ADS 468x60

24 November 2019

கி.ப.க.பழைய மாணவர்கள் -டெங்கு நோய் குறைப்பு விழிப்புணர்வு

இன்று இலங்கை முழுவதும் ஆபத்தான பேசுபொருளாலாக இருப்பது ஆட்கொல்லி நோயாக அடையாளங்காணப்பட்ட 'டெங்கு நோய் தொற்று' பற்றிய பேச்சாகும். 2018 சென்ற வருடத்தின் 12 மாதங்களிலும்; சேர்த்து 51,659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் நொவம்பர் மாதத்தில் மாத்திரம் 73601 சந்தேகப்படும் டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆபத்தாக பதிவாகியுள்ளது.

இந்த ஆபத்து மட்டக்களப்பு மற்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பருவகால மழை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் இதன் பரவல் தீவிரமடைந்து வருகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

18 November 2019

புதிய ஜனாதிபதியிடம் மக்களின் நியாயமான வேண்டுதல்!

நாம் இன்று ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து 80 விகித வாக்களிப்பை நாட்டில் வழங்கி ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கின்றோம். எனவே புதிதாக பதவியேறறிருக்கும் இருக்கும் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே உங்கள் செயற்பாடுகளை நாம் நம்புகின்றோம். புதிதாக உங்களை வாழ்த்துகின்றோம். இன்று ஜனாதிபதியாவதற்கு மக்கள் தமது கடமையையை நிறைவேற்றியுள்ள நிலையில் மக்களின் வேண்டுதலை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றும் நேரமிது. பாமர மக்கள் அவரிடம் எதிர்பார்த்து நிற்கும் வேண்டுதல்களை அவர்களில் ஒருத்தன் என்றவகையில் அவற்றை முன்னுரிமைப்படுத்தி இங்கு வேண்டுதல்களாக முன்வைத்துள்ளேன்.

17 November 2019

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்னே உள்ள சவால்களும்.

வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.

08 November 2019

மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணம்: இனத்தால் ஒன்றானாலும் தேவையால் மாறுபட்டவர்கள்- ஐனாதிபதி தேர்தல் 1982-2015.

ஆய்வுக்கட்டுரை 

பின்புலம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் பல தேர்தல் சூழலை கடந்து வந்த அனுபவசாலிகள். பல விதமான தேர்தல்களை பலவிதமான மனிதர்களுடன், கட்சிகளுடன், கொள்கைகளுடன், அதனால்  நாம் இத்தனை காலமும் வடக்குடன் ஒப்பிடும்பொழுது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் கடந்துவந்த தேர்தல் களம், முற்றிலும் மாறுபட்டது, இந்த ஆண்டு ஒரு புதிய ஐனாதிபதியினையும் அடுத்த ஆண்டு ஒரு புதிய பிரதமரினையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டமாக வாக்காளர்கள் பார்க்கப்படுகின்றனர். 

வேறுபட்ட வாக்குப் பதிவுகள் கீழுள்ள அட்டவணையில் ஆண்டு மற்றும் மாவட்டம் கட்சி என்ற ரீதியில் தரப்பட்டுள்ளது

Source :https://en.wikipedia.org

05 November 2019

விவசாயிகளின் குரல்வளையை நசிக்கும் வெட்டுவாய்ப் பிரச்சாரம்.

இன்று ஒரு புதிதான சற்று விசனமான செய்தி ஒன்று பரவி வருவதனைப் சமுகவலைத் தளங்களில் பார்க்ககூடியதாக இருக்கின்றது. அது, திடீரென வந்த காட்டுவெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள 150,000 ஏக்கர் வயல் நிலங்களில் கிட்டத்தட்ட 20-30 வீதம் வரையான வாவிக்கரையை அண்டிய வெறும் ஓரிருவார இளம் வேளாண்மைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.

இவற்றின் மூலம் இந்த வெள்ளநீர் ஆரம்பத்திலேயே வடிந்து ஓடாவிடின் எமது மாவட்ட விவசாயிகள் பெறும் சுமார் 20-30 வரையான மெற்றிக்தொன் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.