அறிமுகம்
சிந்தனைகளை யாராலும் பசிவந்தால் சாப்பிட முடிவதில்லை ஆனால் அதுவே பலர் ஒழுக்கமுள்ள மற்றும் வளர்சியடைந்த சமுகமாக மாற வழிவகக்கின்றது என்றால் அது பொய்யில்லை. உலகத் தமிழ் வளர்சிக்கு ஊன்றுகோலாக பல ஈழத்தமிழர்கள் இருந்துள்ளனர், இருக்கின்றனர் இன்னும் இருந்துகொண்டே இருப்பபார்கள்.
தமிழ்மொழி தொன்மையான செம்மொழி என்பதை ஆய்வுலகும் அறிஞர் உலகும் ஏற்றுக்கொண்டுள்ளன. அம்மொழியின் வளங்கள் பன்முகம் கொண்டவை. சங்க நூல்கள் (இலக்கியம், இலக்கணம்), அறநூல்கள், பக்தி நூல்கள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், உரையாளர்களின் உரைகள், அகராதி நூல்கள், நாட்டுப்புறவியல் நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், கலைக்களஞ்சிய நூல்கள், படைப்பு நூல்கள், கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் என்று பல துறையாகப் பல்கிக் கிடக்கும் தமிழ்ப் பரப்பு முழுமைக்கும் பங்களிப்பு செய்தவர்கள் ஒரு சிலராகவே இருப்பார்கள்.