இது சொர்க்கமாக அமையுமா, நரகமாக அமையுமா என்பதில் அறிவியலாளர்களிடையேயே பெரும் பிளவு காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்பத் தலைவர்கள் ஒரு பக்கம் "அபரிமிதமான வளம் கொண்ட புதிய யுகம்" வரவிருக்கின்றது எனக் கூறுகின்றனர். மறுபக்கம், செயற்கை நுண்ணறிவின் அறிவார்ந்த தந்தையர் எனப் போற்றப்படும் விஞ்ஞானிகள் மனிதகுலம் அழிவை நோக்கிச் செல்கின்றது என அச்சம் தெரிவிக்கின்றனர். மனித இனத்தின் அழிவுக்கான சாத்தியப்பாட்டை (Probability of Extinction) கணக்கிட முடியாமல், "50 சதவிகிதம்" எனும் எண்ணையே சிலர் முன்வைக்கின்றனர். இது கற்பனை அல்ல; இது இன்று உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் அரங்கேறும் உண்மையான விவாதம்.
அழகு தேற்றாத்தீவு..
22 August 2026
மனிதம் தன்னையே காக்குமா? செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் அபாய காலம்
கலிபோர்னியாவின் சிலிக்கன் வெலி (Silicon Valley) பிரதேசத்தில் இன்று ஒலிக்கும் உரையாடல்களை கூர்ந்து கவனித்தால், ஒரு விடயம் தெளிவாகின்றது. மனிதன் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முன்னேறிக் கொண்டிருக்கின்றது. அறிவியல் ஆய்வாளர்கள் அதை "தன்னியல்பு மேம்பாடு" (Recursive Self-Improvement) என அழைக்கின்றனர் — அதாவது, ஒரு இயந்திரம் இன்னுமொரு இயந்திரத்தைப் பயிற்றுவிக்கும் நிலை, படிப்படியாக அல்ல, கூம்பு வளர்ச்சியாக (Exponential Growth) நிகழும் தருணம். அந்தத் தருணத்தில் பிறக்கும் அறிவுத்திறன், பல முக்கியமான தளங்களில் மனிதனை விடவும் மேலானதாக அமையக்கூடும் என எச்சரிக்கப்படுகின்றது.
21 August 2026
மழை சொல்லும் எச்சரிக்கை இலங்கை கேட்குமா?
மலைகள் நகர்கின்றன. வீதிகள் மூடப்படுகின்றன. வீடுகள் மண்ணுக்குள் புதைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்குப் பருவமழைக் காலம் வரும்போது, இலங்கை மீண்டும் அதே கதையை எதிர்கொள்கிறது — புதிய பாத்திரங்களுடன், அதே முடிவுடன். இம்முறை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,345; உயிரிழந்தோர் எண்ணிக்கை எட்டு; பாதிக்கப்பட்ட மாவட்ட எண்ணிக்கை பதினொன்று. எண்கள் ஆண்டுதோறும் மாறுகின்றன, ஆனால் கேள்வி மாறவில்லை: ஏன் இலங்கை ஒவ்வொரு மழைக்காலத்திலும் அதே பேரழிவை மீண்டும் மீண்டும் எதிர்கொள்கிறது?
18 August 2026
வறட்சியை எதிர்கொள்ள வேண்டியது தனிநபர் கடமையும் தேசியப் பொறுப்பும்
நாடு தற்போது கடுமையான வறட்சியான காலநிலையை (drought condition) எதிர்கொண்டுள்ளது. இதற்கு பிரதான காரணமாக எல் நினோ (El Niño) தாக்கம் அமைந்துள்ளது எனக் காலநிலை வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனறாகலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நண்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை வெறுமனே ஒரு காலநிலைத் தகவல் அல்ல; அது நாட்டின் குடிநீர் வழங்கல், விவசாய உற்பத்தி, பொது சுகாதாரம் மற்றும் சூழலியல் சமநிலை ஆகிய பல தளங்களிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கடுமையான யதார்த்தமாகும்.
17 August 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெயரில் நடைபெறும் நிதி மோசடிகள்- விழிப்புணர்வே பாதுகாப்பு
வெளிநாடுகளில் அதிக சம்பளத்துடன் கூடிய தொழில் வாய்ப்பு வழங்குவதாகவும், வெளிநாட்டு தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகவும் கூறி இடம்பெறும் நிதி மோசடிகள் (financial fraud) நாட்டில் தொடராக அதிகரித்து வருகின்றன. இது தொடர்பான முறைப்பாடுகள் சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பினருக்கு அடிக்கடி கிடைக்கப்பெறுகின்றமை, இப்பிரச்சினையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக சமீபத்திய வாரங்களில் இத்தகைய பண மோசடி சம்பவங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது வெறுமனே ஒரு தனிநபர் பிரச்சினையாக அல்லாமல், சமூகப் பொருளாதார தாக்கத்தைக் கொண்ட ஒரு பரந்த நெருக்கடியாக பரிணமித்துள்ளது.
16 August 2026
வறட்சிப் பேரிடர்: நிவாரணங்களுக்கு அப்பால் தொலைநோக்குத் தீர்வுகள்
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை, நாட்டின் பொதுச் சுகாதார மற்றும் விவசாயம் சார்ந்த கட்டமைப்பின் மீது பாரிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது. அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் சமீபத்திய தரவுகளின்படி, நாடு முழுவதும் நிலவும் வறட்சியால் மூன்று மாவட்டங்களில் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் 12,182 குடும்பங்களைச் சேர்ந்த 39,019 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3,478 குடும்பங்களைச் சேர்ந்த 12,212 பேர் தற்போது குடிநீர் நெருக்கடியை [Acute Water Scarcity] எதிர்கொண்டு வருகின்றனர் என்பது மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் [Department of Meteorology] எச்சரித்துள்ளதைப் போல, எல் நினோ [El Niño] காலநிலை நிகழ்வின் தாக்கம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என்பது, தற்போதைய நெருக்கடியானது ஒரு தற்காலிக நிகழ்வல்ல, மாறாக இது நீண்டகாலப் பாதிப்புகளைக் கொண்ட ஒரு பேரிடர் என்பதை உணர்த்துகிறது.
15 August 2026
கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை
கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை
தமிழ்–முஸ்லிம்
சமூகங்களின் பகிரப்பட்ட வாழ்வியல், கலாச்சார பல்வகைமை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்கால
வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான ஒரு புதிய சிந்தனை
கிழக்கு
மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலாச்சாரம், அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விவாதங்கள்
அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் முக்கியமான பேசுபொருளாக மாறுகின்றன.
இத்தகைய
விவாதங்கள் அவசியமற்றவை என்று கூற முடியாது. ஒரு சமூகத்தின் மொழி, மதம், உடை, உணவு, குடும்ப மரபுகள், திருமண நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வரலாற்று நினைவுகள் அதன்
அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.
ஆனால் ஒரு
முக்கியமான கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:
“நமது கலாச்சார வேறுபாடுகளைப் பற்றி
தொடர்ந்து விவாதிப்பதைத் தாண்டி, அந்த வேறுபாடுகளை கிழக்கு மாகாணத்தின் எதிர்கால
வளர்ச்சிக்கான ஒரு வளமாக மாற்ற முடியாதா?”
வடக்கு, கிழக்கு மறுமலர்ச்சிக்கான புதிய பாதை: உலக வங்கியின் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியில் தேசிய சராசரிக்குப் பின்னடைந்த நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. யுத்தத்தால் சிதைந்த உள்கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகளின் பற்றாக்குறை, மூலதனப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய இணைப்புக்குறைவு ஆகியன இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியை நீண்டகாலமாக முடக்கி வைத்திருந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தை (Integrated Regional Development Programme) நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (International Development Association – IDA) நூறு மில்லியன் அமெரிக்கன் டொடாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவி, ஒரு எண்ணிக்கை மட்டுமன்று; முப்பதாண்டு காலப் பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப முயலும் லட்சக்கணக்கான மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று.
14 August 2026
டெங்கு பேரிடர்: கூட்டுப் பொறுப்பும் அவசியமான மாற்றங்களும்
இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் மீதான பெரும் சவாலாக டெங்கு நோய் உருவெடுத்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் நேற்று (13) வரை நாடளாவிய ரீதியில் 91,346 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் . இக்காலப்பகுதியில் டெங்கு நோயினால் 68 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது . குறிப்பாக, வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த மாதத்தில் மாத்திரம் 29,968 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் . இதேவேளை, ஆகஸ்ட் மாதம் முதல் 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது .



