ADS 468x60

31 December 2021

நம்மையும் நாட்டையும் வளமாக்குவோம்!

வெள்ளிச்சரம் வாசகர்களுக்கு முதலில் 2022 நல்வாழ்த்துக்கள்!

எத்தனை ஆண்டுகளைக் கடந்தேன் ஆனால் சில வருடங்களை கடக்க விருப்பமில்லாமல் இருந்திருக்கின்றது வாழ்நாளில். ஆனால் இந்த 2020 மற்றும் 2021 ஆகிய வருடங்கள் எந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் இல்லாத சபிக்கப்பட்ட ஆண்டுகளாகவே கழிந்துள்ளன. 

மாற்றங்கள் தேவைதான் அவை ஏமாற்றங்களாகவே சென்ற வருடங்களில் இருந்துள்ளது. வரும் ஆண்டு வெறும் ஆண்டாக இருக்கக்கூடாது என்பது உங்களைப்போல எனக்கும் இருக்கும் ஆதங்கம்! பல உலகநாடுகள் இந்தக் கொவிட்டுக்குப் பின்னர் படிப்படியாக மீண்டுகொண்டிருக்கும் வேளையில் எமது நாடுமட்டும் வாழ்க்கைச் சுமைகூடி மாண்டுகொண்டிருக்கிறது.

25 December 2021

2022 ஆம் ஆண்டின் துவக்கம் 2021 ஆண்டின் முடிவைவிட பயங்கரமானது.

என்னைப் பொறுத்தமட்டில் சுதந்திரத்திற்குப் பிறகு மிக மோசமான ஒரு வருடத்தை நாம் நெருங்குகிறோம். சோகமான மற்றும் கொடூரமான ஆண்டுகள் நாம் கடந்து வந்துள்ளோம் இருப்பினும் வரப்போகும் இந்த ஆண்டைப்போல் போல பயங்கரமானவை எதுவும் இல்லை என்றே பல பொருளாதார அரசியல் நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக சந்தேகத்திற்கு இடமின்றி, வரும் ஆண்டு பொருளாதார ரீதியாக மோசமான ஆண்டாக இருக்கும் என பலர் ஆரூடம் கூறிவருகின்றனர். ஏன் எனில் நாம் கடன்பட்டு கடன்பட்டு கடனின் உச்சத்தில் இருக்கின்றோம்.

24 December 2021

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி தீர்வுதான் என்ன?

 இந்த நாட்களில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் இரண்டு முக்கிய விடயங்கள் விவாதிக்கப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடி. மற்றையது பிக்ஸ் ரேட்டிங்ஸ் இலங்கையின் தரத்தை குறைத்துள்ளது. இந்த இரண்டு காரணிகளின் தாக்கம், வர்த்தகர்கள் முதல் சாதாரண குடிமக்கள்வரை அனைவருக்கும் இது சாதகமான ஒன்றல்ல. இது எல்லோரையும் மோசமாகப் பாதிக்கும் என்றே சொல்ல வேண்டும். தற்போது இலங்கை எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினை டொலர் தட்டுப்பாடு என பரவலாக நம்பப்படுகிறது. ஏனெனில், 2019ஆம் ஆண்டின் இறுதியில் 7642 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு, 2020ஆம் ஆண்டு இறுதிக்குள் 5664 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், 2021ஆம் ஆண்டளவில் மிகக் குறைந்த அளவான 1100 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் குறைந்துள்ளது.

19 December 2021

கல்வியை பாதித்துவரும் கொவிட்-19: சாதாரண நிலைக்கு கொண்டுவருவதில் உள்ள சவால்கள்

2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் உலகம் முழுவதையும் தாக்கி வரும் கொவிட்-19 தொற்றுநோய், உலகின் அனைத்து மக்களின் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் அரசியல் துறைகளை சீர்குலைத்து அதன் மறுபுறத்தில் அவற்றைப்  புரட்டிப்போட்டுள்ளது. நவம்பர் 2019 முதல் 2021  நவம்பர் வரையிலான இரண்டு வருட காலப்பகுதிக்குள், உலக மக்கள்தொகையில் 3% வீதம் அதாவது 271 மில்லியன் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொற்றுக்கு ஆளாகி இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்து உள்ளது.

இந்த நிலையில், தொற்றுநோய் இன்னும் முழுமையாக இந்த உலகத்தை விட்டுச் செல்லவில்லை. இதற்கிடையே தடுப்பூசி திட்டத்தின் செயல்திறனை அடிக்கடி அச்சுறுத்தும் வகையில் வைரஸின் புதிய மாறுபாடுகள் வெளிப்பட்டுக்கொண்டிருப்பது நம்மை அச்சம்கொள்ளவைக்கின்றது. 

18 December 2021

மறதி ஒரு தேசிய வியாதி!


பெற்றோல் விலை ஏறினால் மறப்போம்
பால் மா இல்லை என்றாலும் மறப்போம்
கற்றார் பட்டம் தராட்டியும் மறப்போம்
காணாமற் போகும் தேசம் மறப்போம்

வங்கியில் அடித்த பணம் மறப்போம்
வாழக் கிடைக்கா காஸ் மறப்போம்
வாங்கிய மறை வரி மறப்போம்
வானுயரும் செலவு தானும் மறப்போம்

ஒவ்வொரு பாவமும் பனியாய்ப் போக பாலகன் பிறந்து வந்தான்!

 ஒவ்வொரு உயிரும் வருந்தும் வேளை
ஆண்டவர் வருகின்றார்
ஒவ்வொரு அடியவர் நினைக்கும் வேளை
எம்முடன் இருக்கின்றார் - இருந்து
ஏற்றங்கள் அருள்கின்றார்
இயேசுவே! இயேசுவே! இயேசுவே! இயேசுவே!

06 December 2021

புவிவெப்பமடைதல் மக்கள் மத்தியில் அதிக உயர்வுதாழ்வை ஏற்படுத்தி வருகின்றது.

இன்று உலகம் பல முக்கிய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. கொரோனா வைரஸின் பரவல் ஏற்கனவே உலகளவில் 269 மில்லியன் நோய்த்தொற்றாளர்களுக்கு வழிவகுத்தது, இதன் காரணமாக கடந்த ஆண்டில் 5.3 மில்லியன் இறப்புகள் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக பருவநிலை மாற்றத்தால் நாடுகளுக்கு இடையே சமத்துவமற்ற நிலை அதிகரித்து, ஏழை நாடுகளில் வளர்ச்சி பின்னுக்குத் தள்ளிப்பட்டும், சில பணக்கார நாடுகளின் வளமை மேம்பட்டும் உள்ளது என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

05 December 2021

நம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டானதாக இருக்கவேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகளாக மதிக்கப்படுகின்றனர். இவர்களை மக்கள் அதிகம் பின்பற்றுகின்றனர். இவர்கள் மக்களின் நிலையினை, கஸ்ட நஸ்டங்களை உணர்ந்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய குரல் எழுப்பினால் மாத்திரம் போதாது, அவற்றை செயலிலும் காட்டவேண்டும். 

இவர்கள் எல்லா விடயங்களில் அறிவு திறன் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதுடன் மக்களுக்கு பாரபட்சமின்றி சேவை செய்ய தம்மை அர்பணிக்கும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் இப்போது இவர்களில் பலரைப்பற்றி மக்கள் மாறுபட்ட அபிப்பிராயத்தினைக் கொண்டுள்ளமையானது, அவர்கள் மக்கள் மீது வைத்திருக்கும் போலித்தனமான பற்றை, குணத்தினை காட்டுகின்றது. இவற்றில் சில விடயங்களை நான் இங்கு ஆராய்கின்றேன். இக்கட்டுரை எந்த ஒரு அரசியல் கட்சிக்கு எதிராகவும் எழுதப்பட்டது அல்ல. நமது சிந்தனைகளில் உள்ள பிழைகளை ஆராய்ந்து, புதிய மாறுபட்ட கருத்துக்களை விதைப்பதுதான் எனது எண்ணம்.

04 December 2021

அந்நியவருமானம் ஈட்ட பெண் தொழிலாளர்களின் தேவை- சுற்றுலாத்துறை ஒரு எதிர்காலக் கணிப்பு!

இலங்கையில் இன்று நெருக்கடிகள் ஒன்றின் மேல் ஒன்றாக வருவதற்குக் காரணம் அதன் அந்நியவருமான மூலங்கள் கொவிட் மூலம் ஆடிப்போயிருப்பதாகும். நாட்டின் ஏற்றுமதி இறக்குமதியில் இது பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வேலையின்மை, வருமானமின்மை என்பனவாறான பிரதிகூலங்களை இவை தோற்றுவித்துள்ளது. இந்த நிலை குறிப்பாக பெண்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அத்துடன் அந்நிய வருவாயினை கொட்டித்தந்த சுற்றுலாத்துறை கொவிட் காரணமாக ஏனைய அனைத்துத் துறைகளுக்குள்ளும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனை மீளக்கட்டியமைக்க பெண்களின் பங்கேற்ப்பு அதிகமாக வேண்டப்படுகின்றது. எனவே இந்த ஆய்வுக்கட்டுரையில் பெண்கள் இத்துறையில் பங்களிப்பதற்கு இருக்கும் தடைகள் மற்றும் அவற்றை மீட்டெடுக்க முன்மொழியவேண்டிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. 

02 December 2021

பேரிடியாக வந்துள்ள எரிவாயு சிலிண்டர்களின் வெடிப்புக்கள்! யார் பொறுப்பு!

தற்போதைய விளைவு

இன்று நாட்டில் நாளுக்கு நாள் மக்கள் விசனம்கொள்ளும்படியான சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன. அதில் இன்று முக்கிய அச்சப்படும்படியான பேசுபொருளாக இருப்பது எரிவாயு சிலிண்டர்கள் வீடுகள் மற்றும் உணவகங்களின் சமையலறைகளில் தொடர் வெடிப்புகளாகும். தற்செயலாக அடிக்கடி நிகழும் சம்பவங்களால் ஏற்படும் அச்சத்தினைப் போக்க அரச மற்றும் இறக்குமதியாளர்கள் சார்பில் அவற்றுக்கு பதிலளிக்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பல பகுதிகளில் இருந்து நவம்பர் மாதத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவமானது நாடு முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான உள்நாட்டு எரிவாயு பாவனையாளர்களிடையே மிகுந்த அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.

27 November 2021

நாம் சுயமாகத் தொழில் தொடங்க ஏன் பயப்படுகின்றோம்.

நம் எல்லாவித முன்னேற்றமும் நாம் பயமின்றி எடுத்துவைக்கும் முதல் படியினிலேயே தங்கி இருக்கின்றது. பயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில் தொடங்கும்போது மட்டும் பயம் (fear) வருவதில்லை, தொழிலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு செல்லும்போதும் பயம் வரும். பயம் ஏற்படுவது மனித இயல்புதான். பயத்தைத் தாண்டி வெளியே வரும் போதுதான் வெற்றி கிடைக்கும் இல்லையா.

நாம் ஒரு தொழிலை தொடங்குவதற்கு பயம் ஏற்படுவதற்கான காரணம், வெற்றி பெறுவோமா, ஒரு வேலை தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற எண்ணம், தொழில் மீது நமக்கு இருக்கும் சந்தேகம், சார்ந்து உள்ளவர்கள் என்ன சொல்லுவார்களோ என்ற எண்ணம், தொழிலின் மீது நம்பிக்கை அற்ற நிலை இந்த மனநிலையுடன் இருக்கும் போது நிச்சயம் தொழில் தொடங்குவதற்கு பயம் ஏற்படும். அது நம்மத்தியில் பலரிடம் இருக்கின்றது.

23 November 2021

கொவிட்டின் பின்னரான பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறை

கொவிட்டுக்குப் பின்னர் உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய வன்முறைகள் குறைந்ததாக இல்லை. இத்தகைய வன்முறைகளுள் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படுபவையும், வெளியே தெரிய வருபவையும் மிகவும் சொற்பமானவையே. வெளியே வராதவையாகவும், சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு உட்படாதவையாகவும், மூடி மறைக்கப்படுபவைகளும் உள்ளவை மிக அதிகமானவைகளாகும். 

16 November 2021

டெங்கா கொரோணாவா! தடுமாறும் நோயாளர்கள்: டெங்கபாயம் கொரோணாவை மிஞ்சுமோ!

"மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல்" இன்று இலங்கை மக்கள் என்ன சாபக்கேட்டுக்குள்ளானரோ தெரியவில்லை. கொரோணா வந்து முடியாத நிலையில் டெங்கின் ஆதிக்கம் எங்கும் பரவுகின்றது. இதுவும் ஒரு ஆட்கொல்லி நோய். இந்த அடைமழைகாலத்தில் நிச்சயம் பாரிய பாதிப்பினை இந்த நோய்ப்பரவல் தூண்டும் என்பது எம்மை விழிப்புடன் இருக்கச் செய்யவேண்டும்.

இலங்கையில் 2021 இல் மாத்திரம் இன்றுவரை 24,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் டெங்கு தொற்றுநோயின் உச்சத்தில் ஆண்டுதோறும் 100,000 நோயாளர்கள்; பதிவாகியதில் இருந்து இந்த அபாயம் வெகு தொலைவில் இருந்தாலும், கொரோணாவின் கூடுதல் பாதிப்புக்காரணமாக, இது மக்களால் பெரிதாகக் கணக்கிடப்படாத ஒன்றாக இன்று உள்ளது வருந்தத்தக்கது.

13 November 2021

அரச ஊழியர்களே இந்த நாட்டுக்கு சுமையாக உள்ளனர். ஏற்றுக்கொள்ளலாமா?

இன்று எங்கு பார்த்தாலும் பதுக்கல், தட்டுப்பாடு, விலையேற்றம், தரமற்ற பொருட்கள் என நாட்டு மக்களின் வாழ்க்கை பெரும் சுமையால் நீழ்கின்றது. இதனுள் அகப்பட்ட பலரில் அன்றாட வாழ்வாதாரத்தில் ஈடுபடுபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், தனியார் தொழில் செய்பவர்கள் ஆகியோர் முக்கியயமாகக் கருதப்படுகின்றனர். கோவிட் காலத்தில் இந்த வர்க்கத்துக்கு நிவாரணமும் கிடையாது வருமானமும் கிடையாத நிலையில் பெரும் துன்பத்தை அனுபவித்த வர்க்கத்தினர். ஆனால் எந்த அரச தொழிலில் இருந்தவர்களுக்கும் அரசு ஒரு ரூபாய் கூட குறையாமல் அவர்கள் வேலைக்கு செல்லாத சந்தர்ப்பங்களிலும் முழு சம்பளத்தினை செலுத்தி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.

05 November 2021

இரசாயன உரங்கள் தேவைதானா?

இப்பொழுது எமது நாட்டில் நூறுவீத உரம் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படவுள்ளது. இரசாயன உரங்களின் பாவனையை படிப்படியாகக் குறைத்து, இயற்கை உரங்களை நோக்கிச் செல்வதன் முக்கியத்துவத்தை அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி எடுத்துரைத்தார். அது பல அபிவிருத்தியடைந்த நாட்டுத் தலைவர்களாலும், புத்திஜீவிகளாலும் வரவேற்க்கப்பட்டது. தேசிய உர செயலகத்தின் கூற்றுப்படி, 2020 ஆம் ஆண்டில், நாங்கள் ரூ.36 பில்லியன பெறுமதியான 580,000 MT மெட்ரிக் டொன் இரசாயன உரங்களை இறக்குமதி செய்தோம். இந்த உரத்தின் மொத்தத் தொகையில் சுமார் 50 வீதம் நெல்லுக்கும், மீதி தோட்ட பயிர்கள் மற்றும் ஏனைய பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது தரவுகள் சொல்லும் செய்தி.

02 November 2021

உரத்தட்டுப்பாடு பட்டினிப் பேரழிவுக்கு வழிவகுக்குமா?

இன்று நாடு பூராவும் விவசாயிகள் தங்கள் விவசாய நடவடிக்கைக்கான இரசாயன உரம் அல்லது சேதன உரங்களைக் அரசிடம் வழங்குமாறு கோரி வருகின்றனர். மறுபுறத்தில் அரசாங்கத் தலைவர்கள், விவசாயிகளுக்குத் தேவையானதை வழங்காமல், இரசாயன உரங்கள் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று திரும்பத் திரும்ப கூறி வருகின்றனர். உண்மையில் எமது விவசாயிகள் இரசாயன உரத்தைக் கோருவதில் ஒருபோதும் பிடிவாதமாக இருந்ததில்லை. அவர்கள் விரும்புவது ஏதோ தமது விவசாயத்துக்கான உரம் மாத்திரமே. சேதன உரங்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தினால் அதை தடையின்றி வழங்கவேண்டும் அது தற்போதைய விவசாயிகளின் போராட்டங்களுக்கு தீர்வாக அமைந்துவிடும்.

28 October 2021

பா.ம தேசியப்பட்டியல் தேவைதானா?

 நாம் நாளாந்த அரசியல் விமர்சனங்களை அவதானிக்கவேண்டியுள்ளது இன்று. புதிய அபிவிருத்தியில், அரசாங்கத்தின் பங்காளியான கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி, தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவிடம் பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் இறையாண்மையைப் பாதுகாக்கும் நோக்கில், மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 5% இனரை குறைக்க வேண்டும் என சொல்லியுள்ளனர்.

தற்போது, இலங்கையின் பாராளுமன்றம் 29 தேசியப்பட்டியல் எம்.பி.க்களைக் கொண்டுள்ளது, அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சிகளால் அவர்களது வாக்குகளின் பங்கைப் பொறுத்து நியமிக்கப்படுகிறார்கள், மேலும் அவர்கள் மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 12.8%ஆவர்.

03 October 2021

இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்! - தலைமைத்துவம்.

எங்கு பார்த்தாலும் தலைவர்கள், அதனால் நமது தேசம் தலைவர்களால் நிரம்பி வழிகிற ஒன்று. ஆள் ஆளுக்குக் கட்சிகள், அவரவர்க்கான சங்கங்கள், அங்கங்கே சமூக, இலக்கிய ஆன்மிக அமைப்புகள் என்று தொடங்கி தம்மைத் தலைவராக அறிவித்துக் கொள்கிறவர்களால் தெரு நிரம்பிக் கிடக்கிறது. இந்தத் தலைமைகளுக்கு தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், நிர்வாகத் தலைவர், செயல்தலைவர், கவுரவத்தலைவர் என்ற வகைப்பாடுகள் வேறு. இவர்களில் எவராகத்தாம் இல்லையென்றாலும் குடும்பத்தலைவர் என்றாவது ஒவ்வொருவரும் இங்கே தலைவர்தான்.

எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும், ஆனால் பொதுவாக 'தலைவா' என்றழைத்துவிட்டால் போதும் யாருக்கும் சற்று மயக்கம் வந்துவிடுகிறது. தலைமை என்பது ஒரு மந்திரச்சொல். தலைமை ஒருவருக்கு எப்படிக் கிடைக்கிறது என்று பார்த்தால், திறனுக்கேற்பப் பெறுகிற தலைமை, திணிக்கப்படுகிற தலைமை, ஸ்வீகரிக்கப்படுகிற தலைமை, தாமே அறிவித்துக்கொள்கிற தலைமை என்று வகைப்பாட்டில் வரும். தலைமை யாருக்கும் கிடைக்கும். அதைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு திறன் என்று பொதுவாகச் சொன்னாலும் தலைமை ஒரு பண்பாக மட்டுமே புரிந்துகொள்ளப்பட வேண்டும். 

30 September 2021

நமது இளைஞர்கள் ஏன் தீவிர அரசியலில் ஈடுபட வேண்டும்?

அரசியல் பற்றிய புரிதல்

ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.

இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.

07 September 2021

வெளிநாடு சென்றாவது கல்வியைத் தேடு!

கொரோணா எனும் கொடிய நோய் எல்லாவற்றையும் விட கல்வித்துறையில் பல தலைகீழ் மாற்றங்களை உண்டுபண்ணி இருக்கின்றது. கொரோனா காரணமாக கடந்த ஓன்றரை ஆண்டுகளாக பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்; மூடப்பட்டுக்கிடக்கின்றன. வகுப்புறைப் பாடங்கள் இணைய வழியே நடத்தப்படுகின்றன. பாடசாலைகள், பல்கலைக்கழக படிப்பு என்பது பாடங்களை மட்டும் தெரிந்துகொள்வதற்கானது அல்ல, மற்றவர்களுடன் பழகுதல், நிகழ்வுகளில் ஒன்றிணைதல், சமூகத்தைப் புரிந்துகொள்ளல் போன்ற அனுபவங்களையும் உள்ளடக்கியது.

 அந்தவகையில் கடந்த ஒன்றரை ஆண்டுகாலத்தில் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் வழியிலான அனுபவத்தை மாணவர்கள் இழந்துள்ளனர். அப்படியென்றால், லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் நிலைமைதான் என்ன? அவர்களுக்கும் இணைய வழியில்தான் வகுப்புகள் என்றால், வெளிநாடு சென்று படிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?' என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில், இனி வரும் காலங்களில் இலங்கையிலிருந்து வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறையும் என பலரும் கூறினர். ஆனால், சமீபத்திய செய்திகள் நமக்கு வேறொரு உண்மையைச் சொல்கிறது.

05 September 2021

யார் பொறுப்பு? விவசாயி – நுகர்வோர் - அதிகாரிகள்.

இன்று நாடு முடக்கப்பட்டிருக்கின்றது, வர்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, இருப்பினும் சாதாரண மக்கள் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசாங்கம் பலவகையிலும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வருகின்றது. 

உண்மையில் என்ன நடக்கின்றது? விவசாயிகள் எந்தவித தடையுமின்றி விவசாயத்தில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது விவசாய உற்பத்திகளை தங்குதடையின்றி கொண்டுசெல்லவும் அவற்றைச் சந்தைப்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

13 August 2021

நாங்கள் மீண்டும் மீண்டு திரும்ப முடியாத நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்,

அரசாங்கம் கடைசி முயற்சியாக மட்டுமே நாட்டில் முடக்குதலை விதிப்பதாக கூறியது. அதன் பொருள் என்னவென்றால், நாடு இதுவரை முடியாத இறுதி நிலைக்கு வரவில்லை என்பதுதானே. இருப்பினும், கோவிட் தொடர்பான இறப்புகள் இப்போது தினசரி சராசரியாக 150 ஐத் தாண்டிவிட்டன, மேலும் குறிப்பாக டெல்டா வைரஸ் திரிபுகளின் எண்ணிக்கைப் பதிவு மோசமாக இருக்கின்றது மறுபுறும். 

அரசாங்கத்தின் நம்பிக்கை மற்றும் சில நிபுணர்களின் ஆலோசனை என்னவெனில், இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சிறந்த வழி பொதுமக்களுக்கான தடுப்பூசியினை துரிதப்படுத்துவதாகும். இது நாட்டினை முடக்குவதற்கான எந்த தேவையினையும் ஏற்படுத்தாது என கருத்திடுகின்றனர், அதனால் அதனை துரிதப்படுத்தி வருகின்றனர் அது வரவேற்கத்தக்கதுதான்.

11 July 2021

நல்ல சிந்தனைகளே வெற்றிக்குக் காரணம்

நாம் இன்று புதிய மாற்றமடைந்த உலகில் காலடி எடுத்து வைத்திருக்கின்றோம். அதற்கு தகுந்தாற்போல் நாம் மாறாவிட்டால் இந்த உலகின் கடைசி இருக்கையிலே தான் இருக்கநேரும். நாம்  புதிய புதிய வழிமுறைகளை பரீட்சித்து முன்னேற வேண்டும். அது காலத்தின்தேவை. அதனால் இன்றைய உலகம் வர்த்தகத்தினை அதுவும் இன்னோவேற்ரிவ் விசினஸினை முன்னிலைப்படுத்தி அதற்கான கல்வியை திறனை வழங்கி வருகின்றது.

சரி இதற்காக, விரிவான சிந்தனை, தெளிவான சிந்தனை, தொலைநோக்கு சிந்தனை என நிறைய முறை படித்திருப்பீர்கள். அது என்ன தெளிவான சிந்தனை? திட்டமிட்ட சிந்தனை?

13 June 2021

கொரோணாவின் கொடூரம் மாதவிடாய்க்குத் தெரியுமா?

இன்று பலர் பல 'சொல்லொண்ணாக்' கொடுமைகளை இந்த மூடிய காலத்தில் அனுபவித்த வருகின்றனர். அதை நீங்கள் அறியாமல் இல்லை. ஆனால் இந்த நெருக்கடி ஏழை பணக்காரர் எனப் பார்க்காமல் அதிகாரமுள்ளவர் அற்றவர் என நோக்காமல் சுழட்டிச் சுழட்டி அடிக்கின்றது.

இருந்தாலும் எதிலும் துவண்டுபோகக்கூடிய நலிவுற்று நசிந்து போகக்கூடிய மிக பின்தங்கிய சமுகம், மக்கள் கூட்டம் இலங்கையில் இருக்கின்றார்கள். அவர்களால் நீங்கள் ஒன்லைன் மூலம் வழங்குகின்ற கல்வியைப் பெறமுடியாது, அன்றாடத் தொழில் இன்றி அரைவயிரைக்கூட நிரப்பமுடியாது, வக்சினையும் வசதிவாய்பையும் பெற்று கொரோணாவுக்கு தப்பவும் முடியாது. 

05 June 2021

இணையவழிக் கல்வி மாணவர்களுக்கு சாத்தியமா சங்கடமா!

S.Thanigaseelan;
அறிமுகம்: இன்று கொவிட் -19 வைரஸின் தாக்கம் உலகெங்கும் பரவலாகி அச்சுறுத்தி வரும் வேளையில், இலங்கையிலும் தாக்கத்தை வலுவாகக் காட்டிவருகிறது. கடந்த மே மாதத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை இன்று வரை நீடித்து பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை வழக்கமான முறையில் செயல்படாத சூழலுக்குத் தள்ளிவிட்டது. இதனால் ஏனைய துறைகளினை விடவும் கல்வித்துறை பாரிய இடர்களை எதிர்கொண்டு வருகின்றதை நாம் அனைவரும் அறிவோம். 

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தில் நாம் நினைவில் கொள்ளவேண்டியவை.

சுற்றுச்சூழல் அமைப்புகள் என்பது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மக்கள் மற்றும் அவற்றின் சுற்றுப்புறங்களான இயற்கை, நகரங்கள் மற்றும் தோட்டப்புறங்கள் ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பினைக் குறிக்கும் (ஐ.நா., 2021). மிக நீண்ட காலமாக, மக்கள் நமது பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகளை சுரண்டிக்கொண்டும் மற்றும் அழித்தும் வருகின்றனர், இதனால் இயற்கை வாழ்விடங்கள் மற்றும் அதனோடுயைந்த ஏனைய வளங்கள் என்பன இழக்கப்படுகின்றன, இது எம்மிடையே காலநிலை நெருக்கடியை மிகத்தீவிரப்படுத்துகிறது. நாம் அனைவரும் நம் உயிர்வாழ்வதற்கு ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளையே சார்ந்து இருக்கிறோம் என்பதனை மறந்துவிடலாகாது.

03 June 2021

இலங்கை பங்களாதேசிடமே 200 மில்லியன் கடன் வாங்கிச் சாதனை.

வங்கியில் நாம் கடன் வாங்கச் சென்றால், அங்கு நமது சொத்து மதிப்பு, வேறு கடன் ஏதும் பெற்று செலுத்திய வரலாறுகள், திருப்பிச்செலுத்தும் தன்மை என்பனவற்றை ஆராய்தே கடன் வழங்குவதுண்டு. ஆனால் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டில் எமது நாடு உள்ளதா என்பதே அனைவரதும் கேள்வி. குறிப்பாக இலங்கையின் வரலாறு பரந்த இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. மகாவன்சா, தீபவன்சா, மற்றும் சூலவன்ச போன்ற பாலி இலக்கியங்களின் அடிப்படையில் வரலாற்று காலம் சுமார் கி.மு 3 ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. அனுராதபுர இராச்சியத்தின் முதல் இலங்கை ஆட்சியாளர் பாண்டுகபயா கிமு 4 ஆம் நூற்றாண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளார்.

02 June 2021

இலங்கையில் நாம் பணக்காரர்களாகமுன் வயதாகிவிடுகின்றோம்.

நாம் ஏன் உலகின் முன்னேறிய நாடுகளுக்கு விரும்பி இடம்பெயர்கின்றோம்? நமது வாழ்க்கையில் இளமைப்பருவத்திலே மகிழ்சியாகவும் எமது அடுத்த சந்ததியினரின் வாழ்க்கைத் தரம் எம்மைவிட ஒரு படி நன்றாக இருக்கவும் வேண்டும் என்ற நோக்கிலேயே நாம் அந்த முடிவிற்கு வருகின்றோம். இலங்கையில் நாம் வயதாகுவதற்கு முன்னர் வசதி வாய்ப்புக்களுடன் வாழ முடியாது என்ற அடிப்படையிலே பலர் இந்த முடிவினை எடுக்கின்றனர். 

நமது வாழ்க்கை பெரும்பாலும் நேரம், பணம் மற்றும் ஆற்றலுக்கும் இடையிலான தொடர்ச்சியான போர் என்று கூறப்படுகிறது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்களுக்கு நேரமும் சக்தியும் அல்லது ஆற்றலும் இருந்தன, ஆனால் எங்களுக்கு பணம் கிடைக்காததால் மட்டுப்படுத்தப்பட்டோம். நாங்கள் வேலை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்கியபோது, நேரத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. நாம் வாழ்க்கைப் பயணத்தை துவங்கும்போது, நமக்கு நேரமும் பணமும் இருக்கக் கூடிய ஒரு காலத்திற்கு வருவோம், ஆனால் ஆற்றல் குறைந்து காணப்படும்.

29 May 2021

உரவகைகளை இறக்குமதித் தடைசெய்வது ஆரோக்கியமான திட்டமா?

அறிமுகம்.

சிறிது நாட்களுக்கு முன்னர் எமது நாட்டில் பெரிதாகப் பேசப்பட்ட ஒரு பிரச்சினை. நாட்டில் இரசாயன உரவகைகளுக்கு (பசளை) மற்றும் கிருமிநாசினிகளுக்கு அல்லது பூச்சிநாசினிகளுக்குப் பதிலாக சேதன அல்லது கரிம அல்லது இரசாயனமற்ற உர மற்றும் கிருமிநாசினிகளையே இனி வரும் காலங்களில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார். அவர் வெளிப்படையாக தனது பொருளாதார ஆலோசகர்களின் ஆலோசனையின் பேரில், நாட்டிற்கு இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை இறக்குமதி செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் என்று உத்தரவிட்டமை ஒரு பாரிய பேசுபொருளாக இருந்தது. அது மக்களிடையே சாதகமாகவும் மறுபுறம் பாதகமாகவும் பரிந்துரைத்துப் பட்டி தொட்டியெல்லாம் பரவி ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது. அதைத்தான் நான் தலைப்பில் நச்சுத்தன்மையான உரங்களையும் கிருமிநாசினிகளையும் பாவிப்பது உண்மையில் ஆரோக்கியம் கிடையாது. இருப்பினும் அவற்றை உடன் நிறுத்துவது விவசாயத்துறைக்கு ஆரோக்கியம் இல்லை என்பதனையே இக்கட்டுரை ஆராய்கின்றது.

23 May 2021

கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!

முகத்தோடு மாஸ்க் இன்றிச் செல்லலாமா- நாட்டை

மூடியபின் ஒன்றுகூடிக் கொள்ளலாமா!
கொண்டாட்டம் கும்மாளம் போகலாமா!
கொரோணாவால் கொடுமைப்பட்டு சாகலாமா!
சொல்லுப்போச்சுக் கேட்டுக்கொண்டு
நாட்டில் இருப்போமா!
இன்னும் இன்னும் பரவாமல்
வீட்டில் இருப்போமா!
இல்லை என்று சொல்லும் வரை இணைந்திருப்போமா!
இன்னும் ஒரு அலையின்றி ஒன்றுபடுவோமா!

17 May 2021

வழிமறந்துபோகும் வலிகள்!



அன்று
காலங்கள் கரைந்தன -என் 
கோலங்கள் மறைந்தன
வீட்டைக் காணோம்- என்
வீட்டாரைக் காணோம்- வளர்த்த 
ஆட்டைக் காணோம்
என ஒவ்வொன்றாய்,
சோகங்கள் நிறைந்தன!

ஆலயங்களிலும்
ஆற்றங்கரைகளிலும்
கூடராத்துக்குள்ளும் 
கூடாத சூழலிலும்
ஆநாதையாய் அலைந்து!

02 May 2021

கொரோனாவை வெற்றிகொள்ளும் சிறுவர்களுக்கான கல்வி முறை

எல்லாத்துக்கும் மாற்றுவழி இருக்குது
எதுக்கு நாம மாறுபட்டு நடக்கணும்
பொல்லாத இந்த கொவிடடோட போராடு
பொருத்தமான கல்விக் குளத்தில் நீராடு

நாம் இன்று வித்தியாசமான வாழ்க்கை முறைக்குள் எமது குழந்தைகளை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பல மாணவர்கள் தமது முதல் ஆண்டு பாடசாலை அனுபவத்தினை முற்றாக இழந்துவிட்டதனையும காணலாம். இருப்பினும், பொதுவாகவே விடுமுறைகளுக்கு, ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தும் இயல்பு உண்டு. குறிப்பாக மாணவர்களுக்கு. விடுமுறை என்ற உடன் கற்றல் தரும் இறுக்கம் தளர்ந்து, உவகையும் உற்சாகமும் மாணவர்களிடம் குடியேறிவிடும். ஆனால், கொரோனா பரவும் அச்சத்தால் விடப்பட்டிருக்கும் இந்த அசாதாரண விடுமுறையை அப்படிக் கருத முடியாது.

கோவிட்-19 நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கல்வி கூடங்கள்; மட்டுமல்லாமல்; திரையரங்குகளும் பெரும் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுவிட்டன. குழந்தைகள் கூடி விளையாடும் பூங்காக்களில்கூட தற்போது பூட்டுகள் அறியப்படுத்தப்பட்டுள்ளன.

22 April 2021

இன்று பூமி தினமாகும்!


ஒரு தனி மரம் ஆண்டுக்கு 260 பவுண்டுகள் ஒட்சிசனை வெளியிடுகிறது. இது இரண்டு மனிதர்கள் ஒரு வருடம் சுவாசிக்க போதுமானதாகும். ஒரு கணக்கீட்டின்படி ஐம்பது வருடங்கள் வாழும் “ஒரு மரம்” உற்பத்தி செய்யும் ஒட்சிசனை மதிப்பு  30,000 டொலர், சுத்திகரிக்கும் நீரின் மதிப்பு  35,000 டொலர், மற்றும் கார்பன் வடிகட்டுவதற்கான செலவில் 1,25,000 டொலர், அரசாங்கங்கள் நீரை சுத்திகரிக்கவும், கார்பன் வெளியேற்றத்தை குறைக்கவும் பல பில்லியன் டொலர்களைச் செலவிடுகின்றன! இவை அனைத்தையும் மரங்கள் இலவசமாகவே செய்து வருகின்றன.

நாம் மரம் நடுதலை ஊக்குவிக்க வேண்டும். மரம் நடுவதற்கு சிறுவர்கள் மற்றும் இளைஞ்ஞர்கள் முன்வரவேண்டும் அப்போதுதான் குளிர்சியான எதிர்காலத்தினை நாம் உருவாக்க முடியும்.


04 February 2021

நாம் அனைவரும் சுதந்திரம் பெற்றுவிட்டோமா?

நாம் ஒவ்வொருவரும் சிந்திக்க நினைப்பது சுதந்திரமென்றால் என்ன? உண்மையில் நாம் சுதந்திரம் பெற்று விட்டோமா? நாம் சுதந்திரமாகத்தான் இந்த நாட்டில் இருக்கின்றோமா? இதை அனைவராலும் உணர முடிகிறதா? பெப்ரவரி 4-ல் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயரின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைப் பெற்றதாக கொண்டாடுகிறோம். ஆங்கிலேயன் வந்த பிறகுதான் நாம் அடிமையானோமா? அதற்கு முன் நாம் அனைவரும் முழு சுதந்திரமாக, அதுவும் இலங்கையர்கள்  என்ற வகையில் ஒற்றுமையாக வாழ்ந்தோமா? ஆங்கிலேயன் வருவதற்கு முன்பு ஆட்சி செய்த பல்வேறு மன்னர்களும்; சூழ்ச்சியில் சிக்கி சுயத்தையிழந்து ஆட்சி செய்ததின் விளைவு, நாட்டில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அடிமைகளாகவே வாழ்ந்தனர் கையில் விலங்கிட்டு சிறையில் அல்ல. சிந்தனைக்கு விலங்கிட்டதால் நாட்டிலும், வீட்டிலும்.

28 January 2021

தடுப்பூசியின் வருகை அனைவருக்கும் பொருளாதார வளர்சியைக் கொண்டுவருமா?

தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.2 வீதம் குறைந்துள்ளது.

•ஆசியா வேகமாக மீண்டு வருவதைக் காட்டுகின்றது.

•நுகர்வோர் செலவு பழக்கம் மாறுகிறது. ஜூலை மாதத்திற்குள் 300 மில்லியனை நோய்த்தடுப்பு செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

தடுப்பூசி இலங்கைக்கு வந்துள்ளதனால், விரைவான நோய்த்தடுப்பு மருந்துகள் அறிமுகமாகி வலுவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என நம்பிக்கை கொள்ளத் துவங்கியுள்ளோம். குறிப்பாக எமது நாட்டில் ஏற்றுமதிகள் மற்றும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளில் தொற்றுநோயால் தட்டுத்தடுமாறின. இருப்பினும், கொள்கை வகுப்பாளர்கள், பிரத்தியேகமாக பெரிய அளவிலான பொது தடுப்பூசி வசதிகளை செய்வதற்கான நிதியைப் திரட்டுவதற்கு முனையவேண்டும் எனவும் அதேபோல இந்தத் தொற்றினால் அதிகம் நலிவுற்றுள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு உதவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனவும் மற்றும் புதிய வைரஸ் உருவாக்கம் போன்றவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான புதிய வளர்ச்சி வழிகளைக் கட்டமைப்புக்களை கண்டறிய வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

22 January 2021

கொவிட்-19 வாசனை நுகர்வில் இழப்பை ஏற்படுத்துமா!

அண்மைய தசாப்தத்தங்களில் மிகக் கொடிய நோயாக உருவெடுத்திருக்கும் கொவிட்-19 உலகநாடுகளை ஒன்றும் செய்ய முடியாமல் உறையவைத்துள்ளது. இதன் தாக்கம் புதிது புதிதான பாதிப்புக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கொவிட் -19 தாக்கத்தின் அச்சுறுத்தலைக் குறைத்து, இயல்பு நிலைக்கு திரும்புவதையும் இலங்கை உறுதிப்படுத்தும் நம்பிக்கையுடன் புத்தாண்டு மலர்ந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நோயாளிகளின் எண்ணிக்கையின் அதிகரிப்பு குறைந்துபோன கவலைகளை புதுப்பித்து மேலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.

06 January 2021

கொள்ளை இலாபம் தரும் கோழி வளர்ப்பு

இன்று பலரது விருப்பத்திற்குரிய உணவாக கோழி மாறிவருகின்றதனை, அதற்கான நாளாந்த விலை ஏற்றத்தினை வைத்தே நாம் அறிந்துகொள்ளலாம் அல்லவா! அந்த வகையில் கோழி வளர்ப்பு பலருக்கு வெற்றியினையும் பலருக்கு நஷ்ட்டத்தினையும் கொடுத்துள்ளது நஷ்டம் ஏற்படுவதற்கான காரணம் அவர்கள் அதனை முறையாக செய்து முகாமை செய்யாமையே! 

அதனை எவ்வாறு முறையாகச் செய்து இலாபமீட்டலாம் எனப் பார்க்கலாம் வாருங்கள்.

கோழிப்பண்ணை இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் கால்நடைத் தொழிலாகும். 2019 ஆம் ஆண்டில் கோழி உற்பத்தி மூலம் 0.38 மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களித்தது, இது இலங்கையின் மொத்த கால்நடை உற்பத்திப் பங்களிப்பில் 64 வீதமாகும் ஆகும். ஆனால் ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் அதன் உற்பத்தியில் பின்னடைவை ஏற்படுத்தியது.

04 January 2021

பணம் தரும் மரங்கள்

இன்று பலர் உலகலாவிய தொற்றுக் காரணமாக தமது வாழ்வாதாரங்களை, தொழிலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மறுபுறம் இலங்கை போன்ற நாடுகளில் இந்த நிலைக்கு மாற்றுத்திட்டமாக உள்ளுர் உற்பத்தியினை அதிகரிக்க அரசு அதன் புதிய கொள்கைகளை உருவாக்கி அதற்கான மாற்றீடுகளை பெருக்கும் வழிவகைகளை செய்து வருவதனை நாம் அவதானிக்கின்றோம். அந்த வகையில் நாம் இலகுவாக உழைக்கும் பல மரங்களை தெரிந்துகொள்வது அவசியம். அதில் ஒரு பகுதிதான் பணம் காய்க்கும் மரங்கள் என்ன என்ன என இன்று உங்களுக்கு செல்ல எத்தணிக்கின்றேன். அந்த வகையில் பப்பாளி, கொய்யா, மாதுளை, பொரு நெல்லி, எலுமிச்சை, பலா போன்றவைகளை இங்கு பார்க்கலாம்.

02 January 2021

அரசாங்கத்துக்கு 2021 இல் இருக்கும் மூன்று சவால்கள்!

இன்று நாம் எமது நாட்டை மற்றும் எமது பிராந்தியத்தினை மீளக்கட்டியெழுப்ப வேண்டுமானால், அதற்காக அரசாங்கம் மூன்று முக்கிய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவினை ஏற்படுத்தல் அதற்கான சமுக இடைவெளியினை பேணுவதனை கட்டாயமாக்கல் மற்றும் அதற்கான சுகாதார வழிகாட்டுதல்களைச் செயல்படுத்துதல் இவற்றுக்கெல்லாம் மேலாக எமது நாட்டு மக்களுக்கு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசியினை விரைவாகக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

மட்டக்களப்பின் கிராமப்புறப் பெண்ணகளின் எதிர்பார்ப்பு நிறைவேற!

நமது கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தங்களது தினசரி பயன்பாட்டிற்காக அவர்களது மொத்த குடும்பங்களுக்குமான உணவு, நீர் மற்றும் அடுப்பெரிப்பதற்கான விறகுகளை சேமிப்பதில் பெரும்பாலும் அவர்களே பொறுப்பாக இருந்து கவனிக்கின்றார்கள். குறிப்பாக மட்டக்களப்பின் வறண்ட பகுதிகளில் காலநிலை மாற்றத்தால் அடிக்கடி வறட்சி நிலவுவதால், பெண்கள் சுத்தமான நீரினைப் பெற்றுக்கொள்ள அதிக தூரம் பயணிக்க வேண்டும், இது இன்னும் அவர்களது வேலையை சிரமத்துக்குள்ளாக்கி அவர்களது நேரசூசியை இன்னும் இறுக்கிவிடுகின்றது.

01 January 2021

வெள்ளிச்சர இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

'வெள்ளிச்சரம்' இணைய வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! நீங்கள்தான் எனது எழுத்தின் பலம்! நீங்கள்தான் சிந்தனையின் வெளிச்சவீடு! 'நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதை உண்மையாக்கவே தேடித் தேடி புதியவிடயங்களையும், உலக நடப்புக்களையும் அத்துடன் எமது மண்சார்ந்த அனைத்து விடயங்களையும் ஒரு தனியாளாக நின்று கிட்டத்தட்ட 750 படைப்புக்களை இதுவரை படைத்துள்ளேன்;! அதற்கு உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த சொந்தங்கள், நண்பர்கள் மற்றும் வாசகர்களுக்கு நன்றிகள் கோடி. இன்னும் இப்பணி தொடர உங்களின் அன்பான ஆதரவு தேவை என்று கூறி! பிறந்திருக்கும் ஆண்டு இழந்தவை அனைத்தையும் மீளப்பெறுவதற்கான ஆணடாக மலர வாழ்த்துக்கள்! 

இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!