அரசியல் பற்றிய புரிதல்
ஓ! இளைஞர்களே கனவு காணுங்கள் அது தூக்கத்தில் காணும் கனவு அல்ல நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் லட்சிய கனவாக இருக்கட்டும் என்றார் அப்துல் கலாம்.
இலங்கையில் பெரும் எழுச்சி எல்லாம் மாணவர்களால், இளைஞர்களால் உண்டானது. உரிமைப் போராட்டம் ஆகட்டும், போர் நடந்த போதெல்லாம் இங்கு உண்டான எழுச்சி ஆகட்டும், அரசின் வேலையில்லாக் கொள்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஆகட்டும்... பெரும்பாலும், எந்த பெரும் அரசியல் கட்சிகளும் முன்னெடுக்காமல், சிறு அமைப்புகளும், மாணவர்களும் தன்னெழுச்சியாக கிளர்ந்து எழுந்து போராடி இருக்கிறார்கள். ஏன் அரசைக் கூட பணிய வைத்திருக்கிறார்கள்.