ADS 468x60

29 December 2020

புதிதாகப் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் 'தொற்று புதிய வடிவில் எம்மை தாக்குமா!'

2020 இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருக்கும இத்தறுவாயில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு 2021 என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதனைக் காணலாம். அதே போல் மக்கள் ஆரம்பத்தில் இருந்த ஜாக்கிரதை மெது மெதுவாகக் குறைந்து எந்தவித அச்சமும் இன்றி அஜாக்கிரதயாக திரிவதனையும் பண்டிகைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான ஒரு ஆபத்தான பின்னணியில், இந்த நோய்த்தொற்று எமது நாட்டிற்கு மாத்திரம் பரவுவவில்லை இது உலகின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பரவி வருகின்றது. ஆனால் அவை நாட்டுக்கு நாடு மாறுபட்ட அளவுகளில் பரவி வருவதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மேலும் இதனால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போயுள்ளனர். 

28 December 2020

மாரிகாலமும் மாணவக் குழந்தைகளும்... கவனம்!

அடடா மழைடா அட மழைடா.... ஏனச் சிறுவர்கள் இந்தக் காலத்தில் கொரோணாவையும் பொருட்படுத்தாமல் கொண்டாடியும் அதே நேரம் பலர் திண்டாடியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக எமது கிழக்கு மாகாணம் எங்கும் அடை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதேபோல் மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே குழந்தைகளே மழை நீர் நமக்கும் பூமிக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மழைக் காலத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதும் அவசியம் அன்பு மாணவர்களே!

இந்த மழைகாலத்தில் மிக மிக ஸ்தம்பிதமாகும் ஒன்று போக்குவரத்து. அது நகரமானாலும் கிராமமானாலும் அபிவிருத்தியை சரியாக செய்யாத நமக்கு ஏற்படும் ஒன்றுதான். ஆதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலம் மிக ஆபத்தான சூழலில் நடைபெற்று வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். 

27 December 2020

கொரோணா நெருக்கடியை வென்றெடுக்க தொழிலுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்.

மனிதனை மனிதன் சந்திக்க முடியாத, நாடுகளுக்கிடையில் நேரான தொடர்புகள் இல்லாத நிலையில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டு முற்றாக அவை ஸ்தம்பித்திருந்தன.

ஆனால் அவை ஏற்கனவே வளர்சியடைந்த தொழில்நுட்பத்தினை துணையாகக்கொண்டு மீண்டும் இந்த புதிய இயல்பு நிலையில் வளர்ந்து தொடர்ந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவற்றுக்குள் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டு பாதுகாப்பாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த பொருட்களை வாங்கவும் விற்கவும் இந்த தொழில்நுட்பம் பலவகையிலும் உறுதணையாக இருந்து வருகின்றமையை இந்தக் கட்டுரையின் ஊடாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் நாமும் நம்மை கொண்டுவரும் பொழுதே நாம் இந்த கொடிய நெருக்கடியினை வெற்றிகொள்ள முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் அறிந்த வகையில், உலகில் 2019 டிசம்பரில்தான் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் 19 ஆனது, ஒரு சில மாதங்களுக்குள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி ஏற்பட்ட பரபரப்பு மற்றும் அச்சநிலை காரணமாக நாடுகளை முடக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதனால் அந்தந்த நாடுகளின் பல வர்த்தக நடவடிக்கைகளையும் அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்த நிர்பந்தித்தன. 

20 December 2020

கோவிட்டிற்கு எதிரான போரில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்.

நாம் அம்மை நோய், டெங்கு, எலிக்காய்சல், பறவைக்காய்சல் என பல தொற்றுக்கள் தோன்றி குறுகிய காலத்தில் குறுகிய பாதிப்புக்களுடன் அவற்றை வெற்றி கண்டுள்ளோம். ஆனால் இன்று புதுவிதமாக ஆடவைத்துக்கொண்டிருக்கும் தடுப்பு மருந்துகளும் இல்லாத இன்றய நிலையில் இவற்றோடு போராட அனைத்து நாடுகளும் பல பல கோணங்களில் தம்மை தயார்படுத்தி சில நாடுகள் 'தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில்' தட்டுத்தடுமாறி இன்று பல அதிர்வான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன. இருந்தாலும் எவ்வளவு ஆயுதங்களை மனிதர்களை அழிக்க உருவாக்கி சாதித்து வந்தாலும், கொவிட்டுக்கு எதிரான இந்தப்போராட்டத்தினை எந்த ஆயுதத்தினாலும் முடக்க முடியாத ஒரு நிலையினை வளர்ந்த நாடுகளுக்கே சவாலாக்கியுள்ளமை அபூர்வமாக உள்ளது.

அந்த வகையில், நாம் அறிந்தவைதான் கடந்த 12 மாதங்களில், முழு உலகமும் 100 ஆண்டுகளில் என்றுமில்லதவாறு எதிர்கொண்ட மிகப்பெரிய தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது. 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) சீனாவில் நவம்பர் 2019 இல் உருவானது என்று ஆய்வுகள் கருத்திடுகின்றன. 2019 டிசம்பரின் பிற்பகுதியில், இந்த புதிய வகையான கொரோனா வைரஸின் விஞ்ஞான ரீதியாக ஊர்ஜிதமானது. 

19 December 2020

புதிய ஆண்டில் புதிய தொழிலுக்கு காத்திருக்கின்றீர்களா!

கொவிட் -19 தனது ஒரு வருட தாண்டவத்தினை கடந்துவிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள இந்த பொழுதுகளில் உலகம் எல்லாவகையிலும் இஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்த வகையில் பல அடிகளில் இருந்து மெதுவாக மீண்டுகொண்டிருந்த இலங்கை 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' இன்னும் ஒரு படி பின்னோக்கிச் சென்றுள்ளது. சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என முன்னேறிக்கொண்டிருந்த துறைகள் ஒரே அடியில் முடங்கிவிட்டது. கொவிட் பல பல வடிவங்களில் அதன் வீரியத்தைத் தொடர்ந்த வண்ணமுள்ள இந்த நிலையில் மலர இருக்கும் 2021 இல் எமது பொருளாதாரத்தில் 'வேலைவாய்ப்பு' அனைத்து சவால்களுக்குள்ளும் ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகின்றது.

வடகிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நவினமயமான விவசாயப் புரட்சிகளை மேற்கொண்டு எமது இளைஞர்களை ஏற்றுமதி சார் விவசாய உற்பத்தி நோக்கி தொழில் வழிகாட்டல்களை மேற்கொண்டால் நிச்சயமாக காணி அபகரிப்பு, மற்றும் வளச் சுரண்டல்களை முற்றாகப் பாதுகாக்கலாம். அத்துடன் இந்த நெருக்கடியான நிலைமை மாறி இளைஞர்கள் உளவலிமை பெறவும் உதவியாக இருக்கும். அதுவே பல புதிய கொள்கைப் பிரகடனம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்ற நிலையில், பிறக்க இருக்கும் 2021 இன் தொழில் மாற்றத்தினை அனுசரிப்பதாகவும் இருக்கும்.

14 December 2020

இடம்பெயர்தோரை திருப்பி அழைத்துவருவது 'நாட்டிற்கு உழைத்தவர்களை கௌரவிப்பதாகும்'

பல சிரமங்களுக்கும் மத்தியில் தமது  விருப்பு வெறுப்புக்களை எல்லாம் தியாகம் செய்து பலர் திரைகடலோடி அல்லும் பகலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றனர். 

ஆவர்களை பாதுகாத்து இக்கட்டான சூழலில் அவர்களை அரவணைக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவேதான், இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகக் கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் அனுப்பும் பணம் வளமையாக நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில்; (2019 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம்) இது வர்த்தக ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்க்குப் பிறகு நாட்டிற்கு இரண்டாவது பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இப்பொழுது, கொவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை எதிர்பார்கின்னர். ஆகவே இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை திருப்பி கொண்டுவரும் பணியில் உள்ள பாரிய அனுபவங்களையும் சவால்களையும் ஆராய்ந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து செல்லும் பரிந்துரைகளை வழங்குகிறது.

13 December 2020

அரசதுறை ஊழியர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனரா?

கடந்த காலங்களில் மோசமான அரசதுறை நிர்வாகமும் பயனற்ற அரசாங்கத்தின் கொள்கைகளும்; இலங்கையில் பொருளாதார வளர்ச்சியினை மந்தமடையச் செய்துள்ளன. கடந்த 66 ஆண்டுகளில், இலங்கையின் சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி கிட்டத்தட்ட 3.6% சதவீதமாகவே இருந்துவந்துள்ளது. 

இது ஒரு நாட்டின் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை. இந்த விகிதத்தில், நாட்டில் ஒரு சராசரி நபர் உண்மையான வருமானத்தை இரட்டிப்பாக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகும்  என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர். இது ஒரு நீண்டகாலமாகும், இருப்பினும், இலங்கை 7% சதவீதமாக வளர முடிந்தால், வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் காலம் 10 ஆண்டுகள்தான், அது 10% சதவீதமாக இருந்தால், அந்த காலம்7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

12 December 2020

விவசாயத்துறையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய மாற்றம்!

-S.Thanigaseelan-
இன்று கொவிட்-19 நாட்டில் விவசாயிகளை முன்னிறுத்தவேண்டியதன் அவசியத்தினை அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளது. அதனால் தான் அரசாங்கம் அதன் கொள்கையில் விவசாயத்தினை முதன்மைப்படுத்தும் வகையில் பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான சலுகைகளையும்  பரிந்துரைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து உள்ழுர் உற்பத்தியினை ஊக்குவிக்க இறக்குமதிகளையும் கட்ப்படுத்தியுள்ளது. இருந்தபோதும், 2020 அதன் இறுதி நாளை நோக்கி நகரும்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வழக்கமான அதிகரிப்பினை பொதுமக்கள் காண்கின்றனர், இது தற்போதுள்ள கொவிட்-19 ஆல் இன்னும் மோசமடையக்கூடும். இவ்வாறான நிலைமை வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஒரு மாற்று விநியோக முறையை வைக்க விவசாய அமைச்சகத்தைத் தூண்டியுள்ளது, எது எப்படி இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் தோல்வியை கண்டு வந்துள்ளமைதான் நிதர்சனம்.

11 December 2020

மட்டக்களப்பின் மேய்சல் தரைப் பிரச்சினை பால் உற்பத்தியில் தன்னிறைவை தடைசெய்யுமா?

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினைகளும் அதன் பின்னணியும்

இன்று நாட்டின் புதிய கொள்கையின் அடிப்படையில், 'சுயதன்னிறைவு' பற்றி அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இறக்குமதிகள் பல இறுக்கப்பட்டு உள்ழூர் உற்பத்தியின் முக்கியம் உணர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைப் பொருட்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மட்டக்களப்புக்கு இந்தக் கொள்கை அவசியமற்றதா என்ற கேள்வி பாராளுமன்றம் வரைக்கும் வலுப்பெற்றுள்ளது. காரணம் மேய்சல்தரையினை அத்துமீறி பயிர்செய்கைக்கு அடக்குமுறையின் கீழ் பயன்படுத்தத் துடிக்கும் சில வேறு மாவட்ட விவசாயிகள்;.

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினை

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கால்நடை வளர்ப்புக்கான உகந்த இடமாக காணப்படுவதற்குக் காரணம் பொருத்தமான காலநிலை அத்துடன் அங்கு இயற்கையாக அமையப்பெற்ற மேய்சல்தரைகள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

அந்தவகையில், மயில்ந்தமடு – மாதவணை பகுதி மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் உள்ளது. கிழக்கு மாகாண மக்கள் தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இதனை பல தலைமுறைகளாகப் பயன்படுத்திவருகின்றார்கள். சுமார் இரண்டு இலட்சம் வரையிலான கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இது உள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் இதன் பங்கு முக்கியமானது.

10 December 2020

வாழ்க்கையில் கொரோணாவுடன் சேர்ந்து பயணிப்பது சாத்தியமா

உலகின் பல நாடுகள் கொரோணாவுக்கு எதிராகப் போராடி முடியாமல் சோர்ந்துபோய் அந்தப் போராட்டங்களை மக்களினுடைய கையில் தற்போது ஒப்படைத்துள்ளனர். இனி மக்களே அவற்றோடு போராடி வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆக இந்தக் கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. எனவே பலர் கேட்கும் கேள்வி எப்படி வாழ்ந்தால் கொரோணா பாதிப்பில் இருந்து விலகி நாமும் குடும்பம் நடாத்தலாம் என்பதே! அதற்கான பதிலாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

09 December 2020

உழைக்கும் வர்க்கத்தினை உருவாக்கும் கல்விக்கான தேவை இன்று உணரப்படுகின்றதா!

'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழிக்கு ஏற்ப கல்வி கற்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இக்காலத்து எமது கல்விமுறை, படித்து வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் செய்ய ஏதுவாகவோ, பொருள் சாம்பாதிக்க ஏதுவாகவோ போடப்படும் முதலீடு. ஆனால் உண்மையில் கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் கல்வியின் நோக்கத்தினை இவ்வாறு சொல்லுகின்றார்கள் 'கல்வி ஒரு மனிதனின் அறிவுத்திறனை வளர்த்து சுதந்திரமான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவைக் கொண்டு மக்களைச் சித்தப்படுத்துவதே' என்று கூறுகின்றனர்.

ஒரு மாணவனின் தனிப்பட்ட கல்வித் தேர்வுகளுக்கு ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது, அதுபோல் அரசியல் சூழல், பொருளாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சூழலின் சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகள் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

08 December 2020

கொரோணாவில் இருந்து விடுதலைக்கு! புதிய பொருளாதார யுக்தி தேவை.

கொவிட்டின் உலகலாவிய பின்னணி

நாம் அனைவரும் இந்த புதிய நெருக்கடியால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். மனச்சோர்வடைந்துள்ளோம். அதிகரித்து வரும் மரணங்கள், தொற்றுக்கள் பதட்டத்தினையும் பயத்தினையும் ஏற்படுத்தி இயல்புநிலையைக் குலைத்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவினை சந்தித்து வருமான மார்க்கம் எல்லாம் தடைப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரம் வீழத்துவங்கியுள்ளது. இதற்கிடையே அரசாங்கத்தின் சில பல நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கையூட்டும் அதே நேரம் அரச சேவையின் சில வினைத்திறனற்ற சேவைகள் இந்த நிலைமையில் விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையில் இருந்து மீள என்ன வகையான புதிய பொருளாதாரக் கட்டமைப்பினை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதனையே இக்கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.

தற்போதைய இருண்ட பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டால், இது ஒரு போதும் ஏற்படாத புதியதொன்றாகவும் மற்றும் சுவாரஸ்யமானதாகவும் தெரிகிறது. சமீபத்திய உலக வரலாற்றின் போது, தொற்றுநோய்கள் உள்ளிட்ட பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன, அவற்றை வெல்ல மனித இனம் எப்போதும் அதற்கான வழிகளைக் கண்டறிந்து வந்துள்ளது. எனவே, கோவிட் -19 கூட இறுதியில் இல்லாமற்போய்விடும்;. எவ்வாறாயினும், இந்தத்தொற்றுக் காரணமாக தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை இலங்கை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாகும்.

07 December 2020

கொவிட்-19 உம் இணையவழி வியாபாரத்தின் தேவையும்

நாம் கொரோனாவுக்குள் வாழப்பழகவேண்டும என்ற வாதம் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில் இந்தக் கொவிட் காலகட்டம் பல தொழில்களை முடக்கியது எவ்வளவு உண்மையோ, அது போலவே பல தொழில்களை உருவாக்கவும் செய்திருக்கிறது. இதற்கு முன் தாங்கள் ஒரு தொழில் தொடங்குவோம் என்று நினைத்திராத பலர், தற்போது சுய தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். இணைய மூலமாக ஆடைகள், உணவுப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை என சிறிய அளவிலான தொழில்கள் அதிகம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஊள்நாட்டில் பூட்சிட்டி, ஆர்பிகோ போன்றவற்றுடக் சர்வதேச அளவில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் என்று பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லறை வியாபாரச் சந்தையை ஆக்கிரமித்து வருகிற நிலையில், இத்தகைய சுயாதீன தொழில்கள் வரவேற்கப்படக்கூடியது மட்டுமல்ல, ஆரோக்கியமான எடுத்துக்காட்டும்கூட.

06 December 2020

கொவிட்-19 பாதிப்பினை ஏற்றுக்கொண்ட பொருளாதாரத் தந்திரோபாயங்கள்!

ஏன்னதான் என்றாலும் பல அனர்த்தங்களைக் கடந்து அவற்றில் இருந்து மீண்டெழும் பல அனுபவங்களைக் கொண்ட நாடு இலங்கை என்றால் மிகையாகாது. அவ்வாறிருக்கையில் கொவிட் -19 ஐ வைத்துக்கொண்டு எமது கொருளாதாரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வது அல்லது அவற்றை தடையின்றி இயங்கச் செய்வதானது ஒரு சவால் நிறைந்தது. அது எமது மக்களின் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற படியினால் பொருளாதாரத்தினை மீண்டும் செயற்படுத்த நாம் பாரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது. ஆகவே நாம் கொவிட உடன் இணைந்தே பொருளாதாரத்தின் செயல்பாட்டினை கொண்டு செல்வது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதது.

05 December 2020

கொரோணாவில் வறுமைக்கு உட்பட்டவர்களை மீட்டெடுக்கும் மூன்று வழிகள்.

கோவிட் -19 நாட்டிற்குள் மாத்திரமல்ல உலகத்தினையே ஆட்டங்காணச் செய்துள்ளது. இது ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத ஒரு அவபாக்கிய நிலமையை உருவாக்கியுள்ளது. அதனால் எம்ரைமப் போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை மையமாக்கொண்ட நிறுவனங்களின் எல்லாவிதமான உதவிகளையும் பெறமுடியாத நிலையில் உள்ளது. இதனால் சொந்தக் காலில் எழுந்து நிற்க்க பல போராட்டங்களை வலிந்து செய்ய வேண்டியுள்ளோம். இருப்பினும் உலக வங்கியின் மீட்புக்கான பலதரப்பட்ட உதவியானது இந்த இக்கட்டான நேரத்தில் பாரிய உந்துசக்தியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே சமகாலத்தில் இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமானதாகும்.

இவ்வாறான உதவிகள்; இந்த நாட்டில் மிக முக்கியமாக வடகிழக்கில் பிரயோகிக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு பல கால பின்னடைவுகளால் மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி, பன்னெநுங்காலமாக வறுமையில் முன்னிற்கும் மாவட்டங்கள் இப்பிராந்தியத்தில் இருப்பது தரவுகள் சொல்லும் உண்மை இதற்கு பாகுபாடற்ற அற்பணிப்பான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் அதிகாரிகளின் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகின்றது.

04 December 2020

அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.


கடவுள் பக்தி மாத்திரமா நமது வாழ்வாதாரமும் இன்று நம்பிக்கை சம்மந்தப்பட்டது. ஆம் இன்று இந்த கொவிட்-19 பலரை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது. இதனால் கடவுளையே கைத்தடியாகப் பிடிக்க நாடியவர்களும் இருக்கின்றார்கள் கைவிட்ட கடவுளை வெறுத்து ஓடியவர்களும் இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் இன்றய காலகட்டத்தில் ஆண்டவனை கூப்பிடுபவர்கள் அதிகமாயிட்டார்கள். அதேபோல் அறிவியலை அள்ளிப்பிடிப்போரும் கூடிப்போச்சி. காரணம் காலமாற்றம்தான். 

ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.

03 December 2020

கொரோணாவுககு பின்னரான வர்த்தகத்தினை மேம்படுத்த தேசிய அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதின் முக்கியம்.

உலகம் வேறு ஒரு உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த புதிய மாற்றத்துக்குள் எம்மையும் எமது பொருளாதார வர்த்தக விடயங்களையும் பழக்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக இந்த நெருக்கடியான நிலைக்குள் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கவும் வியாபார நடவடிக்கைகளை விஸ்த்தரிக்கவும் தேசிய அறிவுசார் சொத்துரிமையை நாம் கையில் எடுக்க வேண்டும். இங்கு தேசிய அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் நாம் அறியாமல் இருக்கின்றோம். அவை பல்கலைக்கழக மட்டத்தில் திட்டங்களாக கொண்டுவரப்பட்டாலும் இன்னும் அவை அந்த சமுகத்திடம் ஏன் அந்த மாணவர்களிடையே அதேபோல் தொழில் முயற்சியாளர்களிடையேயும் மிகக் குறைந்தளவிலேயே கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது எமது துர்பாக்கியமே. எனவே இவ்வாறான நிலையை மாற்றி இந்த கொரோணாவுக்குப் பின்னரான புதிய நிலைமைக்குள் நாம் எவ்வாறு மீண்டெழுவது என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயலாம்.

கொரோனாவுக்குப் பின்னர் இன்று 2020 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ((World Intellectual Property Organisation’s (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)  இலங்கை 101 வது இடத்தில் உள்ளது - கடந்த ஆண்டை விட 12 இடங்களின் கணிசமான வீழ்ச்சி - மற்றும் ஒரு பரிதாபகரமான மதிப்பெண் 23.78, இல் 0-100, ஆனால் 100 மிகவும் பெறுமதியான மதிப்பெண்.

02 December 2020

சீனப்பொருளாதார வளர்சி முறைமை இலங்கைக்கு எடுத்துக்காட்டு!

நாம் எந்த அளவில், எங்கு இருக்கின்றோம் என்பதனை இன்னொருவருடன் அல்லது இன்னொரு நாட்டுடன் ஒப்பீட்டு ரீதியிலே பார்க்க முடியும். பொருளாதாரத்திலும் அப்படித்தான் நாம் எம்மை அளவிட்டுக்கொள்ளுகின்றோம். கடந்த தசாப்தங்களில், பல கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தொடர்ச்சியான நிலையான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துள்ளன, அதே நேரத்தில் தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை அடைந்துள்ளன, இது ஒரு சாதனை புகழ்பெற்ற உலக வங்கி ஆய்வில் 'ஆசிய அதிசயம்' என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் மற்றும் கொரியா குடியரசு  ஆகியவை இந்த சாதனையின் பங்காளிகளாக இருந்தன.

ஒரு ஆய்வாளர் இந்த அதிசயத்தை 'ஒரு தலைமுறையை மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களை போல் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றியமைத்துள்ளன' என்று விளக்கினார். இந்த நாடுகளின் குழு இப்போது வறுமையை நீக்கியுள்ள கம்யூனிஸ்ட் சீனாவினையே வியத்தகு முறையில் முந்தியுள்ளது.

01 December 2020

நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.

என்னதான் மாற்றம் வந்தாலும் நாம் உண்டுவாழ உணவு தேவை, அந்த உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் தேவை. நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் மூன்று வேளைக்கு சாப்பிட்டு உயிர்வாழ, கோடிக்கணக்கான இலங்கை மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதற்காக பல திட்டங்களை அரசு தனியார் என அனைவரும் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் விவசாயத்தில் புதிய வகையில் சிந்திக்க வேண்டும். அவர்களது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.