நாங்கள் மிகச் சிறுவர்களாக இருந்த காலத்தில், எங்கள் ஊர்க் கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பஜனை நிகழ்வு மிக விமரிசையாக நடக்கும். அதைத் தொடர்ந்து, பகவத் கீதையின் ஒவ்வொரு அத்தியாயமாக விரிவுபடுத்திச் சொல்லப்படும் அந்த உபதேச நேரத்திற்காகவே நாங்கள் ஆவலோடு காத்திருப்போம். அந்த இளமைப் பருவத்தில், அந்தத் திவ்யமான சூழலில் அமர்ந்து பகவத் கீதையை நான் பல தடவைகள் வாசித்திருக்கிறேன்; ஆழமாகச் செவிமடுத்திருக்கிறேன். அன்றைக்குக் கேட்ட அந்த ஆன்மீகக் குரல்கள் இன்று என் வாழ்வின் பல திருப்பங்களில் ஒரு வெளிச்சமாகத் திகழ்கின்றன.
அழகு தேற்றாத்தீவு..
23 August 2026
துன்பம் என்பது உங்களை அழிக்க வந்த முடிவல்ல, உங்களை ஆளுமைப்படுத்த வந்த உலைக்களம்.
22 August 2026
மனிதம் தன்னையே காக்குமா? செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் அபாய காலம்
இது சொர்க்கமாக அமையுமா, நரகமாக அமையுமா என்பதில் அறிவியலாளர்களிடையேயே பெரும் பிளவு காணப்படுகின்றது. புதிய தொழில்நுட்பத் தலைவர்கள் ஒரு பக்கம் "அபரிமிதமான வளம் கொண்ட புதிய யுகம்" வரவிருக்கின்றது எனக் கூறுகின்றனர். மறுபக்கம், செயற்கை நுண்ணறிவின் அறிவார்ந்த தந்தையர் எனப் போற்றப்படும் விஞ்ஞானிகள் மனிதகுலம் அழிவை நோக்கிச் செல்கின்றது என அச்சம் தெரிவிக்கின்றனர். மனித இனத்தின் அழிவுக்கான சாத்தியப்பாட்டை (Probability of Extinction) கணக்கிட முடியாமல், "50 சதவிகிதம்" எனும் எண்ணையே சிலர் முன்வைக்கின்றனர். இது கற்பனை அல்ல; இது இன்று உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குள் அரங்கேறும் உண்மையான விவாதம்.
21 August 2026
மழை சொல்லும் எச்சரிக்கை இலங்கை கேட்குமா?
18 August 2026
வறட்சியை எதிர்கொள்ள வேண்டியது தனிநபர் கடமையும் தேசியப் பொறுப்பும்
17 August 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெயரில் நடைபெறும் நிதி மோசடிகள்- விழிப்புணர்வே பாதுகாப்பு
16 August 2026
வறட்சிப் பேரிடர்: நிவாரணங்களுக்கு அப்பால் தொலைநோக்குத் தீர்வுகள்
15 August 2026
கிழக்கு மாகாணத்தின் புதிய வளர்ச்சிப் பாதை
தமிழ்–முஸ்லிம்
சமூகங்களின் பகிரப்பட்ட வாழ்வியல், கலாச்சார பல்வகைமை மற்றும் பொருளாதார வாய்ப்புகளை எதிர்கால
வளர்ச்சிக்கான சக்தியாக மாற்றுவதற்கான ஒரு புதிய சிந்தனை
கிழக்கு
மாகாணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலான கலாச்சாரம், அடையாளம், பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விவாதங்கள்
அவ்வப்போது சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் முக்கியமான பேசுபொருளாக மாறுகின்றன.
இத்தகைய
விவாதங்கள் அவசியமற்றவை என்று கூற முடியாது. ஒரு சமூகத்தின் மொழி, மதம், உடை, உணவு, குடும்ப மரபுகள், திருமண நடைமுறைகள், வழிபாட்டு முறைகள் மற்றும் வரலாற்று நினைவுகள் அதன்
அடையாளத்தின் முக்கிய கூறுகளாகும்.
ஆனால் ஒரு
முக்கியமான கேள்வியை நாம் கேட்க வேண்டிய நேரம் இது:
வடக்கு, கிழக்கு மறுமலர்ச்சிக்கான புதிய பாதை: உலக வங்கியின் பாராட்டுக்குரிய முன்னெடுப்பு
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார ரீதியில் தேசிய சராசரிக்குப் பின்னடைந்த நிலையிலேயே தொடர்ந்து வருகின்றன. யுத்தத்தால் சிதைந்த உள்கட்டமைப்பு, தொழில் வாய்ப்புகளின் பற்றாக்குறை, மூலதனப் பற்றாக்குறை மற்றும் பிராந்திய இணைப்புக்குறைவு ஆகியன இப்பிராந்தியங்களின் அபிவிருத்தியை நீண்டகாலமாக முடக்கி வைத்திருந்தன. இந்நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தித் திட்டத்தை (Integrated Regional Development Programme) நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திடமிருந்து (International Development Association – IDA) நூறு மில்லியன் அமெரிக்கன் டொடாலர் நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு முடிவாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவி, ஒரு எண்ணிக்கை மட்டுமன்று; முப்பதாண்டு காலப் பொருளாதார இடிபாடுகளுக்கு மத்தியில் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்ப முயலும் லட்சக்கணக்கான மக்களுக்கான ஒரு நம்பிக்கைக் கீற்று.



