக்கவே தேடித் தேடி புதியவிடயங்களையும், உலக நடப்புக்களையும் அத்துடன் எமது மண்சார்ந்த அனைத்து விடயங்களையும் ஒரு தனியாளாக நின்று கிட்டத்தட்ட 750 படைப்புக்களை இதுவரை படைத்துள்ளேன்;! அதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நன்றிகள் கோடி. இன்னும் இப்பணி தொடர உங்களின் அன்பான ஆதரவு தேவை என்று கூறி! பிறந்திருக்கும் ஆண்டு இழந்தவை அனைத்தையும் மீளப்பெறுவதற்கான ஆணடாக மலர வாழ்த்துக்கள்! 

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!