ADS 468x60

13 August 2021

நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,

அரசாங்கம் கடைசி முயற்சியாக மட்டுமே நாட்டில் முடக்குதலை விதிப்பதாக கூறியது. அதன் பொருள் என்னவென்றால், நாடு இதுவரை முடியாத இறுதி நிலைக்கு வரவில்லை என்பதுதானே. இருப்பினும், கோவிட் தொடர்பான இறப்புகள் இப்போது தினசரி சராசரியாக 150 ஐத் தாண்டிவிட்டன, மேலும் குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபுகளின் எண்ணிக்கைப் பதிவு மோசமாக இருக்கின்றது மறுபுறும். 

அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.