ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச பெண்கள் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப தினத்தின் இந்த ஆண்டிற்கான கருத்து 'தலைமைத்துவம்' (Leadership) ஆகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறைகளில் வலுவான பெண் முன்னோடி மாதிரிகள் அவசியம் என்பதையே இது வலியுறுத்துகிறது.
25 April 2024
இலங்கையில் ICT துறையிலும் அரசியல் தலைமைத்துவத்திலும் பெண்களின் பங்களிப்பு
23 April 2024
கடன் மறுசீரமைப்புடன் சேர்த்து அரசியல் மறுசீரமைப்பும் அவசியம்.
வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்க அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் அறிக்கைகளை இரண்டரை வருடங்களாகக் கேட்டு அலுத்துப் போய்விட்டோம். செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள். அந்தத் தொகை இறையாண்மைப் பத்திரங்களுக்குச் செலுத்தப்பட வேண்டும். இருதரப்புக் கடன்களுடன் சேர்த்து, நிலுவையில் உள்ள கடனின் மொத்தத் தொகை 51 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
21 April 2024
நாட்டில் சிறைச்சாலைகள் இல்லாதொழிக்க என்னவழி?
யாரோ ஒருவர் தவறு செய்ததற்காக சிறைக்குச் செல்கிறார். ஆனால் நம் நாட்டில் குற்றம் சுமத்தப்படாமல் தவறு செய்பவர்கள் எண்ணற்றவர்கள். அரசியல்வாதிகளால் இன்று நமது நாடு பிச்சைக்கார நாடாக மாறிவிட்டது;. நமது நாட்டின் சொத்துக்களையும் வளங்களையும் கொள்ளையடித்தார்கள். நாடு பெற்ற வெளிநாட்டு திட்டங்களில் இருந்து கமிஷன் பெற்றனர். கிராமத்தில் கட்டப்பட்டு வரும் பாலம்ஈ பாதைகள் மற்றும் மற்றும் மதகுகளை கூட சுரண்டினார்கள்.
18 April 2024
பல்கலைக்கழகங்கள் எதைச் செய்யவில்லை.
இன்றைய உலகில், சமூகத்தின் வளர்ச்சியில் பல்கலைக்கழகங்கள் வகிக்கும் முக்கியத்துவம் எப்போதையும் விட அதிகமாக உள்ளது. வெறும் கல்வி நிறுவனங்கள் மட்டுமல்லாமல், அவை அறிவு படைப்பு, திறன் வளர்ச்சி, சமூக விழிப்புணர்வு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் கலாச்சார வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளிலும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் முக்கிய சக்திகளாகும்.
எந்தவொரு உயர்கல்வி நிறுவனத்தின் அடிப்படை நோக்கமும் வெறும் தகவல்களைப் பரப்புவது மட்டுமல்ல, ஒன்றை ஆய்ந்து கேள்விகேட்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதும், நடைமுறையில் உள்ள சித்தாந்தங்களை சவால் செய்வதும், சமூக முன்னேற்றத்திற்காகப் பாடுபடுவதும் ஆகும். ஆயினும்கூட, நாம் சுற்றிப் பார்க்கும்போது, ஆராய்ச்சி மற்றும் கற்றுக்கொள்ளுதலின் திசையை சந்தைப்படுத்தும் ஒனற்hக மாறி வருவதனைக் காண்கிறோம், இதனால் நமது பல்கலைக்கழகங்களின் உண்மையான நோக்கத்தினையே சிதைக்கிறோம்.
17 April 2024
அரசாங்கம் எதற்குத் தேவை
பாலித்த தேவரப்பெரும அரசியலில் ஒரு எடுத்துக்காட்டு
12 April 2024
நுகர்வோருக்கு எச்சரிக்கை! 90% உணவுப் பொருட்கள் பாவனைக்கு தகுதியற்றவை
அரிசி, பருப்பு, உப்பு, எண்ணெய், மரக்கறிகள் உட்பட நாம் தினமும் உண்ணும் பெரும்பாலான அத்தியாவசிய உணவுப் பொருட்களில் வியாபாரிகள் இரசாயனங்களை கலப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும், வெண்ணெய் கேக் உட்பட சந்தையில் விற்பனை செய்யப்படும் பல வகையான கேக்குகளில் வெண்ணெய் தவிர முட்டைகள் எதுவும் இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
09 April 2024
எதை நாம் புத்தாண்டில் விட்டுவிடுகின்றோம்?
கடந்துவந்த நமது வாழ்க்கையின் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களைத் திரும்பிப் பார்ப்பது, கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றிவிட்டதா என்று சிந்திப்பது, அதுபோல இன்னும் முன்னே உள்ள முந்நூற்று அறுபத்தைந்து நாட்களுக்குத் தயாராக ஆசிகளைப் பெறுவதையும்; புத்தாண்டின் சாராம்சம் என்று அழைக்கலாம்.
05 April 2024
களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படுமா?
முன்னேற்றப் பாதையிலே மனசு வச்சி முழுமூச்சா அதற்காக தினம் உழசை;சி பாடுபடுற விவசாயிகளுக்கு 'காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலுந்தானே மிச்சம்' என்ற நிலையில் கிழக்கு விவசாயிகள் நாதியற்றுக்கிடப்பதனை ஜீரணிக்க முடியவில்லை. யாரங்கே யாரங்கே இதற்கொல்லாம் வரமாட்டார்கள். நாம் இன்று பிரயோசனமற்றுக்கிடக்கும் முற்றுப்பெற்ற களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் பற்றிப்பார்க்கப்போகின்றோம்.
தலைவர்களாக..... கணேசமூர்தி வந்தாரு! காதர்மஸ்தான் வந்தாரு!, அமல்சேர் வந்தாரு! அமீர்அலி வந்தாரு! அதிகாரிகளாக... கருணாகரன் வந்தாரு! கலாவதி வந்தாரு! ஒண்ணும் திறக்க முடியல
சாராய வார் திறக்கிறண்டா வேணாம்னடாலும் ஓடி ஓடி திறக்கறாணுகள் ஆனா வாழ்வழிக்கும் ஒரு பொருளாதார மத்திய நிலையத்த பரிபூரணமா முடிச்சிம் இத்தன அக்கப்போர் எதற்கு? ஏதோ உள்ளே இருக்குப்போல வாங்க பார்க்கலாம்!
03 April 2024
சித்திரை வருட வோணஸ்: மூன்றுவேளை உணவு
வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்ந்துவிட்டது என்று மீண்டும் சொல்கிறோம். எப்படி சாப்பிட்டோம் என்பதை நமது அடுப்பு அறியும். ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுப்பில் வைக்கப்படும் உணவுப் சமையல்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
02 April 2024
தேத்தாத்தீவின் அழகு தனி அழகு
தேத்தாத்தீவின் அழகு தனி அழகு- அங்கு
தெள்ளு தமிழ் கலைகள் வந்து பழகு
கரை சூழ்ந்த கிழக்கெல்லாம்
கடலலை முழங்கும்
விரைந்தோடும் மீனவர்க்கு
முத்தள்ளி வழங்கும்
ஆதவன் வருகை கண்டு
அடம்பன் கொடி பூக்கும்
அயல் எல்லாம் வெற்றிலை
செல்வங்கள் சேர்க்கும்
மட்டுநகர் வாவி மகள்
மேற்கே வளைந்தோடும்
மணல் வயலில் வெள்ளாமை
செழிப்பாய் விளைந்தாடும்
செல்வமாய் குடியிருப்பில்
சேர்ந்தோங்கும் உழவு
சில்லென்ற குளங்களிலே விளையாடும் நிலவு
பாதாளத்தில் செல்லும் நாட்டின் நிலமை: பொருளாதார எழுச்சிக்கு வழியாகுமா?
பல நாட்களாக தனது குடும்பம் தினமும் மரவள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வருவதாக இந்த தந்தை கூறுகிறார். மேலும் தனது குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாது என்பதால், தனக்குத் தானே விஷம் கொடுத்து இறக்க முடிவு செய்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். இந்தச் செய்தியின் மூலம் நமது நாடு விழுந்துள்ள பொருளாதாரக் குழியின் மிகவும் சோகமான நிலை நன்கு விளக்கப்பட்டுள்ளது. இந்த நிலை திஸ்ஸமஹாராம தந்தைக்கு மட்டுமல்ல. இப்படிப்பட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றார்கள் நம் நாட்டில் என்பதனையே காட்டுகின்றது.
கலைந்த பல்கலைக்கழக கனவு!
பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்ட கல்வி அவனை ஒரு புதிய மனிதனாக மாற்றியது. ஆதன் மூலம் சமூக பிரச்சனைகள் குறித்து அவனுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டது. சமூக நீதிக்காக போராட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வளர்ந்தது. பல்கலைக்கழகத்தில் கற்ற அறிவை சமூகத்திற்கு பங்களிக்க பயன்படுத்த வேண்டும் என்று உறுதிபூண்டான்.
28 March 2024
புதுக்குடியிருப்பு- களுதாவளை வரையான கிராமத்தில் ATM-ஏரிஎம்மின் அவசியம்!
பிரச்சனை
அதிக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் அரச தொழில் செய்பவர்கள், வெளிநாட்டில் அதிகம் வேலை செய்பவர்கள், விவசாயிகள், மீனவர்கள், முயற்சியாளர்கள் எனப் பலர் வாழும் எமது பிரதேசத்தில் தமது பணப்புழக்கத்தினை செய்ய நீண்ட தூரம் பிரயாணம் செய்து களுவாஞ்சிகுடிக்கே செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு துவங்கி களுதாவளை வரையிலான பகுதியில் சுமார் 10,000 வங்கி வாடிக்கையாளர்கள் ஏறத்தாள வசிக்கின்றனர். ஆனாலும் இங்கு எந்த ஒரு ஏடிஎம் வசதியும் இல்லை. இதனால், அன்றாட பணப் பரிவர்த்தனைகளுக்கு மக்கள் பல கிலோ மீற்றர் தொலைவிலுள்ள களுவாஞ்சிகுடிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.
23 March 2024
பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் இறக்குமதி அதிகரிப்புதான்
இந்நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு வேகமாகக் குறைவதற்கு முக்கியக் காரணம், தடையற்ற இறக்குமதியாகும். இந்த நாட்டிலிருந்து பொருட்களை ஏற்றுவதற்குப் பதிலாக பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து பொருட்களை இந்த நாட்டில் நிரப்புகிறோம். அது பற்றிய அலசல்தான் இது.
20 March 2024
நான் கிழக்கின் சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான அதிகாரியாக இருந்தால்!
17 March 2024
செல்போன் அடிமைத்தனத்தில் உங்கள் குழந்தைகள் சிக்கியுள்ளனரா இதோ விடுதலை!
ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் எங்கள் தொலைபேசிகளைச் சரிபார்க்கிறோம். ஆடை இல்லாமல் இருப்பதை விட ஃபோன் இல்லாமல் இருப்பதனை நாம் இன்று நிர்வாணமாக உணர்கிறோம்;;! எங்கள் தொலைபேசிகள் மூலம் பல வசதிகளையும் மற்றும் பொழுதுபோக்குகளையும் அடைவதற்காய் இது நம் வாழ்வின் மிகவும் வசதியான விஷயங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் இதுதான் கொடுங்கோன்மையின் அமைதியான வடிவமாகவும் இருக்கலாம்.
16 March 2024
நான் மட்டக்களப்பில் ஒரு அமைச்சராய் இருந்திருந்தால்!
15 March 2024
கிராமம் மகிழ்சிகளின் சொர்கவாசல்
13 March 2024
ஏன் இலங்கைக் கல்வியில் சீர்திருத்தங்களை இவ்வாறு செய்ய முடியாது?
- பிள்ளைகளின் பாடசாலை பிரவேச வயதை நான்கு வயதாக குறைக்கவேண்டும்
- 10ஆம் தரத்தில் ஜீ.இ.சி. பொதுத்தேர்வு நடத்த வேண்டும்.
- ஆங்கில வழிப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கான கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
- தேசிய பாடசாலைகள், மாகாண சபை பாடசாலைகள் என வகைப்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த நாட்டில் படிப்படியாக ஒரே வகையான பாடசாலைகளை நிறுவ வேண்டும்.
10 March 2024
எமது பட்டிருப்புத் தொகுதி தரிசு வயல்கள்: புத்துயிர் பெறுவதற்கான அழைப்பு
இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான பயிர்செய்யும் நிலங்கள் பாழடைந்து தருசு நிலமாக மாறிவருவதனைக் காணலாம். குறிப்பாக குருக்கள்மடம் துவங்கி களுதாவளை வரையுள்ள பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் சதுப்பு நிலம் பாழடைந்து கிடக்கின்றது.
07 March 2024
இலங்கையில் தடைகளை உடைக்கும் புதிய பெண் தொழில்முனைவோர்
உலகளவில், தொழில் துறையில் புதிய யுகம் பிறக்கிறது. இதில், பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. உலக தொழில் முனைவோர் ஆய்வுக் கண்காணிப்பு அமைப்பின் (Global Entrepreneurship Monitor - GEM) 2023 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, உயர் வளர்ச்சி கொண்ட தொழில் முனைவோரில் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் இந்த விகிதம் அதிகமாக உள்ளது. இலங்கையிலும் பெண்கள் தொழில் முனைவோராக உருவாகும் போக்கு அதிகரித்து வருகிறதா?
01 March 2024
இலங்கை தலைவர்கள் சிறந்த அரசியல் பொருளாதார நடைமுறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும்
2022ம் ஆண்டு தொடக்கத்தில், சுதந்திர இலங்கையின் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது நாடு. மிகக் குறுகிய காலகட்டத்தில், இந்தப் பொருளாதார நெருக்கடி தாண்டி, அரசியல் மற்றும் சமூக துறைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
29 February 2024
கல்லாநிதிகளின் பொல்லாத ஆசை
27 February 2024
போரின் நிழல்கள்: மனதார மீள் எழுவோம்!
ஆய்வு மற்றும் மீட்பு முயற்சிகள்
போர் முடிந்த உடனே, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சமூகங்களின் மீள்திறனை ஆய்வு செய்யும் குழுவில் நான் பணியாற்றினேன். ஆய்வின் ஒரு பகுதியாக தரவு சேகரிப்புடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபட்டோம். உதாரணமாக.
25 February 2024
மத்தியவங்கியின் சம்பள அதிகரிப்பும் ஒடுக்கப்பட்ட பொதுமக்களும்.
மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் 29.53 வீதம் முதல் 79.97 வீதம் அதிக விகிதாச்சாரத்தில் மூன்று வருட ஊதிய திருத்தத்தின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.
தெரியுமா மத்திய வங்கியின் பிரதி ஆளுநரின் மாதாந்த சம்பளம் 1.7 மில்லியனில் இருந்து அலுவலக உதவியாளர்களின் சம்பளமும் ரூ. 974,965 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு அலுவலக உதவியாளரின் மொத்த ஊதியம், ஒரு நுழைவு நிலை மருத்துவரின் ஊதியத்தை விட இப்போது உயர்ந்துள்ளது என்று அனைவரும் தெரிவிக்கின்றனர்.
22 February 2024
நெல்லைக்காட்டி விவசாயியை மறைப்பதுபோல உள்ளது இது
ஒரு சர்வதேச அளவிலான மாநாட்டில் இந்நாட்டின் பல விவசாயிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் வாய்ப்பை நிச்சயமாக வழங்கியிருக்க வேண்டும். இந்த நாட்டில் விவசாயம் பற்றி நன்கு அறிந்தவர்கள் விவசாயிகள். இந்த நாட்டை செழிப்பான பூமியாக மாற்றுவதற்கான போராட்டத்தின் முன்னணியில் நிற்பவர்களும் அவர்கள் தான்.
20 February 2024
16 February 2024
அடேங்கப்பா: நாளொன்றுக்கு சுமார் 52 கோடி ரூபாவை சிகரெட்டுக்காக செலவிடுகின்றனர்
15 February 2024
07 February 2024
இளைஞர்களின் அரசியல் ஈடுபாடும் இலங்கையின் புதிய அரசியல் மாற்றத்துக்கான தேவையும் 2024
2022ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்பு, ஒரு மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் (18-29 வயது) பங்கேற்கும் தேர்தல் நடக்கவிருக்கும் 2024ம் ஆண்டில், நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு புதிய மாற்றத்திற்கான சாத்தியத்தை உருவாக்கியுள்ளது. இதில், இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு முக்கிய பங்கு வகிக்கக்கூடும்.
2022ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, 72% இளைஞர்கள் அரசியல் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இது 2019ம் ஆண்டில் 58ம% ஆக இருந்தது. மேலும், 2022ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் கொந்தளிப்புகளுக்குப் பிறகு, இளைஞர்கள் அரசியல் மாற்றத்திற்கான தேவையை அதிகமாக உணர்கின்றனர்.
04 February 2024
சுதந்திர நாட்டைக் காப்பாற்றும் அளவுக்குத் தகுதியான அரசியல்வாதிகள் நம் நாட்டில் இல்லை!
அப்போதும் இலங்கை அரை நிலப்பிரபுத்துவ நாடாகவே இருந்தது. 1800களின் கடைசிப் பாதியில் இந்த நாட்டில் நிலவிய நிலப்பிரபுத்துவ நடைமுறைகள் 1948ஆம் ஆண்டிலும் ஏறக்குறைய நாட்டில் அப்படியே இருந்தன.
பழைய ஏகாதிபத்திய் வியாபாரிகளின் பண பலம் அப்படியே இன்னும் இருந்தது. குடும்ப ரீதியாகவோ, பரம்பரையாகவோ இல்லாத புதுப் பணம் படைத்தவர்கள் தலை நிமிரத் தொடங்கிய அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒன்று நடந்தது. அதுதான் இந்த நாட்டில் வருமானப் பங்கீட்டு ஏற்றத்தாழ்வின் ஆரம்பம்.
01 February 2024
இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி: சாத்தியக்கூறுகள்
இலங்கை, இயற்கை அழகு, வரலாற்று சின்னங்கள், மற்றும் வளமான கலாச்சாரம் கொண்ட ஒரு தீவு நாடாகும். சுற்றுலாத்துறை இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த ஆய்வுக்கட்டுரை, இலங்கை சமூகத்தை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலா அபிவிருத்தி பற்றிய சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது.
சமூக அடிப்படையிலான சுற்றுலா என்றால் என்ன?
29 January 2024
சாவு கிடையாது சம்பந்தன் சேர்
எமது கிராத்தில் இருந்து முழு உலகத்திலும் உள்ள மாணவ மணிகளை படைத்து இன்று எமை விட்டு மீழாத் துயில்கொள்ளும் இராசையா திருஞானசம்பந்தன்(ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியர்) சேருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் முதலில்.
நான் நினைக்கின்றேன் அது 90 ஆம் ஆண்டு காலம். அப்போ அதிபயங்கரமான காலகட்டம். கல்வி என்பதே முயல்கொம்பு எங்களுக்கு. அந்த காலத்தில். அதிலும் ஆங்கிலம் கச்சி வேப்பங்காய். ஏனெனில் ஒழுங்கான ஆசிரியர்கள் அந்த நேரத்தில் கிடையவே கிடையாது. ஏதோ ஆங்கிலம் தவிர்ந்து ஐந்து பாடங்களில் சித்தியடைந்து, தத்தி தவழ்ந்து கரைசேர்ந்தாலே பெரிய விடயம் அப்போ.
15 January 2024
ஜனாதிபதிதேர்தலில் நாம் எதிர்கொள்ளவுள்ள சவால்கள்!
நாமல் ராஜபக்ச இப்போதே நாடுபூராகவும் ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள அதற்கான தெரிவுக்காக மக்களை வழிநடத்தி அதன் பின்னர் பாராளுமன்றப் தேர்தலை எதிர்கொள்ளும் தலைவர்களுக்காகவும் நாமலின் தெரிவு இடம்பெற முஸ்தீபு அமைத்து வருகின்றார்.
14 January 2024
சாபம் வேணாம் பாவமும் வேணாம்! அர்தமற்ற பாராளுமன்ற பதவியை துறக்கும் நிலை!
இந்த நா.ம.உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களில் இருவர் பாலர் வயதுடையவர்கள். எம்.பி., இரண்டு குழந்தைகளையும் பாடசாலைக்கு வழமையாக அழைத்துச் செல்வதுண்டு. அங்கு அவர் சந்திக்கும் நபர்கள் சொல்வதைக் கேட்டு அவர் மிகவும் அதிர்ச்சியடைந்தார். 'நான் சமூகத்தில் பலரை சந்திக்கிறேன். அவர்கள் அரசியல்வாதிகளைப் பற்றி பேசுவதை நான் வெட்கத்தோடு கேட்கிறேன். அவர்கள் பார்லிமென்டில் உள்ள 225 எம்.பி.,க்கள் மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.
09 January 2024
இலங்கை விவசாயமும் விலங்குகளும்: சேதமாகும் செய்பயிர்கள்
SMART FARMING முறையில், விவசாயத்திற்கு எந்த நேரத்தில் தண்ணீர் தேவை, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை கம்ப்யூட்டர் விவசாயிகளுக்கு தெரிவிக்கும். இதனால் விரயம் குறைவதுடன் விவசாயிகளுக்கு நேரமும் மிச்சமாகும். இத்தகைய முறைகளின் கீழ் பயிர் விளைச்சலை அதிகரிக்கலாம். அந்தந்தப் பருவத்தின் விளைச்சலை மதிப்பிடவும் முடியும். சில காலத்திற்குப் பிறகு, வளர்ந்த நாடுகளில் உள்ள விவசாயிகளும் இவற்றையும் தாண்டி தங்கள் விவசாய நடவடிக்கைகளுக்கு விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. இந்த நுட்பம் அனைத்தும் மிக விரைவானது.
08 January 2024
மக்களைப் பாதிக்காத வரியே மக்களை பாதுகாக்கும்!
அரசாங்கத்தின் இருப்புக்கு போதுமான வரி வருவாய் அவசியம். ஆனால் வரி வசூல் செயல்முறை குறித்து மக்களுக்கு தெளிவான விளக்கம் தேவை. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ரின் எண் கிடைக்கும், ஆனால் உண்மையில் அனைவராலும் வரி செலுத்த முடியாது. வரி கட்ட முடியாது இருப்பினும் இந்த டின் நம்பரை பெற வேண்டும் என்பது அரசின் நிலைப்பாடு.
07 January 2024
தொழில் தொடங்குவதற்கு பயத்தை எப்படி தாண்டி வருவது?
தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன?
02 January 2024
வரலாறுபடைக்கும் வரி அதிகரிப்பு பணவீக்கத்தை ஊக்குவிக்குமா?
- இந்நாட்டில் 60.5 வீதமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது.
- 91 சதவீத குடும்பங்களின் சராசரி மாதச் செலவு அதிகரித்துள்ளது.
- 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது.
- 97 பொருட்களுக்கு புதிய வற் வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் வரிவருவாய் மூன்று லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது. இது பாராட்டத்தக்கது. ஆனால், இடையில் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2023 டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 17.52 வீதம் ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளாக இல்லாத அளவு அதிகரிப்பு ஆகும்.
கலைவாணியின் கனவு
காட்சி 1:
இடம்: ஒரு சிறிய கிராமம். காலம்: காலை.
01 January 2024
புத்தாண்டில் நிகழட்டும் புதிய விடியல்
புத்தாண்டில் நிகழ வேண்டிய சில முக்கியமான மாற்றங்கள் பின்வருமாறு:
- பொருளாதார நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும். மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியும் என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்.
- அரசியல் பதற்றம் குறைக்கப்பட வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து நாட்டின் நலனில் கவனம் செலுத்த வேண்டும்.
- சமூக ஒற்றுமை மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்ற வேண்டும்.