ADS 468x60

26 December 2013

சுனாமி

காலத்தின் தலைகீழ் மாற்றத்தில்
மனிதன் மாத்திரமல்ல
நீயும் எமக்கு எதிரி
வருடங்கள் உருண்டு
ஒளிந்து கொண்டாலும்-நீ
வந்து போன நாள்
இருட்டித்துக் கொள்ளுகின்றது..

மாந்திப் போகாத நினைவலைகள்
சாந்தி சாந்தி எனப் பகரட்டும்---

24 December 2013

யாவரும் மகிழ்சி கொள்வோம்!!.

மெசியா மெசியா!
யூதர்கள் அழைத்தனர் அன்று,
நானும் ஒரு இடையன்,
அவலம், அவமானம்,
சவால்கள், சங்கடங்கள்,
பாவம்,  துரோகம்
இவற்றுடன் களைத்துவிட்டேன்.....

பாவ அடிமைத்தனம்,  அடக்குமுறைகளில்
இருந்து இன்னும் மீளாமல்...
அருவருப்பான, எளிமையான,
துன்பம் நிறைந்த, ஒதுக்கப்பட்ட
இடையன்  என்னிடம்,
இறை மகனே வாருவாயா!

என்னிடம் உன் வருகை சொல்ல
வான தூதர்கள் கிடையாது,
செருக்குடையோர் தலைக்குனிவும்,
வலியோரின் வலு இழப்பும்,
எழியோரை உயிர்த்தெழுதலும்,
உன் வருகையால் நிறைவேறட்டும்,
மகிழ்ச்சி பிரகாசிக்கட்டும்
விடிவெள்ளியாக எனக்கு
வெளிச்சம் காட்டு!!

காட்டுப்பாதையின் முட்புததர்களை
காண்பதற்க்காய்
ஒளியை ஏற்று!!...
என்நாளும் இன்னாளாய் இருக்க
தேவனே உன்னை பிரார்த்தித்து
அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்....

10 December 2013

புன்னகை மட்டும்












அன்பு கனத்துவிட்டுப்போகும்
மனதையும் கரைய வைக்கிறது
பொறுமை நம்மை
அடிக்க ஏங்குவோர்கு ரணமாகிறது
எழிமை எல்லோரையும்
நம்மில் விருப்பம் கொள்ளச் செய்கிறது
புன்னகை மட்டும் 
வரண்ட உள்ளங்களுக்கு மழைத்துளியாகிறது..
மழைத்துளியாக இல்லாவிட்டாலும்
மிருகங்களாக மாறாமல் இருப்போம்
ஏனெனில் அவை புன்னகைப்பதில்லை