இலங்கையில் 6 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அதன் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. பொது மக்களுக்கு (சேவையில் உள்ளவர்கள் அல்லாத) தொடர்ந்தும் கஷ்டங்கள் சொல்லமுடியாதவை, அவற்றை அவற்றை நாம் யாரும் புறக்கணிக்க முடியாது.
முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள் என, நாளாந்த வருமானத்துக்காக எமதுநாட்டில் வேலைசெய்யும் தொழிற்படையில் மொத்தமாக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். அதுபோல் தினசரி கூலிவேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், காய்கறி மற்றும் மீன் விற்பனையாளர்கள் போன்றவர்கள் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தமது சுயதொழிலில் ஈடபடுகின்ற மக்கள்.