ADS 468x60

Showing posts with label அனர்த்த முகாமைத்துவம்.. Show all posts
Showing posts with label அனர்த்த முகாமைத்துவம்.. Show all posts

30 July 2025

இன்று சுனாமி- ரஷ்யாவை 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது

வணக்கம்! அன்பின் உறவுகளே!

ஜப்பான் டோக்கியோவிலிருந்து ஹவாய் வரை, கலிபோர்னியாவிலிருந்து நியூசிலாந்து வரை, மில்லியன் கணக்கான மக்கள் இன்று சுனாமி அச்சங்களுக்கு மத்தியில் மிகுந்த எச்சரிக்கையில் உள்ளனர். இந்தப் பூமித்தாயின் சீற்றத்தால், ரஷ்யக் கடற்கரையில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடல் முழுவதும் சுனாமி எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இந்தச் செய்தி எம் ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிதர்சனம்.

நல்ல வேளையாக, இந்தச் சுனாமி எச்சரிக்கைகள் இலங்கைக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன். இது புவியின் ஒரு மூலையில் நிகழும் ஒரு விடயம், எவ்வாறு உலகெங்கும் அதன் அதிர்வுகளைப் பரப்புகிறது என்பதற்கு இது ஒரு பாரிய உதாரணம்.

22 April 2025

புவி தினம் 2025: வடகிழக்கு இலங்கையின் வளச்சுரண்டலும் எதிர்காலமும்


புவி தினம் 2025 கொண்டாடப்படும் இந்தச் சூழலில், இலங்கை நாட்டின் வடகிழக்கு மாகாணங்களின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்கள் மீதான சுரண்டல் மற்றும் அதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகள் குறித்து ஒரு ஆய்வுப் பார்வை மேற்கொள்வது அவசியமாகிறது. பல ஆண்டுகளாக இப்பகுதி பல்வேறு வகையான வளச்சுரண்டல்களுக்கு உட்பட்டு வந்துள்ளது. இது இப்பிரதேசத்தின் சுற்றுச்சூழல் அமைப்பையும், அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையும் கணிசமாக பாதித்துள்ளது. இந்த ஆய்வானது, வடகிழக்கு இலங்கையின் தற்போதைய வளச்சுரண்டல் நிலையை ஆராய்ந்து, அதன் எதிர்கால தாக்கங்களை மதிப்பிடுகிறது.

16 April 2025

உஷ்ண அலையின் தாக்கம்: தாகம் இல்லையென்றாலும், குடிநீர் அருந்த வேண்டும்.

"கால நிலை மாறிப்போச்சு என்கிறானுங்கோ 

அதற்கு காரணமே நம்மதானே விளங்கவில்லையா”  

இன்று காலம் பொச்சுப்போச்சு என பல முதுமையானவாகள் பேசிக்கொள்கின்றனர். 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையானது நாட்டின் பல பகுதிகளிலும், குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் அதிக உஷ்ணநிலை நிலவுவதாக எச்சரித்துள்ளது. இந்த உஷ்ணநிலையானது மனித உடலில் நீரிழப்பு, தசைச் சிதைவு, அதிகப்படியான சோர்வு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும், வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிக்கை ஒருபுறம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடப்பட்டாலும், மறுபுறம் இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார மற்றும் சுகாதார கட்டமைப்பில் இந்த உஷ்ண அலையின் தாக்கம் எத்தகைய சவால்களை உருவாக்கும் என்பதை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

21 March 2025

சேந்தாங்குளம் சம்பவம் - இன்று இளைஞர்கள் கடலில் காணாமல் போவது ஏன்?


இலங்கையின் கடற்கரை பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளன. இருப்பினும், கடலில் குளிக்கும் போது இளைஞர்கள் காணாமல் போவது மற்றும் உயிரிழப்பது பற்றிய சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவு, கடலின் திடீர் ஆழம், அதி வேக அலைகள், மற்றும் எச்சரிக்கைகள் பின்பற்றப்படாதது போன்ற காரணங்களால் ஆண்டுதோறும் பல இளைஞர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர்.

இலங்கையின் கடற்கரை சுற்றுலாத்துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில், கடலில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடலுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாமல் இறங்குவது பல உயிரிழப்புகளுக்குக் காரணமாகியுள்ளது.

06 March 2025

பொது போக்குவரத்துத் துறையில் விபத்துக்களால் மனித பாதுகாப்பு அச்சுறுத்தல் 2025

இலங்கையில் சாலை விபத்துக்கள் ஒரு நாள்பட்ட சமூக-பொருளாதார நெருக்கடியாக உருமாறியுள்ளது. 2024 ஆம் ஆண்டு தரவுகள் காட்டுவதுபோல், நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 38,000 வீதி விபத்துக்கள் பதிவாகின்றன. இவற்றில் 3,000 பேர் உயிரிழப்பதுடன்8,000 பேர் கடுமையான காயங்களுக்கு ஆளாகின்றனர். தெற்காசியாவில், இலங்கையின் வீதி  விபத்து உயிரிழப்பு விகிதம் அதன் அண்டை நாடுகளை விட அதிகமாக உள்ளது. பொது போக்குவரத்துத் துறை—குறிப்பாக அரசு-இயக்கும் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகள்—இந்த விபத்துக்களில் முக்கிய பங்குவகிக்கின்றன. நீண்ட தூரம் ஓடும் அரை-வசதியுள்ள (semi-luxury) மற்றும் சாதாரண பேருந்துகள் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணமாகின்றன. இக்கட்டுரை, 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தகைய விபத்துக்களின் மனித பாதுகாப்பு மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களை ஆராய்கிறது.

05 March 2025

இலங்கையின் காடு அழிவு: சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் நேரிடும் ஆபத்து

 ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, இலங்கையின் பாதி பகுதி அடர்ந்த வனங்களால் மூடப்பட்டிருந்தது. இந்தக் காடுகள் பருவநிலையை கட்டுப்படுத்தி, உயிரினங்களுக்குத் தாயகமாகவும், மக்களின் வாழ்க்கை முறையை பாதுகாக்கும் கண்காணிப்பாளராகவும் செயல்பட்டன. ஆனால் இன்று, வனச்சரிவு 34.06% ஆகக் குறைந்துள்ளது, மேலும் இந்தக் கணக்கெடுப்பு தொடர்ந்து குறைந்து கொண்டிருக்கிறது. வன அழிவு என்பது வெறும் மரங்களை இழப்பதோடு மட்டும் முடிவதில்லை; அது இலங்கையின் இயற்கை பாதுகாப்பு அமைப்புகளை முறியடிக்கிறது.

நகர்ப்புற விரிவாக்கம், விவசாய வளர்ச்சி, மற்றும் தொழில் முனைவுகளுக்காக வனங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்நாட்டு நிலப்பரப்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தசாப்தங்களில், நிலச்சரிவுகள், மழை குறைபாடு, நீர்த் தட்டுப்பாடு, மற்றும் வாழிடங்களின் அழிவு போன்ற நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. இலங்கை எந்தப் பகுதியிலே வாழ்ந்தாலும், வன அழிவின் தாக்கம் அனைவரையும் ஒரே மாதிரியாகவே பாதிக்கிறது.

03 March 2025

கோமாளித்தனமாக விமர்சிக்கப்படும் விலங்குக் கணக்கெடுப்பு

உண்மையில் ஒவ்வொரு பிரதேசமும் வேறுபட்ட காலநிலை, விளைச்சல் காலம், அறுவடை நேரம் என வேறுபட்டு உள்ள ஒரே நேரத்தில் நாடு பூராவும்  குறிப்பிட்ட கணக்கெடுப்பு நடாத்த என்ன விலங்குகளுக்கா அழைப்பு விடுக்க முடியும்? 

இது ஒரு விஞ்ஞான பூர்வ செயற்பாடாக தகமை சார் அதிகாரிகளுடன் கலந்துரையாடி துறைசார்ந்து எடுக்கப்படவேண்டிய முடிவாகும். அதைவிடுத்து நகைப்புக்கிடமாகப் பேசுவது இந்த நாட்டுக்கே பின்னடைவு.

01 March 2025

சுயநலத்தின் பேரில் அழியும் காட்டுவளம்: காப்பாற்ற முன்வாருங்கள்

இலங்கையில் காடுகளின் பரப்பளவு எவ்வாறு வேகமாகக் குறைந்து வருகிறது என்பது குறித்து பல வெளிப்பாடுகள் உள்ளன. இது மிகவும் வெளிப்படையான ஒரு வழி காட்டுத் தீ மூலம். இப்போது அது கட்டுப்பாட்டை மீறிய ஒரு நிலையை அடைந்துவிட்டதாகத் தெரிகிறது. இன்று கிராமங்களில் உள்ள சிறு சிறு காடுகளையும், விளையாட்டுக்கழகங்கள், கோயில்கள், பொது நிகழ்வுகள் என்ற பேரில் அழித்து வருகின்றனர், ஒரு மரத்தைக்கூட நாட்டி உருவாக்காதவர்கள்.

இலங்கையின் காடுகள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: பாதுகாக்கப்பட்டவை, ஒதுக்கப்பட்டவை, மற்றும் ஒதுக்கப்படாதவை. இதற்கிடையில், நாட்டின் நிலப்பரப்பின் உண்மையான வனப்பகுதி குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. அந்த விவாதத்தின் எண்ணிக்கையைப் பொருட்படுத்தாமல், பல்வேறு காரணங்களால் வரைபடத்தில் உள்ள பச்சை மண்டலம் வேகமாக சுருங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. வனச் சட்டத்தின் கீழ், நாட்டின் காடுகளுக்கு அதிகபட்ச சட்டப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. 

26 December 2024

மீண்டும் சுனாமி தாக்கினால் என்னவாகும்? பொறுப்பும் நினைவுகூறலும்.

35,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் உயிர்களையும், இந்தியப் பெருங்கடலில் 250,000 பேரையும் பலிகொண்ட பேரழிவுகரமான 2004 சுனாமியின் 20வது ஆண்டு நிறைவை இன்று அடைந்த நிலையில், இதேபோன்ற பேரழிவு ஒன்று வராமலிருப்பதற்கான நாட்டின் தயார்நிலை விமர்சன மதிப்பீட்டிற்கு அவசியமானது. முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் மற்றும் வெளியேற்றும் வழிமுறைகளில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் ஒட்டுமொத்த தயார்நிலை பற்றிய கவலைகளை எழுப்புகின்றன.

இயற்கை அனர்த்தங்களினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்பானது, நாட்டில் ஏற்படும் 96 சதவீத காலநிலை தொடர்பானவை என்பதன் மூலம் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. உலகளாவிய காலநிலை இடர் சுட்டெண் 2018 மற்மு; 2016 இல் இலங்கையை நான்காவது மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக தரவரிசைப்படுத்தியது, இது சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எடுத்துக்காட்டுகிறது. 

01 December 2024

இன்னும் நாங்கள் சரியான தொடர்பாடலை அனர்தகாலத்தில் பேணவில்லை

 
சுனாமி வருகின்றது என பரபரப்பான கதைகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தேவையில்லாமல் அழைப்பெடுத்து வாந்திகள், வீண் பதட்டம், பீதி காரணம் சரியான தொடர்பாடல் அல்லது நம்பகமான செய்தியினை செவிமடுத்தல் என்பன இன்று எம்மத்தியில் பழக்கப்படவில்லை. எத்தனை மொக் றில், எத்தனை கிராமிய ரீதியான முன்னாயத்த தயார்படுத்தல்கள்! இருந்தும் எங்கே பிழை நடக்கின்றது? என ஆராய்தல் வேண்டும்.

13 July 2024

வீதி விபத்துக்கள் தொடர்ந்துகொண்டே போகும் பேரழிவு

இலங்கையில் வீதி விபத்துக்கள் ஒரு பெரும் சமூக பிரச்சினையாக மாறிவிட்டன. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் வீதி விபத்துகளில் உயிரிழக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர். இந்த விபத்துகள் தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும் மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையில் 1103 வீதி விபத்துகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 1154 பேர் உயிரிழந்துள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் 2200 வீதி விபத்துகளில் 2557 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை இது ஒப்பிடுகையில் காட்டுகிறது.

23 December 2023

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகள்: நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ளும் வழிமுறைகள்

தற்போதைய நிலைமைகள்

சமீபத்திய காலங்களில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. வெள்ளம், மண்சரிவு, கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

2023 ஆம் ஆண்டில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மோசமான வானிலை நிலைமைகளால் அதிக அளவிலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையால், நாடளாவிய ரீதியில் 2,271 குடும்பங்களைச் சேர்ந்த 7,61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, வட மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06 December 2021

புவிவெப்பமடைதல் மக்கள் மத்தியில் அதிக உயர்வுதாழ்வை ஏற்படுத்தி வருகின்றது.

இன்று உலகம் பல முக்கிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே உலகளவில் 269 மில்லியன் நோய்த்தொற்றாளர்களுக்கு வழிவகுத்தது, இதன் காரணமாக கடந்த ஆண்டில் 5.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக பருவநிலை மாற்றத்தால் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலை அதிகரித்து, ஏழை நாடுகளில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளிப்பட்டும், சில பணக்கார நாடுகளின் வளமை மேம்பட்டும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

16 November 2021

டெங்கா கொரோணாவா! தடுமாறும் நோயாளர்கள்: டெங்கபாயம் கொரோணாவை மிஞ்சுமோ!

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்" இன்று இலங்கை மக்கள் என்ன சாபக்கேட்டுக்குள்ளானரோ தெரியவில்லை. கொரோணா வந்து முடியாத நிலையில் டெங்கின் ஆதிக்கம் எங்கும் பரவுகின்றது. இதுவும் ஒரு ஆட்கொல்லி நோய். இந்த அடைமழைகாலத்தில் நிச்சயம் பாரிய பாதிப்பினை இந்த நோய்ப்பரவல் தூண்டும் என்பது எம்மை விழிப்புடன் இருக்கச் செய்யவேண்டும்.

இலங்கையில் 2021 இல் மாத்திரம் இன்றுவரை 24,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் டெங்கு தொற்றுநோயின் உச்சத்தில் ஆண்டுதோறும் 100,000 நோயாளர்கள்; பதிவாகியதில் இருந்து இந்த அபாயம் வெகு தொலைவில் இருந்தாலும், கொரோணாவின் கூடுதல் பாதிப்புக்காரணமாக, இது மக்களால் பெரிதாகக் கணக்கிடப்படாத ஒன்றாக இன்று உள்ளது வருந்தத்தக்கது.

22 December 2019

காலநிலைக்கு முகம்கொடுக்கும் அபிவிருத்தி இல்லாமையே அழிவுக்குக் காரணம்.

இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

07 October 2018

அனர்த்தங்களில் நலிவுறும் நிலையை முகாமை செய்வதே வறுமைக் குறைப்புக்கான மூலோபாயம்.


Image result for disaster resilience people sri lankaஇன்று எமது நாட்டினைப் பொறுத்தளவில் பொருளாதாரச் சவால்கள் பல காரணங்களால் மிகப்பெரிய அபாயமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் பேரனர்த்தங்கள் அவற்றை தாங்கக்கூடிய திறனை பல அனுபவங்களினூடாகவும், விழிப்புணர்வுகள் மூலமாகவும் இன்று எமது மக்கள் வளர்த்துக்கொண்டுள்ளனர்.

உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.

26 November 2011

சீரற்ற காலநிலையும் சீரளியும் மக்களும்;தொடரும் போராட்டம்.

வாழ்க்கையில் போராட்டம் இருக்கத்தான் செய்யும் ஆனால் போராட்டமே வாழ்க்கையாகலாமாஎவ்வாறாயினும் அது தான் இன்று எம்மக்களின் நிலைப்பாடாகி விட்டதுதமிழர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குள்ளயே போராடிப் போராடி சலித்து விட்டனர்ஐந்து தசாப்த கால உரிமைப் போராட்டம்உடமையையும் உயிரையும் காக்கப் போராட்டம்உணவுக்காகப் போராட்டம்வறுமையோடு போராட்டம் இன்னும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து வருகின்ற இடர்களுக்கு(Risks) எதிராகப் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்இந்தப் போராட்டத்தினை மக்கள் சுயமாக நின்று வென்றுவிட முடியாதுஅதற்க்கு மக்கள் சத்தியில் உருவாக்கப்பட்ட அரச இயந்திரத்தின் தேவைப்பாடு முக்கியமானதாகும்அதற்கு அப்பால் மக்களது ஒத்துழைப்பு மற்றும் அவர்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வுகள் மேலதிகமாக வலுச் சேர்ப்பவையாகத்தான் இருக்கும்ஆனாலும் இவை பொறுப்புள்ளவர்களின் அசண்டையீனங்களால் தான் மக்களையும் அவர்களது சொத்துக்களையும் பறித்துச் செல்லும் துர்ப்பாக்கியமான நிலைக்குள் தள்ளியள்ளது.

25 August 2011

'மேலைத்தேச நாடுகளில் அனர்த்தம்' மனிதனை ஆழும் இயற்கையின் எடுத்துக்காட்டு-


யப்பானில் ஏற்ப்பட்ட ஆழிப்பேரலை உலக வரலாற்றின் தொழில் நுட்ப்பம், விஞ்ஞானம் இவற்றுக்கெல்லாம் கட்டுப்படாத சக்தி ஒன்று உண்டு என்பதை கண் மண் தெரியாமல் நாங்கள் தான் தொழில் நுட்ப்பத்தில் பெரியவர்கள், நாங்கள்தான் விஞ்ஞானத்தில் பெரியவர்கள் அதனால் தான் எங்கள் நாடுகளை அனர்த்தங்கள் தாக்குவதில்லை, ஏழை நாடுகளைத்தான் இவை துவம்சம் பண்ணுகின்றது என்ற தலைகள் எல்லாம் மலை சாய்ந்து போன இழப்பில் இருக்கின்ற பெரியவர்கள் உணரத் தொடங்கி விட்டனர் இப்போது.

06 March 2011

இலங்கையில் ஓங்கத் தொடங்கும் உரிமைக்குரல்கள்....

                   (ம.உ.ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளுரின்(R.மனோகரன்) மக்கள் விழிப்பூட்டல்-கல்முனை)
இன்று அபிவிருத்தியடையாத நாடுகளை மட்டுமல்ல , அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகளையும் அடிக்கடி இயற்கை விட்டுவைக்கவில்லை, அது புயலாகவும், பூகம்பமாகவும், வெள்ளமாகவும் பேரபாயங்களை ஏற்படுத்திச் செல்வதை நாம் கத்தரினா என்றும் ரீட்டா என்றும் கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறான பேர் அனர்த்தங்களிலிருந்து மிகவும் குறைந்த அழிவுகளை அல்லது அதை தவிர்ப்பதற்க்கான அனர்த்த முகாமைத்துவம் மற்றும் அனர்த்த நிவாரண கண்காணிப்பு பற்றிய தேவை எமக்கு வேண்டியிருக்கிறது. இந்த இரண்டிலும் சுனாமியின் போது மீழ் உருவாக்கச் செயலாற்றுகைகளில் அனர்த்தத்திற்கான நிவாரணங்கள் மீதான கண்காணிப்பு, அவர்களது அடிப்படை உரிமைகள் சார்பான பாதுகாப்பு என்பன அம்பாரை மக்களது மீள் உருவாக்கத்தினில் எத்தகைய பங்கினை செலுத்தி இருக்கின்றது என்பதையே நான் இக்கட்டுரை மூலம் விளக்க உள்ளேன். 

ஆழிப் பேரலையின் அழிவுகள்.
சுமத்திராவில் 2004 டிசம்பரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆசிய நாடுகளின் பல பாகங்களையும் பலமாக சுனாமி என்ற பேரலையாக மாறி உயிர்களையும், உடமைகளையும் அழித்துச் சென்றுள்ளது. அரசியல் ஸ்த்திரமின்னை, முகாமைத்துவ அறிவின்மை, போர்சூழல் என்பன காரணமாக வருடங்கள் பல கழிந்தும் பாதிக்கப்பட்டவாக்;கும் இனிமேல் இவ்வாறான அனர்த்தம் ஏற்படமல் காப்பதற்கும் எதுவித சரியான திட்டமும் இல்லையென்றே எண்ணத் தோணுகிறது இதனால்தான் இன்றும்கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட பல்வேறு மக்கள் மழையிலும், வெயிலிலும் ஓலையாலும், தகரங்களாலும் கட்டப்பட்ட தற்காலிக கொட்டகைகளில் வாழும் நிலை இருந்து வருகிறது. 

சுனாமியின் காரணமாக இலங்கையில் 31,229 பேர் இறந்துள்ளனர். 4100 பேர்வரை இதுவரை காணாமல் போயுள்ளனர் தவிர 5,16,150 பேர் வரை இடம்பெயர்ந்து வாழ்ந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவைதவிர 28,449ம் ஏக்கர் பயிர்செய்கை, நிலம் என்பன முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் 9,000 ஏக்கர் நெற் செய்கையும் 645 ஏக்கர் ஏனைய பயிர்ச்செய்கை நிலமுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 12,928 வீட்டுத்தோட்டங்கள், 559 மரக்கறித்தோட்டங்கள் மற்றும் 317 பழத்தோட்டங்கள் என்பனவும் முற்றாக அழிந்தன.

இவைதவிர கிட்டத்தட்ட 16479 மீன்பிடி வள்ளங்கள் பாதிக்கப்பட்டும் முற்றாக அழிவுற்றும் உள்ளன. இவைபோன்று 86 மருத்துவ வசதி நிலையமும் 195 கல்வி நிலையங்களும் (பாடசாலைகள், பல்கலைக்கழகம், கல்விக்கல்லூரி) என்பன முற்றாகவும் பகுதியாகவும் அழிவடைந்துள்ளன. இவற்றை விட மேலான 275,000 பேர் தங்கள் வேலை வாய்ப்பினை இச்சுனாமி பேரலையால் இழந்துள்ளனர். 

இவ்வாறு ஏற்படுத்திச் சென்ற பாதிப்புகள் சாதி, இனம், மதம், ஏழை, பணக்காரன் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இது இலங்கையின் உள்நாட்டு தேசிய உற்ப்பத்தியில் 4.5 சதவீத அளவு நட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 1500-1600 மில்லியன் ரூபாவாகும். இது அநேககமாக கரையோரங்களி;ல் வாழும் மீனவர்களினதும், சிறிய தொழில் உற்ப்பத்தியில் ஈடுபடுவோரினதும் மற்றும் விவசாயிகளினதும் வாழ்வாதாரப் பாதிப்பினை மதிப்பிட்டுக்காட்டுகின்றது.   

அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகும் (Disaster Relief Monitoring Unit) அதன் அடைவுகளும்.
சுனாமிப் பேர் அனர்த்தத்தின் பின்னர் பல நிறுவனந்கள், அன்றை அயல் நாடுகள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் முண்டியடித்து இப்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேசக்கரம் நீட்டி உதவியளித்தமை குறிப்பிடத்தக்கது இதன் பின் இவ் உதவிகள் சரியான முறையில் பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பதும் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையில் இருக்கும் போது நிவாரண உதவிகளை எதிர் பார்த்து இருக்கவில்லை என்பதும் ஒரு பொதுவான கருத்தாக இருந்தது. இவ்வாறான குறையை நிவர்த்திக்க உதித்த ஒரு ஸ்த்தாபனம்தான் அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகு ஆகும. இது சமூகம் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் நிறைவேற்றும் வேலையை அல்லது நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் மற்றும் கண்காணிக்கும் ஒரு நிறுவனக செயற்ப்பட்டது. எனவே இது நிதி மற்றும் பொருள் உதவி வழங்கும் ஒரு நிறுவனமல்ல. 
                     (திருமலை கிண்ணியாவில் மனித உரிமை ஆணைக்குழுவின் மக்கள் விழிப்பூட்டல்)
இவ்வமைப்பானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கீழ் உருவாக்கப்பட்டு விசேடமாக சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண, புணர்வாழ்வு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமாக உருவாக்கப்பட்ட அமைப்பாக இருந்தது. இதன் நோக்கம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமை மீறல்களை கண்காணிப்பதும் பரிசீலனை செய்வதுமாகும்.

1996 ஆண்டின் 21ம் இலக்கச் சட்டத்தில் விரிவாக கூறப்பட்டதற்கு இணங்க நாட்டில் உள்ள அனைத்து மக்களது உரிமைகளையும் பாதுகாப்பதற்க்காகவும், மேம்படுத்துவதற்க்காவும் உருவாக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகும். இவ்வமைப்பினது கொள்கைகளையும், திட்டங்களையும் தழுவியவாறே செவ்வனே செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பே இவ்வனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகாகும்.

கள கண்காணிப்பில் DRMU இதனுடைய பணிகள்.

DRMU சுனாமிக்கு பிந்திய நிவாரணம், கீழ் கட்டமைப்பு மற்றும் புனர் நிர்மான வேலைகளில் மக்களின் கருத்துகககைத் தெரிவிப்பதற்கு முன்னுரிமைகளை மாவட்ட ரீதியில் வழங்கி அடிப்படை அணுகுமுறைகளை ஊக்குவிக்கின்றது. இதன் கள அலுவலகங்கள் முல்லைத்தீவு மற்றும் கிளிநோச்சி தவிர்ந்த ஏனைய சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உருவாக்கப்பட்டிருந்தது. கள உத்தியோகஸ்த்தர்களாக ஐக்கிய நாடுகள் ஸ்த்தாபனத்தின் தொண்டர்கள்  உட்பட பலர் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள மக்கள், கிராம உத்தியோகத்தக்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சமுக அமைப்பின் தலைவர்களுடன் தொடர்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டு சிறப்பாக செயற்ப்பட்டு வந்தமை குறிப்பிடலாம்.

DRMU இன் பிரதான பணிகள். 

1. அரசாங்க நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிவாரண மற்றும்   புனருத்தாபன வேலைகளை மேற்பார்வை செய்வதுடன் கண்காணித்தல்.
2. மீள் கட்டமைப்பு, நிவாரண பணிகளின் போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு தேவையான ஆலோசனைகளை அரசாங்கத்திற்கு சிபார்சு செய்தல்.
3. அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் மனித உரிமைகள் பிரச்சினைகள் சம்மந்தமாக இணைந்து செயற்படல்.
4. மனித உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகள், அவற்றை பாதுகாப்பது சம்பந்தமான ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அரசாங்கத்திற்கும் ஏனைய நிறுவனங்களுக்கும் வழங்குதல்.
5. மீள் கட்டமைப்பு, புனருத்தாபன நடவடிக்கைகளின் போது சுனாமியால் பாதிக்கப்பட்ட நபர்களின் மனித உரிமைகள் நிலமையை சமுக கலந்துரையாடல்களின் மூலம் கண்காணித்தல்.
6. பாதிக்கப்பட்ட மக்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏனைய கடமை புரிபவர்களுடன்  விழிப்புனர்வு நிகழ்சிகள், தகவல் பரிமாற்றம், மற்றும் கல்வியை வழங்குதன் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டல்.
7. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களின் சமுக, பொருளாதார, அரசியல், கலாசார உரிமைகளை பாதுகாப்பதில் உதவுதல்.
8. சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படை உரிமை, உரித்துடமை மீறல் சம்மந்தமான முறைப்பாடுகளை அனர்த்த நிவாரண கண்காணிப்பு அலகிற்கு சமர்ப்பிக்க முடியும். பின்னர் இம்முறைப்பாடுகள் பரிசீலிக்கப்படும்.ம்

சுனாமி இழப்பீட்டு சம்பந்தமான உரிமை மீறல்களின் போது DRMU இன் செயற்பாடுகள்.

யார் DRMU க்கு முறைப்பாட்டை செய்ய முடியும்?

1. சுனாமியால் பாதிக்கப்பட்ட எவரேனும் சுனாமியுடன் தொடர்புடைய மனித உரிமை முறைப்பாடுகளை னுசுஆரு க்கு செய்ய முடியும்.
2. முறைப்பாடுகள் பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ குடும்பம் சார்பாகவோ அல்லது பாதிக்கப்பட்ட தனிநபர் சார்பாகவோ செய்ய முடியும்.
3. பாதிக்கப்பட்ட நபர் சார்பாக வருபவரினால் செய்யப்படும் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.
4. சுனாமி தவிர்ந்த ஏனைய மனித உரிமை முறைப்பாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேரடியாக ஏற்றுக்கொள்ளப்படும்.

முறைப்பாடுகள் கிடைக்காமல் DRMU க்கு பரிசீலனை செய்ய முடியுமா?

ஆம், அத்தியாவசியமான அடிப்படை உரிமைகள் மீறல்களை பரிசீலனை மற்றும் விசாரணை செய்ய முடியும்.

எங்கே நான் எனது முறைப்பாட்டினை செய்ய முடியும்?
கிராமசேவகர், பிரதேச செயலாளர் மற்றும் அரச அதிபர் போன்ற அரசாங்க அதிகாரிகளினூடாக அரசினால் வழங்கப்படுகின்ற உதவிகள் கிடைக்கப் பெறாவிடின் பாதிக்கப்பட்ட நபர் னுசுஆரு க்கு முறைப்பாடுகளை செய்ய முடியும்

முறைப்பாடுகளை நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ, தொலைபேசி ஊடாகவோ அல்லது பெக்ஸ் மூலமாகவோ மேற்கொள்ள முடியும்.

முறைப்பாட்டில் உள்ளடக்கப்பட வேண்டியவை.

1. என்ன உரிமை மீறப்பட்டுள்ளது?
2. யாருடைய உரிமை மீறப்பட்டுள்ளது?
3. உரிமை மீறலுக்கு பொறுப்புக் கூறவேண்டிய நபர் அல்லது நிறுவனம்.
4. எப்படி உரிமை மீறப்பட்டுள்ளது?
5. எங்கே, எப்போது அநீதி இழைக்கப்பட்டுள்ளது?
6. எதிர்பார்க்கும் உதவி.

எப்படி முறைப்பாடுகள் கையாளப்படுகின்றன.

1. DRMU வின் விதிகளுக்கு உட்படாத முறைப்பாடுகள் உரிய நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்படும்.

2. DRMU வினால் ஏற்றுக்கொள்ளப்படும் முறைப்பாடுகள் DRMU வின் கள உத்தியோகஸ்த்தர்களினால் மேலதிக பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரனையை தொடர்வதற்க்கான ஆதாரங்கள் கண்டறியப்படுமிடத்து அம்முறைப்பாடு முன்னெடுத்துச் செல்லப்படும்.

3. பின்னர் பொறுப்பு கூறுபவரிடமிருந்து அறிக்கை கோரப்படும்.

4. அவ்வறிக்கைகளின் மூலம் தீர்க்கப்படாத முறைப்பாடுகள் அழைப்பானை விடுவதன் மூலம் அல்லது விசாரனை மூலம் தீர்க்கப்படும்.
                                                          (களத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன்- மூதூர்)
இவ்வாறு இன்னலுறும் மக்களுக்கு அவர்கள் தமது உரிமைகள், உரித்துடமைகள் என்பன சார்ந்த சாத்தியமான பெறுபேறுகளை எமது கல்முனை கள உத்தியோகஸ்த்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அவர்களது உரிமைகளை ஓரளவாவது பாதுகாத்துள்ளோம் என்று புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாகங்களிலும் இப்பணி செய்ய கிடைத்த வாய்பை எண்ணி இப்போதும் பெருமிதம் அடைகிறேன். தற்போதும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்வாதாரங்கள் வாழ்விடங்கள் இழந்த நிலையில் அதற்க்கான நிவாரணங்களைப் பெறுவதனில் பல புறக்கணிப்புகள், ஓரங்கட்டுதல்களுக்கு உள்ளாகி இருக்கின்றவர்கள் அவர்களது முறைப்பாடுகளை அவர்களது மாவட்டங்களில் இருக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கலாம். 

20 February 2011

வேரறுந்து கிடக்கும் வெல்லாவெளிப் பிரதேசம்....

உலகலாவிய ரீதியில் புவி வெப்பமடைதல் காரணமாக காலநிலை மாற்றம் ஏற்ப்பட்டு வெள்ள அனர்த்தம், புயல், காட்டுத் தீ என்றும் எல் நிலா மற்றும் லா நிலா என்றெல்லாம் வானிலை புதுசு புதுசாக கலியுகத்தில் என்னென்ன வெல்லாம் நடக்கிறது.

இது இலங்கையின் பட்டி தொட்டிகளில் மட்டுமல்ல உலகிலேயே அவுஸ்திரேலியாவின் அனைத்து நகரங்களிலும் அதன் பொருளாதாரம், சுற்றுச் சூழல் மற்றும் அந்நாட்டு சமுகம் எல்லாத்தினையும் ஆட்டங்காண வைத்துக் கொண்டிருக்கிறது. 'ஸ்ரேன்' அறிக்கையின் படி உலகிலேயே தற்போது அதிகமாக நலிவுறும் தன்மைக்குள் அகப்பட்டிருக்கும் இந்நிலை சுமார் 50 தொடக்கம் 100 வருடங்கள் வரை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டு கரையோரம் வாழ் மக்கள் மற்றும் சுற்றுலாப்பிரயாணத் துறையினர் எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

ஆளானப்பட்ட அவுஸ்த்திரேலியாவுக்கே இத்தனை அச்சுறுத்தல் என்றால் அல்ப்ப இலங்கை என்னவாகும் என்று கடந்த வெள்ளம் பாடம் சொல்லி இருக்கிறது. இலங்கையின் அண்மைய வெள்ளத்தினில் பாதிக்கப்பட்ட பதின்மூன்று மாவட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டமே பட்டுத் தவித்திருக்கிறது. அதில் உள்ள பதின்நான்கு பிரதேச செயலகப் பிரிவுகளும் முற்றாகச் சேதமைந்த போதும், தற்போது அனைத்து பணியாளர்களது கண்ணும் கோலம் கெட்டுக்கிடக்கும் போரதீவுப்பற்று பிரதேசத்தின் பால் திரும்பி இருக்கிறது. இங்கு பொங்கிய வெள்ளத்தினில் 46,360 பேர் அதாவது 12,760 குடும்பங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அனேகமான கிராமங்கள் ஒருதொடர்பும் இல்லாமல் இருந்தமை இந்த பிரதேசத்தின் வெள்ள அனர்த்தத்துக்கான நலிவுறுந்தன்மையை புட்டுக் காட்டுகின்றது அல்லவா?????? குறிப்பாக ஆனைகட்டியவெளி, மலையுர்கட்டு, சின்னவத்தை, மண்டூர், கணேசபுரம், சங்கரபுரம், ராணமடு, வேத்துச்சேனை, பாலையடிவட்டை, கண்ணபுரம், நெல்லிக்காடு, காக்காச்சிவட்டை, விளாந்தோட்டம், நவகிரிநர் போன்ற 21 கிராமங்கள் நீரில் மூழ்கிக் கிடந்தது.

குறிப்பாக இங்கு வாழ்கின்ற மக்கள் சேனைப்பயிர் செய்கை, வேளான்மைச் செய்கை, மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மற்றும் ஆடு மாடு, கோழி வளர்த்தல் அத்துடன் வீட்டுத்தோட்டம் என்பனவற்றினையே கிடைத்த வளங்களைக் கொண்டு சிறப்பான பயன்களைப் பெற்றுக்கொண்டு வந்தனர். கணக்கீட்டின்படி 10,214 குடும்பங்கள் அதாவது 36,197 மக்கள் தங்களது ஜீவனோபாயத்தினை இழந்துள்ளனர். 22467 ஏக்கர் விவசாயம் அடிக்கடி அடித்து நாசமாக்கிய வெள்ளத்தில் களுவுண்டு போயுள்ளது, கழுவுண்டு போனது அவர்களின் வயல் நிலங்கள் மட்டுமல்ல அவர்களது அன்றாட வாழ்க்கையும் சேர்த்துத்தான். அவர்கள் வானம் பொழியும் மழை மாரியினையும், குளங்களில் கிடைக்கும் நீர் வளத்தினையும் நம்பியே விவசாயத்தினில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் அவையெல்லாம் வெள்ளத்தின் வீறாப்பில் பள்ளத்தில் இழுத்தெறியப்பட்டுள்ளன. இந்த உடைக்கப்பட்ட குளங்களின் விபரங்கள் கீழ் உள்ள அட்டவணையில் தரப்பட்டடுள்ளது.
(தகவல் பிரதேச செயலகம் போ.பற்று)
இம்மக்கள் வயற் செய்கைக்கு அப்பால் மேட்டுநிலப் பயிர் செய்கைபண்ணி வேறு பிரதேச செயலகப்பகுதிகளுக்கு சந்தைப்படுத்தும் ஏற்றுமதி வியாhபரத்திலும் ஈடுபட்டு வந்தனர். அதில் அதிக லாபம் ஈட்டி வந்தனர். பழுகாமம், மண்டுர் கத்தரிக்காய் மற்றும் மிளகாய் போன்றவற்றுக்க தனி மவுசே இருந்தது. இதற்க்கு மேலாக பயறு, குரக்கன், இறுங்கு, சோளம், எள்ளு என்பன போன்ற இன்னோரன்ன தானியப் பயிர்செய்கையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கே தன்னிறைவு ஏற்ப்படுத்திய பெருமை இவர்களுக்கே சாரும். இவ்வாறு இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட்ட 1665 விவசாயிகள் முற்றாக இப்பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆத்துடன் 178 பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களது 41 ஏக்கர் பழச்செய்கை மண்ணோடு மண்ணாகி விட்டதை பிரதேச செயலக அறிக்கை பறை சாற்றுகின்றது. அதே போன்று 3310 வீட்டுத்தோட்டச் செய்கையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிக்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.
(உடைந்து கிடக்கும் மண்டுர் பாலம்)
அபிவிருத்தி திட்டமிடலாளர்கள் அனர்த்தம் பற்றிய கரிசனையினை அபிவிருத்தி நடவடிக்கையில் கொள்ளத்  தவறிவிடுகின்றனர் என்பதற்கு வெல்லாவெளிப் பிரதேசம் சிறந்த உதாரணமாகும். இங்கு நான்கு பாலங்கள் (மண்டுர் பாலம், காக்காச்சிவட்டை மருதங்கடவைப் பாலம், ஆணைகட்டியவெளி கோஸ்வே, திக்கோடை கோஸ்வே) முற்றாக வெள்ளத்தில் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதுபோன்று 124 சிறிய பெரிய அளவிலான வீதிகள் முற்றாக அடித்துச் செல்லப்பட்டுள்ளன இவை வீதி அபிவிருத்தி அதிகார சபை, பிரதேச சபை, மற்றும் நீர்ப்பாசன சபையினரின் திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல்கள் அளவிட முடியாத இளப்பினை இந்த இரண்டு தசாப்த கால யுத்த காயம் ஆறமுன் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இந்த வெள்ளம் அடிமேல் அடித்து அந்த மக்களை மண்ணுக்குள் புகுத்தியுள்ளது. அவர்களை கட்டிக்காப்பதில் அல்லும் பகலும் சிரமம் பாராமல் தோழோடு தோழ்கொடுத்து உதவிய பெருமை அப்பிரதேச செயலாளர் உதயசிறி அவர்களையே சாரவேணும். இருப்பினும் இவர்களது சக்கிக்குமேல் இந்த இழப்பை உடன் நிவர்த்தி செய்ய முடியாது. இது நீண்ட காலத்தில் மீழ் கட்டமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதற்க்கு ஏனைய துறைசார்ந்த திணைக்களங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்பு உருவாக்கப்பட வேண்டியுள்ளது. மாத்திரமல்லாமல் நீண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்தி சார்ந்து, சமுகம், சுற்றுச்சூழல் மற்றும் பொருளியல் நலன் கருதிய முன்னெடுப்புகள் தான் ஆரோக்கியமான பாதுகாப்பினை வரும் சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் என்பது எனது கருத்தாகும். ஆகவே இம்மக்களின் அவல நிலை தொடரவிடாமல் உதவிபுரிய இயன்ற உதவிகளை செய்யவேண்டும் என்பது எனது அவாவாகும்.
தகவலுக்கு நன்றி பிரதேச செயலர் போரதீவுப் பற்று...