ADS 468x60

27 July 2020

மட்டக்களப்பு வாக்காளர்களின் 2020 பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கை வெளியிட்டு வைப்பு.

கிழக்குப் பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியத்தின் '2020 பொதுத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம், மட்டக்கக்களப்பு மாவட்டம்' எனும் கருத்துக்கணிப்பு ஆய்வறிக்கை இன்று ஒன்றியத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வானது 08.07.2020 தொடக்கம் 19.07.2020 வரையான காலப்பகுதியில் இணையம் (Online Survey) மூலமாக நடாத்தப்பட்டதாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாகவும்  மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடாத்தப்பட்ட வரலாற்றில் மட்டக்களப்பின் முதலாவது ஆய்வாகும்.

இதில் பல அரசியல் மாற்றத்துக்கான விடயங்கள் இக் கருத்துக்கணிப்பு ஆய்வில் கோடிட்டுக் காட்ப்பட்டுள்ளது. இம்முறை எந்தக் கட்சிக்கு அதிக வாக்குக் கிடைக்க இருக்கின்றது என்பதும் இதில் கண்டறியப்பட்டிருப்பது முக்கியமாக "மக்களின் மனதில்" ஏற்பட்டிருக்கும் மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

முழு அறிக்கையின் விபரத்தினைப் பார்க்க கீழுள்ள இணைப்பை அழத்தவும்.

https://drive.google.com/file/d/1SuZAT8n3Hve43EvFiB_Q9XWhajE8HB6A/view?usp=sharing


05 July 2020

ஏன் இலங்கையினை நவீன வியட்நாமாக மாற்ற முடியாது?.

நாம் இன்று நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜப்பானுக்கு அடுத்ததாக சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது பொருளாதாரம் இரண்டாவது சிறந்த நாடாக இருந்தது என்பதையும், லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையைப் போல உருவாக்க விரும்பினார் என்ற கதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு திரிவது, அதன் பின் எத்தனை தசாப்தங்கள் கடந்தும் வேறு ன்றை சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்கவில்லை என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.

04 July 2020

கொவிட்-19 இக்கு பின்னான பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் நிலை

இன்று இலங்கையில் மாத்திரமல்ல, அது கடந்து உலகம் பூராகவும் பாரிய பொருளாதாரச் சரிவினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தத்தாக்கம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் இன்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது. பொருட்களுக்கான தேவை குறைதல், சர்வதேச போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பங்களித்திருக்கின்றன.