ADS 468x60

31 May 2017

கல்வியில் வறுமை மட்டக்களப்பு மக்களுக்கு சாபக்கேடா!

இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மட்டக்களப்பு ஒரு புராதன, பாரம்பரியம் வாய்ந்த தமிழ் மக்களை அதிகம் கொண்ட வரலாற்று முக்கியம் பெற்ற வளமார்ந்த இடமாகும். 'ஆறில்லா ஊருக்கு அழகுபாழ்' என்றாள் ஒளவை இந்த அழகுக்கு அழகு சேர்கும் வாவிகள் நிறைந்த, கடற்கரைகள், வயற்புலங்கள், காடுகள் மலைகள் என அனைத்து நிலவமைப்பையும் கொண்ட வளம் நிறை நாடு எமது மீன்பாடும் தேநாடு ஆகும் பெருமைதான்.

29 May 2017

யார் இந்த மயில்வாகனன்!

மீன் மகளின் மூத்த வாரிசு
மேன்மைகொள் சமயப் பிதாமகன்
முத்தமிழை தத்தெடுத்த வித்தகன்
மூவுலகும் வணங்கும் துறவி

வெள்ளையனின் ஆதிக்கத்தில்
வேரறுந்த எம்மினத்தை
பள்ளிகள் கட்டி பாரில் உயர்தியவர்..

26 May 2017

விபுலாநந்தர் பணியில்

இவர் பணியில் செல்ல இலகில்
எவர் உண்டு இன்னும் உலகில்

மட்டு மாநிலத்தின் சொத்தாய்
எட்டுத் திசையும் மலர்ந்தகொத்தாய்
முருகனின் அருளால் மயில்வாகனனாய்
முத்தமிழில் உருகி வித்தகனாய்

துறவில் கலந்து விபுலாநந்தராய்
தமிழை உயர்த்தும் பேராசானாய்
மொழியில் தேர்ந்த விஞ்ஞானியாய்
அறிவில் தெழிந்த கலைஞ்ஞராய்

23 May 2017

படுவான்கரையில் சிறுவர்களுக்கு நடப்பது என்ன? அதிபரின் அதிர்சியூட்டும் தகவல்.

 அதிர்ச்சியில் உறைய வைத்தது அந்தத் தகவல். ஏனைய சமுகம் மூக்கில் விரல்வைக்க காரணமாக இருந்த அதே எமது கல்விச் செல்வம் இன்று அவர்களாலயே பரிகாசிக்கும் அளவுக்கு அது எம்மக்களிடையே பின்தள்ளப்பட்டுள்ளது.

'இந்த போரதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் கிட்டத்தட்ட 345 பாடசாலைச் சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் இடையில் நிற்கின்ற அபாயம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கல்வியறிவை முழுமையாகப் பெறமுடியாத சமுகமாக உள்ள இந்த மக்கள், நாளாந்த வாழ்க்கையில் அதிகளவான ஏமாற்றங்களையும், பின்னடைவுகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் இங்குள்ள பாடசாலைகள் அதிகஸ்ட்டப் பிரதேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது எனவும் இதனால் நல்ல ஆசிரியர்களை இங்கு வரவழைத்து கல்வியை முன்னேற்றுவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் கிழக்குப் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரும், மட்/ மகிழூர் வித்தியாலய அதிபருமாகிய திரு.பிரபாகரன் அவர்கள் இந்த மாணவர்கள் பெற்றோர்களிடையே உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

20 May 2017

மேலும் தண்ணி கீழும் தண்ணி புலம்பும் இடம்பெயர்ந்த மக்கள்..

'வெள்ளம் விட்ட பாடில்லை இன்னும், ஆடு, மாடு எங்கட வீடு எல்லாம் தண்ணிலதான் கிடக்கு ஓடி வந்து இங்க கொடுவாமடு தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறம்' என்று ஒரு அம்மா அடிக்கும் மழையின் நடுவில் கொடுகிக் கொண்டு சொன்னார்.

மெதுவாக ஆனால் பாரிய சேதத்தினை ஏற்ப்படுத்தும் அனர்த்தங்களில் வெள்ள அனர்த்தம் முக்கியமானது. இலங்கையில் தாழ்ந்த பிரதேசங்களில் கிழக்கு மாகாணம் தொடர்ந்து வெள்ளத்தினில் பாதிக்கப்பட்டு வருவது பதிவாகியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேசத்தின் வேப்பவெட்டுவான் பகுதியில் இருந்து 18.12.2012 அன்று அவசரமாக இடம்பெயர்ந்து கொடுவாமடு பாடசாலை மற்றும் அங்குள்ள பிரம்பு தொழிற் பயிற்சி நிலையங்களில் தங்கியுள்ள 143 பாதிக்கப்பட்ட மக்களை பிரதேச செயலாளர் உதயஸ்ரீதர் வேண்டிக்கொண்டதற்க்கிணங்க 22.12.2012 அன்று பார்வையிட்டு அவர்களுக்கான ஒரு தொகை உலர் உணவுப்பொருட்களை வழங்கி வைத்தோம்.

மட்டு நகர் மேடை மேலே!

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
வாவி மகள் ஆடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

மட்டு நகர் மேடை மேலே
மீன் மகள் பாடுது
அலையில் சுருதி கூடுது
பேர் கொண்டது கலையில் பேர் கொண்டது

18 May 2017

நினைக்க முடியாத பிரிவில்

என் இனத்தின் சாவைக்கூட 
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து, 

முள்ளி வாய்க்கால் முற்று!

முள்ளி வாய்க்கால் முற்று
முடிந்து போகாத கூற்று
ஆப்பாவி மக்களின் பாவம்
அடங்காது அவர்களின் சாபம்