ADS 468x60

18 September 2022

'யார் இந்த பூராடனார்' மட்டக்களப்பு தமிழ் சங்கத்தின் நினைவுப் பேருரை!

அறிமுகம்

சிந்தனைகளை யாராலும் பசிவந்தால் சாப்பிட முடிவதில்லை ஆனால் அதுவே பலர் ஒழுக்கமுள்ள மற்றும் வளர்சியடைந்த சமுகமாக மாற வழிவகக்கின்றது என்றால் அது பொய்யில்லை. உலகத் தமிழ் வளர்சிக்கு ஊன்றுகோலாக பல ஈழத்தமிழர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர் இன்னும் இருந்துகொண்டே இருப்பபார்கள். 

தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.  

14 September 2022

கிழக்கில் ஒருபோக விவசாயம் செய்ய 5 இலட்சம் தொழிலாளர்கள் தேவை: மீண்டும் மம்பட்டி தூக்கவேண்டும்!

  • சுமார் 40 வகையான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • நமக்கு மூலப்பொருட்கள் கிடைத்தால் இங்கு முடிவுப் பொருட்களை தயாரிக்கலாம்?
  • எத்தனை மூலப்பொருட்கள் கொண்டு வந்தாலும் பெட்ரோல் இன்ஜின், டீசல் என்ஜின்களை இந்த நாட்டில் தயாரிக்க முடியுமா?
  • ஒரு நாளைக்கு ஒருவருக்கு குறைந்தது 3500 ரூபாய் இல்லாமல் இருமக் கூட மாட்டார்.
  • கிழக்கு மாகாணத்தில் ஒரு பருவத்தில் அறுவடை செய்வதற்கு குறைந்த பட்சம் நான்கிலிருந்து ஐந்து இலட்சம் பேர் தொழிலானர்கள் தேவைப்படுகின்றனர்.

வரலாறு முக்கியம் நமக்கு, நமது விவசாயிகள் ஒரு வரலாற்றைக் கொண்டுள்ளனர். அந்தவகையில் 1900 ஆம் ஆண்டில், இலங்கை விவசாயிகள் முட்செடிகளைப் பயன்படுத்தி நெல் வயல்களைப் பயிரிட்டனர். இது ஒரு இயற்கைக் கரிம உரம். அதேபோல பூச்சிக்களை மற்றும் ஈக்களை விரட்ட பாரம்பரிய இரசாயன முறைகளையும் உள்ளூர் மூலிகைகளையும் பயன்படுத்தினர். 1910ல் கூட இந்நாட்டு மக்களும் அவ்வாறே பயிரிடப்பட்டனர்.

உணவு நெருக்கடிக்கு கொண்டு செல்லும் பொருளாதார பின்னடைவு

  • 185 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பாண் விலை  485 ரூபாவாக அதிகரித்துள்ளது.
  • ஒவ்வொரு 05 குடும்பங்களிலும் 04 குடும்பங்கள் உணவைத் தவிர்க்கும் சூழ்நிலையில் உள்ளனர்.
  • ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
  • செப்டெம்பர் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள வற் வரி அதிகரிப்பின் மூலம் இந்த விலைகள் அதிகரித்து பணவீக்கம் மேலும் உயரும் 
இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து பல்வேறு விளக்கங்கள் உள்ளன. சில நேரங்களில் இந்த யோசனைகள் உள்நாட்டிலும் பின்னர் சர்வதேசத்திலும் வழங்கப்படுகின்றன. சுருக்கமாகச் சொன்னால், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக நாட்டு மக்கள் எதிர்கொள்ள வேண்டிய கடுமையான அடக்குமுறைகளும் தற்போது சர்வதேசப் பொருளாக மாறியுள்ளது.

12 September 2022

சுற்றறிக்கைகளும் பொருளாதாரப் பின்னடைவும்: ஒரு ஆய்வுப்பார்வை.

பல வருடங்களாக நான் கோடிட்டுக்காட்டு; ஒரு விடயம் அது நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் சுற்று நிருபங்கள். இதனை இன்று மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இந்திய உதவியின் கீழ் மேற்கொள்ளப்படும் பல திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக நடைபெற்ற கலந்துரையாடலில் அரச தலைவர் இந்த ஆலோசனையை வழங்குகிறார். மேற்கூறிய கலந்துரையாடல், அந்தத் திட்டங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த சிக்கல் சூழ்நிலைகளை அகற்ற உதவியது. வெளிநாட்டு உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சரியான இலக்கை நோக்கி நகரவில்லை என்றும் அதனால்தான் வெளிநாட்டு உதவி வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

11 September 2022

விளையாட்டு வீரர்களின் சாதனை சோதனையில் வாடும் மக்களுக்கு ஊக்கமருந்து.

கடந்த ஞாயிற்றுக் கிழமை முழு இலங்கை சமூகத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது. கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கிய போதிலும், நாட்டின் நான்கு திசைகளிலிருந்தும் பட்டாசுகளின் சத்தம் மற்றும் ஆரவாரம் கேட்கத் தொடங்கியது. இந்த நேரத்தில் குதூகலமும், பெருமையும், உற்சாகமும் பொதிந்து கிடக்கும் அற்புதமான சந்தர்ப்பமாகக் கருதுவது மிகவும் சரியானது.

இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. ஒருபுறம் இலங்கை அணி மீண்டும் ஆசிய வலைப்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது. மறுபுறம் இலங்கை அணி ஆசியக் கிண்ண கிரிக்கெட் மகுடத்தை வென்றது. அந்த அணிகளுக்கு நாட்டில் உள்ள பலர் நம்மட பொடியணுகள், எங்கள் பெண்கள் என்று வாழ்த்தத் தொடங்கினர்.

சர்வதேச உறவுகளை நாம் வளர்துக்கொள்வது நாட்டு வளர்சிக்கு தூண்டுகோலாகும்.

  • இலங்கையின் வீழ்ச்சிக்கு இந்த நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளும் சில அதிகாரிகளும் தமது உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேட முயற்சித்தமையே பிரதான காரணம் 
  • நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் இலங்கைக்கு ஸ்வீப் டிக்கெட்டுகள் விழத் தொடங்கியுள்ளன.
  • அமெரிக்கா சம்பாதித்த பணத்தில் குறிப்பிட்ட பகுதி சர்வதேச சமூகத்தின் முன்னேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது

நமக்கு முன்னேறக் கிடைத்த பல சந்தர்பங்களை சில அரசியல் முதலைகளின் நன்மைக்காகத் தட்டிக்கழித்த கதைகள் ஒன்றும் புதியதல்ல. இவற்றால், இந்நாட்டின் பொருளாதாரம் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து கிடக்கும் வேளையில் USAID அமைப்பின் தலைவராக இருந்த திருமதி சமந்தா பவர் இலங்கை வந்தடைந்தார். நல்ல காலம் இந்த கிணற்றில் தண்ணீர் இல்லை அதனால் நமது பொருளாதாரம் மூழ்கவில்லை. ஆனால் கிணற்றின் அடியில் மூழ்குவதற்குப் பதிலாக பொருளாதாரத்தின் பின்பகுதி கிணற்றில் விழுந்து உடைந்தது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு இந்த முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டது என்பது உண்மை கதை. 

ஏன் எலிசபெத் மகாராணியின் மரணம் குறித்து இந்நாட்டு குடிமக்கள் உணர்ச்சிவசப்பட்டுள்ளனர்?

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மரணம் கிரேட் பிரிட்டன், பொதுநலவாய நாடுகளின் கவனத்தை மட்டுமல்ல, உலகத்தின் கவனத்தையும் ஈர்த்த ஒரு பரபரப்பான நிகழ்வாகும். வேகமாக மாறிவரும் உலகில், பிரிட்டிஸ் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில், கிரீடத்தின் பங்கு கேள்விக்குள்ளாக்கப்படும், இருந்தாலும் பிரிட்டிஸ் ராணி கவனத்தை ஈர்க்கும் நபராக இருந்து வருகிறார். நெருக்கடியான சூழ்நிலைகளில் பிரித்தானிய மகுடத்தின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றும் அவரது திறமையும் அங்கு அவர் காட்டிய திறமையும் தனித்துவமானது.

05 September 2022

இன்று பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க பலரது கடைசி இலக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பாக மாறிவிட்டது

நாம் பல மாற்றங்களை கண்டும், எதிர்கொண்டும் வருகின்றோம். அந்த வகையில் ஒரு நாட்டில் ஒரு கிளர்ச்சி, போர், கடுமையான பொருளாதார மந்தநிலை அல்லது முடிவில்லாத பொது அமைதியின்மை ஏற்படும் போது, அந்த நாட்டு மக்கள் முதலில் நினைவில் கொள்வது, அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழ வேண்டும் என்பதுதான். இதை நமது வரலாற்றில் அதிகம் கடந்துவந்துள்ளோம். தொல்லை தரும், அசௌகரியமான சூழலில் இருந்து தப்பித்து, தொல்லை இல்லாத வசதியான சூழலில் வாழ வேண்டும் என்ற மனிதனின் உள்ளார்ந்த தேவையின் விளைவு இது. 

04 September 2022

ஊழல் இல்லாத நாடாகும் வரை உதவி கிடைக்காது!

 நம்மால் வரவேற்கப்படும், நாமறிந்த ஒரு விடயம்தான் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை கடனாக வழங்குவதற்கு அண்மையில் இணக்கம் தெரிவித்துள்ளமை. இந்த உடன்படிக்கை தொடர்பான கடனைப் பெறுவதற்கு இலங்கை பல கடுமையான நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்றும், இது அடுத்த சில ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு உதவும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அவற்றுள் ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு வலுவான, ஏற்றுக்கொள்ளக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விதித்துள்ள நிபந்தனை அவற்றுள் முக்கியமானதாகும்.

03 September 2022

நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர்.

நமது தலைவர்களின் ஆட்சியால், இன்று நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உலகிற்கு 10 லட்சம் ரூபாய் கடனாளியாகிவிட்டனர். நாளை பிறக்கும் குழந்தையின் கடன் சுமை எவ்வளவு என்று சொல்ல முடியாது. நம்மைப் போன்ற எநத ஒரு நாடும் கடன் மற்றும் உதவி இல்லாமல் காலூன்றி நிற்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. ஆகவே இங்கு பிரச்சனை கடன் அல்ல. இது கடன் மூலம் கிடைக்கும்  நன்மையுடன் தொடர்புடையது. கடனுடன் மேற்கொள்ளப்படும் திட்டமானது வட்டி மற்றும் கடனை செலுத்தக்கூடியதாக இருக்கின்றமை பயனுள்ள நிதி மேலாண்மை என்று அழைக்கப்படுகிறது. இற்கு ஒரு நாட்டில் சட்டத்தின் ஆட்சி மற்றும் முறையான நிதி கட்டுப்பாடு மற்றும் நிதி ஒழுக்கம் இருக்க வேண்டும். இல்லை என்றால், 'மண் சரிந்து, மலையின் கீழே விழுவது' போல, நாடு அதள பாதாளத்தில் விழுந்து நாசமாகிவிடும்.

நாட்டின் சில பொருளாதாரச் சீர்திருத்தம் மாற்றத்துக்கான பச்சை சமிக்ஞை!

அனைவரும் எதிர்பார்த்த வகையில் இன்று சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்க அனுமதி வழங்கவுள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதால் இந்த கடன் தொகைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நாம் பார்க்கலாம், பொருளாதார நெருக்கடியை கடன்களை பெற்றுக் கொண்டு முடிவுக்கு கொண்டுவர முடியாது பதிலாக ஏற்றுமதி பொருளாதாரத்தை உறுதியாக்கி தேசிய வருமானத்தை அதிகரிக்க வேண்டும். பேச்சளவிலும் செயலளவிலும் அரச தலைவரின் பொருளாதாரப் பார்வையும் கொள்கையும் மிகவும் சரியானது மற்றும் நம்பகமானது என்றே கூற வேண்டும். கடன் வாங்குவது நெருக்கடிக்கு ஒரு தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும். பொருளாதாரத்தை நிலையான நிலையில் பராமரிக்க, ஏற்றுமதி மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதனை நாம் மறந்துவிடமுடியாது.

01 September 2022

இடைக்கால வரவுசெலவுத்திட்டம் - மூன்று விடயம்தான் உள்ளது!

இடைக்கால வரவு செலவு திட்டம் தொடர்பான சில முக்கிய விடயங்களை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றேன். மத்திய வங்கியின் ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்டபடி, கடன் கோரும் ஒரு நாடு அதற்குப் பொருத்தமான பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டும். 

மூன்று அடிப்படை பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நான் கருதுகின்றேன்;. முதலாவது: அரசாங்கத்தின் நிதி நிர்வாகத்தை ஒரு சிறந்த இடத்திற்குக் கொண்டு வருதல். அரசின் செலவினங்களைக் குறைத்து வருவாயைப் பெருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டாவது: உலகப் பொருளாதார செயல்முறைக்கு இணங்கக்கூடிய தேசிய பொருளாதார திட்டத்தை தயாரிப்பதற்கான முயற்சி. இது நீண்ட காலப் பொருளாதாரச் செயல்பாட்டின் முதல் படியாக அறியப்படுகிறது. மூன்றாவது: பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தபோதிலும் ஏழை சமூகத்திற்கு நிவாரணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல். உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளில் ஒன்று ஏழை சமூகத்திற்கு நிவாரணத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பது.