அன்று ஒரு சனிக்கிழமை மாலை. காத்தான்குடிக்கு ஒரு கிரிக்கெட் மட்டை வாங்குவதற்காக நான் சென்றிருந்தேன். அதற்கு முன், இன்னும் ஓர் இரண்டு கடைகளுக்குச் சென்று இனிப்பு பொருட்கள் எல்லாம் வாங்கி, என் கைகளில் இரண்டு மூன்று ஷொப்பிங் பைகள் இருந்தன. இந்தக் கடைகளில் பொருட்களைத் தேடிக் கண்டுபிடித்து வாங்குவதற்கே என் நேரம் அதிகம் செலவாகியிருந்தது. காத்தான்குடிக்குச் செல்வதற்கு முன், இந்தக் கைகளில் இருந்த பைகள் எல்லாம் எனக்குச் சற்று பாரமாகவே இருந்தது. என்றாலும், கிரிக்கெட் மட்டை வாங்கும் ஆசையில் நான் அந்தப் பாரத்தையும் பொருட்படுத்தாமல் காத்தான்குடியிலுள்ள ஒரு கடைக்குள் நுழைந்தேன்.
23 April 2026
காத்தான்குடியில் கனிவு- வியாபாரத்தைத் தாண்டிய மனிதாபிமானம்
25 March 2026
ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்
"ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!" என்ற எம் மூதாதையரின் மிக ஆழமான, அதேநேரம் கூர்மையான தத்துவத்தோடு இன்றைய என் உரையாடலைத் தொடங்க விழைகின்றேன். ஒவ்வொரு நாளும் விடியும் போது, நாம் நமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுதான்: நீங்கள் மக்களை வெல்கிறீர்களா? இல்லை, மனிதர்களின் மனதைக் கொல்கிறீர்களா?
அன்பின் உறவுகளே, அண்மையில் எனது அவதானத்திற்கு வந்த, வீதியோர யதார்த்தங்கள் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இது வெறும் வார்த்தைகளின் விளையாட்டு அல்ல; இது மனித உளவியலின், எமது சமூக முகாமைத்துவத்தின் மிக ஆழமான வெளிப்பாடு.
29 January 2026
திரு. அரசரத்தினம் சேர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்
இன்று என் நெஞ்சம் கனக்கிறது. கண்கள் பனிக்கின்றன. எமது பிராந்தியத்தின் கல்விச் சொத்தாக, கலை இலக்கியத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த, மட்டக்களப்பு களுதாவளையின் மூத்தகுடி திரு. அரசரத்தினம் சேர் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி, ஒரு பேரிடியாய் நம்மைத் தாக்கியிருக்கிறது.
இந்தத் துயரச் செய்தியைக் கேட்ட கணத்தில், எனது நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன. எனக்குச் சிறு வயது இருக்கும்போது, களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் வீதிகளில் ஒலித்த அந்தக் குரல்... இன்றும் என் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறது.
23 January 2026
துருப்பிடித்த இயந்திரங்களுக்கு நடுவே துளிர்த்த ஒரு துளி நேர்மை
எத்தனையோ வேலைப் பழுக்கள், ஓயாத அலைச்சல்கள் என நம் வாழ்வு ஒரு இயந்திரகதியில் ஓடிக்கொண்டிருக்கின்றது. காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எதையோ தேடி ஓடுகிறோம். இந்த ஓட்டத்தில் நாம் எத்தனையோ மனிதர்களைக் கடந்து போகிறோம். சிலரை முகம் பார்த்துப் புன்னகைக்கிறோம், சிலரை வெறும் கருவியாகப் பார்க்கிறோம். ஆனால், எதிர்பாராத ஒரு கணத்தில் யாரோ ஒரு அந்நியன் காட்டும் நேர்மை, "இன்னும் உலகம் அன்பால் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது" என்கிற நம்பிக்கையைத் தந்துவிடுகிறது.
25 December 2025
மாமனிதர்களின் இலக்கணத்தை நமக்கு உணர்த்திய சகோதரன் பா.கமலநாதன்
சமூக வலைத்தளத்தின் வழியே இன்று என் கண் கண்ட காட்சியொன்று, மனதின் கதவுகளைத் தட்டிச் சென்றது; ஆழ்ந்ததொரு மகிழ்ச்சியில் என்னை ஆழ்த்தியது. ஆம், நான் நெடுநாட்களாக அறிந்த, பழகி வருகின்ற ஒரு செயல் வீரன், எமது அன்புச் சகோதரன் கமலநாதன் பாக்கியராஜா அவர்கள் குறித்த செய்திதான் அது.
01 October 2025
அந்த மதிய வேளை- களுவாஞ்சிக்குடியில் நான் முதிய குழந்தைகளுடன்!
இன்று முதியோர்
தினம் இலங்கையில் கொண்டாடப்படுகின்றது. இந்தத் தருணத்தில், களுவாஞ்சிக்குடியில்
நான் சந்தித்த அந்த அன்பான பெரியவர்கள் உட்பட, அனைத்து அன்புக்குரிய
முதியோர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
அன்று அது ஒரு ஒரு மதிய நேரம். என் அப்பாவின் ஆண்டு அமுதும் இனிதே நிறைவுற்ற நேரம். வீடு முழுவதும் ஒருவிதமான அமைதி தவழ்ந்திருந்தது. என் அப்பாவின் ஆத்மா அன்று முழுதும் எங்களுடன் இருந்து எங்களை ஆசீர்வதித்துக்கொண்டு இருப்பதாக ஒரு பலமான நம்பிக்கை என் மனதுக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தது. அந்த அமைதியில்தான், நீண்ட நாட்களாக நான் திட்டமிட்டிருந்த அந்தக் காரியத்தைச் செய்ய எனக்குத் துணிவு வந்தது.
19 September 2025
ஆயிரமாயிரம் பசுமைகளுக்கு நடுவில் தொலைந்து போன ஒரு கன்றுக்குட்டியின் குரல்
18 September 2025
மரணத்தின் நிழலில் மலர்ந்த மனிதநேயம்
அது ஒரு கார்த்திகை மாதம், போர் முடிந்த புதிது. சுனாமி தந்த பேரழிவின் நினைவுகள் இன்னும் பசுமையாக இருந்தன. எங்கு பார்த்தாலும் ஒருவித சோகம் படர்ந்திருந்தது. எங்கள் அமைச்சகத்தின் சார்பாக, போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் புரிந்துகொள்ள ஒரு ஆய்வை மேற்கொள்ளும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. பல நிறுவனங்கள், பல நிபுணர்கள்... ஆனால், எனக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. புத்தகங்களில் படிப்பதோ, புள்ளிவிவரங்களைப் பார்ப்பதோ மட்டும் ஒரு மக்களின் உண்மையான தேவைகளை ஒருபோதும் உணர்த்திவிடாது. அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ள, அவர்களோடு அமர்ந்து பேச வேண்டும், அவர்களோடு வாழ வேண்டும். இந்தத் திறனை வளர்த்துக்கொள்ள எனக்கு அமைச்சகம் அளித்த பயிற்சியும், வாய்ப்புகளும் அளப்பரியவை.
15 September 2025
மனிதத்தின் உயரங்களில் ஒரு தலைமைத்துவப் பயணம்: பா.கமலநாதன் ஒரு சான்று
07 September 2025
நம் வீட்டு நிழலில் மறைந்து கொண்டிருக்கும் முத்துக்கள்
24 July 2025
சந்திரலிங்கம் எமக்கு சரித்திரலிங்கம்
இன்று, ஒரு ஆழ்ந்த துக்க செய்தியோடு உங்களை சந்திக்கவிருக்கின்றேன். எம்மைவிட்டுப் பிரிந்த ஒரு மாமனிதரின் மறைவு, எம்மனைவரையும் உலுக்கியுள்ளது.
இறையடி சேர்ந்த முருகப்பன் சந்திரலிங்கம் மைத்துணர், முன்னாள் வங்கி பிரதி முகாமையாளராகவும், தற்போதைய தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலய பரிபாலன சபை செயலாளராகவும், பேனாச்சி சாகிய தலைவராகவும், இந்து இளைஞர் மன்ற நிரந்தர உறுப்பினராகவும், சிறந்த சேவையாளராகவும், தொண்டராகவும், சமூக சிந்தனையாளராகவும் – இவ்வாறு பல பரிணாமங்களில் மிளிர்ந்த அன்பாக, செல்லமாக தங்கராசா என்று அழைக்கப்படும் எங்கள் உறவு ஒன்று காலமான செய்தி காதுகளில் வந்து பாய்ந்த பொழுது, அது தீப்பிழம்பாக என் இதயத்தை எரித்தது.
//ஒரு தலைவனை மக்கள் தெரிவு செய்தும் அந்த மக்களின் அபிலாசைகளை மீறி செயற்படுவோர் மத்தியில், மக்கள் சார்பாக அந்த மக்களின் நம்பிக்கக்குப் பொறுப்பாக தலைமைதாங்கி, அந்த மக்களின் எதிர்பார்ப்பை மீறாமல், அந்த மக்களின் உரிமைகளுக்காக அவர்களின் குரலாக சொந்த மக்களின் மனங்களில் இடம்பிடித்த "ஒரு சிறந்த தலைவர்” என்றால், இவரைவிட யாரையும் சொல்லிவிட முடியாது. "அண்ணன் பாத்துக்குவாண்டா! சித்தப்பன் பாத்துக்குவான்டா!" என்ற நம்பிக்கைக்குப் பாத்திரமாய் நடந்த மக்கள் தலைவன்.//
17 July 2025
ஆலயத்தில் மதுபானப் போத்தலொன்றை ஏலம் கூறி விற்கின்ற ஒரு காணொளி
(காணொளி இணைக்கப்பட்டுள்ளது) அண்மையில், ஒரு
ஆலயத்தில் மதுபானப் போத்தலொன்றை ஏலம் கூறி விற்கின்ற ஒரு காணொளி (வீடியோ) சமூக
வலைத்தளங்களில் வைரலாகி, பல விமர்சனங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். இது
குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சம்பவம்,
நமது சமூகத்தில் நிலவும் சில கலாச்சாரப் பண்பாடுகள், மத நம்பிக்கைகள், மற்றும் அவற்றை நாம் எவ்வாறு
பொதுவெளியில் அணுகுகிறோம் என்பது குறித்த ஒரு ஆழமான உரையாடலைத் தூண்டியுள்ளது.
உண்மையில், இந்தக் காணொளியில் நாம் கண்டது ஒரு புதுமையான விடயம் அல்ல என்பதை நான் இங்கு அழுத்தமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மட்டக்களப்பு போன்ற எமது பிரதேசங்களிலும், இவ்வாறான செயற்பாடுகள் கிராமிய தெய்வங்களை வழிபடுகின்ற ஆலயங்களில் காலங்காலமாக நடந்தேறுவதை நான் அவதானித்திருக்கிறேன்.
13 July 2025
புரிதல்களைப் புனிதமாக்குவோம். முரண்பாடுகளை முறியடிப்போம்.
நாம் வாழும் இவ்வுலகில், தொடர்பாடல் என்பது உயிர்நாடியாக விளங்குகின்றது. ஒரு சொல், ஒரு பார்வை, ஒரு செய்கை—இவை அனைத்தும் மனிதர்களை இணைக்கும் பாலமாகும். ஆனால், இந்தப் பாலம் தெளிவாக இல்லையெனில், புரிதல்கள் பிழையாகி, பெரும் முரண்பாடுகளை உருவாக்கிவிடும். இன்று, தொடர்பாடலில் தெளிவின் முக்கியத்துவம் பற்றி, உங்களுடன் பேச விரும்புகின்றேன்.
கற்பனை செய்யுங்கள்—பாண்டிய மன்னனின் அரசவையில் ஒரு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது: “கோவலனைக் கொண்டு வாருங்கள்!” மன்னன் உயிரோடு கொண்டுவரச் சொன்னார். ஆனால், காவலர்கள் அவசரத்தில், தவறாக விளங்கி, கோவலனின் உயிரைப் பறித்து, அவனை இறந்தநிலையில் கொண்டுவந்தார்கள். ஒரு சிறு புரிதல் பிழை, ஒரு மனிதனின் வாழ்வை முடித்துவிட்டது. இதுதான் தொடர்பாடலில் தெளிவின்மையின் ஆபத்து!
17 June 2025
கிராமத்து கோயில் சடங்கும்: கலாசார மீறலும் !
15 June 2025
தந்தையர் என்போர் வெறும் பெற்றோர் மட்டுமல்ல
இன்று நாம் ஒரு
விசேட தினத்தைக் கடந்து வந்திருக்கிறோம். அதுதான் தந்தையர் தினம். ஜூன் மாதத்தின் மூன்றாவது
ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 15) நாம் தந்தையர்
தினத்தைக் கொண்டாடினோம்.
sதந்தையர் என்போர் வெறும் பெற்றோர் மட்டுமல்ல. அவர்கள் ஒரு குடும்பத்தின் தூண்கள்; ஒரு குழந்தையின் வாழ்வின் பாதுகாவலர்கள், வழிகாட்டிகள், முன்மாதிரிகள். அன்னையின் அரவணைப்பு கண்களுக்குத் தெரியும். ஆனால் தந்தையின் அன்பு, அது ஒரு மௌனமான சமுத்திரம். வெளியில் தெரியாமல், உள்ளுக்குள் பொங்கிப் பிரவாகிக்கும் சக்தி அது. எத்தனை சவால்கள் வந்தாலும், எத்தனை துன்பங்கள் சூழ்ந்தாலும், தம் பிள்ளைகளின் நலனுக்காகத் தன்னலமற்று உழைக்கும் இந்த உன்னத உள்ளங்களை நாம் கௌரவிக்க வேண்டாமா?
11 June 2025
நம்புற உறவுக்காறன்தாங்க கழுத்தறுக்குறான்
09 June 2025
சொந்தக்காணிகளை கபளீகரம் பண்ணும் உறவுக்காரன்கள்
22 May 2025
உறவுகளின் நிறங்கள்
நான் இன்னும் மறக்க முடியாத ஒரு சம்பவம், அன்றைக்கு நான் மட்டக்களப்பில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது என்னுடன் மிகவும் நெருக்கமாகப் பழகிய ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் ரங்கன். நாங்க இரண்டு பேரும் ஒரே ஊர், ஒரே பள்ளிக்கூடம், ஒரே பல்கலைக்கழகம் என்று சிறுவயது முதலே த நண்பர்கள். எல்லா விஷயங்களையும் ஒருத்தருக்கொருத்தர் மனம் திறந்து பேசுவோம். கஷ்டம்னா உடனே ஓடிப் போய் நிப்போம். சின்னச் சின்ன சந்தோஷங்களையும் பெரிய கவலைகளையும் பகிர்ந்து கொள்வோம். எங்கள் வீடுகளிலும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் என்பதால், இரண்டு குடும்பங்களும் நெருக்கமாகப் பழகின. எங்கள் உறவுகளுக்குள் ஒரு கல்யாணம் என்றால், ஒரு மரணம் என்றால், எல்லாவற்றிலும் நாங்கள் அண்ணன் தம்பி போல நிற்போம். அன்று மாலையில் வேலை முடிந்து வரும்போது, கல்லடிப் பாலத்தடியில் தேத்தண்ணி குடிச்சு, உலகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசிட்டுத் தான் வீட்டுக்குப் போவோம். அந்த தேத்தண்ணி கடையில் அண்ணன் செய்யும் தேநீரின் வாசனையும், பாலத்தடியின் குளிர்ந்த காற்றும், ரங்கனுடன் நான் பேசிய கதைகளும் இன்றும் என் மனதை விட்டு நீங்கவில்லை.
19 May 2025
பேரருட் திரு. யோசப் பொன்னையா ஆண்டகையின் பிரிவு
ஒளியின் பாதையில் ஒரு மாமனிதரின் நினைவுகள்
நம் மனதில் நீங்கா நினைவாக, நம் பிராந்தியத்தின் புனிதப் பூமியில் ஒளிவிளக்காக வாழ்ந்த மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர், பேரருட் திரு. யோசப் பொன்னையா ஆண்டகையின் பிரிவு, நம் இதயங்களை கனமாக்கியிருக்கிறது. கவலை கலந்த இந்தக் கணத்தில், கண்ணீருடன் கரம்கோர்த்து, அவரது வாழ்வின் வழிகாட்டலை நாம் நினைவு கூர்வோம்.
நான் நினைத்துப் பார்க்கிறேன், கடந்த வருடம் நானும் என் நண்பர்களும் அவரைச் சந்திக்க எல்லா ஆயத்தங்களையும் செய்தோம். அவர் அன்புடன் நேரம் ஒதுக்கிக் கொடுத்திருந்தார். இந்த மாவட்டத்தின் பல குறைபாடுகள், திட்டங்கள், அபிவிருத்திகள் பற்றி அவருடன் கலந்துரையாட வேண்டும். அதன்பின், அவரது கருத்துக்களையும், வழிகாட்டுதலையும், ஆசீர்வாதத்தையும் பெற வேண்டும் என்ற நோக்குடன் நாங்கள் அவரைச் சந்திக்கச் சென்றோம். அவர் எம்மிடம் ஒன்றைக்கூறினார் ”பிள்ளைகள் உங்களுக்காகத்தான் நான் இருக்கின்றேன், நீங்கள் எந்தத்தேவை இருந்தாலும் என்னை எந்த நேரத்திலும் அணுகலாம்” எனச் சொல்லி எமக்கு ஆலோசனைகளைத் தந்தவர்.





.jpg)







