ADS 468x60

31 July 2013

கருணையுள்ளம் மட்டும்

படித்தவன்தான் இன்று

பகல் வேசம் போடுறான்-பணம்

படைத்தவன்தான் இன்று

அடுத்துயிரை கொல்கிறான்

கிடைத்தவற்றை பிரித்து

அடுத்தவர்கும் கொடுக்கும்

கருணையுள்ளம் மட்டும்

எங்களிடம் அதிகம் அதிகம்

பேஸ் புக்

என் சட்டைப்பேனைக்கு
விடுதலை கொடுத்தவன்
கண்ணீர் துளிக்கு
பெறுமதி சேர்த்தவன்

கண்டங்களுக் கிடையே
பாலம் சமைத்தவன்
சமையல் விவகாரத்தையும்
சர்வதேசத்துக்கு அறிவிப்பவன்

ஒற்றை இடைவெளிக்குள்
காதல் கணை தொடுத்தவன்
அள்ளக்கையர்களையும்
கவிஞ்ஞராக்கியவன்

புகைப்படங்களின் ஆல்பங்களை
அழ வைத்தவன்
கள்ளத் தொடர்புக்கு
சாவி கொடுப்பவன்

இன்னும் ஒன்ன நம்பித்தான்
ஐபோனும் சம்சுங்கும்
சக்கைபோடுகிறது
சொர்க்கமும் நரகமும்
நீதான் அமைத்துக் கொடுக்கிறாய்
பேஸ் புக் - நீ
புரட்சிகளின் புதிய ஆரம்பம்.

உயிர் காப்பதற்க்காக....

நிஜம் ஒறுத்துவிட்டது
அதற்க்காக பொய்கள்
விலைக்கு போகலாமா??

இன்னும் உள்ளுக்குள்
குமறுவதில் மட்டும்
வாழ்ந்து போகிறோம்.....
உயிர் காப்பதற்க்காக....

28 July 2013

தோணிதாட்ட மடுவின் சோகக் கதை....


போய்க்கொண்டே இருந்தோம் அந்த முகங்களைத் தேடி அடர்ந்த காடு, உடைந்த றோடு, விரிந்த புல் வயல் வெயிலில் காய்ந்த பயிர்போல் பல பரிதாப முகங்களைக் கண்டு சோகத்தோடு உள்ளே நுழைகிறோம்... அங்கே புதிய புதிய அனுபவங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டோம்.

20 July 2013

எட்டு உயிரை ஒரே குடும்பத்தில் பறித்து ஏப்பம் விட்ட ஆழி அலை-- நடந்தது என்ன!

கரு இருந்து தெரு வரைக்கும் சீவியங்களை பறித்து பசியாறிச் சென்ற ஆழி அலைக்கு வயசு ஒன்பது. காலங்கள் காத்திருப்பதில்லை ஆனால் அது ஞாபகங்களைத் எறிந்து விட்டு நடப்பதும் இல்லை. 26.12.2012 அன்று குப்பம் இருந்து குடிமனை வரை நீத்த உயிர்களுக்கு சாந்திவேண்டி கண்கள் பனிக்க மௌனங்கள் அஞ்சலிக்கப்பட்டன.

19 July 2013

மட்டக்களப்பின் ஆவணங்களை பாதுகாக்கும் முனைப்பு ஆரம்பம்.

ஒரு சமூகத்தின் இருப்பினை உறுதி செய்வது அதன் புராதன சுவடுகளாகும். உலகில் பல தொலைந்து போன நாகரிகங்கள் அதன் சுவடுகளை ஆதாரமாகக்  கொண்டே அதன் வரலாறு ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. இது போன்று தான் இலங்கைத் தமிழர்களின் தொன்மை வரலாறுகள், பல கால இனமுரன்பாடுகள் காரணமாக நியாயமான அளவு இழந்திருக்கின்றது. குறிப்பாக கிழக்கின் மட்டக்களப்பின்  தொன்மை, பூர்வீகம் சார்பான தேடல் அதன் பராமரிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கவில்லை என்பது கவலைக்குரியதே.

14 July 2013

சிந்துவெளி நாகரிகத்தை விஞ்சிவிட்ட கிழக்கு மக்களின் நாகரிகம்


நாகரிகங்கள் மக்களது வாழ்விடங்கள் சார்ந்து அந்த அந்த இடத்துக்கு ஏற்ப்ப தோற்றம் பெற்ற ஒரு விடயமாகும். மக்களது சமுக வளர்ச்சி அந்த நாகரிக பரிநாமத்தில் பூத்துக் குலுங்கும் ஒன்றாகும். உலகில் தலை சிறந்த விரல் விட்டு எண்ணக்கூடிய நாகரிகங்களுள் சிந்து நாகரிகம் போற்றுதற்க்கு உரியதாகும். இவர்கள் இயற்க்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தனர், இயற்க்கையை நேசித்தனர், இயற்க்கைக்கு பயந்து இயற்கையை வணங்கினர். சிந்து நதி வறட்சி நிலப்பகுதியைச் சேர்ந்த ஒரு காட்டாறு. வெள்ளம் பெருகி வரும் போது படுகைளில் வண்டல் படியும். செடி, கொடி, புதர்களை வெட்டிப் போட்டுத் தீ மூட்டுவார்கள். பின்பு ஆடு மாடு, ஒட்டகங்களை படுக்கப் போடுவார்கள். அவை படுத்து எமுந்த பகுதிகளில் விதைகளைத் தூவி விளைந்த வற்றைச் சேமித்துக் கொள்வார்கள். உலகில் சிந்து நதி தீரத்தில் மட்டுமல்ல பாரசீகப் பகுதிகளில், இன்றய ஈரான், ஈராக் நீல நதிக்கரை(எகிப்து) இல் கூட இப்படித்தான் நாகரிகம் வளர்ச்சி கண்டது. 

07 July 2013

கண்ணே கண்ணே மட்டு மண்ணே !!

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

தேனே தேனே எங்கும் விளையும் காடு
தென்றல் உலவும் வீடு
மீன்கள் பாட்டிசைக்க மான்கள் அசைந்தோடும்
மேனி அழகு நாடு- வாவி பழகும் பாரு

மெது மெதுவாக சூரியனும்
மேகத்தினூடே விரிகிறதே
எதுவந்த போதும் எமக்கெனவே
எதிர்காலம் கண்ணில் தெரிகிறதே

சாந்திகெட சத்தமிடும்
சமுகத்தை மேடையில் தூக்கிடுவோம்
ஏந்திநிற்கும் கரங்களெல்லாம்
ஏர்பிடிக்கும் கரம் ஆக்கிடுவோம்
திருநாள் வருநாள் தெரிகிறதே

கண்ணே கண்ணே மட்டு மண்ணே உன்னை
காதல் செய்வதென்ன- இன்னும் காதல் செய்வதென்ன
காலம் மறுகரையில் என்னை சேர்த்தாலும்
காவல் செய்வதென்ன –உன்னை காவல் செய்வதென்ன

06 July 2013

புற்றுநோயை இல்லாதொழிப்போமா- கரம் கொடுக்கும் கரங்கள்

மட்டக்களப்பில் முன்னிலை வகிக்கும் அடையாளங் காணப்பட்ட பாரிய இடர்களில் அதிகரித்து வரும் புற்றுநோயாளர்கள் ஒரு அச்சத்துக்குரிய சவாலாகும். ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட புற்றுநோயாளர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அடையாம் காணப்பட்டுள்ளனர், அதில் அவர்களின் புற்று நோயை அடையாளங் காண்பதற்கு முடியாமல் வருடாவருடம் அதிகளவான நோயாளர்கள் கல்முனைக்குடி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை, மகரகமை புற்றுநோய் சிகிச்சை நிலையம், கண்டி போதனா வைத்தியசாலை, யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் காலி போதனா வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு அவர்கள் புற்றுநோயினை கண்டறிவதற்க்காகவும், மேலதிக சிகிச்சைக்காகவும் அனுப்பிவைக்கப்பட்டு வந்தனர்.