ADS 468x60

29 May 2021

உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?

அறிமுகம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.

23 May 2021

கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!

முகத்தோடு மாஸ்க் இன்றிச் செல்லலாமா- நாட்டை

மூடியபின் ஒன்றுகூடிக் கொள்ளலாமா!
கொண்டாட்டம் கும்மாளம் போகலாமா!
கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!
சொல்லுப்போச்சுக் கேட்டுக்கொண்டு
நாட்டில் இருப்போமா!
இன்னும் இன்னும் பரவாமல்
வீட்டில் இருப்போமா!
இல்லை என்று சொல்லும் வரை இணைந்திருப்போமா!
இன்னும் ஒரு அலையின்றி ஒன்றுபடுவோமா!

17 May 2021

வழிமறந்துபோகும் வலிகள்!



அன்று
காலங்கள் கரைந்தன -என் 
கோலங்கள் மறைந்தன
வீட்டைக் காணோம்- என்
வீட்டாரைக் காணோம்- வளர்த்த 
ஆட்டைக் காணோம்
என ஒவ்வொன்றாய்,
சோகங்கள் நிறைந்தன!

ஆலயங்களிலும்
ஆற்றங்கரைகளிலும்
கூடராத்துக்குள்ளும் 
கூடாத சூழலிலும்
ஆநாதையாய் அலைந்து!

02 May 2021

கொரோனாவை வெற்றிகொள்ளும் சிறுவர்களுக்கான கல்வி முறை

எல்லாத்துக்கும் மாற்றுவழி இருக்குது
எதுக்கு நாம மாறுபட்டு நடக்கணும்
பொல்லாத இந்த கொவிடடோட போராடு
பொருத்தமான கல்விக் குளத்தில் நீராடு

நாம் இன்று வித்தியாசமான வாழ்க்கை முறைக்குள் எமது குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பல மாணவர்கள் தமது முதல் ஆண்டு பாடசாலை அனுபவத்தினை முற்றாக இழந்துவிட்டதனையும காணலாம். இருப்பினும், பொதுவாகவே விடுமுறைகளுக்கு, ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு. விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கொரோனா பரவும் அச்சத்தால் விடப்பட்டிருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.

கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி கூடங்கள்; மட்டுமல்லாமல்; திரையரங்குகளும் பெரும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் அறியப்படுத்தப்பட்டுள்ளன.