அறிமுகம்.
எமது நாட்டைப்போன்று உலகில் வளர்ந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் முக்கிய இருபெரும் பிரச்சனைகளாவன கொடிய வறுமையும், பெருமளவு வேலையின்மையும் ஆகும். இவைகள் ஒன்றோடொன்று தொடர்புடையன. மக்களுக்கு வேலையின்மை காரணத்தினால், வருமானம் ஈட்ட முடியாமல் ஏழ்மை நிலையிலேயே வாழ்ந்துவருகின்றனர். வேறுசிலர் வேலை செய்தும் ஏழ்மை நிலையிலேயே உள்ளனர். பல நூற்றாண்டுகளாக இலங்கையில்; வறுமைநிலை நிலவி வருகிறது. அரசு கொண்டுவந்த பல நல்ல திட்ட காலங்களில்; வறுமை குறைப்பு முக்கியமான இலக்குகளுள் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த ஏழை, எளிய மக்களைப் பற்றியும், அவர்களது சமூக மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைப் பற்றியும் நாம் அறிந்திருத்தல் வேண்டும். அப்பொழுது தான் அரசு திறமையான வறுமை ஒழிப்பு கொள்கைகளை மேற்கொள்ள முடியும்.