இந்த ஆனந்தம் பொங்கும் நாளில், எங்கும் மகிழ்ச்சி பரவி, உங்கள் இல்லங்கள் அமைதியினாலும், அன்பினாலும், ஆசீர்வாதங்களினாலும் நிரம்பட்டும். தேவனின் அளவற்ற அன்பு உங்கள் வாழ்வில் ஒளியூட்டட்டும்.
25 December 2025
"தேவ கானங்கள்" இசைப் படைப்புடன் உங்கள் ஆசீர்வாதங்களைப் பெற!
29 September 2025
இலங்கைத் தமிழர்கள் மத்தியில் விஜயதசமி
தசரா என்பது இந்தியாவின் பிரமாண்டமான கொண்டாட்டங்களின் மூலம் வெளிப்படும் ஆழமான ஆன்மீக, கலாசார ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.
குலசேகரன்பட்டினம், மைசூர், கொல்கத்தா, டெல்லி போன்ற வெவ்வேறு மாநிலங்களில் உள்ள மாறுபட்ட வழிபாட்டு முறைகள், இந்தியாவின் புராணக் கதைகளின் பன்முகத்தன்மையை உலகிற்கு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய உடைகள் மற்றும் உள்ளூர் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கு இந்த விழாக்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
- மைசூர் 'நாடா ஹப்பா' போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற கொண்டாட்டங்கள், தேசிய மரபுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கங்கள் உணர்ந்துள்ளதை வலியுறுத்துகின்றன.
12 May 2025
சித்திரா பௌர்ணமி: ஈழத்தமிழர்களின் ஆன்மிகமும் பண்பாட்டுப் பிணைப்பும்
04 May 2025
களுவாஞ்சிகுடி மக்களின் செயற்பாடு கண்கலங்க வைத்துவிட்டது கொம்பன் யானையில் கொடி சுமந்தோம்.
தேற்றாத்தீவு கொம்புச்சந்திப் பிள்ளையார் பேராலய வருடாந்த பிரமோட்சவத் திருவிழாவுக்கு கொடியேற்றம் நடக்கிற அந்த நாள்... என் மனசுல ஒரு பெரிய சந்தோஷம் பொங்கி வழியுது. வருஷம் முழுக்க இந்த நாளை எதிர்பார்த்து காத்துக்கிடப்போம். எங்க ஊரு பிள்ளையாருக்கு திருவிழான்னா அது ஊருக்கே ஒரு பெரிய கொண்டாட்டம்.
13 April 2025
'விசுவாசுவ' வருடப்பிறப்பு சுப நேரங்கள்- 2025
13 March 2025
மாசி மகம்: இவ்வளவு சிறப்புண்டா? அட இத மிஸ்பண்ணலாமா
இலங்கையில் பண்டைய
காலத்திலிருந்து இந்து பண்பாட்டு மரபுகளில் மிகச்
சிறப்பாகக் கொண்டாடப்படும் புனித நிகழ்வுகளில் ஒன்று மாசி மகம். இது ஒரு முக்கியமான தீர்த்த திருவிழாவாக கருதப்படுகிறது, குறிப்பாக முற்கால சித்தர்கள், ரிஷிகள் மற்றும் புனிதர்கள் வழிபட்ட ஒரு
பரம பாக்கிய நாளாக விளங்குகிறது.
தமிழ் மாதமான மாசியில் (பிப்ரவரி - மார்ச்) மகம் நட்சத்திரம் வரும் போது, இதனை மிகுந்த பக்தியுடனும், ஆன்மீகத் தூய்மையுடனும் கொண்டாடுவதை பரம்பரையாய்த் தொடர்ந்து வருகிறோம். இலங்கையின் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், நுவரெலியா, கொழும்பு மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில், இந்த நாளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
24 February 2025
அன்னதானமும் வீண்விரயமும்- நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள்
14 January 2025
தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்
தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்"
என் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உளம் கனிந்த, மகிழினிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
நம் நாட்டில் எந்த நல்ல செயலையும் தை மாதத்தில் துவங்குவது என்பது மரபு. தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும், திருநாள் ஆகும். இது சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில் கொண்டாடப்படுகின்றது. அறுவடையால் பெற்ற பலனுக்காக கடவுளர்க்கு நன்றி தெரிவிக்கும் முறையில் இம்மாதத்தில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
27 December 2024
நவீன உலகில் மனித நேயத்தின் வீழ்ச்சி: ஆன்மிக சமுதாயத்தின் மீளுருவாக்கம் தேவை
இன்றைய உலகம், மனித நேயத்தை பெரிதாக மதித்து வருவதில்லை. பணம், அதிகாரம், மற்றும் சமூகப் பங்கு ஆகியவற்றின் அடிப்படையில் மனிதர்களை பிரிக்கின்ற ஒரு சுயநலமிகு சூழல் நிலவுகிறது. ஆனால், நம்முடைய வளர்சி என்பது வெறுமனே பொருளாதார ரீதியில் மட்டுமே இருக்கக்கூடாது, ஆன்மிக ரீதியிலும் வளர்ந்து இருக்க வேண்டும்.
நாம் தற்போதைய சமுதாயத்தின் ஆன்மிக வீழ்ச்சி குறித்து உடனடியாக கவனம் செலுத்தப்பட வேண்டும். இவ்விதம் நகராமல் இருந்தால், எதிர்காலத்தில் நாம் எதிர்பார்க்கும் மாற்றங்களின் அடிப்படையில் தடைகள் உருவாகக் கூடும். ஆன்மீகம் பல இடங்களில் அட்டகாசமாக மாறியுள்ளதனை நாளுக்கு நாள் அவதானித்து வருகின்றோம்.
10 July 2024
களுதாவளைச் சுயம்புலிங்கர் பேராலயம் ஒரு ஆன்மீக நிறுவனமாகும் கனவு!
'களுதாவளைக்கு நீங்க வந்து பாருங்க-அங்கு
கணநாதன் சந்நதியில் நின்று பாருங்கள்
ஆறாத காயங்களும் ஆறி போகுங்க-அது
ஆறாவிட்டால் வந்து என்னைக் கேளுங்க'
எழுத்தினை இப்படி துவங்குகின்றேன். எனது சிறிய வயசில் பசுமரத்தாணிபோல் பதிந்த பல விடயங்களில் என்னுடைய அம்மம்மாவின் பாசம் அன்பு என்பவை மறக்கமுடியாதது. ஆம் எனது அம்மம்மா என்னுடனும் எல்லோருடனும் சிரித்த முகத்துடன் அன்பாகவும் பாசமாகவும் இருக்கும் ஒரு இறை நம்பிக்கைகொண்டவர். அவர்; பார்ப்பதற்கு எப்பொழுதும் நெற்றி நிறைய நீறணிந்து, சுத்தமாக உடைதரித்து மங்கலமாக இருப்பார்.
01 March 2022
சிவராத்திரி என்ன மகிமையை உடையது?
சரி, சிவராத்திரி என்றதும் நம் நினைவுக்கு வருவது இரவு கண் விழித்தலும், லிங்கங்களுக்கு செய்யப்படும் பலவகையான அபசேகங்களும், நான்கு கால பூஜைகளும்தான்.
அதையும் தாண்டி நாம் பலவற்றினை அறியவேண்டியுள்ளது. பாருங்கள், யுகம் யுகமாக நடந்து வரும் சிவராத்திரி வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் வருடத்திற்கு ஒரு முறை வரும் மஹா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவனை ஆராதித்தால் மங்களங்கள் சேரும், மனை சிறக்கும், அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கி மோட்சம் சித்திக்கும் என்கிறது சிவ புராணம்.
04 December 2020
அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.
ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.
13 November 2020
இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!
இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.
நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.
01 January 2020
வெள்ளிச்சரத்தின் ஆங்கில புதுவருட நல்வாழ்துகள்!
07 July 2019
கதிர்காம பாதயாத்திரை: முருகன் அழைத்தால்தான் போகலாம்!-01
காலைப் பொழுது 'பில் பில்' என விடியத்துவங்கியதும், 'கரார் கரார்' என வீட்டின் வெளியே ஒரே சத்தம். வானொலிப் பெட்டி வெளியில் பக்திகானங்களை ஒலித்த வண்ணம் இருந்தது. 17 April 2019
மட்டக்களப்பு தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய ராகசாகரம் இறுவட்டு வெளியீடு
மட்டக்களப்பின் புகழ்பூத்த பழம்பதியான தேத்தாத்தீவு கொம்புச்சந்திப் பேராலய வருடாந்த பிரமோடசவத்தினை முன்னிட்டு என்னால்; கொம்புச்சந்தி பிள்ளையாரின் புகழ்பாடும் இரண்டாவது இ19 July 2017
ஆசை கொள்ளவைக்கும் தேத்தாத்தீவு பாமுருகன் ஆலயம்.
நிலவினை விரித்த வெள்ளை மணல் அருகே நித்திரை கொள்ளவைக்கும் மதிரை நிழல்; சுற்றி நெல் சொரியும் வயல்வட்டை எங்கும் நெஞ்சினை தாலாட்டும் குளங்குட்டை; கூடி குரவைபோடும் நாரைகள் சுற்றி பாடி இரையைத் தேடும் பருந்துகள்; விரிந்து சிரித்திருக்கும் கார்த்திகைப்பூ எங்கும் விழுந்து கிடந்திருக்கும் நாவற்ப்பழம்; அலை கொண்டு தாலாட்டும் ஆற்றங்கரை அருகே உவர்ப்பள்ளிச் சொரியும் உப்புத்தரை; சில்லென்று அலைமோதும் வில்லுக்குளம் அதில் அதில் சிலுசிலென விளையாடும் மீன்கூட்டம்; இது பழகியோர்க்கு மட்டும் பயத்தை நீக்கும் காடு அதுதான் இன்று பாலமுருகன் உறையும் பால்மணல் மேடு.01 July 2017
அதிசயமாய் அமைந்த ஸ்ரீ பால முருகன்...
பெரிய அடர்ந்த காடு, வில்லுக்குளத்தின் ஓரங்காரங்களில் ஓங்கி வளர்ந்த மதுரை மரங்களின் இடையே முளைத்து நின்ற பற்றைக்காடுளினுள் ரீங்காரமிடும் சில்லூறுகள், சீனிக்கற்கள் போல் பால் மணல் மண்ணில் உயர்ந்த நாவற்சோலை, அதன் அருகே பெரியவட்டி, சின்ன வட்டி, உப்பு வட்டிக்குளங்களின் பசுமையின் அரவணைப்பில்; பாடித்திரியும் பறவையின் ஒலி, பக்கத்தில் ஆலையடி முன்மாரிக்கண்ட வயல் ஆள் நடமாட்டம் இல்லாத அமைதியான பயங்கொள்ள வைக்கும் நிஷப்த இடம்.16 June 2017
நம்புங்கள் முருகன் நல்லவன் .
17 March 2017
அற்புதம் பல கூறும் கதிர்காம யாத்திரை,





.jpeg)








