ADS 468x60

23 November 2013

மட்டு மாவட்டத்தில் ஒட்டுமொத்தத்தில் கடந்த ஆண்டு 1102 மாணவர்கள் இடைவிலகள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக இடைவிலகும் மாணவர்கள் (339) மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் உள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த கால யுத்தம்இ வறுமை காரணமாக பின்தங்கிய கிராமங்களை அதிகமாகக் கொண்டுள்ளமை இதற்கு காரணம் என்று சொன்னால் மட்டக்களப்பின் மத்திய வலயத்துக்கு (195) என்ன நடந்தது?? 

இன்றய கல்வியில் இருக்கும் அவநம்பிக்கை இதற்கு ஒரு காரணம். எவளவோ முதுமானி வரைக்கும் படித்துவிட்டு பட்டதாரிப்பயிலுனர்ளாக இருப்பது அவர்களில் உள்ள பிழையா அல்லது அந்தக் கல்வியில் உள்ள தவறா என இன்றய தலைமுறை சிந்திக்கலாம். தொழில் தான் இன்றய கல்வியின் முதல் இலக்குமேஈ ஆனால் இந்தக் கல்வியால் அந்த இலக்கை எட்டமுடியவில்லையே என்பதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்கள் கண்முன் காட்சி தருவதும் நகர் புறங்களில் கல்வியினை தொடர முடியாமல் இருப்பதற்க்கான காரணமாக இருக்கலாம், சாதாரண தரம் முடித்தபின்பே அவர்கள் தொழில் சார் கல்வி அல்லது பயிற்சியுடன் கூடிய தொழில் போன்ற புதிய உத்திகளை கையாண்டு உழைக்கும் மார்க்கத்தினை நாடி விட ஆரம்பித்துள்ளதனைக் காணலாம்.

கல்வியை மாற்றவேண்டும் அது நடைபெறவில்லை அதனால் தானாக மாறுகின்றனர் இது இடைவிலகலுக்கு முழுக்காரணமும் இல்லைதான் ஆனாலும் பெரிய பங்கு இந்தத் தலைமுறையினரின் நியாயமான மாற்றம் புறக்கணிக்கதக்கதல்லவே!












"சமுக கலாசார சீர்கேடுகள் என்ற பேரில் வயிற்றுப்பசியாறும் ஒரு துரதிஸ்ட்ட பெயரினை எமது மாவட்டம் பெற்றுள்ளதோ"

  82,234 குடும்பங்கள் கிட்டத்தட்ட 1/5பகுதியினர் மாத வருமானமாக 1000 க்கும் குறைவாகப் பெறுகின்றமை வறுமையில் வாடுகின்றவர்களின் அதிகப்படியான எண்ணிக்கையை சுட்டிக்காட்டுகின்றது. யுத்தம் நடைபெற்ற வடக்கின் சில மாவட்டங்களில் கணவரை யுத்த அநர்த்தங்களால் இழந்த பெண்களை விடவும் பல மடங்கு அதாவது 24இ084 பெண்களை தலைவர்களாகக் கொண்ட விதவைப் பெண்களை எமது மாவட்டம் 'யுத்தமும்' 'சுனாமியும்' போட்ட சாபத்தினால் இன்னும் கொண்டுள்ளதை தகவல் சொல்லுகின்றது. 
'சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' மட்டக்களப்பின் நிலமை பௌதீக ரீதியில் சில மாற்றங்களை அபிவிருத்தி என்ற வகையில் ஏற்ப்படுத்தி இருப்பினும் மனித வலுவில் ஏற்ப்பட்டிருக்கும் மாற்றம் ஏமாற்றமே என்கின்ற தகவலை கீழுள்ள தகவல் காட்டுகின்றது.