நெருக்கடியில் ஒரு சிறுகூட்டத்தினர் தங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக சக மனிதர்களின் அன்றாட தேவைகளை பறிக்கின்றனர் என்ற கொடுமையான யதார்த்தத்தை முன்வைக்கிறது. நாட்டின் பொருளாதார இறையாண்மையும் (Economic Sovereignty) பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, சட்டம், நிர்வாகம், சமூகம் மூன்றும் ஒன்றிணைந்து பதிலளிக்க வேண்டிய கடமை உருவாகிறது.
அழகு தேற்றாத்தீவு..
27 March 2026
எரிபொருள் பதுக்கல் — தேசத்திற்கு எதிரான குற்றம், சமூகத்திற்கு எதிரான துரோகம்
நெருக்கடியில் ஒரு சிறுகூட்டத்தினர் தங்கள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக சக மனிதர்களின் அன்றாட தேவைகளை பறிக்கின்றனர் என்ற கொடுமையான யதார்த்தத்தை முன்வைக்கிறது. நாட்டின் பொருளாதார இறையாண்மையும் (Economic Sovereignty) பொதுமக்களின் அடிப்படை உரிமைகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்போது, சட்டம், நிர்வாகம், சமூகம் மூன்றும் ஒன்றிணைந்து பதிலளிக்க வேண்டிய கடமை உருவாகிறது.
26 March 2026
மத்திய கிழக்கு புயலில் சிக்கும் இலங்கை — நம்பிக்கையோடு தொடங்கிய ஆண்டு நெருக்கடியை நோக்கி நகர்கிறதா?
கல்வியின் இடையே — பயிற்சிக் காலம் (Internship) சுமையாகுமா, பாலமாகுமா?
25 March 2026
ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்
"ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!" என்ற எம் மூதாதையரின் மிக ஆழமான, அதேநேரம் கூர்மையான தத்துவத்தோடு இன்றைய என் உரையாடலைத் தொடங்க விழைகின்றேன். ஒவ்வொரு நாளும் விடியும் போது, நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான்: நீங்கள் மக்களை வெல்கிறீர்களா? இல்லை, மனிதர்களின் மனதைக் கொல்கிறீர்களா?
அன்பின் உறவுகளே, அண்மையில் எனது அவதானத்திற்கு வந்த, வீதியோர யதார்த்தங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது வெறும் வார்த்தைகளின் விளையாட்டு அல்ல; இது மனித உளவியலின், எமது சமூக முகாமைத்துவத்தின் மிக ஆழமான வெளிப்பாடு.
24 March 2026
ஈரானியப் போர் நிழலில் இலங்கை - எரிசக்தி நெருக்கடிக்கு அவசர காலத் தீர்வுகள் தேவை
எரிபொருள் மிகக் கொடிய அரசியல் ஆயுதமாக மாறியுள்ளது
உலக வரைபடத்தில் எங்கோ நடக்கும் அதிகாரப் போட்டிகள், எமது வீட்டுச் சமையலறையில் எவ்வாறு கண்ணீரை வரவழைக்கின்றன என்பதை ஒரு கதையாக அல்ல, எமது கண்முன்னே நடக்கும் நிதர்சனமாகப் பகிர்ந்துகொள்ளவே ஒரு சக பயணியாக வந்திருக்கிறேன். ஆபிரிக்காவின் கறுப்புச் சூரியன், மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் ஒருமுறை கூறுவார், "சுதந்திரம் என்பது வெறுமனே சங்கிலிகளை அறுத்துக்கொள்வதல்ல; அது மற்றவர்களின் உரிமைகளை மதித்து, அவர்களையும் வாழவைக்கும் வகையில் வாழ்வது" என்று. ஆனால், இன்றைய உலக அரசியலில் அந்த மதிப்பு எங்குமே இல்லை. உலக அரசியல் செயல்முறைகள் இன்று வெறும் சித்தாந்தங்களால் மட்டுமல்ல, நிலம், எண்ணெய் மற்றும் இயற்கை வளங்களின் உரிமையாலும் மட்டுமே தீர்மானிக்கப்படுகின்றன. இன்று, இந்த வளங்களுக்குச் சர்வதேச உரிமையாளர்களை உருவாக்கும் ஏகாதிபத்தியச் செயல்முறை, ஒரு அப்பட்டமான போர் நடவடிக்கையாக மாறியுள்ளது. இதனுடைய இறுதி விளைவை, தொலைதூரக் கிராமங்களில் உள்ள, எந்தவொரு உலக அரசியலும் அறியாத அப்பாவி சாதாரண குடிமக்களாகிய நாமே ஒவ்வொரு நாளும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
23 March 2026
உரம் இல்லாத உலகம் — ஒரு உணவு அச்சுறுத்தல்
உலகின் மிகப்
புகழ்வாய்ந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவரான ஜான் மேனார்ட் கெய்ன்ஸ் ஒரு முறை
சொன்னார்: "The long run is a misleading
guide to current affairs. In the long run, we are all dead." — நீண்ட காலத்தை நம்பி இன்றைய நெருக்கடியை
அலட்சியப்படுத்தாதீர்கள், ஏனென்றால் நீண்ட காலத்தில் நாம்
எல்லோரும் இறந்திருப்போம். இந்த வார்த்தைகள், இன்று, இந்த நிமிடம், நம் அனைவர் வாழ்க்கையிலும் ஒரு கூர்மையான
எச்சரிக்கையாக ஒலிக்கின்றன.
பேராசிரியர் சுரேஷ் உனது பதவிக்காலம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொற்காலமாக அமையட்டும்
மட்டக்களப்பின் மாண்புமிகு மண், கலைக்கும் இலக்கியத்திற்கும் மட்டுமல்ல, அறிவிற்கும் ஆளுமைக்கும் விளைநிலம் என்பதை காலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றது. ஈழத்து இலக்கிய வானில் அழியாத் தடம் பதித்த கவிஞர் நீலாவணன் பிறந்த மண்ணில் உதித்து, இன்று கல்விப் புலத்தில் சிகரங்களைத் தொட்டிருக்கும் ஒருவரைப் பற்றிப் பேசுவதிலும், வாழ்த்துவதிலும் நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.


