ADS 468x60

30 January 2011

ஓ அழகிய தீவே!

இன்று திறந்த வெளியாகி இருக்கும் இலங்காபுரியின் அழகிய தழிழ் வாழிடங்களை நோக்கிய சுற்றுலாப்பிரயாணிகளின் படையெடுப்பு 2009 யுத்த முடிவிற்கு பின்னர் அதிகரித்த வண்ணமிருக்கின்றது. இலங்கையின் வருமான மார்க்கங்களில் குறிப்பிடத்தக்க துறையாக வளர்ந்து இருக்கும் சுற்றுலாத்துறை மூலமாக கணிசமான வருமானம் இந்நாட்டின் தேசிய வருமானத்தில் பங்களிப்புச் செய்வதனை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. 

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரந்து விரிந்து காணப்படும் நீர் நிலைகள், கடல் ஏரிகள், வயல் வெளிகள் மற்றும் மலை முகடுகள் போன்ற இன்னோரன்ன இயற்கையழகு மற்றும் தழிழ் மணம் மாறாத பண்பாடு, புன்சிரிப்போடு வந்தோரை வரவேற்று விருந்தளிக்கும் விருந்தோம்பல் என்பன எல்லோரையும் ஈர்க்கும் ஒன்றல்லவா. இதனால் படையெடுக்கும் சுற்றுலாப்பிரயாணிகள் மூலம் இங்கு காணப்படுகின்ற மக்கள் கிடைக்கும் உள்ளூர் வளங்களை வைத்து வருமானங்களை ஈட்டி வரும் அதே நேரம் பல சீர்கேடுகள் வளச்சுரண்டல்கள் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கதல்லவா.

யுத்த காண்ட முடிவும் படையெடுப்பும்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏ9 பாதை திறப்புக்குப் பின்னரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகளின் விருப்பம் யாழ் தீவகப் பிரதேசங்கள் நோக்கி திரும்பியுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. நாள்தோறும் 500 க்கும் மேற்ப்பட்டவர்கள் இங்கு, தரை, வான் மற்றும் பெரி மார்க்கமாக இந்த அழகிய தீவை பார்வையிட வருகின்றனர், இது அதிகரித்த வண்ணமுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றது. இந்தச் சுற்றுப்பிரயாணிகள் அங்கு காணப்படும் நெஞ்சை அள்ளும் ஆலயங்கள், புராதன இடங்கள், வனவிலங்குகள், கடைத் தொகுதிகள், உணவுகள், நூல் நிலையங்கள், மக்கள் வாழிடங்கள், யுத்தத்தின் சிதைவுகள், கடலேரிகள், தீவகப் பகுதிகள், கடற்கரைகள் கலாசார விழுமியங்கள் என்பனவற்றை பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலீட்டாளர்களில் முனைப்பு..
சுமார் 17 கெஸ்ற் கௌஸ்கள் 11 உல்லாச விடுதிகள் என்பன ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிடத்தக்களவான நட்சத்திர கொட்டேல்கள் இல்லை என்கின்ற இடை வெளியை நிரப்புவதற்கு முதலீட்டாளர்கள் அவசர மதிப்பீட்டினை செய்து வருவதுடன் இத்துறையில் முதலீடு செய்ய பல தனவான்கள் முன்வந்துள்ளமை வரலாற்றில் ஒரு மைல்கல்லாகவே கருதப்படுகின்றது. இத்தனைக்கும் தலை வாசலாக நல்லூர் கந்தன் முருகன் ஆலயமே திகழுவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மூன்று தசாப்த கால யுத்த காலத்தில் யாராலும் உரசிப்பார்க்க முடியாமல் இருந்த வளம் கொண்ட பச்சைக் கம்பளமான இந்த வளத்தை பயன்படுத்தி உல்லாசப்பயனிகளை உறிஞ்சி எடுக்க உகந்த இடமென முதலீட்டாளர்கள் கண்ணில் எண்ணையை விட்டு கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். இதன்மூலம் உள்நாட்டு உற்ப்பத்தி அதிகரிப்பதுடன் (அழகு சாதனப் பொருட்கள், பனம் உற்ப்பத்திப் பொருட்கள், உணவுப் பண்டங்கள்) அந்நியச் செலாவணியை அதிகரித்துக் கொள்ளுவதுடன் உள்ளூர் மக்களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கும் சந்தர்பமும் எதிர்வு கூறப்பட்டுள்ளது இதனால் தலா வருமானம் அல்லது ஆழ்வீத வருமானம் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த தொலை நோக்கங்களை மையமாகக் கொண்டுதான் இலங்கை சுற்றுலா சபை பெரியளவில் இத்துறையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் சாவகச்சேரி கடற்கரை சூரியக்குளியலுக்கு உகந்த இடம் அதுபோல யாழ் நீர் ஏரிகள், இயற்கையின் பசுமை, தீவகப் பிரதேசங்கள் இவை உலக மக்கள் அனைவரையும் ஈர்கும் ஒன்றாகும். அத்துடன் எல்லா மக்களும் பயன்படுத்தும் படியான போக்குவரத்து வசதிகள் எல்லாப் பகுதிகளுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பது இங்கு வரும் மக்களிடையே நம்பிக்கையையும் விருப்பத்தினையும் ஏற்ப்படுத்தியுள்ளது.

நெஞ்சையள்ளும் குடாநாடு..
குறிப்பாக இந்த சுற்றுலா பிரயாணிகள் விரும்பி வருகின்ற இடங்களாக நல்லூர் முருகன் கோயில், செல்வச்சன்நிதி முருகன் கோயில், நயினை தீவு நாகபூசணி அம்மன்னோயில், நாகவிகாரை, யாழ் நூலகம், கீரிமலை சிவனாலயம் மற்றும் மாவிட்டபுரம் கந்தஸ்சுவாமி ஆலயம் என்பன அழகு மிளிரும் இடங்களாகும்.

ஆடிப்போகும் கலாசார மாற்றம்..
இவ்வாறு வசீகரமாக இருக்கும் இடங்களை நோக்கி வருகின்ற வகை தொகையில்லாத மக்களின் தங்குமிடம், உணவு, குடிநீர் என்பனவற்றை எவ்வாறு சமாளிப்பது என்கின்ற கேள்வி இருக்கின்றது. குறிப்பாக நைநாதீவுக்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கான போதிய நீர் இல்லாமை காணப்படுவதனால் வேலனையில் (லைட்டன் தீவு) இருந்து நீர் கொண்டுவரப்படுகின்றது. அத்துடன் இங்கு வருகின்ற மக்களிடம் பொலித்தீன் பாவனையை நிறுத்த சொல்லியும் அது முடியாமல் உள்ளதால் நீர்நிலைகள், ஆலயங்கள் எல்லாம் அசுத்தமாகவே காணப்படுவதனைக் காணலாம். அத்துடன் மலசல கூடவசதியும் இத்தனை மக்களுக்காக வசதி செய்யப்பட்டு இல்லை ஆதலால் புனிதப் பிரதேசங்கள் புனிதம் கெட்டுபடபோவதனைக் காணக்கூடியதாக உள்ளது.

இதன் காரணமாக நோய் பரவும் எச்சரிக்கையும் (பண்டிக்காய்சல், பறவைக்காச்சல்) அடிக்கடி விடப்படுவதும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது தவிரவும் இதனை தடுத்து உதவுவதற்க்கான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதும் குறைவாகவேயுள்ளது. இதற்கும் அப்பால் கலாசார சீர் கேடுகள் தலைதூக்க துடங்கியுள்ளமையும் இம்மக்களது பாரம்பரிய விழுமியங்களை கேள்விக்குள்ளாக்கி வருகின்றமையும் குறிப்பிடதடதக்கது.

ஆகவே என்னதான் வருமானம் வரத்தொடங்கினாலும் எங்கள் தமிழ் மக்கள் கட்டிக்காத்து வருகின்ற கலாசாரம், பண்பாடு, அணுட்டானம் என்பனவற்றை என்ன விலை கொடுத்தும் வாங்க முடியாது, அவை அழிந்தால் அழிந்ததுதான் ஆகவே எங்களை நாங்கள் பாதுகாத்து எமது பண்பாடுகள் கலாசாரங்கள் அற்ப்ப சொற்ப்ப விடயங்களுக்காக விலைபோக விடாது பாதுகாக்க வேண்டியது எமது கடமையே அல்லாது இன்னொருவருடையதல்ல.

28 January 2011

தமிழ்ச்சங்கத் தலைவரிடம் ஒரு முறைப்பாடு...

மட்டக்களப்பு தமிழ்ச்சங்கம் ஒட்டு மொத்தமும் தேத்தாத்தீவில் தமிழ் ஒன்றுகூடலில் சங்கமித்த 25.01.2011 புதன் அன்று நம்மை விட்டு அகன்றும் அகலாத ஒரு மகான் நினைவுகூரப்பட்ட நன்நாளில் சில குறை நிறைகள் தமிழை வளர்த்துச் செல்வதில் அறிஞ்ஞர்களால் விவாதிக்கப்பட்ட சுவாரசியமான சில விடயங்களை பகிரலாம் என்று இந்தப் பதிவு வருகிறது. இந்நிகழ்வுகள் அனைத்தும் எல்லோரையும் கவரும் வகையில் வித்தியாசமாக ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  (தமிழ் ஒன்று கூடலில் அகமகிழ வைத்த அகழ்விளக்கேற்றல் )
ஓன்று தமிழ்ச்சங்க கட்டிடம் கட்டுதல் என்ற விடயம், இந்த விடயத்துக்கான நிலம் மற்றது மாநகர சபையின் அனுமதி என்பன பெறப்பட்டு அதற்க்கான பூர்வாங்க வேலைகள் நிறைவு பெற்றிருப்பது வித்துவான் செபரட்ணம் அவர்களால் அனைவருக்கும் அறியத்தரப்பட்டது. அது போன்று இது சம்மந்தமாக பேராசிரியர் செல்வராசா அவர்கள் பேசுகையில் அங்கு தமிழ் ஆய்வரங்கம், மற்றும் பூராடனார்போன்ற பெருமக்களின் நூல் ஆய்வரங்கு, விருதறிவித்தல் என்பன கட்டடம் திறந்ந பின்னர் செம்மைப்படுத்தவேணும் என்றும் சொல்லப்பட்டது.

இன்னொரு விடயம் அங்கே காரசாரமாய் விவாதிக்கப்பட்டது, மூத்த ஊடகவியலாளர் பேரின்பராசா அவர்கள் 'எமது கிழக்குப் பல்கலைக்கழகம் மூத்த கலைஞர்களை பல்கலைக்கழக மட்டத்தில் பாராட்டுவதில் ஏனைய பல்கலைக்கழகம்போல் செயற்ப்படவில்லை' என்றும் அவர்கள் புறக்கணிக்கப்படுவதனால் எவ்வாறு தமிழை வளர்த்துச் செல்வது, ஊக்குவிக்கப்படும் என்றும் வினா எழுப்பினார். 
                                           (பதில் கூறும் பேராசிரியுர் ச.செல்வராசா கி.ப.க)
அதற்கு பதில் இறுத்துப்பேசிய கிழக்குப்பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியரும் அங்கு பட்டம் வளங்குவதற்க்காக நியமிக்கப்பட்டிருக்கும் குழுத்தலைவருமான செல்வராசா அவர்கள் கூறுகையில் 'இவ்வாறான கௌரவிப்பு நடைமுறைகள் முறையாக ஒழுந்கமைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அவற்றை அறிந்து அதனூடாக செயற்ப்படுகின்றவர்கள் சிலரே என்றும் அதற்கு அறிஞர்களின் அசண்டையீனமான போக்கே காரணமாகும் என்றும் கூறினார்;. கலைஞர்கள், அவர்களின் ஆக்கங்களை உபவேந்தர் ஊடாக இந்த பட்டமளிக்கும் செயற்குழுவுக்கு முறையாக அனுப்பிவைக்கவேண்டும்; என்றும,; அதன்பின் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த கௌரவிப்பு வளங்கப்படும்' என்றும் உறுதிபடக் கூறினார்.
                               
தவிரவும் ஈழத்துப்பூரடனார் பெயரில் கலை கலாசார மண்டபங்கள் திறந்து அவரை வருடா வருடம் நினைவுகூரப்படவேண்டும் என்றும,; அவரது பலநூற்றுக்கணக்கான நூல்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், அன்நினைவுகூரலில் எம் கனடாவாழ் தமிழ் உறவுகளின் பண மற்றும் மன உதவியுடன் செம்மையாக நடந்த பல்கலைக்கழக மாணவர் பாராட்டு மற்றும் பரிசு வழங்கிக் கௌரவிக்கின்ற நிகழ்வுகள் போன்ற பயனுள்ள இன்னோரன்ன நிகழ்வுகளும் எல்லோரையும் ஒரேகூரையின்கீழ் இணைத்த வகையில் எடுத்துச் செல்லவேண்டும் என்றும் வித்துவான் செபரெட்ணம் அவர்களால் அறைகூவப்பட்டது குறிப்பிடும்படியாய் இருக்கிறது.

அவர்மேலும் வினயமாக ஒன்றைக் கேட்டுக்கொண்டார் அதாவது இச்தமிழ்ச்சங்கத்தினில் அனைத்து தமிழ் ஆர்வலர்களும் இணைந்து கொண்டு எம்தமிழை வளர்த்துச் செல்லவேண்டும் என்றும் அதற்க்காக சந்தாப்பணம் செலுத்தி இதில் சேரவிரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்றும் வேண்டுகோள் விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் தமிழ் செம்மொழியானது கால தாமதம் என்றாலும் இப்போதாவது சுடுர்விடுகிறதே என்ற மகிழ்ச்சியில் உள்ளனர் உலகத் தமிழர்கள். உலகத்தின் தலையாய மொழிகளில் ஒன்றாக திகழும் நம் தாய் மொழிக்கு பெருமை சேர்க்கும் நினைவுப்பேருரை மேலும் ஒரு மகுடம் சூட்டுவதற்குச் சமம். எத்தனையோ பெருமைகளை தலையில் சுமந்து நிற்கும் தமிழுக்கு, மட்டக்களப்பு அறிஞர்கள் சூட்டும் இந்த மணிமகுடம் மேலும் ஒரு பெருமையாக அமையட்டும்.

ஓலைச் சுவடிகளில் உருண்டு புரண்ட தமிழ் இன்று கம்ப்யூட்டர் திரைகளில் ஜாலம் காட்டும் காலத்திலும் நளினம் குறையாமல், நவீனம் மறுக்காமல், பாரம்பரியத்திற்குப் பங்கம் வராமல் தொடர்ந்து பரவசம் காட்டி வருவது தமிழுக்குள்ள மகா சிறப்பு. இதை நாங்கள் இன்று கட்டிக்காக்க தொடங்கியிருக்கிறோம்.

ஆக ஒட்டுமொத்தத்தில் ஈழத்துப்பூராடனார் ஒரு தமிழ் வித்து அவர் இட்ட வித்துகள் முளைக்கத் தொடங்கி இருக்கின்றது இதற்கு நீரூற்றி வளர்த்து அது அனைத்து தமிழ் மக்ககுக்கும் ஒரு நிழல் விருட்சமாக்குவது எமது ஒற்றுமையான ஒருமித்த செயற்ப்பாட்டிலதான்; தங்கி இருக்கின்றது அல்லவா?

தமிழால் வாழும் நாம் நம் செம்மொழிக்கு பெருமை சேர்த்தவர்கு எடுக்கப்படும் விழாவை வாழ்த்துவோம்,  அக மகிழ்வோம்.
நிகழ்வின் படங்கள்

காத்திருக்கிறேன் ..

காத்திருக்கிறேன் -என்
கனவு நனவாகுமென்று,
கல்வி பயின்றொழியுமென்று,
வேட்டுப்போல் போகும்
போட்டி உலகில்
வேலை கிடைக்கும் என்று,
பூட்டி வைத்த என் இதயத்தை
சேர்த்து விடவேணும் என்று,

ஆனால்,
திகதி குறித்த என்
மரண ஓலை மட்டும்
காத்திருக்காமல் கிடைக்க
உயிரோடு இருந்தும் செத்தவனாக,
உலாவருகின்றேன்......

26 January 2011

யார் பெறுவார் இந்த அரியாசனம்...

 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்ப்பவர் யார்?'
கிடைக்கின்ற பெருமைக்கு பின் பல உழைப்பு இருக்கும் என்பார்கள் அதற்கமைவாக கோடியில் ஒருவராய் மறைந்தும் மறையாமல் இன்றும் தழிழை உலகெங்கும் மணக்கவைத்து மக்களின் மனதில் நிற்கும் ஈழத்துப் பூராடனார் கலாநிதி சு.தா. செல்வராச கோபால் அவர்கள் போற்றப்படவேண்டியவர். தமிழை அறிந்து ஆய்ந்து அதன் சுவையை நுகர எத்தனையோ மேலைத்தேயவர்கள் எமது கீழைத்தேயம் நோக்கி வந்து தமிழ் பரப்பினர். ஆனால் கீழ்த்தேசத்தில் இருந்து அதுவும் ஈழத்தின் கீழைத்தேயமான மட்டக்களப்பிலிருந்து மேலைத்தேயத்தை தமிழால் அலங்கரித்த பெருந்தகை இவர் என்றால் அது மிகையாகாது. 

இப்படிப்பட்ட மகான் போற்றப்படவேண்டியது அதுவும் அவர் வாழ்ந்த மண்ணான தேத்தாத்தீவில் பாராட்டப்பட வேண்டும் என்ற அவாக்கொண்ட மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க தேற்றாத்தீவு கலை இலக்கிய மன்றத்தினரின் ஏற்பாட்டில் 26.01.2011 அன்று மட்/சிவகலை வித்தியாலய கலை மண்டபத்தில் பிற்பகல் 03.30 மணியில் இருந்து 6.00 மணிவரையும் ஒரு தமிழ் ஒன்றுகூடலாக இது நிகழ்த்தப்பட்டது. (முதலில் அவரது வீட்டில் நிகழ்வு ஒழுங்குபடுத்தப்பட்டது பின்னர் மழைகாரணமாக  இடமாற்றப்பட்டது) இந்த நினைவுப்பேருரையுடன் தேற்றாத்தீவில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை (2009க்கு முன்னர் தற்போது பல்லைக்கழக மாணவர்களாக இருப்பவர்களுக்கு) பரிசு வழங்கிப் பாராட்டுகின்ற நிகழ்வும் கனடா வாழ் எமது தேற்றாத்தீவு மக்களின் அனுசரணையுடன் இனிதே நடந்தேறியது.

இது மண்முனைத் தென் எருவில் பற்று கலாசார பேரவையின் செயலாளர் இரா .கோபாலபபிள்ளை அவர்களின் தொடக்கவுரையுடன் ஆரம்பமானது. இந்நிகழ்வை சிறப்பித்த பெருந்தகைகளாக விழாவை அலங்கரித்தவர்கள் வித்துவான் தமிழ் ஒளி க.செபரெத்தினம், பேராசிரியரும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவருமான ச.செல்வராசா, மற்றும் கலாபூசணம் ஆ.அரசரெத்தினம், மூத்த எழுத்தாளர் அன்புமணி, ஊடகவியலாளர் செ.பேரின்பராசா, கலாபூசணம் பெ.ஆறுமுகம், திரு.வ.திருநாவுக்கரசு, மட்/தேற்றாத்தீவு மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மட்டக்களப்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊர்மக்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் இந்நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது...

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிப்பாளையம் என்ற ஊரில் சாமுவேல் கதிர்காமத்தம்பிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாகப் பிறந்த ஈழத்துப் பூராடனாரின் இயற்பெயர் சு. தா. செல்வராசா கோபால். தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளில் நல்ல புலமை பெற்றவர்.  இவர் துணைவியார்  பசுபதி அம்மா இருவரும் ஆசிரியர்களாக இலங்கையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள். இலங்கைக் கலவரத்திற்குப் பிறகு 1983 அளவில் இவர்கள் கனடாவில் குடியேறினர்.

அவரின் ஒரு அழகிய கவிதை....
குளங்களிலே சேற்று மணம்
குலைகளிலே காற்று மணம்
களப்பினிலே கதகதென்று கவியொழிரும் கழனி மணம்
வளம் மிகுந்த வயலினிலே வைக்கோலின் வரண்ட மணம்
அளவாக வளர்பூக்கள் அமைவாலே ஆகுமணம்
கடற்கரையில் ஒதுங்கு சிற்ப்பி கரைதட்டி சுண்ட மணம்
பகல் பாம்பு வம்மிப்பூவாய் பள்ளயத்து பந்தி மணம்
தெருக்களிலே புது வித்துக்கள் எழுந்து வீசும் மணம்
வருக்கனொடு தேன்வதைகள் வாழைபலா கமுகு தெங்கு
உருக்கொண்ட பாவையரின் உடுபுடவை உகந்த மணம்
கருவோடு குழந்தைகளின் கலையோடு கலந்த மணம்
இத்தனையும் கலந்த மணம் இயல் மட்டக்களப்பதிலே
சுத்தஇசை மீன் மகளின் சுதியூட்ட இருபாங்கும்
முத்தமிழின் கூத்தொலியும் முரல்பாயும் மண்வாசனை 
வித்தக பேச்சுவளம் விழங்கு தழிழ் வாசனையே..
இத்தனை பெருமையா எங்கள் திருநாட்டினுக்கு என வியக்கும் கவிஞன், கட்டுரையாளன் ஆய்வாளன், எழுத்தாளன், அச்சுக்கலைஞன் ஒட்டு மொத்தத்தில் இவர் ஈழத்துப் பன்முகத்தமிழ் அறிஞர் என இங்கு பறைசாற்றப்பட்டார்...
(பேராசியர் ச.செல்வராசா நினைவுப் பேருரையாற்றுகையில்)
இவர் பெருமை உங்களுக்கு தெரிந்தாலும் இவர் வழியில் செல்ல என்ன செய்யவேண்டும் என்ற வினாவுக்கு விடையிறுத்த பெருந்தகைகளுள் பேராசியர் செல்வராசா குறிப்பிடுகையில் இந்த மகான் விபுலானந்த அடிகள் போன்று போற்றப்படவேண்டய பெருந்தகை என்றும் இவர் பேரில் கலை மண்டபங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், விருதுகள் வருடா வருடம் கொடுக்கப்படவேண்டும் என்றும் இவரது நூல்களை பல்கலைக்கழக மட்டத்தினில் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் அது முதுமாணி, கலாநிதி பட்டத்தை தொடர்பவர்களுக்கும் கொடுக்கப்படவேணும் என்று விதந்துரைத்தமை அவரின் புகழை காட்டுகின்றதல்லவா..
(கலை நிகழ்வில் கலைஞர்கள்)
இதுக்கும் அப்பால் இந்நிகழ்வு தமிழ் பண்பு நடை, உடை பாவனை தமிழ் வாசனை மாறாமல் இருக்கும் அழகான தேற்றாத்தீவு களரியில் நடத்தப்பட்ட முறை , பலரையும் மூக்கில் விரல்வைத்து வியந்து பாராட்ட வைத்தமை மீண்டும் ஒருமுறை கலையூர் என்பதனை பறைசாற்றி இருக்கின்றது தேனூர்.  இந்நிகழ்வுகளை மேலும் மெருகூட்ட செவிக்கு விருந்தாக பல கலை நிகழ்வுகள் இடையிடையே படைக்கப்பட்டமை மட்டக்களப்பின் மண்வாசனையின் நீள அகலங்களை வரையறுத்துக் காட்டியது. அதுபோல் இந்நிகழ்வை அழகாக தொகுத்து வழங்கிய ச.இன்பராஜனையும் இந்த இடத்தில் நினைவுகூர விரும்புகிறேன்.
(பல்கலைக்கழக மாணவர்க்கான பரிசு வழங்கலும் கௌரவிப்பும்)
இத்தனைக்கும் மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தின் பிரசன்னம் எமக்கெல்லாம் பூரிப்பைத்தந்தது, அவர்கள் தமிழ்ச்சங்கத்தை நிறுவ காரண கர்த்தாவாக உந்து சக்தியாக இருந்தமைக்கு இவரே (ஈழத்துப்பூராடனார்) மூலகாரணம் என வித்துவான் அவர்கள் பெருமைபடக் கூறியதுடன் இந்நினைவுப் பேருரை இவ்வளவு அழகாய் ஒழுங்கமைத்த தேத்தாத்தீவு மக்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
(தமிழ்வாழ்துப்பா பாடும் தேத்தாத்தீவு மகாவித்தியாலய மாணவிகள்)
இங்கு தேத்தாத்தீவின் புகழ்கீதம் பல்கலைக்கழக மாணவர்களால் பாடப்பட அதே போன்று நிகழ்வின் இறுதியில் தமிழ் வாழ்த்துப்பா பாடப்பட்டு நன்றியுரையுடன் இந்நிகழ்வு இனிது முற்றுற்றது.

தன் கைகளைக் கொண்டு செயல்படுகிறவன் தொழிலாளி, தன் கைகளோடு மூளையையும் கொண்டு செயல்ப்படுகிறவன் கைவினைஞன் ஆனால் தனது கைகள் மூளை இவற்றுடன் இதயத்தையும் கொண்டு செயல்படுகிறவனே கலைஞன் அப்பேர்பட்ட கலைஞன் மறைந்தாலும் தமிழர்களின் மனதில்  உட்காந்து இருக்கும் இந்த அரியாசனம் யார் பெறுவார்.??

"வாழ்க தமிழ் வளர்க தமிழ்"

25 January 2011

அலட்டாகிய ஆறுமுகத்தான் குடியிருப்பு...

இலங்கையில் நதிகள் மிகையாகப்பாயும் நாடு என்ற பெருமை மட்டக்களப்புக்கே சாரும்... அந்த வகையில் அண்மைய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 14 பிரதேச செயலகப்பிரிவுகளில் ஏறாவூர்பபற்றும் ஒன்றாகும். இங்கு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு, ஆற்றங்கரை ஓரமாக மயிலம்பாவெளியில் இருந்து வாழைச்சேனை நோக்கி வருகின்ற வளியில் இருக்கிறது. இங்கு வாழுகின்ற அனேகம் மக்கள் மீன்பிடி, கமம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது...

 இக்குக்கிராம மக்கள் வெள்ளத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டு வெந்து நொந்து இருக்கின்றமை அறியக்கிடக்கிறது. நேற்றைய தினம் அதாவது 24.01.2011 அன்று பெரியதொரு ஆர்ப்பாட்டப்பேரணியினை தங்கள் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கு எதிராக மேற்கொண்டனர்..

பெண்கள் அதில் வெந்து நொந்து கோபாவேசத்தோடு நின்றதை காணக்கூடியதாக இருந்தது.. பதாதைகளில் ஆறுமுகத்தான் குடியிருப்பின் பாராமுகம் ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. ஒரு கணம் வீதியில் சென்ற வாகனங்கள் இருமருங்கும் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இவர்கள் இந்நிலமைக்கு றோட்டில் எம் இனத்தினை கொண்டு விடும் அளவுக்கு புறக்கணிக்கப்பட்டுள்ளார்களா??? அல்லது இவர்கள் வேலையில்லாமலா றோட்டில் இந்த அற்ப்ப சொற்ப்ப நிவாரணங்களுக்காக துவம்சம் பண்ணுகிறார்கள் என்ற கேள்வி என் மனத்திரையில் இழையோடியது, 

பாவம் இம்மக்கள்... எல்லோரும் இன்நாட்டு மன்னர்கள் என்பது சும்மாவா???

24 January 2011

ஏன் இந்த மௌனம் அம்மா ஏழை எமக்கருள?

அண்மையில் ஏற்ப்பட்ட வெள்ளத்தின் வடு இன்னும் காயாத ஓயாத நிலையில் புதிதாய் எழுந்திருக்கும் சந்தேகங்கள் மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் ஒரு நிலையினைத் தோற்றுவித்துள்ளது. ஏற்ப்பட்ட பெரு வெள்ளத்தினால் அரிசிக்கு விலை அதிகரிக்கும் என்னும் ஒரு கதை அடிபடத்தொடங்கியது உண்மை. கிட்டத்தட்ட இலங்கைக்கான நெல் உற்பத்தியின் பாதிக்குமேல் கிழக்கிலங்கையில் இருந்து விளைவிப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இச்செய்தி பற்றிய உன்மை இலங்கை விவசாய அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது திருப்தி தருகின்ற ஒன்றாகும்.
அதாவது அரிசிக்கான விலை அதிகரிக்கப்படமாட்டாது என்றும் அதற்க்கான முன்னேற்ப்பாடாக நெல் சந்தைப்படுத்தும் சபையில் நெல்லை சேமித்து வைப்பதற்க்காக 5 பில்லியன் ரூபாய்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன் ஒருகிலோ நெல் ரூபாய் 30 கு கட்டுப்பாட்டு விலையிலேயே விற்க்கப்படும் என்றும் குறிப்பிட்டார்..

வெள்ளநீர் வடியத்தொடங்கி இருப்பதனால் பொலநறுவை போன்ற பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர்ந்து வருகின்றனர் என்றும், அவர்கள் மீளவும் மாரிப்போகச் செய்கை பண்ணுவதற்க்கான அரச உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றதெனவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். இவர்களுக்கான விதைநெல், மற்றும் நிலப்பண்படுத்துதலுக்கான உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அது போன்று அவர்களுக்கான மின்கட்டனம் அறவிடப்படுவதில்லை என்ற தீர்மானமும் நன்மையளிப்பதாகவே இருக்கின்றது. அத்துடன் பெய்த மழை வெள்ளத்தில் அனேகமான குளங்கள் நிரம்பி இருக்கின்றமையினால் இப்போகச் செய்கைக்கான நீர் பாய்சல் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த வெள்ளத்தின்போது வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய இலங்கையில் பெருமளவு விவசாயம் செய்யும் 10000 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக 12,000 க்கும் அனேகமானவர்கள் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 8000 பேர் வரை அம்பாரை மாவட்டத்தினில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிப்பீட்டின்படி அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் பாதிப்பு மொத்த விவசாயத்தில் 10 விகிதம் என்றும் மட்டக்களப்புக்கான மதிப்பீடு இன்னும் நிறைவு பெறவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் கணிப்பீடு இதுவரை இடம்பெறாமல் இருப்பது இம்மாவட்டத்தின் மீதான பாரிய இழப்பை சொல்லுகின்ற அதே சமயம் இங்கு மக்ககளை கவனிக்க யாரும் இல்லாத சூழல் உள்ளதோ என்ற அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இன்னும் பட்டகாயம் ஆறாத பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணப்பணிகள்கூட ஒழுந்கான முறையில் வழங்கப்படாமல் அரச உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிலரின் அசமந்தபோக்கு காணப்படுகின்றமை தமிழ் மக்களின் சாபம் என்பதா அவர்களின் பாவம் என்பதா சொல்லத் தெரியவில்லை. இதனால் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பொலிகள் ஆங்காங்கே கிளம்பத்தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏனைய மாவட்ட மக்கள் கவனிக்கப்படுவதபோல் மட்டக்களப்பு மாவட்ட மக்களும் இன்நாட்டு மக்களாக கவனிக்கப்படுவதில் பின்னிப்பதற்கு யார்தான் காரணமோ?

23 January 2011

கதரின் வராக்கின் வருகையும் காத்திருக்கும் மக்களும்..


தற்போதைய அனர்த்த முகாமைத்துவ மையத்தின் தகவலின் பிரகாரம் 43 பேர் அண்மைய வெள்ளத்தில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் உயிர் இழந்துள்ளதோடு ஒரு மில்லியனுக்கும் மேலாக மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்று கூறப்பட்ட நிலையில், பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளரும், ஐ.நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தற்போதய பிரதி அவசர நிவாரண இணைப்பாளருமான கலாநிதி கதரின் வரக் அவர்களின் இலங்கை நோக்கிய விஜயம் ஒரு திருப்பு முனையாகவும் அதேநேரம் திருப்தியளிப்பதொன்றாகவுமே இருக்கின்றது.

 குறிப்பாக இவர் அண்மையில் வெள்ளத்தினில் அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களான வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு அங்கு வெள்ளத்தினாலும், 2009 மே மாதம் வரை இடம்பெற்று வந்த யுத்த அனர்த்தத்திலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்டதோடு அங்கு கடமையாற்றும் அரச அதிகாரிகள் மற்றும் ஐ.நா அமைப்பினரை சந்தித்து வெள்ள நிவாரணம் பற்றிய ஒரு மதிப்பீட்டினையும் மேற்கொண்டுள்ளார்.

மூன்று நான் விஜயத்தினை மேற்க்கொண்ட கதரின் அவர்கள் அவரின் விஜயத்தின் முடிவில் கருத்துரைக்கையில் அவர் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் நிவாரணங்கள் மீதான திருப்தி பற்றி அறிந்துகொண்டதோடு, வெள்ள அனர்த்தத்தினில் இடம் பெயர்ந்தவர்களின் மீளக் குடியமர்த்துதலை துரிதப்படுத்துதல் மற்றும் அவர்களை தையிரியப்படுத்துதல் என்பனவற்றினூடாக அவர்களின் வாழ்வாதாரத்தினை மீழுருவாக்குதல் என்பன பற்றி கவனம் செலுத்தி இருப்பதாகவும், இதற்க்காக வெள்ளத்தினில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் கிழக்கு, வடக்கு மற்றும் மத்திய பிரதேச மீள் கட்டுமானத்துக்காக 51 மில்லியன் டொலர் அவசரமாக கோரப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உன்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த உதவிகள் போய்சேருகின்றதா என்ற கேள்விக்கு அப்பால் யாருக்கோ எங்கிருந்தோ உதவி கிடைக்கிறது என்ற பெருமூச்சுடன், இறைவன் கருனையால் வருகின்ற உதவிகள் உன்மையாக பாதிக்கப்பட்டு தொழில், இருப்பிடம், இயல்பு வாழ்கை என்பனவற்றினை இழந்த மக்களுக்கு போய்ச்சேர வேண்டுமென்று பிராத்திக்கிறேன்.

கதரினா பற்றி ஒரு குறிப்புரை,
இவர் தனது கலாநிதிப்பட்டத்தினை குற்றவியலில் அல்வனி, சுணி பல்கலைக்கழகத்தில் முடித்துள்ளதுடன், தனது முதமானிப்பட்டத்தினை குற்றவியல் தத்துவத்தில் கேம்றிஜ் பல்கலைக்கழகத்தினில் முடித்து 2007 இல் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால்  பிரதி ஐ.நா. மனிதாபிமானச் செயலாளராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

22 January 2011

நீ வேணும்டா....













'டேய் என்னடா பண்ணுகிறாய்?'
'ஏன்டா போண் பண்ணல?'
செல்லமாய் ஒரு அதட்டல்..
மெதுவாகச் சொன்னேன்
'அம்மா இருந்தாங்க பக்கத்தில'
என்றேன்...

'அடி விழும்' என்ற நீ
சிறிது சிணுங்கியவளாய் இருக்க
நான் 'என்னமா என்றேன்'
'நான் மட்டும் தனியாய் துடிக்க
நீ அங்கே
சந்தோசமாய் இருக்கிறாயோ!!'
என்று ஏங்கியவளுக்கு,
நான் சொன்னேன்...

'ஆமா சந்தோசமாய்தான் இருக்கிறேன்
ஏனென்றால்
கூடுதான் இங்கே-உன்னை
தேடும் இதயம் அங்கே' என்றேன்
கேட்டவள்... அழுதுகொண்டு
'நீ வேணும்டா' என்று முத்தமிட்டாள்.
.

18 January 2011

ஒரு நள்ளிரவில்.


மூன்று நாட்களாய்
உன்னிடம் பேசாத
துயரம் தாளாமல்
.ஒரு நள்ளிரவில்
தொலைபேசியில் அழைத்தேன்.
அழகாய் , பயமாய்
போர்வைக்குள் ஒளிந்து
"ஹலோ" என்றாய்..
"ஹலோ காவல் நிலையமா ?" என்றேன் ,
குறும்பாய் ,
நீ , "ஆமாம்" என்றாய் ..
"ஒ மகளிர் காவல் நிலையமா?" என்றேன்.
நீ திமிராய்
"மிஸ்டர் , என்ன வேண்டும்?" என்றாய்.
"என் மனைவியை
கண்டுபிடித்துத் தருவீர்களா ?" என்றேன் ,
தோரணை யாய் ,
சிரிப்பை அடக்கிக்கொண்டு
"அடையாளங்கள் என்ன ?",என்றாய்..

நான்,
"அவளுக்கு இரட்டை இதயங்கள் ,
முதுகில் சிறிதாய்
வெள்ளை சிறகுகள்
முளைத்திருக்கும் ,
தலைகுப் பின்
ஒளிவட்டம் ஒளிரும்,
அவள் இருக்கும் இடமெங்கும்
புன்னகையும் , சந்தோஷமும்
நிறைந்திருக்கும் !
மொத்தத்தில் அவள் தேவதை !!" என்றேன்.
உடனே " ஐ லவ் யூ டா புருஷா!!!"
என்று கத்தினாய் நீ ..
உலக கோப்பையை
வென்ற மகிழ்ச்சி எனக்கு..
"அச்சச்சோ அப்பா வர்ராரு.."
என்று போனை வைத்து விட்டாய் நீ .
ஊமைத்தொலைபேசியை
உற்றுப்பார்த்தப்படியே
உட்கார்ந்திருக்கிறேன்
நான்,
நாட்கணக்கில்..

17 January 2011

கொடுமை விடாதோ?


ஒரு புதிய முயற்சி அதுதான் ஏ.ஆர்.ரகுமான் எனது பாடலுக்கு இசையமைத்து தந்துள்ளார். ஆ ஆ ஆ உன்மையில் எனக்கு பிடித்த சோக இழையோடும் ஒரு ராகம் அர்த்தம் கொண்ட பாடல். இது எனை ஒரு கணம் சிந்திக்க வைத்தது, அதனால் வந்த புதுப்பாடல் ஒன்று. யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைத்துறை உதவி விரிவுரையாளராக கடமை புரியும் தம்பி வாகீசன் அழகாய் பாடித்தந்துள்ளார் அவருக்கு எனது நன்றிகள். இந்தப்பாடல் எம் உறவுகளின் அனர்த்தத்தில் இருந்தான மீட்சிக்கான பாடலாக இருக்கும் என நம்புகிறேன்...

பிடித்தால் உங்கள் ஓட்டை இன்ட்லியில் பதிவு செய்யுங்கள்..

இந்த அனர்த்தங்கள் தமிழனை அழிப்பதுதான் விதியா ?

சொந்த வீடும் இல்லை
தூங்கக் கூடும் இல்லை
கொடுமை விடாதோ
எங்கள் உயிர்களும் உடமையும்
தொலைவதுதான் வரமா

நிழல் மட்டும் எம்மோடு
அயல் ஊரு நம்வீடு
இறைவன் வராரோ
இந்த அனர்த்தங்கள் தமிழனை
அழிப்பதுதான் விதியா

சொந்தங்கள் அழியும்போது
சுகம் காண்பது முறையா -தழிழா
சோகங்கள் தொடர்வது எமக்கு
இயற்கை தங்த அவமானம்

உணவு இன்றி உறக்கம் இன்றி
வாழ்கை எமக்கு அகதி முகாமில்
உறவு மட்டும் உலகம் எங்கும்
கூட வராதா?

கிழக்கு நோக்கிய வடக்கின் உறவுப்பாலம்.

வெள்ள அனர்த்தம் காரணமாக இடம் பெயர்ந்து நலன்பரி நிலையங்களில் தங்கியிருக்கும் தமிழ் உறவுகளை நாடி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒரு தொகை பொருட்களை வழங்கிச் சென்றுள்ளனர். நிர்கதிக்கு உள்ளாகி இருக்கும் எம் உறவுகளை மீட்ப்பதற்கான மனிதாபிமான உறவுப்பயணம் பாராட்டுதற்குரியதே. 

யாழ் பல்கலைக்கழக அனைத்துப் பீட மாணவர்களினுடைய ஒருங்கிணைந்த முயற்சியில் இரண்டு நாட்களுக்குள் யாழ்ப்பாண மக்கள், வர்த்தகர்கள் மற்றும் ஏனைய பரோபகாரிகளிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிகள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் உதவியுடன் தெரிவு செய்யப்பட்ட மிகவும் பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு 15.01.2011, 16.01.2011 திகதிகளில் மாணவர்கள் நேராகச் சென்று பகிர்ந்தளித்தனர்.

பொது மக்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்கள் தெரிவு செய்யப்பட்டது. இதில் அநேகமான வறுமைக்கோட்டின் கீழ் அன்றாடம் தொழில் புரிந்து வாழும் கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தெரிவு செய்யப்பட்ட கிராமங்களாக பட்டிப்பளை, மகிழடித்தீவு, அம்பிலாந்துறை, அரசடித்தீவு, பண்டாரியாவெளி, பன்குடாவெளி, கல்முனை மற்றும் அக்கரைப்பற்று என்பன குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இம்மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களாக அரிசி, பருப்பு, சீனி, சவற்க்காரங்கள், நுளம்புத்திரி, விஸ்கற், மருந்துப் பொருட்கள் மற்றும் இன்னோரன்ன பொருட்களும் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திரு.எஸ்.அரிகரன் கூறுகையில் ' இது பாதிக்கப்பட்ட எம் உறவுகளுக்கு செய்யவேண்டிய கடமை என்றும் இதற்கு ஒத்தாசை வழங்கிய கிழக்குப்பல்கலைக்கழக சமுகத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன்' என்றும் கூறினார்.

எம்முறவுகள் சார்வில் இவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு மழையிலும் வெள்ளத்திலும் அல்லோலகல்லோப்பட்டுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
பிடித்திருந்தால் இன்ட்லியில் ஓட்டுப்போடுங்கள்..

16 January 2011

துயருறும் மக்களுக்கு தோழ்கொடுப்போம் ....

பேரவலங்களை சுமந்து வரும் ஒலி> ஒளிப் பேளை உங்கள் மனங்களில் கண்ணீரை வரவழைக்கலாம்.  எம் உறவுகளின் நாசாகார வெள்ளத்து அலையுடன் சோக அலை ஓங்கி வீசிய எம்தேசத்தின் கானொலி நிஜத்தை சொல்லும் காலத்தின் கண்ணாடியாக உங்கள் முன் தருகிறேன். மட்டக்களப்பின் மக்கள் மூன்று தசாப்த கால யுத்தப்பிடியில் மீள முன்னமே சுனாமி அடுத்து பெருவெள்ளம் ஐயகோ.. துயருறும் எம்மக்குளுக்காய் தோழ் கொடுப்போம்..

சுனாமி வதந்தி.....

இப்போது இருந்து வரும் வெள்ள அபாய நிலை தீரு முன்னமே இன்று காலையில் ஒரே ஓட்டம் மக்கள் அலை அலையாக ஓட்டம் எடுத்து பிரததான வீதிகளை கடந்து வந்ததை களுவாஞ்சிக்குடி, களுதாவளை, தேத்தாத்தீவு, மாங்காடு மற்றும் செட்டிபாளையம் போன்ற இடங்களில் காணக்கூடியதாக இருந்தது. குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் வெள்ளத்தில் இடம் பெயர்ந்து பாடசாலைகளில் இருந்த மக்கள் பீதியுடன் அடித்து ஓடிவந்தது பரிதாபகரமாக இருந்தது.

இத்தனைக்கும் நான் உடநடியாக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகஸ்த்தரை தொடர்புகொண்டு கேட்டபோது இது வெறும் வதந்தி  எனக்கூறினார். இதில் இருந்த ஒன்றை என்னால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. அது இன்னும் மக்கள் இந்த தகவல்களில் நம்பிக்கை வைக்கவில்லை என்பதைக் காட்டுவதுடன், மேலாக இவக்களுடைய ஒருங்கிணைந்த செயற்ப்பாட்டின் நீள அகலத்தன்மை குறைவாக இருப்பதனையுமே சுட்டிக்காட்டுகின்றது அல்லவா?

ஆனால் சுமாத்ரா தீவுகளின் கடலுக்கடியில் 5.5 றிச்டர் அளவில் சனிக்கிழமை அதாவது நேற்று அதிர்வு ஏற்ப்பட்டுள்ள தகவலையும் கருத்தில் எடுக்கவேண்டியது அவசியமாகும்....

ஆகவே மக்கள் இந்த தகவல் மையங்கள், முன் எச்சரிக்கை கோபுரங்களில் நம்பிக்கை வைக்கும் காலம் எப்போது வரும்? இது சம்மந்தமான விழிப்புணர்வும் நம்பிக்கையும் மக்கள் மத்தியில் எப்போது அதிகரிக்கும்? என்கின்ற வினாக்களுக்கு விடைகிடைக்கும் நாளே மக்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் நாளாகும்.

அது தவிரவும் அனாமதேச வாந்திகள் மூலம் மக்களை பீதியுற வைக்கும் விசமிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதன்மூலமும் இவ்வாறான செயற்கை அனர்த்தங்களை தவிர்க்கலாம் அல்லவா?

13 January 2011

எங்கே செல்லும் இந்தப்பாதை.....

கனத்த வெள்ளத்தின் தாக்கம் காரணமாக மட்டக்களப்பின் மக்கள் பட்ட ஓலம்  இங்கே ஒளி, ஒலி வடிவில்... சில பரிதாபத்தின் குறுக்கு வெட்டுகள் உங்களின் அனுதாபங்களுக்காக...

தயவ செய்து எமது சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஐயோ பரிதாபம்....

மட்டக்களப்பின் பல பாகங்கள் நீரில் மூழ்கி இருப்பினும் அவற்றில் அனேகமாகப் பாதிக்கப்பட்ட நமது படுவான்கரை மக்கள் படும் துயரம் சொல்லில் அடங்காது. போக்குவரத்து முற்றாகத்தடைப்பட்ட நிலையில் தோணிகளில் பயணம் மேற்கொள்ளும் அபாய நிலை பரிதாபகரமாக இருக்கிறது. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் யுத்தத்தின் பிடியில் இருந்து மெல்ல விடுபட்டு இருந்த இவர்களை இயற்கையின் சீற்றம் விட்டு வைக்கவில்லை. 

நாங்கள் இன்றுதான் சூரியனைக் கண்டுகொண்டோம், அதனால் இம்மகளின் அவலத்தினை  நேரில் தரிசிக்க முடிந்தது. அவர்களை நேர் கண்டபோது இவர்கள் பழுகாமம், போரதீவு, வெல்லாவெளி, கொக்கட்டிச்சோலை போன்ற இடங்களில் இருந்து வருவதாகவும் பல பேர் இந்த வெள்ள அனர்த்தத்தினால் பலர் நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கின்றனர் என்றும் அவர்களை களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினரின் கூட்டு மயற்சியுடன் இம்மக்களது போக்குவரத்துக்கு உதவுவதுடன் அவர்களை வைத்திய சாலைகளுக்கு கொண்டு சேர்த்து உதவுவதனையும் காணக்கூடியதாக இருந்தது. மக்களோடு மக்களாக நிற்கும் படையினர் உன்மையில் பாராட்டப்படவேண்டியவர்கள்தான்.

இதற்கு மேல் வானிலை அவதான நிலையம் தந்துள்ள குறிப்பின்படி வரும் 36 மணித்தியாலங்களில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்யும் சாத்தியம் உள்ளதென எதிர்வு கூறியுள்ளது. அதனையும் தாண்டி எமத பகதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத்தேவைகளைக் கண்டறிய பாதிக்கப்பட்ட இடங்களில் தகவலை சேமித்து வருகின்ற போதும், வெள்ளத்தினில் அடித்துச் செல்லப்பட்ட வீதிகளினூடாகச் சென்று தகவல் சேமிப்பது சிரமமாக உள்ளதெனவும் தெரிவித்துள்ளனர்.

இவர்களின் நிலமை அன்றோ பரிதாபம். 1250 ரூபாய் வித்த அரிசு இப்போது 1500, 1600 ஆக விற்க்கப்படுவதடன், பச்சை மிளகாய் 80 ரூபாவுக்கு மேலாகவும் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்கள் ஒரு விலைக்கும் இல்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர். இதற்கு காரணம் இவர்களின் பிரதான சந்தை வெள்ளத்தினில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடியாத வெள்ளமும் தாங்க முடியாத வாழ்க்கையும். ...

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழ்நாளில் இல்லாத அளவு பெருமழை பெய்து வெள்ளமாக மாறியுள்ளது> அனர்த்த முமாமைத்துவத்தின் கணிப்பீட்டின்படி 493 நலன்புரி முகாங்களில் பாதிக்கப்ப்ட்ட 954>204 மக்களில் 183>008 மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த வெள்ளத்தினில் 1070 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளது. 12.01.2011 இன் மழைவீழ்சியின் அளவு 200 மில்மீற்றருக்கு லோகப் பதிவாகியுள்ளது. இருந்த போதும் பொலநறுவை மாவட்டத்தில் மழையின் வேகம் குறைந்துள்ளது எனவும் ஆனால் மட்டக்களப்பின் நிலமை அவ்வாறு இல்லை எனவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு கொடுப்புலி அவர்கள் கருதடது வெளியிட்டுள்ளார்.

இதே நேரம் வெறும் பாடசாலை மண்டபங்களில் தஞ்சம் புகுந்திருக்கும் பாதிக்கப்பட்டோர் வீசிவரும் கடும் குளிர்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பெரும் அவதியுறுகின்றனர். இன்னும் சீரான முறையில் எதுவித உதவியும் கிடைக்கப் பெறாத நிலையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

இருந்த போதும் கிழக்கு மாகணத்துக்கு என ஒதுக்கப்பட்ட 49 மில்லியன் ரூபாவில் அதிகமான தொகை மட்டக்களப்புக்கே ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. நிவாரணந்களை முன்னெடுப்பதற்கென முப்படையினரையும் அரசு பணித்திருக்கிறது. இதற்க்காக 28>000 படையினர் இலங்கையின் வேறு பாகங்களில் இருந்து கழக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையை அரச தகவல் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்> இது பாரபட்சமற்ற நிவாரண விநியோகத்திற்கு பேருதவியாய் இருக்கும் என நம்பப்படுகிறது.

இறுதி அறிக்கைப்படி 18 உயிர்கள் நாடு முழுதும் பறிக்கப்பட்டுள்ளதுடன் 49 பேர் காயப்பட்டுள்ளனர் என தகவல் கிடைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விசேட மருத்தவக் குழுக்கள் இம்மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் கடற்படையின் உதவியுடன் மாவட்த்தின் சகல பாகங்களுக்கும் நடமாடும் சேவையை செய்ய பணிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சின் மேலதிகச் செயலாளர் வைத்தியர் மகிபால குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செய்திகள் வந்து சேர்கின்றதே தவிர இன்னும் உடனடி உதவிகள் தாமதமாகி வருவதனையே காணக்கூடியதாக இருக்கின்றது.

12 January 2011

வெள்ளத்தை கடக்க முற்ப்பட்ட சிறுவன் மண்டடூரில் மரணம்.


கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களே அனேகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, அதில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட லெட்சக்கணக்கான பொதுமக்கள், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று காரைத்தீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டுச் சொல்லப்போனால் சற்று முன்னுர்வரை 48 மணித்தியாலங்களாக கிழக்கில் பெய்துவரும் அடைமழையினால் மரங்களிலும் மலைகளிலும் பாதுகாப்புடன் இருந்த 31 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.அடை மழையினால் மகா ஓயா ஆறு திடீரென பெருக்கெடுத்தமையால் தத்தம் வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் டெம்பிட்டிய பிரதேச மலைகளிலும் மரங்களிலும் ஏறிக்கொண்டனர். எனினும் அடைமழையினால் வெள்ளம் தீவிரமடையவே மகா ஓயா பிரதேச செயலக அதிகாரிகள் பொலிஸார் ஆகியோர் இணைந்து விமானப் படையின் விசேட ஹெலிக்கொப்டர்கள் மூலம் மீட்டெடுத்தனர். இந்த இடத்தில் விமானப்படையினுரின் அர்ப்பணிப்பு பாராட்டுதற்குரியதே.
இன்னும் மண்டூர் தம்பலாவத்தை பாலத்தை கடக்க முற்பட்ட 17 வயது சிறுவன் நேற்று மாலை 5 மணியளவில் வௌ்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான் என அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிறுவனின் சடலம் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் இதுவரையில் வௌ்ளத்தினால் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பரிதாபகரமான இளப்புகளைத் தவிர்க்க பாதுகாப்பான முறையில் இம்மக்கள் வெளியேற பொநறுப்புவாய்ந்த அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்களோ தெரியவில்லை. மக்கள் அனைவரும் அணை திரண்டுவரும் வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக வர தயவுசெய்து சதுர உதவியாவது செய்ய வாருங்கள்...

மட்டக்களப்பின் வெள்ளத்தில் சிறுமியின் பரிதாப மரணம்


இடம்பெயுர்வுக்கு அப்பால் நாளாந்தம் புரிதாபகரமாக உயிர் இழக்கும் நிலமையை மோசமான வெள்ளம் ஏற்ப்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு தொப்பிகல பகுதியை அண்மித்த ஈராளக்குளம் வேரம் பிரதேசத்தில் வெள்ளத்தில் மூழ்கி 11 வயதுடைய சிறுமியொருவர் மரணமடைந்துள்ளார்.வேலாயுதம் நந்தினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர். இச்சிறுமியின் சகோதரனான அனுஜன் மலசல கூடக் குழியொன்றில் விழுந்ததையடுத்து அவரைக் காப்பாற்ற முயற்சி செய்த வேளையில் இச்சிறுமி மூழ்கி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சிறுமியின் தாய் வீட்டுப்பாவனைப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சித்தாண்டிப் பிரதேசத்திற்கு வந்துள்ளார். இவர் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நேரத்தில் தொண்டுர்களின் உதவி இவ்வாறான நலிவுற்ற மக்களைக் காப்பாற்ற அவசியம் தேவை.

வெள்ளத்தில் அடித்துப்போன கோடைமேட்டுக் கிராமம்.

அழகிய குட்டித்தீவாய், ஆறுகளும், வயல்களும் மற்றும் குளங்களும் சூழ மண்வாசைன கமழ்ந்த கோடை மேட்டுக் குட்டித்தீவு வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்துச் செல்லப்பட்டிருப்பது சொல்லொண்ணாத் துயரமாகும். இக் குக்கிராமம் எருவிலின் தலை போன்று அதன் மேற்கே சுமார் ஒன்ரரை கிலோ மீற்றருக்கு அப்பால் வத்தளைக் கிழங்கிற்கே பெயரெடுத்த விவசாயிகளும், கூலித் தொழிலாளர்களும் நிறைந்த, அனர்த்தத்தில் நலிவுறக்கூடிய கிராமமாகும்.

மட்டக்களப்பினை சொல்லொணாத் துயரில் ஆழ்த்திவரும் பேய் மழை, பெரு வெள்ளம், பெருங்காற்றுக்கு மத்தியில் சிறுவர்கள் குழந்தைகள், வயோதிபர்கள் என 60 குடும்பங்களைச் சேர்ந்த 300 க்கு மேற்ப்பட்ட மக்கள் யாருடைய உதவியும் இன்றி அம்மக்களது உதவியுடன் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் வழி தெரியாத வெள்ளத்தினிலும் இவர்களை கொண்டு சேர்த்துள்ளனர்.

இவர்கள் தற்போது எருவில் மகாவித்தியாலயத்தினில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு இருக்கும் மாடிக்கட்டிடங்கள் நிரம்பி வழிவதனால் இவர்கள் கீழுள்ள அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இங்கு படிப்படியாக வெள்ளம் உள்நுழைவதனால் அவர்களின் நிலை அந்தோ பரிதாபம். இவர்களில் உள்ள சிறுவர்கள் வயோதிபர்கள் நோய்வாய்ப்பட்டவுர்களாக சொல்லொண்ணாத் துயருறுகின்றனர். 

இவர்களை பார்வையிட வைத்திய நடமாடும் சோவைகளோ, உணவு கொடுப்பதற்க்கான ஏற்ப்பாடுகளோ செய்யப்படவில்லை என மக்கள் அழுதுகொண்டு முறையிடுகின்றனர். இந்நிலையில் இவர்களது உடனடித்தேவையான பாய், உடு துணிகள், வெற்சீற், குடிநீர், அரிக்கன் விளக்கு, நுளம்பு வலை என்பன வளங்கப்படவில்லை அத்துடன் குறிப்பாக சிறுவர்களுக்கான பால்மா இவர்களுக்கு அவசிய தேவையாய் உள்ளது. இம்மக்கள் ஒரு பாதிக்கப்படாத மக்கள் போன்று புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

ஐனாதிபதி கூறிய ஒரு நல்ல விடயம் ஞாபகத்துக்கு வருகிறது இவ்வாறான சந்தர்ப்பங்களில் அரச அதிகாரிகள் தங்கள் குடும்பம்போல் அல்லும் பகலும் சுற்று நிருபங்களுக்கு அப்பால் அவர்களுக்கு உதவவேண்டும் என்று குறிப்பிட்டது முற்றிலும் உன்மை. சுற்று நிருபத்துக்குள் உதவியிருப்பினும் இம்மக்களது துன்பம் போக்கியிருக்கலாம். ஆனால் இத்தனை கஸ்டத்தினையும் பார்த்துக்கொண்டு இருக்கும் பொறுப்பற்ற அதிகாரிகள் இம்மக்களுக்கு தேவைதானா?

அரசு அரசசார்பற்ற நிறுவனங்கள் பட்டவர்த்தனமாக வழங்கிவருகின்ற நிதி, நிவாரண உதவி ஏன் உன்மையாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படவில்லை?

மக்களுக்குத்தான் அனர்த்தம் இந்த அதிகாரிகள் இப்படி சுருண்டு கிடப்பதற்க்கா இப்பதவிகளை சுமக்கிறார்கள்?

வெட்கக்கேடாகும் இந்த பொறுப்பற்ற அதிகாரிகள் உடனடியாக இம்மக்களுக்கு மனிதாவிமானமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.... 

தகவல்: K.பகிரதன்.

மட்டக்களப்பில் வெள்ள அபாயம் அதிகரிக்கிறது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெள்ள அபாயம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகின்றது. 12.01.2011 இன் மழைவீழ்சி 113.09 மில்லி மீற்றர் எனப் பதிவாகியுள்ளது. மறுபுறத்தில் போரதீவுப்பற்று, மன்முனை தென் எருவில்பற்று, ஏறாவூர்ப்பற்று என்பன மக்கள் வீடுகளில் தங்கி இருக்கொணாத அளவு வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

இங்கு கிட்டத்தட்ட 533,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 122,000 பேர் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் என்றும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் தெரிவித்து இருக்கிறது. இங்கு அகப்பட்டிருக்கும் பணியில் ஈடுபட்டுவந்த விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலமான மீட்ப்புப் பணி மற்றும் உணவு விநியோகம் என்பன மோசமான காலநிலை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
இம்மக்களை நேரடியாக பார்வையிட வந்த ஐனாதிபதி மகிந்த அவர்களால்கூட வரமுடியாத சூழலை இந்த சீரற்ற காலநிலை ஏற்ப்படுத்தியுள்ளது. அவர் பொலநறுவை மாவட்டத்தில் சென்று பார்வையிட்டுத்திரும்பியதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதற்க்கப்பால் பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அவர்கள் தற்பொழுது மட்டக்களப்பு மக்களுடன் நேரடியாக நின்று அவர்களின் அவசர தேவைகளை குசனம் விசாரிப்பதாகவும், அவர்கனது தேவைகளை இயன்ற அளவு பூர்த்தி செய்து வருவதாகவும், அவர் பரோபகாரிகளிடம் இருந்து இம்மக்களுக்கு உதவ வருமாறு வேண்டுகோளும் விடுத்திருந்தார். அவர் குமாரவேலியர் கிராமத்து மக்களுடன் இருந்து அவர்களின் தேவைகளை உணர்ந்து உதவி வழங்கி வருவதாகவும் அறியக்கூடியதாய் உள்ளது.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவி வரும் வெள்ள அபாய வாதந்தி பற்றி ஒரு தகவலை மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் திரு. சீனித்தம்பி. மோகனராசா அவர்கள் தருகையில், மட்டக்களப்பு நீர் தாங்கு குளங்கள் அனைத்தும் அனைத்து உத்தியோகஸ்த்தர்களின் நேரடி கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், தற்போதய நிலவரங்களின்படி, அச்சப்பட வேண்டியதில்லை என்றும். அவ்வாறு ஏதும் அபாயம் ஏற்ப்படும் சந்தர்ப்பங்களில் அது முன்னராகவே மக்களுக்கு ஊடகங்கழூடாக அறியத்தரப்படும் என்றும் கூறியுள்ளார். எது எப்படியாயினும் மக்கள் இவற்றுக்கு முன்னாயித்தமாக இருப்பது உசிதமாகும்.

இதற்கிடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என வழங்கப்பட்டு வந்த உலர் உணவுகளை மீண்டும் வளங்குவதற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஐக்கிய நாடுகளின் உணவுத்திட்டத்திதுர் தேவையான உணவினை வழங்குவதற்கும், அதுபோன்று UNICEF உம் இம்மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் முன்வந்துள்ளமை பாராட்டத்தக்கது.

இ களுவாஞ்சிகுடியினையும், படுவான்கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலத்திற்க்கப்பால் மக்கள் வரமுடியாமல் வெள்ளம் பாய்ந்து செல்வதனால் அம்மக்கள் மிகவும் அந்நியப்படுத்தப்பட்டு எதுவித உதவிகளையும் பெறமுடியாத நிற்க்கதிக்குள்ளாகி உள்ளனர். ஆவர்களது வீடுகளெல்லாம் நான்கு அடிகளுக்கு மேல் வெள்ளம் மேவியுள்ளது. இந்நிலையில் களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் அவர்களை மீட்டெடுக்கும் பணியில் படகுச் சேவை வளங்கி வருவதனையும் அறியத்தருகிறேன்.

என்னதான் பேசினாலும் ஐந்து நாட்க்களாக தொடந்து பெய்யெனப் பெய்யும் மழை காரணமாக இலங்கையில் 19 உயிர்கள் காவுகொள்ளப்பட்ட நிலையில், மட்டக்களப்பில் ஓந்தாச்சிமடக் கிராமத்தில் ஒரு இளைஞன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் மத்தியில் இந்த மக்களின் அவலங்களை எல்லாம் நாங்கள் தெரிவித்தும் உடனடி உதவி வழங்க முடியாத அளவுக்கு, வெள்ளம் வானைப்பிளப்பதனைப் போல் பிரதான பாதைகளையெல்லாம் ஆங்காங்கே உடைத்துள்ளதால், நிவாரண உதவிகளை செய்யும் உள்ளம் இருந்தும் அவர்களால் வழங்க முடியாத துரதிஸ்டம் எம்மக்களுக்கு நேர்ந்துள்ளது.

இதற்க்கப்பால் அம்பாறையில் பாண்டிருப்பு, கல்முனை என்பன முற்றாக நீரில் மூழ்கி வழிவதனையும் காணக்கூடியதாக உள்ளது. அத்துடன் கிட்டங்கி பாலம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதனால் அதற்கு அப்பால் வுhழுகின்ற நாவிதன்வெளிப் பிரதேச மக்களும் பாதிப்படைந்துள்ளது.

இதற்குமேல் ஆண்டவன்தான் இவர்களை காப்பாற்றவேண்டும். ஆனாலும் பரோபகாரிகளே தயவு செய்து இம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவாருங்கள் என அழைக்கிறோம்.

11 January 2011

தை பிறந்தால் வழி பிறக்குமா????

மாரி மழை
காட்டு வெள்ளம்,
பட்டினிச்சாவு,
இடி,
மின்னல்..
இவைகள் மட்டும்..
எங்களை சொந்தம்.
கொண்டாட...
சூரியனே- நீ
எங்கு சென்றாய்..

10 January 2011

வெளுத்துக்கட்டும் வெள்ளத்தில் குடிபெயர்ந்திருக்கும் குடியிருப்பு மக்கள்....

 யாரைக்கேட்டாலும் மட்டக்களப்பு வெள்ளத்தை சொல்லும் அளவுக்கு மிகவும் மோசமாக அம்மக்களது வாழ்கை, வாழ்வாதாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளை மிகவும் மோசமாகப் பாதித்துள்ளது கண்கூடு. நாடு பூராகவும் 16 உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளது, கிழக்கில் 800,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டக்களப்பு அரசாங்கச் செயலாளரின் அறிக்கைப் பிரகாரம், மட்டக்களப்பின் பிரதேச செயலகங்களில் அதிக பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள மன்முனைத் தென் எருவில்பற்றும் ஒன்றாகும். 

 கூடுதலாக கரையோரக் கிராமங்களை நிருவகிக்கின்ற இப்பிரதேச செயலகமானது ஒரு பக்கம் ஆற்றுப்பரப்பினையும் மறுபுறம் வங்காள விரிகுடாவினையும் கொண்டமைந்த அழகான அதே நோரம் ஆபத்தான கிராமங்களை அநேகமாக் கொண்டுள்ளது. இங்கு கல்முனை மட்டக்களப்பு பாதை ஊடறுக்கும் இடத்தில் தேத்தாத்தீவின் தெற்கு கிராம சேவர் பிரிவினுள் அமைந்திருக்கும் ஒரு அழகிய குட்டித்தீவே குடியிருப்பாகும்.

குடியிருப்புக் கிராம மக்களும் அனர்த்தங்களும்...
 இது தேத்தாத்தீவுக்கு மேற்குப்புறமாக மட்டு வாவிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனைச் சூழவும் வயலும் குளங்களும் நாலாபுறமும் அமைந்துள்ளது. இங்குவாழுகின்ற அனைத்து மக்ககும் 2 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மட்/தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தஞ்சமடைந்துள்ளனர். 
இங்கு 33 குடும்பங்கள் மாத்திரம் வசித்துவருகின்றனர். இவர்களது பிரதான ஜீவனோபாயம் கூலித்தொழிலாகும், அத்துடன் ஆடு, மாடு வளர்த்தல், மீன்பிடித் தொழில் என்பனவற்றினையும் மேற்கொள்ளுகின்றனர். இங்குள்ள பிள்ளைகள் பாடசாலைகளுக்கு வருவதற்கோ, அவர்கள் தொழில் செய்யப் போவதற்கோ 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டியிருக்கிறதும் குறிப்பிடத்தக்கது. 

இங்கு வெள்ளம் தாக்குவதற்க்கான பிரதான காரணம், இந்த குட்டித்தீவை சூழவும் உள்ள தாழ்நிலப்பரப்பான வயல் நிலங்களும் மற்றும், பெரிய குளம், வட்டிக்குளம், களுதாவளைக் குளம் போன்ற குளங்களும்தான். இருப்பினும் இம்மக்கள் மிக உயர்ந்த மேட்டுப் பகுதிகளில்தான் வாழ்ந்து வந்தனர். 1956 இல் வந்த வெள்ளம் தவிர 2004 இன் வெள்ளம் போன்ற வெள்ளப் பெருக்குளளில் இடம் பெயர்ந்து, தற்போது 2011 இன் ஆரம்பமே சோகமான வாழ்கையினை அவர்களுக்கு அளித்திருக்கின்றது.
                                         (இது நீரினால் மூடப்பட்டிருக்கும் குடியிருப்புப் பிரதான பாதை)
எதிர்கோக்கும் பிரச்சினைகள்.
தங்கவைக்கப்பட்ட மக்களின் தரவுகள் இப்போது சேமிக்கப்பட்டு வருகின்றது அதன் அடிப்படையில், தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தினுள் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்கள், தங்களது ஆடைகள் மற்றும் பத்திரங்களைத்தவிர ஒன்றும் கொண்டுவராத அளவுக்கு அவசர அவசரமாக இடம் பெயர்ந்துள்ளனர். 

மூன்று அடி உயரம் தண்ணீர் மேவிய நிலையில், 137 பேர் 33 குடும்பத்தினில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்கள் தொழிலை முற்றாக இழந்துள்ளனர், அத்ததுடன் குடிநீர்ப்பிரச்சினைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர். இவர்கள் அங்கு வெள்ளத்துக்கு அப்பால் முதலை, பாம்பு போன்றனவற்றின் தொல்லைகளுக்கு மத்தியில் இவர்கள் தஞ்சமடைந்துள்ளனர். 

முற்றாக 35 வீடுகளை வெள்ளம் ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக இங்கு தாங்கொணாத அவதிகளை 42 மேற்ப்பட்ட சிறுவர்களும் 8பேர் அளவில் வயது வந்தவர்களும் எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் வலது குறைந்தவர்களும் காயப்பட்டவர்களும் அடங்கலாக நலிவுற்றவர்களாக மாத்திரம் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுதவிர தேத்தாத்தீவின் அனைத்துப் பாகங்களில் இருந்தம் இன்னும் மக்கள் அல்லோல கல்லோலப்பட்டவர்களாக இங்கு இடம் பெயுர்ந்தவண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது. இறுதித்தகவலின்படி இன்னும் 31 குடுப்பங்கள் மேலதிகமாக தேத்தாத்தீவின் பல பாகங்களில் இருந்தும் இடம்பெயுர்ந்து தஞ்சமடைந்துள்ளனுர்.

கருனை காட்டும் உள்ளங்கள்.
இத்தனைக்கும் முழுதாக மொத்த தேத்தாத்தீவு மக்களும் பாதிப்படைந்துள்ள வேளையிலும் அவர்கள் மக்களுக்கு உதவி செய்யும் தொண்டான்மை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்கள் இவர்களுக்கு உணவு சமைத்தல், தகவல்களைச் சேமித்தல், மற்றும் பொருட்களைவ ளங்குதல் என்பனபோன்ற இன்னோரன்ன வேலைகளையும் செய்துகொண்டிருக்கின்றனர்.
                                                                  (ஊர்தொண்டர்கள் உதவி புரிவதில்)
இவர்களின் பரிதாவ நிலையை அறிந்த எமது பாரளுமன்ற உறுப்பினர் செல்வராசா(நவம்) அவர்கள் இந்த மக்ககைச்சந்தித்து ஆறுதல் வார்த்தை கூறுவதை இங்கு காணலாம்.
                                                     (பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுடன்)
அதுபோன்று மன்முனை தென் எருவில்ப்பற்று பிரதேச செயலாளர் இதனைக் கேள்வியுற்று ஓடோடிவந்து பார்வையிடுவதுடன் அவர்களுக்கு சமைத்த உணவினை வாழுங் கலைப்பயிற்சி நிறுவனத்தினரின் உதவியுடன் சட்டத்தரணி சிவநாதன் தலைமையில் வழங்குவதையும் காணலாம். 
                                           (பிரதேச செயலாளர் அவர்கள் சமைத்த உணவு வளங்குகிறார்)
ஓயாத அனர்த்தத்தினை ஓயவைப்பார் யாருளரோ!
தவிரவும் இவர்களுக்கு பாய், வெற்சிற், பாத்திர தளபாடங்கள், மருத்துவ வசதிகள் என்னன வழங்கப்படவில்லை.. அத்துடன் அடிக்கடி மின்சாரம் இல்லாமல் போவதனால் மண்ணெண்னை லாம்புகள் இங்கு தேவையாக இருக்கின்றது, அத்துடன் நுளம்புவலைகள், சுத்தமான குடி நீர் என்பனவும் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இவர்களின் பரிதாப நிலை சொல்லில் அடக்கவொணாது. அதற்கு மேலாக பாடசாலையை சூழ நீர்நிறைந்த வண்ணம் உள்ளதனால் அங்கு பெண்கள் சிறுவர்கள் வயோதிபர்கள் என மலசலம் களித்தல், குடிநீர் அருந்துதல் என்பனவற்றை பெற சிரமப்படுகின்றனர். இன்னும் சில மணிநேரத்தினுள் பாடசாலையினுள் வெள்ளம் பரவும் அபாயம் இருப்பதனால் இவர்களின் துன்பம் இரட்டிப்பாகும் அபாயமும் இருக்கின்றது.

நான் இக்கட்டுரை எழுதும் வரை என் வீட்டில் ஒரு அடிவரை தண்ணீர் உள்ளது, அத்துடன் மின் வெட்டும் இடம்பெறுவதனால் இனிமேல் மேலதிக தகவலுக்கு தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். எனவே இவர்களின் துன்பங்களை துடைக்க உதவும் நல்ல உள்ளங்கள் முன்வரலாம்....

வெள்ளத்து அபாயத்தை மெள்ளத்தவிர்த்திடுவோம்.














கைகோர்த்து ஒற்றுமயாய்
காலத்தை வென்றிட நாம்
வையத்தில் ஒன்றுபட்டு
செய்திடுவோம் சிரமதானம்..

வெள்ளத்து நீர் தேங்கும்
வெற்று களிவுகளை
பள்ளத்தில் போட்டிடுவோம்
பரவும் நோய் தவிர்ப்போம்..

வடிகானில் களிவுகளை
வெட்டி எறிந்திடுவோம்
மண்ணரித்துச் செல்லும்
வழியில் மரம் வளர்ப்போம்.

பொன்னான பூமி செய்ய
வேற்றுமையை முடிய வைப்போம்.
வெள்ளத்தை வடியவைப்போம்,

வெள்ளம் அபிவிருத்தியை புறந்தள்ளும் அனர்த்தமாகினால்...

ன்று ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகைகள் எல்லாம் சக்கைபோடும் விடயம் நாம் எல்லோரையும் ஒரு கணம் அச்சத்தில் ஆழ்தி இருக்கும் வெள்ள அனர்த்தமாகும். வடகீழ் பருவக்காற்று காலங்களில் இலங்கையின் வடகிழக்குப் பகுதிகளில் மழை வளமாகக் கிடைப்பதனால்தான் பல்லாயிரக்கணக்கான வயல் காடுகள் நெல் விளையும் சோலைகளாகவும், அரிசு உற்பத்தியாக்கும் சாலைகளாகவும் போற்றப்படுதல் குறிப்பிடப்படுகின்றது, ஆனால் அந்த வளம் இன்று வெள்ளமாகி விட்டது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினில் 24 மணித்தியாலங்களில் 312 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

04 January 2011

'பெண்களுக்கு சாபக்கேடாகும் வறுமைப் பிணி'

 லக சனத்தொகையில் வறுமைப் பொறிக்குள் சிக்கியவர்களில் பெண்கள் பெரும்பான்மையினராகக் காணப்படுகின்றனர். அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் வறிய சமூகங்களை ஒப்பிட்டு நோக்கும்போது அங்கு பெண்களும், சிறுவர்களுமே மிக மோசமான பற்றாக்குறையால் (Harshest deprivation) பாதிக்கப்படுகின்ற அனுபவங்களை அவதானிக்கலாம்.

ஆசியாவை வறுமைக்கோட்டின் கீழ் இழுத்துச் செல்லும் உலக பொருளாதார நெருக்கடி.

ன்று தலையின் மேல் கை வைத்து வியக்கும் அளவுக்கு ஆசியாவின் வறுமை நிலைமை உலக அளவில் ஏற்ப்பட்டிருக்கும் பொருளாதார மந்தத்தினால் (Global economic slowdown) அதளபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கின்றது என பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இன்று ஆசியாவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் மீழமுடியாத வறுமைக்குட்பட்டுள்ளதோடு(Abject poverty), ஏற்றுமதி நோக்கிய வளர்சியில்;(Export-led growth) ஏற்ப்பட்ட பெரும் சரிவு காரணமாக இந்நாடுகளில் பலர் தங்களது வேலையை இழந்து பரிதவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறு இருப்பினும் இன்று உலகலாவிய ரீதியில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளின் விளைவாக ஆசியாவில் நலிவுற்றவர்களே குறிப்பிடத்தக்க அளவு வறுமையின் பிடியில் தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமைப் பொறிக்குள் போகும் அபாயம்.
சிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி ஆசியாவில் 1997-1998 காலப்பகுதியில் ஏற்ப்பட்ட நிதி நெருக்கடியினால் மொத்த ஆசியாவின் வளர்ச்சிப்போக்கு எதிப்பார்க்காதபடி 3மூ தொடங்கி 3.4% அளவுக்குள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது எனக் குறிப்பிப்படுகிறது. இருப்பினும் இவற்றில் இருந்தான மீட்சி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் ஏற்ப்பட்ட நெருக்கடிகளின் ஆழ, அகலத்தினைப் பொறுத்தும், ஆசியாவின் ஏற்றுமதிச்சந்தையின் 60% இலுமே இது தங்கி உள்ளது.

உன்மையில் ஆசியாவில் மெதுவான பொருளாதார வளர்ச்சி என்பது, இங்கு 60 மில்லியன் மக்ககள் தொடர்சியாக வறுமைப் பொறிக்குள் (Poverty Trap) தள்ளப்பட்டுக் கொண்டிருப்பதனைக் குறிக்கின்றது. இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம் அதாவது ஆசியாவின் பொருளாதாரம் தொடர்சியாக ஆரம்பத்தில் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்து வந்துள்ளது, காரணம் இவ்வறுமை அவர்களுக்கு தெரியாமலேயே பொறிக்குள் சிக்கவைத்துள்ளது என ஆசிய அபிவிருத்தி வங்கி சுட்டிக்காட்டுகின்றது.

ன்னும் ஒரு அதிர்ச்சிதரும் தகவலை ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டிருந்தது அதாவது தெற்காசியாவில் வறியவர்களின் எண்ணிக்கை மற்றும் வறுமையின் அளவு இவை இரண்டும் மிக வேகமாக இன்னும் ஒரு தொகை நலிவுற்ரோர் வர்க்கத்தினை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்காசியாவின் பொருளாதார வளர்சியை மந்த கதியிலேயே வைத்திருக்கும் என்றும் என்றும் எதிர்வு கூறியிருக்கிறது.

இன்றய நிலையில் உலகலாவிய பொருளாதார வீழ்ச்சி (Global economic downturn) குறிப்பாக மிகமோசமாக வறியவர்களையே குறிவைத்து தாக்கி இருக்கின்றது. 2007 இல் உணவுப் பொருட்களின் விலை, பெற்றோலியப் பொருட்களின் விலை ஒப்பீட்டளவில் குறைந்திருந்தாலும் அது வறிய மக்ககின் வாழ்கைத்தரத்தில் எதுவித மாற்றத்தினையும் தோற்றுவிக்கவில்லை என்றே கூறவேண்டும்.

வாழ்கைத்தர மாற்றம்..
லண்டனில் உள்ள அபிவிருத்தி கற்கைகளுக்கான அமையம் (Institution of development studies)  தெரிவு செய்யப்பட்ட, குறிப்பாக வங்களாதேஸ் மற்றும் இந்தோனேசியா உள்ளடங்கலாக 5 நாடுகளிடையே வறிய கிராமப் புறங்களில் மற்றும் நகரப்புற சமுகங்களிடையே நடத்தப்பட்ட கள ஆய்வில் கிராமப் புறங்களில் வாழுகின்ற மக்கள் அடிக்கடி மிகக் குறைவான உணவினையே உட்கொள்கின்றனர் அத்துடன் குறைவான சத்துள்ள மற்றும் வேறுவகையான உணவுகளையே உண்ணுகின்றனர்; எனவும் கண்டுள்ளனர். மேலும் அனேகமானவர்கள் தாங்கள் சுயமாக தயார் செய்கின்ற மருந்து வகைகளையே பாவிப்பதாயும் உயர்வான நல்ல மருந்துப் பொருட்கள் அவர்கள் பாவிப்பதற்கு வசதியற்றுள்ளனர் என்றும் அறியப்பட்டுள்ளது. இவர்களத பிள்ளைகளில் அனேகமானவர்கள் பாடசாலையை இடைநடுவில் விட்டுச் செல்கின்றவர்களாகவும் ஏனையோர் அவர்களது வசதிக்கு ஏற்ப்ப மதரசா (Madarasa School) சமயப் பள்ளிகளில் கற்று வருகின்றனர் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தினில் ஆசியாவின் தொழில்துறைப்போக்கு.
குறைந்துவரும் கைத்தொழிற்துறை ஏற்றுமதி வர்த்தகத்தினால் பல கம்பனிகள் மூடிவிடுகின்ற நிலையில் காணப்படுவதோடு, திடீh எனப் பலதொழிலாளர்கள் தங்களத தொழிலினையும் படிப்படியாக இழந்துவருகின்றனர் (Layoff), அத்துடன் வழங்கல் செயற்ப்பாட்டில் (Supply chain)  பல இடர்பாடுகளும் ஏற்ப்பட்டு வருகின்றது. இவற்றில் தங்கி இருக்கும் உள்நாட்டு வியாபாரம் சிதைவடைந்து வருகின்றது. இவை வளர்சியடைந்துள்ள நாடுகளின் மந்த நிலையை மேலும் அதிகரித்து வருகின்றது.

2008 கடைசிப்பகுதிகளில் இருந்து தங்களது வேலைக்கான உடன்படிக்கை புதுப்பிக்காமை காரணமாக இடம்பெயர்ந்த ஏற்றுமதித்துறை ஊழியர்கள் குறிப்பாக ஜகார்த்தா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அவர்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர். ஏனையோரது வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. சுட்டப்படி இயங்கும் கம்பனிகள் போலல்லாது யகார்த்தா போன்ற நகரங்களில் புதிய வேலைவாய்ப்புகள் இருந்தன ஆனால் அவை தரம் குறைந்தனவாகவும், தொழில் பாதுகாப்பு இல்லாததாகவும் இருந்தன என டாக்கா தொழிலாளர்கள் முறையிட்டிருந்தனர்.

இந்த நிலமை களிமண்டன், இந்தோனேசியா போன்ற நாட்டில் உள்ளவர்களிடம் சட்டவிரோதமாக கடத்தல், தங்கம் அகழ்தல் போன்ற செயற்பாடுகள் அதிகரிக்க காரணமாகியது. ஆண்மையில் சைனாவின் அறிக்கைப்படி ஏற்றுமதியில் ஏற்ப்பட்ட தொடர் சரிவு காரணமாக சங்காய், குவான்கோ போன்ற நகரங்களில் ஏற்றுமதி சார்ந்த( Export Oriented)  நிறுவனங்கள் 1000க்கு 10 மூடிவிடப்பட்டதாகவும், இதனால் 20 மில்லியன் பேர் தங்கள் தொழிலை இழந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியும் இடப்பெயர்வும்.
ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் குடிபெயர்ந்துவாழ்வபர்களின் பிளைப்பு மட்டம் பொருளாதார நெருக்கடி காரணமாக 2008 உடன் ஒப்பிடும்பொழுது 2009 இல் குறைவடைந்துள்ளது. குறிப்பாக உள்நாட்டு மொத்த வருமானத்தின் பெரும் புகுதி வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் மூலமே அன்னிய வருவாயாகக் கிடைக்கின்றது. ஆனால் இவை குறைவடைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் IBON இன் அறிக்கைப்படி 20 நாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் 11 நாடுகளின் வருமானம் மிகமோசமாகக் குறைவடைந்துள்ளது, இது அன்னியச் செலாவணிவருவாயில் 96% ஆகும் என்றும் கூறுகின்றது.

இன்னொரு பக்கம் தெற்காசிய நாடுகளில் இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்த்தான் போன்ற நாடுகளில் அன்னியச் செலாவணி வருவாய் 2008 இல் 16 விகிதமாய் இருந்து 2009 நடுப்பகுதியில் பூச்சியமாக குறைவடைந்துள்ளது. இத்துடன் சர்வதேச ஊழியச் சந்தையில் (International labor market)   ஏற்ப்பட்ட அழுத்தம் வங்காளதேசினால் உணரப்பட்டது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரிந்த 400,000 தொழிலாளர்களில் 200,000 ஊழியர்கள் தொழில் இழந்து நாடு திரும்பும் ஒரு நிலையை உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்ப்படுத்தி இருந்தது என லொவி நிலையம் குறிப்பிடுகின்றது.

இந்நெருக்கடி குறைந்த வருமானத்தில் வேலைபுரிபவர்களின் அளவினை 2007 இலிருந்து 2009க்கு இடையில் 50 மில்லியனில் இருந்து 120 மில்லியனாக உயர்த்தி உள்ளது என ILO சுட்டிக்காட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக ஆடைக்கைத்தொழில் துறை, மின் பொருட்கள் உற்ப்பத்தி செய்யதல் என்பனவற்றில் தொழில்புரியும் பெண்கள் மிகமோசமாகப் பாதிப்படைந்துள்ளனர்.

IDS  இன் ஆய்வறிக்கையின் பிரகாரம் அநேகமான குடும்பங்களிடையே மன அழுத்தம், வீட்டு வன்முறை (Domestic Violence)  மற்றும் உள்ழூர் குழுக்களுக்கிடையிலான கலவரம் என்பன அதிகரித்து இருக்கிறது. தவிரவும் சிறு அளவிலான வன்முறை, அல்ககோல் பாவனை, போதைவஸ்த்து பாவனை, கைவிடப்பட்ட சிறுவர்கள் மற்றும் வயோதிபர்கள் என்பன அதிகரித்து காணப்படுவதாக சுட்டிக்காட்டுகிறது. இந்நெருக்கடியில் வறியமக்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை சாதாரண பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே உன்மையில் நடைமுறையில் உள்ள உலக பொருளாதார நெருக்கடி ஒன்றை எங்களுக்கு கோடிட்டுக் காட்டுகின்றது. அதாவது அதிகரித்து வரும் நாடுகளுக்கிடையேயான தங்கி இருக்கின்ற நிலமை (ஐவெநசனநிநனெயnஉந), பெற்றோலியப் பொருட்களின் பாவனை என்பனவற்றின் மீதான கட்டாயமான ஈடுபாடு என்பன பொருளாதார நெருக்கடியில் இருந்தான மீட்சியை குறுக்கிவிடுகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் அச்சப்படவேண்டியது என்னவெனில் இந்த பாரிய பொருளாதார நெருக்கடி காரணமாக பூதாகரமாக வளர்ந்து வரும் வறுமையை ஒளிக்க இவ்வாசிய நாடுகளிடம் முன்னாயத்த திட்டங்கள் சரியாக இல்லை என்பதுதான்.