அழகு தேற்றாத்தீவு..
31 August 2026
இலங்கையின் சமூக பொருளாதார மீண்டெழுச்சிக்கான நவீன கொள்கைப் பாதை
பாடசாலை முடித்த கையோடு இளைஞர்கள் முச்சக்கர வண்டி ஓட்டுநர்களாக மாறுகின்ற போக்கு,
30 August 2026
செயற்கை நுண்ணறிவு விளம்பரங்கள்: படைப்பாற்றலே பிராண்ட் பெறுமதியைத் தீர்மானிக்கிறது
நீதிக்கான நீள் பயணம்-
இன்று, ஆகஸ்ட் 30, 2026, ஞாயிற்றுக்கிழமை, 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' சர்வதேச தினமாகும். இத்தினத்தை முன்னிட்டு, வடக்கு கிழக்கு இணைந்த 'வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்' சங்கத்தின் ஏற்பாட்டில், 'நீதிக்கான நீள் பயணம்' எனும் தலைப்பில் ஒரு சர்வதேச மாநாடு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் காலை 9:00 மணிக்கு ஆரம்பமானது. மாநாடு தொடங்குவதற்கு முன்னர், உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலையானவர்களின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று, அதைத் தொடர்ந்து கவனயீர்ப்புப் பேரணி கலையரங்கை நோக்கி நகர்ந்தது. சர்வதேசத் தூதரகப் பிரதிநிதிகள், வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகள், அரசியல் தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பரந்த அளவிலான மக்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறுதியாகப் பயன்படுத்திய பொருட்களும், குடும்பங்களால் இன்றும் பேணப்பட்டு வரும் நினைவுச் சின்னங்களும் பொதுமக்கள் பார்வைக்காக மண்டபத்தில் காட்சிப்படுத்தப்பட்டமை, இப்பிரச்சினையின் மனித முகத்தை மீண்டும் முன்நிறுத்தியது.


