ADS 468x60

01 July 2016

சிறுவர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் கவனமாக கையாளப்பட வேண்டும்!

சிறுவர்கள் எமது எதிர்காலத்தின் நம்பிக்கைச் சொத்தாகும். இதனை பாதுகாப்பதிலேயே ஒரு நாட்டின் அபிவிருத்தி தங்கியிருக்கின்றது.


இன்றைய சிறுவர்களே நாளைய தலை வர்கள் என்பதற்கு இலக்கணமாக பல வளர்முக மேற்கத்தய நாடுகளுக்கு உரித்தான சிறுவர்கள் மேதைகளாகவும், ஆய்வாளர்களாகவும் உருவாக்கப்பட்டு, அவர்கள்தான் கணிசமான அளவு கீழைத்தேய நாடுகளை வழிடத்தும் துர்ப் பாக்கிய நிலையில் இருப்பது வருத் தத்திற்கும் திருத்தத்திற்கும் உரியதாகும்.
சிறுவர்கள் சார்பாக இன்று உலகளாவிய ரீதியில் பெரும் முக்கியத்துவம் செலுத்த ப்பட்டு வருவது அறியக்கிடக்கின்றது.

இளைஞர்கள் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்

நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.

தேடி வந்தேனையா கதிர்காம்!

ஆறுபடை உனது ஏறுமயில் அழகு தேடாத மனம் என்ன மனமோ! என கதிர்காமக் கந்தனின் சந்நிதியை காலால் நடந்து, கிடந்து, பத்தியோடு பக்தர்களுடன் பழகி; பயணம் செய்யும் புண்ணிய தருணம் இது. உகந்தை தொடங்கி குமுக்கன், வியாழை மற்றும் வள்ளியம்மன் ஆறு குறுக்கறுத்து குன்றில் உறையும் குமரனை தரிசிக்க பாதயாத்திரையாக செல்லும் முருக பக்தர்களின் வழக்காறு இன்று நேற்றல்ல பன் நெடுங்காலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது.