அழகு தேற்றாத்தீவு..
16 August 2026
வறட்சிப் பேரிடர்: நிவாரணங்களுக்கு அப்பால் தொலைநோக்குத் தீர்வுகள்
15 August 2026
கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை
தமிழ்–முஸ்லிம்
சமூகங்களின் பகிரப்பட்ட வாழ்வியல், கலாச்சார பல்வகைமை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்கால
வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான ஒரு புதிய சிந்தனை
கிழக்கு
மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலாச்சாரம், அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விவாதங்கள்
அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் முக்கியமான பேசுபொருளாக மாறுகின்றன.
இத்தகைய
விவாதங்கள் அவசியமற்றவை என்று கூற முடியாது. ஒரு சமூகத்தின் மொழி, மதம், உடை, உணவு, குடும்ப மரபுகள், திருமண நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வரலாற்று நினைவுகள் அதன்
அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.
ஆனால் ஒரு
முக்கியமான கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:
வடக்கு, கிழக்கு மறுமலர்ச்சிக்கான புதிய பாதை: உலக வங்கியின் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியில் தேசிய சராசரிக்குப் பின்னடைந்த நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. யுத்தத்தால் சிதைந்த உள்கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகளின் பற்றாக்குறை, மூலதனப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய இணைப்புக்குறைவு ஆகியன இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியை நீண்டகாலமாக முடக்கி வைத்திருந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தை (Integrated Regional Development Programme) நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (International Development Association – IDA) நூறு மில்லியன் அமெரிக்கன் டொடாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவி, ஒரு எண்ணிக்கை மட்டுமன்று; முப்பதாண்டு காலப் பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப முயலும் லட்சக்கணக்கான மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று.
14 August 2026
டெங்கு பேரிடர்: கூட்டுப் பொறுப்பும் அவசியமான மாற்றங்களும்
உயர்ந்துகொள்ளும் உத்தியோகபூர்வ வறுமைக் கோடும் பொருளாதார நிலைபேற்றிற்கான சவால்களும்
உழவெனும் உயிர்மூச்சு: நீதியும், எதிர்காலமும்
நண்பர்களே, கடந்த காலத்தில் இலங்கை ஒரு அரிசி வளம் நிறைந்த நாடாக இருந்தது என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தக் காலத்தில் நமது நாடு, நாட்டிற்குப் போதுமான ஒரு விவசாயப் பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதனால்தான் நமக்கு 'கிழக்கின் தானியக் களஞ்சியம்' என்ற பெருமைமிகு புனைப்பெயர் கிடைத்தது. அன்று நாம் விதைத்தோம், அறுவடை செய்தோம், உலகிற்குக் கொடுத்தோம். இன்று நாம் இறக்குமதி செய்கிறோம், கடன் வாங்குகிறோம், கவலைப்படுகிறோம். இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது என்பதை நாம் கேட்க வேண்டும், தெரிந்துகொள்ள வேண்டும், திருத்த வேண்டும்.


