ADS 468x60

31 December 2018

இப்படியா கொண்டாடணும் புதுவருடம்

Image result for 2019 happy new yearஎல்லாரும் நினைப்பதுபோல் ஆர்பாட்டமாக அல்லது அட்டகாசமாக ம்ம் எப்படியும் கொண்டாடலாம். ஆனால் அதனை பிறருக்கு தொந்தரவு இல்லாமல் நமது கலாசாரத்துக்கு பங்கம் வராமல் அவற்றைக் கொண்டாடுவதில்தான் சிறப்பு இருக்கின்றது.

25 December 2018

சிலருக்கு பதவிப் பிரச்சினை பலருக்கு உதவிப்பிரச்சினை!

Image may contain: one or more people, crowd and outdoorஆம் இன்று நள்ளிரவு முதல் பதவி உயர்வு பிரச்சினைகளை தீர்த்துத்தர வேண்டும் என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வேலைநிறுத்தத்தினை புகையிரத ஊழியர்கள் செய்ய உள்ளதாக செய்தி கேட்டேன்.

ஐயா! இது பண்டிகைக்காலம், விடுமுறைக்காலம் இந்தக் காலத்தில் உறவினர்களைப் பார்க்க செல்லலாம், பெற்றோர்களைப் பிள்ளைகளும் பிள்ளைகளை பெற்றோர்களும் என பார்க்கச் செல்லலாம். இவர்கள் எல்லாம் தங்களது வருமானத்துக்கு ஏற்ப்ப, சாதாரண வஸ் மற்றும் புகையிரதங்களிலே பயணம் செய்து வரும் நிலையில், இந்த அழுத்தம் சொகுசு வாகனங்களில் பாதுகாப்பு வசதிகளுடன் செம்மையாகச் செல்லும் அரசியல்வாதிகளை உங்கள் வேலை நிறுத்தம் எவ்வாறு பாதிக்கும்??

23 December 2018

ஒற்றைத்துளி

Image result for one drop floodஒற்றைத்துளி வெள்ளம்மென பற்றைதனை மேவும்
ஓராயிரம் பாரம்தனை வீசவெனக் காவும்
பெட்டையிடும் முடடையினை பேரெடுக்க கூவும்
கடடைதனில் மந்தியெல்லாம் மறுகிழைக்கு தாவும்

நீ கூவவும் தாவவும் பிறந்தவனல்ல-தமிழ்
தாயையும் தமிழயும் மறந்தவனல்ல
சேவைக்கு பயந்து இறந்தவனல்ல
ஒற்றைத் துளியாய் இரு
வெள்ளமாய் வரும் படை பின்னால்
வேங்கயாய் உடை தடை முன்னால்

18 December 2018

கேவலமான மனநிலையும் கேள்விக்குறியாகும் இளைஞர்களும்

Image result for boys  on road sri lankaமொத்த சனத்தொகையில் வேலையில்லாத வகுதியினரிடையே கிட்டத்தட்ட 15 விகிதமானவர்கள் இளைஞர்கள் என இலங்கையின் சனத்தொகை கணக்கீட்டு அறிக்கை சொல்லுகின்றது.

''வா மச்சான் இரு இப்படி, அதுசரி இப்ப உண்ட பிள்ள என்ன மச்சான் செய்யுறான்? என்று ஒருவர் கேட்க,  மற்றயவர் ''என்னத்த மச்சான் போண் ஒண்டு இருக்கு, மற்றது கிரிக்கட் மட்ட அதை தூக்கினான் எண்டா பொழுதுபடத்தான் திரும்ப வீட்டுக்கு வாறான். எவ்வளவோ சொல்லிப் பாத்தன். அடே விளையாடினாலும் வெல்ல விளையாட வேணும்டா என்று. கேட்டானா? எத்தனையோ கோஸ் இருக்கு படிக்க, ஆனா அவன் இதையெல்லாம் கேட்டபாடில்லை மச்சான்'' என்று வருந்திக்கொண்டார். 

இது இன்றய பெற்றோரின் நிலை.

15 December 2018

சுட்டிக்காட்டாமல் விடப்படும் பெரிய குறையொன்று

தேத்தாத்தீவு கிராமத்தின் கிழக்கே இருக்கும் வங்கப் பெருங்கடல் அதுபோல் மேற்கே இருக்கும் மட்டக்களப்பு வாவி ஆகிய இரண்டும் முக்கியமான பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. இதில் கிழக்கே இருக்கும் கடற்கரைவரை செல்லும் பிரதான பாதை "சுனாமிக்குப் பின்னர் மிக மிக மோசமடைந்து தூர்ந்து போயுள்ளது".

12 December 2018

பிராணிகளின் மரணங்களும் திராணியற்ற மனிதர்களும்!

No automatic alt text available.உலகில் நிமிடத்துக்கு நிமிடம் எத்தனை எத்தனை வளர்ச்சி, எத்தனை எத்தனை கண்டுபிடிப்புக்கள்! மாற்றங்கள்! ஆனால் அவை எல்லாம் மனிதர்களை ஏமாற்றுவதற்கே அன்றி அவர்களை மாற்றுவதற்கல்ல என்பதனையே உணருகின்றோம். ஆம் இன்று மனிதர்களுக்கு ஏற்படும் பல அசம்பாவிதங்களை படம்பிடிக்கும், தள்ளி நின்று வேடிக்கை பார்க்கும் ஒரு பொதுநோக்கில்லாத மனநிலை இன்றய சமுகத்தினர் மத்தியில் வேர்விட்டு வளர்ந்து வருகின்றது. ஐந்து வருடத்துக்குள் 1000 யானைகள் இலங்கையில் அகாலமரணமடைந்துள்ளன என ஒரு பத்திரிகைசெய்தியில் பார்த்தேன். அதேபோல் யானைகளின் தொல்லையால் மனித உயிர்கள் பல பலிகொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறே ஏனைய பல பிராணிகள், மிருகங்கள் கொல்லப்பட்டு வீதிகளில் அனாதரவாக மற்றவர்களுக்கு அசௌகரியமாக கிடப்பதனை கண்ணுற்றுள்ளோம்.

02 December 2018

தம்பி ரமேஸ்!

நான் எப்பவோ எழுத நினைத்தது இன்று எழுதுகின்றேன். ஒருவர் பயன் கருதாமல் செய்வதும் பயன் கருதிச் செய்வதும் என இரு செயல்கள் உள்ளது. இரண்டும் கலந்த ஒரு கலவை மற்றும் மாற்றத்துக்கான புதிய அத்தியாயமாக தம்பி ரமேஸ் அவர்களைப் பார்க்கின்றேன். அவர் ஒரு ஆசிரியராக இருந்து மாவட்டத்தில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றம், இன்றய மாணவர்களின் சந்தைக்கான கல்வியின் தேவையை அறிந்த, வேலைவாய்ப்புக்கான படையின் தலைவனாய் உன்னைப் பார்க்கின்றேன். இதை படித்தாலும் பலர் புரிய நாள் எடுக்கலாம்.

01 December 2018

திருமேனி உலகுயர் கணபதியே

No photo description available.
கலியுகப் பெருமானே காத்தருள் புரியும் தேனூர்ப் பதியப்பா
தொழுவேன் தொழுவேன் தொழுவேன் நான்
திருமேனி உலகுயர் கணபதியே
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

கருணை முகம் கொண்டு காவல் புரி தெய்வம்
கோயில் எழுந்த தீவு –தேனூர்
கோயில் எழுந்த ஊரு- 2
கடலும் ஆறும் கரை தொடும் நடுவினில்
வரும் அடியார் குறை தீர்கும் தலம்!
ஓம் கணபதி ஓம் கணபதி ஓம் கணபதி

25 November 2018

இலங்கை அரசியலில் உருவெடுக்கும் மூன்றாவது சக்தி!

Related imageஇன்று தொடர்ந்து நடந்தேறிவரும் அபகீர்த்தியான மக்கள் மன்றச் செயற்பாட்டில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளமையை நாட்டில் ஆரம்பித்திருக்கும் எதிர்பு அலை சுட்டிக்காட்டுகின்றது.

நாட்டின் யு.என்.பி மற்றும் எஸ்.எல்.எப்.பி ஆகிய இரு பெரும்பாண்மை கட்சிகளுக்கும் இருந்து வந்த மதரீதிhன மற்றும் இனரீதியான ஆதிக்க வாக்கு வங்கியில் அவர்களது நேர்மையின்மை, உண்மைத்தன்மை இழப்பு காரணமாக மக்களிடத்திருந்து எதிர்மறையான அபிப்பிராயத்தினை அவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலமை இப்பொழுது ஜனத்தா விமுத்தி பெரமுனைக்கு பெரும்பாண்மை மக்களிடையே தோன்றியுள்ள இடைவெளியை நிரப்பவதற்கு சாதகமாக அமைந்துள்ளது என்பது வெள்ளிடைமலை.

24 November 2018

வயல்காரன்!

Indian agriculture must modernise if it stands to keep up with population growth

உழுதிய விழைநிலத்தின்
புழுதியில் விதையாக்கி
வியர்வையில் தழையாகி
மழையினில் பயிராக்கி
பசியினில் வயிராறும்
படியரிசின் சொந்தக்காரன்!

22 November 2018

ஏறுமுகமான வாழ்க்கைச் சுமை, இறங்கு முகமான இலங்கையின் பணப் பெறுமதி

Sri Lankan Rupee depreciates further
இன்று இலங்கையின் மிகப்பிரதான பிரச்சினைகளாக ரூபாவின் விலைக்குறைவு மற்றும் எண்ணை விலையின் அதிகரிப்பு என்பன விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. அதில் இந்த ரூபாவின் மதிப்பு குறைந்திருப்பது பாரிய குழப்படியினை மக்கள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் தோற்றுவித்துள்ளது இவை பற்றி நாம் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.. எமது நாட்டின் வரலாற்றில் 1948ம் ஆண்டில் ரூபாயினுடைய நாணய மாற்று விகிதமானது 4.76 ஆகக் காணப்பட்டது. ஆயினும் அந்த நாணய மாற்று விகிதத்தை நீண்ட நாட்களிற்கு காப்பாற்ற முடியவில்லை. 1977ம் ஆண்டிற்கு முன்னர் ரூபாய் மதிப்பினை அவ்வப்போது மாற்றுவதன் மூலம் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் வெளிப்பாய்ச்சலை கட்டுப்படுத்தி அதனூடாக இறக்குமதி மற்றும் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தினர். 

20 November 2018

பிட்டும் தேங்காப்பூவுமாய் = களுதாவளை + தேத்தாத்தீவு


களுதாவளைச் சுயம்புலிங்கப் பிள்ளையார் சந்நிதானம் சென்றுபாருங்கள். பல வண்ண நிறங்களில் பூத்துக் குலுங்கும் ஓர் அழகான பூஞ்சோலை. அதன் பக்கத்தில் மதுரை மரக்கீற்று மண்ணைத் துடைக்கும், தாமரை பூத்து இருமருங்கும் சாமரம் வீசும், பசுமாட்டுப் பட்டி அழகுசேர்க்க, மாங்காய்களும், தேங்காய்களும் தொங்கிக் கொண்டு ஊஞ்சல் ஆடிக்கொண்டிருக்கும் மாந்தோப்பும், தென்னந்தோப்பும். 

இமைகளைத் திறந்து, மேல்நோக்கும்போது பறவைக் கூட்டங்கள் பாடிக்கொண்டிருக்கும் இசைக் கச்சேரி. இதற்கு ஜதி கூட்டுவதுபோல, வாவியின் ஓரத்தில் சலசலவென  வயலின் ஓசை. குளிர்ந்த காற்றை அணைக்க, சூரியன் தன் கிரணக்கைகளை நீட்டுகிறான். அடடா! அடடா! பார்ப்பதற்கும், கேட்பதற்கும் என்ன ஒரு ரம்மியமான நிகழ்வு. அத்தனையும் கூட்டாக இருப்பதால்தான், மனதிற்கு ஒரு புத்துணர்வைத் தருகிறது. இவை தனித்தனியாக இருந்திருந்தால் கற்பனை பண்ணி இரசிப்பதற்கு முடியாமல் இருந்திருக்கும். அது போல்தான் இன்று ஒரு பெரிய நிகழ்வில் களுதாவளை கிராமத்தவர் எமது தேத்தாத்தீவு கிராமத்தினையும் இணைத்துக்கொண்டு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருப்பது ஒரு அழகு, பெருமை, மகிழ்ச்சி. 

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது- அமரர் ஊர்தி சேவை.

பிறந்தோம் என்பதே முகவுரையாம்
பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்

எல்லாராலும் இதைப் பண்ண முடியாது அதுக்கு ஒரு மனசும் சேவை செய்யும் இதயமும் தேவை. அதனால் திருப்தியடைகின்ற ஒரு சேவகரைப்பற்றி எழுதியே ஆகணும். இன்றய நவீன பரபரப்பான உலகில் யாரையும் யாரும் கவனிக்காத அல்லது கண்டுகொள்ளாத நிலையிலேயே வாழ்க்கையைப் பழக்கிக் கொள்ளுகின்றனர். ஒருத்தருக்கொருவர் ஒத்தாசையாய் தமது நேரத்தினை பணத்தினை செலவு செய்த காலம் இன்று இல்லாமல் போயுள்ளது. அதுபோக இன்னொருவர் செய்யும் நல்லவற்றை முகப்புத்தகத்தில் கூடியிருந்து குறைகூறும் மக்களிடையே இவற்றை மனத்தயிரியத்துடன் முன்னெடுப்பதென்பது பாராடடுதற்குரியது.

15 November 2018

இலங்கைக்கான புதிய ஆட்சி முறையின் தேவைப்பாடும், அணுகுமுறைகளும்.

இன்று இந்தச் சூழலில் நமது நாட்டிற்கு தேவையாக இருப்பது, எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வெளியில் மீதமுள்ள காலத்தில் குறித்த உடன்பாடுகளுடன் சமமாக செய்யும் ஆட்சி முறை (bi-partisan) ஒன்றுதான். இந்த முறையில் நாட்டின் தலைவர் உட்பட எல்லா கட்சிகளின் தலைவர்களும் பங்குகொண்டு ஒரு தேசிய அமைச்சரவை கௌன்சிலை (The National Council of Ministers) ஸ்த்தாபித்து அதல் 25 கபினற் அமைச்சர்கள் மாத்திரம் நியமிக்கப்பட்டு, மீதமுள்ள 14 மாதங்களையும் நாட்டை நல்ல முறையில் நடாத்திச் செல்வது இன்று சாலப் பொருத்தமாக இருக்கும். இதில் பிரதி அமைச்சர்களோ, இராஜாங்க அமைச்சர்களோ இருக்க மாட்டார்கள். இந்தக் காலத்தில நீண்டகால எமது நாட்டின் மற்றும் எமது மக்களின் நன்மைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இவர்கள் செயற்படவேண்டும். 

14 November 2018

இன்று இலங்கையில் நடக்கப் போவது என்ன?

இன்று மகிந்த அணிக்கு இருக்கும் பலம் மக்கள் செல்வாக்கு, ரணில் அணிக்கு இருக்கும் பலம் பாராளுமன்ற செல்வாக்கு.

மகிந்த பாராளுமன்றம் சென்றால் வெல்ல முடியாத நிலையும் ரணில் மக்களிடம் சென்றால் தோற்றுப் போகும் நிலையும் காணப்படுகின்றது.

11 November 2018

வடகிழக்கில் பெண்களின் அரசியல் நுழைவு- காலத்தின் தேவை

Image result for woman in politics north east sri lankaபெண்கள் உயர் பதவிகளிலும், அரசியல் பீடத்திலும், தீர்மானமெடுக்கும் குலாமிலும் இருப்பது ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்படுவதனால் அவர்கள் பல இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். ஆனால் உலகம் கற்பிக்கும் சில விடயங்கள் எம்மை, பெண்களின் சமமான அரசியல் பிரயோகம் பற்றி சிந்திக்க வைக்கின்றது. அது குறிப்பாக உடல் உழ ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, பாதிக்கப்படும் வடக்கு கிழக்கில் கருத்தில் எடுக்கப்பட வேண்டிய ஒன்றாக பரவலாகப் பேசப்படுகின்றது. 

09 November 2018

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

இந்தா வந்துவிடும் இந்தா வந்துவிடும் என போய்க்கொண்டே இருந்தோம் காடுகள், மேடுகள், களணிகள் என கடந்தபோதும் வீடுகளைக் கண்ட பாடில்லை. ஆம் சிங்கபுரத்தினூடான ஒரு பாதையில் பொலன்னறுவையின் எல்லையில் பயணிக்கத் துவங்கி பின் நீண்ட நேரத்தின் பின் இடத்தினை அடைந்தோம். அதன் பெயர் குடா பொக்குண என்பதாகும். இந்த இடம் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்கள் ஒன்றை ஒன்று சந்திக்கின்ற இடமாக இருந்தது. இங்கு வாழுகின்ற அனேக குடும்பங்கள் விவசாயத்தினையே நம்பி வாழுகின்றதனை அவதானித்தோம். இங்குள்ள மக்கள் கல்வியில் முன்னேறி தம்மை பீடித்துள்ள துன்பங்களில் இருந்து விடுபட அவர்களுக்கான வசதி வாய்ப்புக்கள் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் பொழுது மிக மிக குறைவாகக் காணப்பட்டதகாலேயே, அங்கு 'நுண்ணறிவை வழங்கும் நூலகத்திட்டம்' இங்கு அமுலாக்கப்பட்டது.

05 November 2018

நாம் தட்டிக்கேட்கும் ஆழுமைப்பண்பு இல்லாத சமுகத்தை படைத்துள்ளோம்!

நாம் சிறுவயது முதலே மாணவர்களிடையே எமது சூழலை பாதுகாக்கும் நல்ல பழக்க வழக்கங்களை விதைக்க வேண்டும். அத்துடன் அவர்களுக்கு அவற்றை பிரயோகப்படுத்த கற்றுக்கொடுக்கவும் வேண்டும். எமது பாரதூரமான சூழல் பிரச்சினை நமக்கு சேய்மையில் இல்லை, அவை மிக மிக அண்மையிலேயே உள்ளது. நாம் இன்று விதைப்பவைதான் நாளை முளைத்து பயன்தரும். அதனை அடிப்படையாகக்கொண்டு மரம் நடும் நல்லெண்ணத் திட்டத்தினை பாடசாலை, கிராம மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து மண்டூர் 40ம் கொலணி கிராம பாடசாலை வளாகத்துள் நடைமுறைப்படுத்தி வைத்த வேளை!

04 November 2018

பாதிக்கப்பட்ட மக்களிடையே நுண்ணறிவை வளர்க்கும் நூலகத்திட்டம்

'இன்று வாசிப்பவர்களே நாளைய தலைவர்களாகின்றனர்' என்கின்ற வாசகத்துக்கு ஏற்ப நாளைய தலைமுறைகளை இன்றே உருவாக்கும் நுண்ணறிவினை வளர்க்கும் நூலகத்திட்டம் இலங்கை மற்றும் அவஸ்த்திரேலிய விருதுபெற்ற மாணவர் சங்கத்தினால் (Sri Lanka Australia award alumina  association )  மட்டக்களப்பு, பட்டிருப்பு வலயத்தில் அமைந்துள்ள மண்டூர் 40, ஜீ.ரி.எம் பாடசாலைக்கு ஒரு தொகை நூலகத்துக்கான தளபாடங்களும் மாணவர்களுக்கான புத்தகங்களும் 3.11.2018 அன்று அந்தப் பாடசாலையில் வழங்கிகைப்பப்பட்டது. மட்டக்களப்பில் இத்திட்டத்தினை இந்த அமைப்பின் உறுப்பினரான சி.தணிகசீலன் அவர்கள் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த பாடசாலைக்கான புதிய நூலகம் திறப்பு வைபவத்துடன் இந்தப் பாடசாலையை பசுமையாக்கும் நல்லநோக்கத்துக்கான ஆரம்ப கட்டமாக பலவகை பயன்தரும் மரங்கன்றுகள் நடப்பட்டு மாணவர்கள் இயற்கையை நேசிக்கும் மனப்பாங்கினை வளர்பதற்கான ஊக்குவிப்பு செயற்பாடாகவும் இது அமைந்திருந்தது.

28 October 2018

தனது தலையில் நெருப்பு வைக்கும் சமுகம்!

Image may contain: tree, plant, outdoor and natureபறவைகளும், மிருகங்களும் பாம்பும் பல்லியும் குரவையிடும் நாரைகளும் குரங்கும் குயிலும் படுத்துறங்கி பழமுண்டு காதுக்கினிய கதைபேசும் இயற்றையை அழிக்க எப்படிடா உங்களுக்கு மனம் வருது? பயம் இல்லாமல் செய்கின்றேர்களேயடா இந்தப் பாதகச் செயலை, உங்களைப் பேசி ஒன்றுமில்லை இவற்றுக்குடந்தையாக உள்ளவரை சொல்லவேண்டும். ஒரு மரம் வளர எத்தனை வரும் வேண்டும் தெரியுமாடா? ஒரு நாளிலையே ஒட்டுமொத்தமாய் கொழுத்தும் நீங்கள் உருப்படுவீர்களா? பல மரங்கள் இவைபோல் நெருப்பு வைக்கப்படுவதனை கண்ணுற்றேன், கவலைப்பட்டேன். தடுக்கயாரும் முன்வரவில்லை அதனால் எடுத்து வைக்கின்றேன் ஏற்றுக்கொண்டு ஏற்ற நடவடிக்கை எடுப்பீர்களென் நம்புகின்றேன். இவை ஒன்றிரண்டே பார்தேன் கேள்விப்பட்டேன் குடியிருப்புப் பகுதியிலும் நாகதம்பிரான் கட்டினிலும் மல்லாந்து கிடக்கும் மரங்களின் நிலையை. சென்று பாருங்கள் புரியும்.

24 October 2018

கேவலமா அரசே ஓடுதாமாம்!

செல்ல அத்தான் சேதி தெரிஞ்ச அத்தான் ஒரு சாங்கமாத்தான் அரச பேசிராங்க இங்க சாமான் வில கூடி ஏசிராங்க சின்னப் பொண்ணு விசயம் தெரிஞ்ச பொண்ணு கேள்விப்பட்டன் ஒண்ணொண்ணா கூடுதாமாம்- அட கேவலமா அரசே ஓடுதாமாம்..

19 October 2018

இது தெரியாமல் எத்தனை பேரடா இருக்கிறீர்கள்?

Image may contain: one or more people, people standing, tree, sky, plant, outdoor and natureவாகம் பூக்களும்
வயல் கீற்றும்
தாவும் மந்தியும்
தங்கிச்செல்லும் பறவையும்
மேவ ஒரு இடமுண்டோ
வானோர் தங்குமிடமோ
என மெச்சும் தேனுர்
இது எங்க ஊரு....

14 October 2018

நீயே உனக்கு என்றும் நிகரானவள்!

Image result for கண்ணீர் அஞ்சலி
மனசு உடைஞ்சு போனது
மாதா மறைந்த சேதி கேட்டு
கல்லை உடைத்து உடைத்து
சிலைகள் படைத்து படைத்து
கற்பக் கிரகங்களில் காட்சி
கரங்கள் குவிக்க வைப்பதில்லையா!

நீயும் ஒரு அழகிய சிலை!

வேதனம் மலிந்து வேதனை அதிகரிக்கும் தேயிலை தொழிலாழர்களுக்கான போராட்டங்கள்!

எமது நாட்டில் 150 வருடம் பழமை வாய்ந்த இந்த தேயிலை தொழிற்துறையானது. வருடா வருடம் அதன் ஏற்றுமதித்துறைசார்ந்து உலகளவில் அதற்கான கேள்வி வளர்ச்சி கண்டே வந்துள்ளது. உலகில் உள்ள 50 நாடுகள் இந்த தேயிலை உற்பத்தியினை செய்து வந்தாலும், அதில் பத்து நாடுகளே 90 விகிதமான தேயிலையினை உலகிற்கு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த பத்து நாடுகளில் சைனா, இந்தியா, கென்யா, இலங்கை, டேர்க்கி, ஈரான், இந்தோனேசியா, ஆர்ஜென்ரீனா மற்றும் ஜப்பான் ஆகியன உள்ளடங்கும். இவ்வாறு முன்னணியில் நிற்கும் தொழிற்துறையை ஏற்றிவைக்கும் தொழிலாழிகள் மட்டும் பின்னிலையில் இருக்கின்றமை பலர் மத்தியில் விழிப்பினை இன்று ஏற்படுத்தி, அவர்களது விடிவுக்கான அகிம்சைப் போராட்டங்கள் ஆங்காங்கே தோன்றியுள்ளமையினை அவதானிக்கின்றோம்.

எமது எதிர்கால விவசாயத்தின் அபிவிருத்தித்தேவை!

எமது எதிர்கால விவசாய அபிவிருத்தியின் தேவை, அவற்றில் ஏற்படும் மாற்றம் அவற்றுக்கான தந்திரோபாயங்கள் என்பன பற்றிய எனது உரையாடல் ஒலி ஒளிப் பதிவொன்று.

10 October 2018

சாரல் மழை ஒரு பக்கம் காரல் மழை மறுபக்கம்


இப்பொழுது மட்டு மண்ணின் கரையோரங்களில் உள்ள கரைவலை பாடுகள் உள்ள ஊர்களில் சிறியரக மீன்கள் அள்ளா கொள்ளையாக பட்டு நிரம்பி வழியத் துவங்கியுள்ளன. மக்கள் அவற்றை  உண்ணுவதற்கு வாய்ப்பாக உள்ளது, ஏனெனில் பெரிய மீன்கள் பட்டால் பொரியலுக்கும் கிடைக்காமல் அவ்வளவு மீன்களையும் மாற்றான் உண்டுமகிழ ஏற்றிவிடும் நடைமுறை, எமது வளத்தைப் பயன்படுத்தி நாம் நிறைவு காணமுன் ஏற்றுமதி செய்யும் நிலை நிறுத்தப்படனும். 

07 October 2018

அனர்த்தங்களில் நலிவுறும் நிலையை முகாமை செய்வதே வறுமைக் குறைப்புக்கான மூலோபாயம்.


Image result for disaster resilience people sri lankaஇன்று எமது நாட்டினைப் பொறுத்தளவில் பொருளாதாரச் சவால்கள் பல காரணங்களால் மிகப்பெரிய அபாயமான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருக்கும் பேரனர்த்தங்கள் அவற்றை தாங்கக்கூடிய திறனை பல அனுபவங்களினூடாகவும், விழிப்புணர்வுகள் மூலமாகவும் இன்று எமது மக்கள் வளர்த்துக்கொண்டுள்ளனர்.

உண்மையில் நாட்டின் மக்கள், தங்கள் தங்கள் வருமான உறுதிப்பாட்டினை கொண்டுள்ள தருணத்தினில், ஓர் அனர்த்தம் ஏற்படுமானால் அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் பலத்தினைக் அவர்கள் கொண்டிருப்பதுடன் ஏனையவர்க்கும் அவற்றைக் கொண்டு நேரத்துக்கு உதவும் ஒரு திறனைக் கொண்டிருப்பர். இந்த திறன் நாட்டின் அபிவிருத்திக்கான உந்து சக்தியாகவும் அதேபோல் வறுமைக்கு எதிராக போராடும் திறனாகவும் பார்க்கப்படுகின்றது.

05 October 2018

மனதுள்ள ஆசான் வழிகாட்டும் ஈசன்


என்னை ஏற்றிய எல்லா குருமாருக்கும் ஆசிாியா் தின வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------
நல்ல வழியை காட்டி வளர்க்கும் தெய்வங்களே! -இந்த
நாட்டில் கல்விச் செல்வம் பெருக நாளும் உழைக்கும் தேவர்களே!
கடல் போன்ற அறிவை- சிறு
குறல் போல புகட்டி
மலை போன்ற திறனை - குறுஞ்
சிலை போல ஊட்டி
ஒளியூட்டும் குருமாரை தெழிவாகப் பணிந்தால்
உருவாகும் நல்ல எதிர்காலம் நமக்கு!

04 October 2018

பேருக்கு ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள் பேராசிரியர்களாக சிலரே இருக்கின்றனர்.

Image result for kids under teacher' salary indiaதன்னம்பிக்கை, பண்பு, ஆற்றல், ஒழுக்கம், ஊக்கம், விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை 'ஆசிரியர் தினமாக' கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். சிறந்த படைப்பாளிகள் மற்றும் உன்னத மனிதர்களாகத் திகழும் ஆசிரியர்களைப் போற்றும் ஆசிரியர் திருநாளை இந்த நாளில் கொண்டாடுகின்றனர்.

குறைந்து வரும் நாணய மதிப்பும் குழம்பிக்கிடக்கும் குடிமக்களும்- ஒரு சமகால ஆய்வு


Image result for money depreciation sri lankan peopleஇலங்கை நாணயமதிப்பு தேய்வு பற்றி அண்மையில் எழுந்துள்ள சந்தேகங்கள் பற்றி பல அரசியல் பொருளாதார நோக்கர்கள் பலரும் பல கருத்துக்களை ஆதரவாகவும் எதிராகவும் வைத்துவருவதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி பல சந்தர்பங்களில் குறைவடைந்து வந்துள்ளது. இது யூன் 11ம் திகதி மற்றும் 20ம் திகதிகளில் 161.17 ஆக அதிகரித்து இன்று 170.56 ஆக வேகமாக அதன் பெறுமதி குறைவடைந்து வந்துள்ளதனை அவதானிக்கின்றோம். இவை பொதுமக்களிடையே மற்றும் பொருளாதார, அரசியல் ஆர்வலர்களிடையே ஏற்படுத்திய குழப்பங்கள் அவற்றுக்கான காரணங்கள் என்பன பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

30 September 2018

எமது நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையும் முயற்சியாண்மை விஸ்த்தரிப்பின் தேவையும்.


Image result for entrepreneurship sri lankaஇன்றய இலங்கையில், நிதி அமைச்சின் கருத்துக்களின் படி கடந்த காலங்களில் ஏறத்தாள 22,000 வணிக கடன்களை வழங்கியுள்ளதாகவும் இது ஒரு முக்கியமான படியாக இருப்பினும், இளைஞர்களை தொழிற்கயிற்சி சார்ந்து ஈர்ப்பதும் அவர்களிற்கு மாற்று வாழ்வாதாரங்களை கண்டு பிடிக்க உதவுவதும் மிகவும் சவாலானதாக உள்ளது. ஆனால், இது மிகவும் செலவீனமானதும் அதே வேளையில் அவர்கள் வருமானமீட்ட மிக நீண்ட காலம் தேவைப்படும் என்றும் கணிக்கப்படுகிறது.

24 September 2018

மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது

Related imageஜனநாயகத்துக்கான பலம் எப்பொழுதும் மக்களினாலே உருவாக்கப்படுகின்றது. இதுதான் யார் தமக்கான தலைவன் தீர்மானிப்பதுடன், நாம் என்ன வகையான கொள்கைகளை பின்பற்ற வேண்டும் அதுபோல் எந்தெந்த கொள்கைகளை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பனவற்றினை நிர்ணயனம் செய்கின்றன. இவையெல்லாம் இருந்தும் ஒரு ஜனநாயக நாட்டில் அந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பலமான பக்கச்சார்பற்ற நிறுவனம், யாவரையும் உள்வாங்கும் ஒரு நடைமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை இல்லையெனில அவை நல்லாட்சியல்ல அது மக்களின் ஒருங்கிணைந்த பலமும் அல்ல. மாறாக  மக்களின் பலமே நல்லாட்சிக்கான இதயத்துடிப்பாக இருக்கின்றது.

23 September 2018

வயது முதிர்ந்த பெற்றோர் தமது பிள்ளைகளின் நிழலில் வாழவே விரும்புகின்றனர்.

உன்னைப்போல் பிறரை நேசி என்பதற்கிணங்க, பிறரால் நேசிக்கப்படாமல் விடப்பட்டவர்களை நோக்கி ஒரு அன்புப் பயணத்தினை எனது மனைவியின் பிறந்த தினத்தினை முன்னிட்டு மேற்கொண்ட போது!. முதியோர் வாரம் நெருங்கும் இந்த நேரத்தில் இந்த நிகழ்வினை அவர்களுடன் இணைந்து மகிழ்ந்துகொண்ட தருணம் மறக்கமுடியாதது.

22 September 2018

இலங்கை தற்கொலை செய்து இறப்பவர்களின் நாடுகளின் பட்டியலில் முன்னணியில்


உலகின் அபிவிருத்தி அடைந்துவருகின்ற நாடுகளில் முக்கால்வாசி தற்கொலைகள் அல்லது அதற்கான முயற்சிகள் நடுத்தர அல்லது ஆகக்குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிடையே இடம் பெற்று வருகின்றது. அவை கிட்டத்தட்ட ஆண்டொன்றுக்கு 800,000 என உலக சுகாதார நிறுவகம் தெரிவித்துள்ளது. இது மொத்தமாக வேறு காரணங்களால் இறக்கின்றவர்களில் இருந்து 1.4 விகிதமாகும். இலங்கையின் சமுக வலைத்தளங்கள், இணையத்தளங்கள் மூலமான செய்திகளினடிப்படையில் இந்த தற்கொலை அல்லது அதற்கான முயற்சி அதிகரித்துக்கொண்டு வருவதாகக் கூறப்படுகின்றது.

13 September 2018

அடிப்படை மக்களை ஆக்கிரமிக்கும் எரிபொருள் விலைச் சூத்திரம்!


Image result for fuel price cartoon in sri lankaமக்களே நீங்கள் ஆத்திரமடைவது புரிகின்றது. மாசத்துக்கு மாசம் அதிகரிக்கும் சூத்திரத்தினால் ஆத்திரமடைந்து காத்திரமான முடிவெடுக்க முடியாமல் உழசை;சலுக்கு பாத்திரமாகும் மக்களின் நிலை அந்தோ பரிதாபம்.
நமது அன்றாட வாழ்வில் தவிர்க்கமுடியாத ஒரு பொருளாக இந்த எரிபொருட்கள் இரண்டறக்கலந்துள்ளன அதனால் இவை இல்லாத வாழ்க்கையினை நாம் கற்பனை செய்துகூடப் பார்க்கமுடியாது. இது எமது நாளாந்த  வாழ்வில் உபயோகிக்கும் அனைத்து விடயங்களையும் வெகுவாகப் பாதிக்கும் என்பது வெளிப்படை. நாளாந்தம் கடினமாக வேலை செய்து அன்றாட உணவுக்காக உழகை;கும் மக்களின் நிலையினை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள், நிச்சயம் ஏற்கனவே நலிவுற்ற மக்களை இன்னும் ஒரு படி மேலாக சென்று வலுவிழக்கச் செய்யும் என்பதில் இல்லை ஐயம்.

11 September 2018

மாற நினைத்தால் மாறலாம்!


Image result for jealous at home india
பாருடா இவன, இப்ப நல்ல வேலை ஒன்று கிடைச்சிருக்காமே!, ம்ம்ம்ம் இவர் கிடந்த கிடை எங்களுக்கு தெரியாதா! அந்தக் காலத்தில கழிசன் போடயும் காசில்லாம கெடுடந்ததுகளுக்கெல்லாம் டை கோட்ஸ் வேற, அப்பாக்கா கறல்புடிச்ச சயிக்கிளில திரிஞ்சதுகளுக்கு காறு ஒரு கொற, கிடுகு மட்டைக்க கிடந்தவங்களுக்கு ஓட்டு வீடு ஒரு கேடு, கொலர்சிப் பாசிபண்ண வைச்சி என்னத்த புடுங்கப்போறாவோ ஏதோ அவ ஏதோ படிச்சிக் கிழிச்ச மாதிரி.

10 September 2018

வறுமையில் அம்மணமாகும் மட்டக்களப்பு மக்கள்

வறுமையில் அம்மணமாகும் எமது சமுகத்தினைப் பார்த்தால், எமது மக்களுக்கான உத்தியோகத்தர்கள் வேலை செய்கிறார்களா? இல்லை அரசாங்கத்தின் சிஸ்ட்டத்தில் வேலை இல்லையா? ஒன்றுமே புரியவில்லை! எங்கோ தப்பு நடக்குது பாருங்க. நான் ஒரு தடைவ #வாகரையில் உள்ள #மதுரங்குளம்பக்கம் சென்றேன் அங்கு பல குடும்பங்களை சென்று நேரில் பார்க்கக்கிடைத்தது. இங்குள்ள குடும்பங்கள் வறுமையின் இலக்கணத்துக்கு சற்றும் பிசகாத உதாரணமாகத் திகழ்கின்றனர்.

05 September 2018

தண்ணீரை வணிகப் பொருளாக மாற்றி எம்மை வரலாற்றின் கொடிய பற்றாக்குறைக்கு அழைத்துச் செல்லத் துடிக்கும் தனியார் முதலைகள்!

எமது பகுதியில் திரும்பத் திரும்பத் தண்ணீரைப் பற்றிப் பேசக் கூடியவர்களால்  ' நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவரின் வாக்கு அடிக்கடி சொல்லப்படுகிறது. இங்கு சொல்வது நல்ல நீரைப் பற்றி, உப்பு நீரைப் பற்றி அல்ல என்பதும் நமக்குத் தெரியும். ஆனால், அந்த நன்நீரைப் பற்றிய விவரங்கள் நமக்கு அதிகம் தெரியாது. இவ்வாறு ஒரு முக்கிய வளம் எமக்கு கிடைத்த ஒரு சொத்து அந்த வளத்தின்மேல் பிறருக்கு உள்ள அக்கறை, அதன்மூலம் எதிர்கொள்ள இருக்கும் பாதக விளைவுகள் மற்றும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான வழிவகைகள் என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளது.

04 September 2018

கேட்டால் தருவோம் பிடுங்காதே!

Image result for rights for water
அருமை உயிர்களே வந்து சேருங்களேன் வெற்றி நமதே சொந்த தேசம் நமதே! உணர்வுகள் ஒன்றி அனைவரும் ஒன்றாய் உரிமைகள் வெல்ல ஓர் வழி நின்றால் வெற்றி நமதே! குரோதங்கள் மறந்து மனங்களைத் திறந்து வளங்களைக் காக்க கைகளைத் கோர்த்தால் வெற்றி நமதே!

02 September 2018

மேசன் வேலைக்கு படித்துவிட்டு வைத்திய தொழில் புரியலாமா!

Image result for agriculture officersஇன்று ஒரு நண்பருடன் மிக நீண்ட சேரம் உரையாடக் கிடைத்தது. அருமை எமது பிரதேசம் எப்படிடா முன்னேறும் என்று கேட்டார். ஏன் அதற்கு என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார் பாருங்க, "வைத்தியருக்கு படித்தவரை மேசன் வேலை பார்க்க வைக்கிறார்கள்!" புரியலவே என்றேன்.
எமது மாவட்டத்தில் வேலைத்தளங்களில் பல்கலைக்கழகங்களில் உதாரணத்திற்கு நாடகம் பாடத்தில் பட்டத்தை முடித்தவர்கள் மொழி பெயர்பாளர்களாகவும், நுகர்வோர் உற்பத்தி அதிகாரிகளாகவும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகவும் இருக்க, விவசாயப்பட்டதாரிகள் ஆரம்ம பாடசாலை ஆசிரியராகவும், வங்கி கணக்காளராகவும், நிருவாக உத்தியோகத்தராகவும் அமர்த்தப்பட்டுள்ள கொடுமை எங்குமே பார்க்க முடியாதுங்க.

01 September 2018

மனித மாற்றத்தை ஏற்படுத்துங்கள் மதமாற்றத்தினை தடுக்கலாம்.


Image result for religious convert
தலைப்புக்கு வருவதற்கு முன் ஒரு சிறிய விளக்கத்தினை தரலாம் என நினைக்கின்றேன். இந்துக்கள் எல்லோரும் கையில் ஆயுதம் வைத்திருப்பதில்லை. ஆனால் இந்து மத கடவுள்களின் கையில் ஆயுதங்கள் வைத்திருக்கின்றன. மற்ற மதக் கடவுள்களின் ஆயுதங்கள் இல்லை. ஆனால் ஆயுதத்தினை மற்ற மதத்தினர் கையில் வைத்துள்ளனர். மனிதர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதாலேயே இந்து மதக் கடவுளின் கைகளில் ஆயுதம் உள்ளது. கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும என்று நினைப்பதாலேலே மற்ற மதத்தவர் கையில் ஆயுதங்கள் உள்ளது. என கண்ணதாசன் கூறியிருப்பது இன்றய நிலையுடன் ஒப்பிட்டு பார்க்க வைத்துள்ளது.

05 August 2018

வன்முறையற்ற கையாழுகையே கல்விக்கூடங்களில் வளர்ச்சிபெற்ற பிரஜைகளை பிரசவிக்கும்


Image result for conflict among school sri lankaகல்வி ஆரம்ப காலம் தொட்டு ஒரு மனிதன் பகுத்தறிந்து (நல்லது கெட்டது எதுவென) நடப்பதற்கும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்ட ஆழுமைப்பண்பை மேலோங்கச் செய்யவும் பிறருக்கு துன்பம் விளைவிக்காத, உதவி செய்யக்கூடிய மனப்பாங்கை விருத்திசெய்யவும் என உருவாக்கப்பட்டிருந்தது. அதனால் மனிதன் ஏனைய விலங்குகளில் இருந்து நாகரிகமானவனாக மதிக்கப்பட்டு ஒரு தனித்துவமான அடையாளத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறான் என்பது பல வரலாறுகள் சொல்லும் சாட்சி. 

28 June 2018

டெங்கு ஆய்வு முடிவுகளின் தேசியக் கலந்துரையாடல்

ஆய்வு பற்றிய ஒரு தேசியக்கலந்துரையாடலின் இடையில் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் முதுநிலைப் பேராசான் மதிப்புக்குரிய டயஸ் அவர்களை கண்டு அளவளாவியதில் மட்டில்லா மகிழ்ச்சி எனக்கு! இன்னும் எமது நாடு ஆய்வுகளை ஊக்குவிப்பதில் பின்தங்கியே நிற்கின்றது, வருமுன் காப்பதற்கு பதிலாக வந்தபின் ஓடித்திரியும் ஒரு அரச நிர்வாகத்தை என்ன சொல்வது என கவலைப்பட்டுக்கொண்டதுடன், உங்களைப்போன்ற ஆய்வார்வம் கொண்டவர்கள் இந்தக் கருசனையினை எடுத்து இப்போந்த ஆய்வுகளை செய்ததனை நான் பாராட்டுகின்றேன் என்றார்.

27 June 2018

சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது


Image may contain: 2 people, people playing musical instruments and people sittingமாணவர்களிடையே கடமை, அறம், விழிப்புணர்வு மற்றும் ஆழுமைப்பண்பு ஆகியவற்றை வளப்படுத்த சமுகத்தில் முன்னிலை வகுப்பவர்கள் பின்னிற்க்கக்கூடாது. அவர்களுக்காக எமது நேரத்தினையும் உள்ள திறனையும் பகிர்ந்தளித்தல் எமக்கெல்லோருக்குமுள்ள தார்மீக பொறுப்பாகும். அதை நான் என்னால் முடிந்தவரை நெடுங்காலமாக செய்து கொண்டு இருக்கின்றேன். ஈதல் அறம், என்பதற்கிணங்க மற்றவர்களுக்காக எமது நேரத்தை, பணத்தினை, மற்றும் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருவது எவ்வளவு அறம்பாற்பட்டது என்பதனையும் இன்னொருவருக்கு வழங்கிக்கொண்டிருப்பதே இன்பம் என்பதை வள்ளுவர் ஈதல் இன்பம் எனவும் கூறியிருப்பது, நாம் நமக்காக மாத்திரம் வாழாமல் பிறருக்காகவும் வாழ தலைப்படும்போதே நாம் அறவாழ்வுக்கும் நுழைகின்றோம்.

17 June 2018

'சூழலை பேணி இடர்தணிப்போம்' பிரதேச செயலமர்வு- வெல்லாவெளி.

செந்நெல்லும்  பாலும் தேனும், தீந்தமிழ் சுவையும் கலையும், வாவிமகள் போல் வற்றாது ஓடும் மீன்பாடும் தேநாடு, வளநாடு என்று போற்றுகின்றோம் எம் தென்தமிழீழ வளநாட்டை, மகிழ்ச்சிதான். இருந்தும் வயலை நம்பியே வாழ்க்கை என்ற மக்களின் வயிற்றிலடிக்கிறது இயற்கை, வெள்ளமாக, வறட்சியாக இன்னும் பலப்பல வடிவங்களில். காரணம், இயற்கைக்கு மனிதர்கள் செய்யும் இடர்தான் வேறில்லை. இந்த இடர் வரக்காரணங்கள் என்ன? இதனால் என்ன தீய விளைவுகளை எல்லாம் நாம் எதிர்கொள்ளுகின்றோம்? அவற்றை எவ்வாறு வெற்றிகொள்ளலாம்? ஏன்பன பற்றி எல்லாம் வெல்லாவெளி கலாசார மண்டபத்தினில் சங்கமித்த விவசாயிகள், கிராம அபிவிருத்தி சங்கங்களின் தலைவர்கள், அனர்த்த முன்னாயத்த குழுக்களின் உறுப்பினர்கள், அபிவிருத்தி மற்றும் கிரா உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்பூட்டும் செயலமர்வினை 13.06.2018 அன்று பிரதேச செயலகததுடன் இணைந்து சக்தி உதவும் கரங்கள் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

02 June 2018

நூலக பயன் பாட்டை ஒருவர் அறிந்துகொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப்பருவம் தான்.

'எனக்கு என்றால் சரியான விருப்பம் சேர் இந்த அணில், குரங்கு, சிங்கம் எல்லாம் இருக்கிற கதைப்புத்தகம் வாசிக்க, எங்கள டூறு கூட்டிப்போனாப்புல அந்தப் புத்தகதங்களை எல்லாம் பாத்த, அதுக்குப் பிறகு அப்பாட்ட சொன்ன அவருக்கு அதுகள் எங்க இருக்கிது என்றும் தெரியா என்றவர்' என்று ஒரு 3ம் தரத்தில் உள்ள மாணவன் சொன்னார். 'நாங்க இந்த 40ம் கொலனில இருந்து வருசத்துக்கு மட்டும்தான் களுவாஞ்சிக்குடி மாக்கட்டுக்கு உடுப்பெடுக்கவும், வருசத்துக்கு சாமான் வாங்கவும் டவுணுப்பக்கமா போவம், அங்கதான் புத்தகக்கடை இருக்கிதெண்டாங்க, ஆனா அதுக்கெல்லாம் காசு கூடவாம் என்றதால அப்பா அம்மாட்ட கேட்கிறதில்லை. பள்ளி புத்தகங்கள் மட்டும்தான் எங்களுக்கு தெரியும்' என்று இன்னொரு மாணவரும் கூறினார்கள் அந்தப் பாடசாலையின் ஆசிரியர்கள் முன்னே!

10 May 2018

கிழக்கில் உடனடி வேலைக்கு ஆள் தேவை!

இன்று ஒரு கலந்துரையாடல், அது கிழக்கில் உள்ள தமிழ் இளம் பெடிகள் தனியார்கள் வேலை தருகின்றோம் என அழைத்தாலும் போகின்றார்கள் இல்லையாம். காரணம் தாம் வேலை செய்வதென்றால் ஒன்றில் சுயதொழில் அல்லது அரச தொழில் செய்யவேண்டும் அல்லது நமக்கென்ன வயதா அம்மா அப்பா அல்லது வீட்டில் உள்ள யாராவது உழைத்து தருகின்றனர் தானே என்ற மனோ நிலையில் வாழுகின்றனராம்.

01 May 2018

நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார!

Image may contain: one or more people, people standing, grass, outdoor and nature
நாடு இருக்கும் நெலயில
ஏறி இருக்கும் வெலயில
மிச்சம் மீதி புடிக்க முடியல- எங்க புள்ளங்களாம்
பள்ளிக் கூடம் படிக்க முடியல
நாளுக்கு நாள் மாத்துராங்க மந்திரிமார
ஆளுக்காளு அடிக்கிறாங்க சனங்க காச
பொதுசனங்க பாவம்
போட்ட வோட்டு சாபம்
தலைவன் யாரு தெரியவில்ல
வழியும் வேறு புரியவில்ல

30 April 2018

உழைப்போர் யாவரும் ஒன்று..

Image may contain: 2 people, people sitting and indoorஎத்தனை துன்பத்துக்குள் எம்மக்கள் அகப்பட்டு அடிமைப்பட்டு வாழ்க்கை தேய்வடைந்து இன்றும் ஒன்றை பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள், அதுதான் அவர்களது "சுயமுயற்ச்சி". இருந்தும் என்ன நிறைந்து கிடக்கும் வளமார்ந்த பூமியில் முதலீட்டு செறிவின்மையால் பிறருடைய கழுகுக் கண்களுக்கு எழும்புத்துண்டாகும் துர்ப்பாக்கியங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளதல்லவா!!

28 April 2018

திருக் கொம்புச் சந்தி முதல்வா!

திருக் கொம்புச் சந்தி முதல்வா
திரு விழாக் காண வருவேன் -எமை
காத்து காத்து அருள்வாயே!
அறுபதடி உயர்ந்து 
அருளும் முறை வியந்து
வணங்காத நாளென்ன நாளோ!
வெளி வீதி திருத்தேரில் வரும் நாள்
ஓளி வீசும் திருக்காட்சி தருவாய்
அமரா உன் அருள் தேடி வருவேன்- எனை
காத்து காத்து அருள்வாயே!

23 April 2018

"கொம்புச்சந்திநாதம்” இசை இறுவட்டு வெளியீடு

மட்டக்களப்பு, தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தினை முன்னிட்டு எமது கலைஞர்கள் ஒன்னறிணைந்து கொம்புச்சந்தி விநாயகர் புகழ்பாடும் #கொம்புச்சந்தி_நாதம் இறுவட்டானது, 2018.04.23 திங்கட்கிழமை அன்று ஆலயத்தின் கௌரவ தலைவர் திரு.விமலானந்தராசா தலைமையில் ஆலய பரிபாலன சபையினரால் கொம்புச்சந்திப் பேராலய மகா மண்டபத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டது. 

22 April 2018

நீங்க நல்லவரா கெட்டவரா!! சட்ஜனும் நானும்

21 April 2018

மட்டக்களப்புக் கோட்டை (Batticaloa Fort )

கோட்டை கட்டுமளவக்கு செல்வங்கள் நிறைந்து காணப்பட்ட பழம்பெரும் மாநிலங்களிற்க்குள் மட்டக்களப்பு மாநிலமும் ஒன்றாகும். புராதன வரலாற்று பாரம்பரியங்களுடன் வாழும் தமிழ் மக்களை தன்னகத்தே கொண்ட பழம்பெரும் நகரில் போத்துக்கீசர் காலம்தொட்டு பழமை வாய்ந்த அழகான உறுதி மிக்க கோட்டை இன்றும் மிடுக்குடன் வந்தோரெல்லாம் வசீகரிக்கும் ஒரு இடமாக காணப்படுகிறது. 

16 April 2018

பூரித்துப் போனோம்! அப்படி என்னதான் நடந்தது அங்கு?

 2500 ஆண்டுகால மட்டக்களப்பின் பாரம்பரியம் மனிதர்களாலோ கட்டிடங்களாலோ சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததினாலோ மட்டும் சிறப்புற்றுவிடவில்லை. அது நம் கலாச்சாரம், பழக்கவழக்கம், வீர விளையாட்டு, மைந்தர்களின் பாசம், மண்மீது நாம் கொண்ட நேசத்தின் விளைவாய் பிறப்புற்றது. அதை இங்கு தேத்தாத்தீவு மண்ணின் மைந்தர்கள் நிருபித்துக்காட்டியுள்ளனர்.

25 March 2018

இலங்கையில் ஆறாவது தமிழ் முழுநீளத் திரைப்படம் மட்டக்களப்பில் வெளியீடு!

தமிழில் இலங்கைத் சினிமாத்துறை பெரிதாக வளர்சி பெறவில்லை காரணம் இந்திய சினிமாக்களின் செல்வாக்கு மற்றும் அதனுடன் போட்டிபோட முடியாத நிலை. ஆதனால் ஒரு சில கலைப்படைப்புகள் மாத்திரம் வெளிவந்துகொண்டிருந்தாலும் அவை கோலோச்ச
வில்லை, பிரகாசிக்கவில்லை. அந்த நிலையில் வெறும் ஐந்து திரைப்படங்களே கடந்த முப்பது ஆண்டுகளில் இலங்கையில் தமிழில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 March 2018

எல்லைகளில் பிள்ளைகளின் நிலை- கவலைக்கிடமாகும் போஷாக்கும் கரம்கொடுக்கும் திட்டமும்

சிறுவர்களிடையே போஷாக்கின்மை எமது மாவட்டத்தின் பாரிய சவாலாக இருந்து வருகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள உண்மை. இது இடை குறைந்த பிள்ளைகளை எமது கிராமப்புறங்களில் அதிகரித்துக் கொண்டுள்ளதுடன் அவர்களது போஷாக்கு மட்டம், கல்வி என்பனவற்றில் முன்னேற முடியாத நிலையினையும் உருவாக்கியுள்ளது. எல்லா வகையிலும் பின்தங்கிய எமது மக்களிடையே இவ்வாறான குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு உதவுகின்ற திட்டங்கள் மந்த கதியிலேயே எடுத்து வரப்படுவது அனைவரும் அறிந்ததே.

27 January 2018

புதிய மாற்றம்!

காக்காச்சிவட்டை அறநெறி மாணவர்களுக்கு அறநெறி சார்ந்த போட்டிகளின் பின் சான்றிதழ் வழங்குதலும் ஊக்குவித்தலும் இடம்பெறும் தருணம்!

21 January 2018

நீரோடும் நாட்டில் மீன்பாடக் கேட்டு நெல்லாடும் பூமியிது!



இந்தப்பாடல் என்னால் இற்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு பெரும்பாலும் அனைவராலும் அறியப்பட்ட பாடல். இப்போது இந்தப்பாடலுக்கான இசையை செல்வன் மனோ யோகராஜ் அவர்களால் அமெரிக்காவில் இருந்து அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.

06 January 2018

அடையாளங்கள் நம்கையை விட்டுப்போகாமல் கட்டிக்காப்பது நமது கையில்தான் உள்ளது.

நமது பாரம்பரியத்தினை போற்றும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் சர்வதேச வேஷ்டி தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. எமது தமிழர்கள் சாதி மதம் கடந்து அவர்களது அடையாளமாக ஆண்கள் அணிய விரும்புவது வேஷ்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்துக்கு அடையாளமாகவும் நமது கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது இந்த வேஷ்டிதான். நமது  தட்ப்ப வெட்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொருத்தமானதும் வேஷ்டிதான்.

தமிழர்களின் பாரம்பரிய அடையாளச் சின்னமாகத் திகழும் உணர்வுமிக்க ஆடையான இந்த வெண்ணியற ஆடை வேஷ்டியை உடுத்துக்கொண்டு செல்லும்போது இனம்தெரியாத ஆழுமைத் தோற்றமும் கம்பீரமும் தானாகவே வந்துவிடுகின்றது. வேஷ்டி உடுத்துபவர்களின் மனசி நேர்மையாகவும், தூய்மையானதாகவும் இருக்கும் என்பதுதான் எமது மூதாதையர்களின் நம்பிக்கை. அது இப்போது இருக்கிறதா இல்லையா என என்னிடம் கேட்காதீர்கள்.