ADS 468x60

27 November 2021

நாம் சுயமாகத் தொழில் தொடங்க ஏன் பயப்படுகின்றோம்.

நம் எல்லாவித முன்னேற்றமும் நாம் பயமின்றி எடுத்துவைக்கும் முதல் படியினிலேயே தங்கி இருக்கின்றது. பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும் இல்லையா.

நாம் ஒரு தொழிலை தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும். அது நம்மத்தியில் பலரிடம் இருக்கின்றது.

23 November 2021

கொவிட்டின் பின்னரான பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறை

கொவிட்டுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும். 

16 November 2021

டெங்கா கொரோணாவா! தடுமாறும் நோயாளர்கள்: டெங்கபாயம் கொரோணாவை மிஞ்சுமோ!

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்" இன்று இலங்கை மக்கள் என்ன சாபக்கேட்டுக்குள்ளானரோ தெரியவில்லை. கொரோணா வந்து முடியாத நிலையில் டெங்கின் ஆதிக்கம் எங்கும் பரவுகின்றது. இதுவும் ஒரு ஆட்கொல்லி நோய். இந்த அடைமழைகாலத்தில் நிச்சயம் பாரிய பாதிப்பினை இந்த நோய்ப்பரவல் தூண்டும் என்பது எம்மை விழிப்புடன் இருக்கச் செய்யவேண்டும்.

இலங்கையில் 2021 இல் மாத்திரம் இன்றுவரை 24,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் டெங்கு தொற்றுநோயின் உச்சத்தில் ஆண்டுதோறும் 100,000 நோயாளர்கள்; பதிவாகியதில் இருந்து இந்த அபாயம் வெகு தொலைவில் இருந்தாலும், கொரோணாவின் கூடுதல் பாதிப்புக்காரணமாக, இது மக்களால் பெரிதாகக் கணக்கிடப்படாத ஒன்றாக இன்று உள்ளது வருந்தத்தக்கது.

13 November 2021

அரச ஊழியர்களே இந்த நாட்டுக்கு சுமையாக உள்ளனர். ஏற்றுக்கொள்ளலாமா?

இன்று எங்கு பார்த்தாலும் பதுக்கல், தட்டுப்பாடு, விலையேற்றம், தரமற்ற பொருட்கள் என நாட்டு மக்களின் வாழ்க்கை பெரும் சுமையால் நீழ்கின்றது. இதனுள் அகப்பட்ட பலரில் அன்றாட வாழ்வாதாரத்தில் ஈடுபடுபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், தனியார் தொழில் செய்பவர்கள் ஆகியோர் முக்கியயமாகக் கருதப்படுகின்றனர். கோவிட் காலத்தில் இந்த வர்க்கத்துக்கு நிவாரணமும் கிடையாது வருமானமும் கிடையாத நிலையில் பெரும் துன்பத்தை அனுபவித்த வர்க்கத்தினர். ஆனால் எந்த அரச தொழிலில் இருந்தவர்களுக்கும் அரசு ஒரு ரூபாய் கூட குறையாமல் அவர்கள் வேலைக்கு செல்லாத சந்தர்ப்பங்களிலும் முழு சம்பளத்தினை செலுத்தி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

05 November 2021

இரசாயன உரங்கள் தேவைதானா?

இப்பொழுது எமது நாட்டில் நூறுவீத உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இரசாயன உரங்களின் பாவனையை படிப்படியாகக் குறைத்து, இயற்கை உரங்களை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி எடுத்துரைத்தார். அது பல அபிவிருத்தியடைந்த நாட்டுத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும் வரவேற்க்கப்பட்டது. தேசிய உர செயலகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், நாங்கள் ரூ.36 பில்லியன பெறுமதியான 580,000 MT மெட்ரிக் டொன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்தோம். இந்த உரத்தின் மொத்தத் தொகையில் சுமார் 50 வீதம் நெல்லுக்கும், மீதி தோட்ட பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தரவுகள் சொல்லும் செய்தி.

02 November 2021

உரத்தட்டுப்பாடு பட்டினிப் பேரழிவுக்கு வழிவகுக்குமா?

இன்று நாடு பூராவும் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைக்கான இரசாயன உரம் அல்லது சேதன உரங்களைக் அரசிடம் வழங்குமாறு கோரி வருகின்றனர். மறுபுறத்தில் அரசாங்கத் தலைவர்கள், விவசாயிகளுக்குத் தேவையானதை வழங்காமல், இரசாயன உரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். உண்மையில் எமது விவசாயிகள் இரசாயன உரத்தைக் கோருவதில் ஒருபோதும் பிடிவாதமாக இருந்ததில்லை. அவர்கள் விரும்புவது ஏதோ தமது விவசாயத்துக்கான உரம் மாத்திரமே. சேதன உரங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தினால் அதை தடையின்றி வழங்கவேண்டும் அது தற்போதைய விவசாயிகளின் போராட்டங்களுக்கு தீர்வாக அமைந்துவிடும்.