ADS 468x60

29 December 2020

புதிதாகப் பிறக்கும் 2021 ஆம் ஆண்டில் 'தொற்று புதிய வடிவில் எம்மை தாக்குமா!'

2020 இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைய இருக்கும இத்தறுவாயில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு 2021 என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் மக்கள் இருக்கின்றனர். இதனை சாதகமாகப் பயன்படுத்தி அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் உயர்ந்து வருவதனைக் காணலாம். அதே போல் மக்கள் ஆரம்பத்தில் இருந்த ஜாக்கிரதை மெது மெதுவாகக் குறைந்து எந்தவித அச்சமும் இன்றி அஜாக்கிரதயாக திரிவதனையும் பண்டிகைக்காலத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான ஒரு ஆபத்தான பின்னணியில், இந்த நோய்த்தொற்று எமது நாட்டிற்கு மாத்திரம் பரவுவவில்லை இது உலகின் பிற பகுதிகளிலும் ஒரே மாதிரியாக பரவி வருகின்றது. ஆனால் அவை நாட்டுக்கு நாடு மாறுபட்ட அளவுகளில் பரவி வருவதனால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, மேலும் இதனால் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் போயுள்ளனர். 

28 December 2020

மாரிகாலமும் மாணவக் குழந்தைகளும்... கவனம்!

அடடா மழைடா அட மழைடா.... ஏனச் சிறுவர்கள் இந்தக் காலத்தில் கொரோணாவையும் பொருட்படுத்தாமல் கொண்டாடியும் அதே நேரம் பலர் திண்டாடியும் வருகின்றனர். கடந்த சில நாட்களாக எமது கிழக்கு மாகாணம் எங்கும் அடை மழை பொழிந்து கொண்டிருக்கிறது. மழை என்றாலே சிறுவர்களுக்குக் கொண்டாட்டம்தான். அதேபோல் மழையை நாம் எவ்வளவுக்கு அதிகம் ரசிக்கின்றோமோ, அந்த அளவு அதில் ஆபத்தும் உள்ளது. இந்த காலத்தில் பொதுவாக பல நோய்கள் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே குழந்தைகளே மழை நீர் நமக்கும் பூமிக்கும் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு மழைக் காலத்தில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டியதும் அவசியம் அன்பு மாணவர்களே!

இந்த மழைகாலத்தில் மிக மிக ஸ்தம்பிதமாகும் ஒன்று போக்குவரத்து. அது நகரமானாலும் கிராமமானாலும் அபிவிருத்தியை சரியாக செய்யாத நமக்கு ஏற்படும் ஒன்றுதான். ஆதனால் பல கிராமங்களுக்கான போக்குவரத்து இயந்திரப்படகுகள் மூலம் மிக ஆபத்தான சூழலில் நடைபெற்று வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். 

27 December 2020

கொரோணா நெருக்கடியை வென்றெடுக்க தொழிலுக்கு உதவும் தொழில்நுட்பங்கள்.

மனிதனை மனிதன் சந்திக்க முடியாத, நாடுகளுக்கிடையில் நேரான தொடர்புகள் இல்லாத நிலையில் அனைத்து வர்த்தக நடவடிக்கைகளும் முடங்கிவிடுமோ என்ற அச்ச நிலை ஏற்பட்டு முற்றாக அவை ஸ்தம்பித்திருந்தன.

ஆனால் அவை ஏற்கனவே வளர்சியடைந்த தொழில்நுட்பத்தினை துணையாகக்கொண்டு மீண்டும் இந்த புதிய இயல்பு நிலையில் வளர்ந்து தொடர்ந்து வருவதை நாம் அவதானித்து வருகின்றோம். இவற்றுக்குள் மக்கள் தங்களை பழக்கிக்கொண்டு பாதுகாப்பாக தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த பொருட்களை வாங்கவும் விற்கவும் இந்த தொழில்நுட்பம் பலவகையிலும் உறுதணையாக இருந்து வருகின்றமையை இந்தக் கட்டுரையின் ஊடாக எடுத்து விளக்கப்பட்டுள்ளது. எனவே அதற்குள் நாமும் நம்மை கொண்டுவரும் பொழுதே நாம் இந்த கொடிய நெருக்கடியினை வெற்றிகொள்ள முடியும் என்பதனை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாம் அறிந்த வகையில், உலகில் 2019 டிசம்பரில்தான் சீனாவின் வுஹானில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கோவிட் 19 ஆனது, ஒரு சில மாதங்களுக்குள் உலகின் ஒவ்வொரு மூலையிலும் சென்று பாதித்துள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி ஏற்பட்ட பரபரப்பு மற்றும் அச்சநிலை காரணமாக நாடுகளை முடக்கும் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதனால் அந்தந்த நாடுகளின் பல வர்த்தக நடவடிக்கைகளையும் அதன் மூலமாகக் கிடைக்கக்கூடிய உற்பத்திகளையும் தற்காலிகமாக நிறுத்த நிர்பந்தித்தன. 

20 December 2020

கோவிட்டிற்கு எதிரான போரில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள்.

நாம் அம்மை நோய், டெங்கு, எலிக்காய்சல், பறவைக்காய்சல் என பல தொற்றுக்கள் தோன்றி குறுகிய காலத்தில் குறுகிய பாதிப்புக்களுடன் அவற்றை வெற்றி கண்டுள்ளோம். ஆனால் இன்று புதுவிதமாக ஆடவைத்துக்கொண்டிருக்கும் தடுப்பு மருந்துகளும் இல்லாத இன்றய நிலையில் இவற்றோடு போராட அனைத்து நாடுகளும் பல பல கோணங்களில் தம்மை தயார்படுத்தி சில நாடுகள் 'தலைக்கு மேல் வெள்ளம் போன நிலையில்' தட்டுத்தடுமாறி இன்று பல அதிர்வான பாடங்களைக் கற்றுக்கொண்டுள்ளன. இருந்தாலும் எவ்வளவு ஆயுதங்களை மனிதர்களை அழிக்க உருவாக்கி சாதித்து வந்தாலும், கொவிட்டுக்கு எதிரான இந்தப்போராட்டத்தினை எந்த ஆயுதத்தினாலும் முடக்க முடியாத ஒரு நிலையினை வளர்ந்த நாடுகளுக்கே சவாலாக்கியுள்ளமை அபூர்வமாக உள்ளது.

அந்த வகையில், நாம் அறிந்தவைதான் கடந்த 12 மாதங்களில், முழு உலகமும் 100 ஆண்டுகளில் என்றுமில்லதவாறு எதிர்கொண்ட மிகப்பெரிய தொற்றுநோய்க்கு எதிராக போராடி வருவது. 2019 கொரோனா வைரஸ் நோய் (கொவிட்-19) சீனாவில் நவம்பர் 2019 இல் உருவானது என்று ஆய்வுகள் கருத்திடுகின்றன. 2019 டிசம்பரின் பிற்பகுதியில், இந்த புதிய வகையான கொரோனா வைரஸின் விஞ்ஞான ரீதியாக ஊர்ஜிதமானது. 

19 December 2020

புதிய ஆண்டில் புதிய தொழிலுக்கு காத்திருக்கின்றீர்களா!

கொவிட் -19 தனது ஒரு வருட தாண்டவத்தினை கடந்துவிட ஒரு சில நாட்கள் மீதமுள்ள இந்த பொழுதுகளில் உலகம் எல்லாவகையிலும் இஸ்தம்பிதமடைந்துள்ளது. அந்த வகையில் பல அடிகளில் இருந்து மெதுவாக மீண்டுகொண்டிருந்த இலங்கை 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' இன்னும் ஒரு படி பின்னோக்கிச் சென்றுள்ளது. சுற்றுலாத்துறை, கட்டுமானத்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என முன்னேறிக்கொண்டிருந்த துறைகள் ஒரே அடியில் முடங்கிவிட்டது. கொவிட் பல பல வடிவங்களில் அதன் வீரியத்தைத் தொடர்ந்த வண்ணமுள்ள இந்த நிலையில் மலர இருக்கும் 2021 இல் எமது பொருளாதாரத்தில் 'வேலைவாய்ப்பு' அனைத்து சவால்களுக்குள்ளும் ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகின்றது.

வடகிழக்கு மாகாணங்களிலும் இருக்கின்ற வளங்களைக் கொண்டு நவினமயமான விவசாயப் புரட்சிகளை மேற்கொண்டு எமது இளைஞர்களை ஏற்றுமதி சார் விவசாய உற்பத்தி நோக்கி தொழில் வழிகாட்டல்களை மேற்கொண்டால் நிச்சயமாக காணி அபகரிப்பு, மற்றும் வளச் சுரண்டல்களை முற்றாகப் பாதுகாக்கலாம். அத்துடன் இந்த நெருக்கடியான நிலைமை மாறி இளைஞர்கள் உளவலிமை பெறவும் உதவியாக இருக்கும். அதுவே பல புதிய கொள்கைப் பிரகடனம் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் வந்திருக்கின்ற நிலையில், பிறக்க இருக்கும் 2021 இன் தொழில் மாற்றத்தினை அனுசரிப்பதாகவும் இருக்கும்.

14 December 2020

இடம்பெயர்தோரை திருப்பி அழைத்துவருவது 'நாட்டிற்கு உழைத்தவர்களை கௌரவிப்பதாகும்'

பல சிரமங்களுக்கும் மத்தியில் தமது  விருப்பு வெறுப்புக்களை எல்லாம் தியாகம் செய்து பலர் திரைகடலோடி அல்லும் பகலும் நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைத்து வருகின்றனர். 

ஆவர்களை பாதுகாத்து இக்கட்டான சூழலில் அவர்களை அரவணைக்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் தலையாய கடமையாகும். ஆகவேதான், இலங்கையின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் ஒரு அங்கமாகக் கொள்ளப்படுகின்றனர், ஏனெனில் அவர்கள் அனுப்பும் பணம் வளமையாக நாட்டின் அந்நிய செலாவணி வருமானத்தில்; (2019 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8 சதவிகிதம்) இது வர்த்தக ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்க்குப் பிறகு நாட்டிற்கு இரண்டாவது பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.

ஆனால் இப்பொழுது, கொவிட்-19 தொற்று மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பின்னடைவுகளுக்குப் பிறகு, வெளிநாடுகளில் உள்ளவர்களில் கணிசமான பகுதியினர் பாதுகாப்பாக வீடு திரும்புவதை எதிர்பார்கின்னர். ஆகவே இந்த ஆய்வுக்கட்டுரை இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை திருப்பி கொண்டுவரும் பணியில் உள்ள பாரிய அனுபவங்களையும் சவால்களையும் ஆராய்ந்து, அந்தச் சவால்களையெல்லாம் முறியடித்து செல்லும் பரிந்துரைகளை வழங்குகிறது.

13 December 2020

அரசதுறை ஊழியர்கள் வினைத்திறனுடன் செயற்படுகின்றனரா?

கடந்த காலங்களில் மோசமான அரசதுறை நிர்வாகமும் பயனற்ற அரசாங்கத்தின் கொள்கைகளும்; இலங்கையில் பொருளாதார வளர்ச்சியினை மந்தமடையச் செய்துள்ளன. கடந்த 66 ஆண்டுகளில், இலங்கையின் சராசரி தனிநபர் வருமான வளர்ச்சி கிட்டத்தட்ட 3.6% சதவீதமாகவே இருந்துவந்துள்ளது. 

இது ஒரு நாட்டின் மக்கள்தொகையின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த போதுமானதாக இல்லை. இந்த விகிதத்தில், நாட்டில் ஒரு சராசரி நபர் உண்மையான வருமானத்தை இரட்டிப்பாக்க சுமார் 20 ஆண்டுகள் ஆகும்  என பொருளியலாளர்கள் அஞ்சுகின்றனர். இது ஒரு நீண்டகாலமாகும், இருப்பினும், இலங்கை 7% சதவீதமாக வளர முடிந்தால், வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்கும் காலம் 10 ஆண்டுகள்தான், அது 10% சதவீதமாக இருந்தால், அந்த காலம்7 ஆண்டுகளாகக் குறைக்கப்படும்.

12 December 2020

விவசாயத்துறையில் நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கவேண்டிய மாற்றம்!

-S.Thanigaseelan-
இன்று கொவிட்-19 நாட்டில் விவசாயிகளை முன்னிறுத்தவேண்டியதன் அவசியத்தினை அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளது. அதனால் தான் அரசாங்கம் அதன் கொள்கையில் விவசாயத்தினை முதன்மைப்படுத்தும் வகையில் பல திட்டங்களை முன்மொழிந்து அதற்கான சலுகைகளையும்  பரிந்துரைத்துள்ளது. அதனைத்தொடர்ந்து உள்ழுர் உற்பத்தியினை ஊக்குவிக்க இறக்குமதிகளையும் கட்ப்படுத்தியுள்ளது. இருந்தபோதும், 2020 அதன் இறுதி நாளை நோக்கி நகரும்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் வழக்கமான அதிகரிப்பினை பொதுமக்கள் காண்கின்றனர், இது தற்போதுள்ள கொவிட்-19 ஆல் இன்னும் மோசமடையக்கூடும். இவ்வாறான நிலைமை வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த ஒரு மாற்று விநியோக முறையை வைக்க விவசாய அமைச்சகத்தைத் தூண்டியுள்ளது, எது எப்படி இருப்பினும் இவ்வாறான முயற்சிகள் தோல்வியை கண்டு வந்துள்ளமைதான் நிதர்சனம்.

11 December 2020

மட்டக்களப்பின் மேய்சல் தரைப் பிரச்சினை பால் உற்பத்தியில் தன்னிறைவை தடைசெய்யுமா?

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினைகளும் அதன் பின்னணியும்

இன்று நாட்டின் புதிய கொள்கையின் அடிப்படையில், 'சுயதன்னிறைவு' பற்றி அதிக அக்கறை செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இறக்குமதிகள் பல இறுக்கப்பட்டு உள்ழூர் உற்பத்தியின் முக்கியம் உணர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பல விவசாய மற்றும் கால்நடைப் பண்ணைப் பொருட்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மட்டக்களப்புக்கு இந்தக் கொள்கை அவசியமற்றதா என்ற கேள்வி பாராளுமன்றம் வரைக்கும் வலுப்பெற்றுள்ளது. காரணம் மேய்சல்தரையினை அத்துமீறி பயிர்செய்கைக்கு அடக்குமுறையின் கீழ் பயன்படுத்தத் துடிக்கும் சில வேறு மாவட்ட விவசாயிகள்;.

மட்டக்களப்பில் கால்நடை உற்பத்தியாளர்களின் பிரதான பிரச்சினை

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கால்நடை வளர்ப்புக்கான உகந்த இடமாக காணப்படுவதற்குக் காரணம் பொருத்தமான காலநிலை அத்துடன் அங்கு இயற்கையாக அமையப்பெற்ற மேய்சல்தரைகள் ஆகியனவற்றைக் குறிப்பிடலாம்.

அந்தவகையில், மயில்ந்தமடு – மாதவணை பகுதி மட்டக்களப்பு – அம்பாறை எல்லையில் உள்ளது. கிழக்கு மாகாண மக்கள் தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இதனை பல தலைமுறைகளாகப் பயன்படுத்திவருகின்றார்கள். சுமார் இரண்டு இலட்சம் வரையிலான கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையாக இது உள்ளது. கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பொருளாதாரத்தில் இதன் பங்கு முக்கியமானது.

10 December 2020

வாழ்க்கையில் கொரோணாவுடன் சேர்ந்து பயணிப்பது சாத்தியமா

உலகின் பல நாடுகள் கொரோணாவுக்கு எதிராகப் போராடி முடியாமல் சோர்ந்துபோய் அந்தப் போராட்டங்களை மக்களினுடைய கையில் தற்போது ஒப்படைத்துள்ளனர். இனி மக்களே அவற்றோடு போராடி வாழவேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆக இந்தக் கொரோனா எனும் கொடிய அரக்கனுக்கு எதிராக கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் நாம் தொடர்ந்து போராடி வருகிற போதிலும் கண்ணுக்கு எட்டிய வரையில் நிரந்தரத் தீர்வு ஒன்றைக் காணவில்லை என்பதுதான் உண்மை. எனவே பலர் கேட்கும் கேள்வி எப்படி வாழ்ந்தால் கொரோணா பாதிப்பில் இருந்து விலகி நாமும் குடும்பம் நடாத்தலாம் என்பதே! அதற்கான பதிலாகவே இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

09 December 2020

உழைக்கும் வர்க்கத்தினை உருவாக்கும் கல்விக்கான தேவை இன்று உணரப்படுகின்றதா!

'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே'' என்ற முதுமொழிக்கு ஏற்ப கல்வி கற்பது மிக முக்கியமான ஒன்று. ஆனால் இக்காலத்து எமது கல்விமுறை, படித்து வேலைக்கு செல்லவோ அல்லது தொழில் செய்ய ஏதுவாகவோ, பொருள் சாம்பாதிக்க ஏதுவாகவோ போடப்படும் முதலீடு. ஆனால் உண்மையில் கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் கல்வியின் நோக்கத்தினை இவ்வாறு சொல்லுகின்றார்கள் 'கல்வி ஒரு மனிதனின் அறிவுத்திறனை வளர்த்து சுதந்திரமான மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுக்கத் தேவையான அறிவைக் கொண்டு மக்களைச் சித்தப்படுத்துவதே' என்று கூறுகின்றனர்.

ஒரு மாணவனின் தனிப்பட்ட கல்வித் தேர்வுகளுக்கு ஒரு பொருளாதார அடிப்படை உள்ளது, அதுபோல் அரசியல் சூழல், பொருளாதாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைச் சூழலின் சமூக மற்றும் கலாச்சார விதிமுறைகள் போன்ற பல்வேறு காரணிகளை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

08 December 2020

கொரோணாவில் இருந்து விடுதலைக்கு! புதிய பொருளாதார யுக்தி தேவை.

கொவிட்டின் உலகலாவிய பின்னணி

நாம் அனைவரும் இந்த புதிய நெருக்கடியால் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். மனச்சோர்வடைந்துள்ளோம். அதிகரித்து வரும் மரணங்கள், தொற்றுக்கள் பதட்டத்தினையும் பயத்தினையும் ஏற்படுத்தி இயல்புநிலையைக் குலைத்து வருகின்றன. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் சரிவினை சந்தித்து வருமான மார்க்கம் எல்லாம் தடைப்பட்ட நிலையில் மக்களின் வாழ்வாதாரம் வீழத்துவங்கியுள்ளது. இதற்கிடையே அரசாங்கத்தின் சில பல நடவடிக்கைகள் மக்களிடையே நம்பிக்கையூட்டும் அதே நேரம் அரச சேவையின் சில வினைத்திறனற்ற சேவைகள் இந்த நிலைமையில் விசனத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையில் இருந்து மீள என்ன வகையான புதிய பொருளாதாரக் கட்டமைப்பினை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதனையே இக்கட்டுரையில் தரவிரும்புகின்றேன்.

தற்போதைய இருண்ட பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டால், இது ஒரு போதும் ஏற்படாத புதியதொன்றாகவும் மற்றும் சுவாரஸ்யமானதாகவும் தெரிகிறது. சமீபத்திய உலக வரலாற்றின் போது, தொற்றுநோய்கள் உள்ளிட்ட பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழ்ந்தன, அவற்றை வெல்ல மனித இனம் எப்போதும் அதற்கான வழிகளைக் கண்டறிந்து வந்துள்ளது. எனவே, கோவிட் -19 கூட இறுதியில் இல்லாமற்போய்விடும்;. எவ்வாறாயினும், இந்தத்தொற்றுக் காரணமாக தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை இலங்கை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும் என்பது ஒரு பெரிய கேள்வியாகும்.

07 December 2020

கொவிட்-19 உம் இணையவழி வியாபாரத்தின் தேவையும்

நாம் கொரோனாவுக்குள் வாழப்பழகவேண்டும என்ற வாதம் அதிகரித்துவருகின்றது. அந்தவகையில் இந்தக் கொவிட் காலகட்டம் பல தொழில்களை முடக்கியது எவ்வளவு உண்மையோ, அது போலவே பல தொழில்களை உருவாக்கவும் செய்திருக்கிறது. இதற்கு முன் தாங்கள் ஒரு தொழில் தொடங்குவோம் என்று நினைத்திராத பலர், தற்போது சுய தொழிலில் இறங்கி இருக்கிறார்கள். இணைய மூலமாக ஆடைகள், உணவுப் பண்டங்கள், கைவினைப் பொருட்கள் விற்பனை என சிறிய அளவிலான தொழில்கள் அதிகம் உருவாகி இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஊள்நாட்டில் பூட்சிட்டி, ஆர்பிகோ போன்றவற்றுடக் சர்வதேச அளவில் அமேசான், பிளிப்கார்ட், ஜியோமார்ட் என்று பெருநிறுவனங்கள் ஒட்டுமொத்த சில்லறை வியாபாரச் சந்தையை ஆக்கிரமித்து வருகிற நிலையில், இத்தகைய சுயாதீன தொழில்கள் வரவேற்கப்படக்கூடியது மட்டுமல்ல, ஆரோக்கியமான எடுத்துக்காட்டும்கூட.

06 December 2020

கொவிட்-19 பாதிப்பினை ஏற்றுக்கொண்ட பொருளாதாரத் தந்திரோபாயங்கள்!

ஏன்னதான் என்றாலும் பல அனர்த்தங்களைக் கடந்து அவற்றில் இருந்து மீண்டெழும் பல அனுபவங்களைக் கொண்ட நாடு இலங்கை என்றால் மிகையாகாது. அவ்வாறிருக்கையில் கொவிட் -19 ஐ வைத்துக்கொண்டு எமது கொருளாதாரத்தினை முன்னோக்கி கொண்டு செல்வது அல்லது அவற்றை தடையின்றி இயங்கச் செய்வதானது ஒரு சவால் நிறைந்தது. அது எமது மக்களின் வாழ்விலும் வாழ்வாதாரத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்ற படியினால் பொருளாதாரத்தினை மீண்டும் செயற்படுத்த நாம் பாரிய விலை கொடுக்க நேரிட்டுள்ளது. ஆகவே நாம் கொவிட உடன் இணைந்தே பொருளாதாரத்தின் செயல்பாட்டினை கொண்டு செல்வது மக்களின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் இன்றியமையாதது.

05 December 2020

கொரோணாவில் வறுமைக்கு உட்பட்டவர்களை மீட்டெடுக்கும் மூன்று வழிகள்.

கோவிட் -19 நாட்டிற்குள் மாத்திரமல்ல உலகத்தினையே ஆட்டங்காணச் செய்துள்ளது. இது ஒருவருக்கு ஒருவர் உதவ முடியாத ஒரு அவபாக்கிய நிலமையை உருவாக்கியுள்ளது. அதனால் எம்ரைமப் போன்ற வளர்ந்து வருகின்ற நாடுகள் வளர்ச்சியடைந்த நாடுகளை மையமாக்கொண்ட நிறுவனங்களின் எல்லாவிதமான உதவிகளையும் பெறமுடியாத நிலையில் உள்ளது. இதனால் சொந்தக் காலில் எழுந்து நிற்க்க பல போராட்டங்களை வலிந்து செய்ய வேண்டியுள்ளோம். இருப்பினும் உலக வங்கியின் மீட்புக்கான பலதரப்பட்ட உதவியானது இந்த இக்கட்டான நேரத்தில் பாரிய உந்துசக்தியாகவே பார்க்கப்படுகின்றது. எனவே சமகாலத்தில் இந்த உதவிகள் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அவசியமானதாகும்.

இவ்வாறான உதவிகள்; இந்த நாட்டில் மிக முக்கியமாக வடகிழக்கில் பிரயோகிக்கப்படவேண்டும். ஏனெனில் இங்கு பல கால பின்னடைவுகளால் மக்கள் வறுமையில் வாடும் நிலை உருவாகி, பன்னெநுங்காலமாக வறுமையில் முன்னிற்கும் மாவட்டங்கள் இப்பிராந்தியத்தில் இருப்பது தரவுகள் சொல்லும் உண்மை இதற்கு பாகுபாடற்ற அற்பணிப்பான மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பும் அதிகாரிகளின் ஈடுபாடும் அதிகம் தேவைப்படுகின்றது.

04 December 2020

அறிவியல் கொண்டு அளக்க முடியாது ஆன்மீகத்தை.


கடவுள் பக்தி மாத்திரமா நமது வாழ்வாதாரமும் இன்று நம்பிக்கை சம்மந்தப்பட்டது. ஆம் இன்று இந்த கொவிட்-19 பலரை நம்பிக்கை இழக்க வைத்திருக்கிறது. இதனால் கடவுளையே கைத்தடியாகப் பிடிக்க நாடியவர்களும் இருக்கின்றார்கள் கைவிட்ட கடவுளை வெறுத்து ஓடியவர்களும் இருக்கின்றார்கள். எது எவ்வாறிருப்பினும் இன்றய காலகட்டத்தில் ஆண்டவனை கூப்பிடுபவர்கள் அதிகமாயிட்டார்கள். அதேபோல் அறிவியலை அள்ளிப்பிடிப்போரும் கூடிப்போச்சி. காரணம் காலமாற்றம்தான். 

ஆகவே, முதலிலேயே ஒன்றைத் நான் தெளிவாக்கிவிடுகிறேன். நான் நாத்திகனும் அல்ல. பகுத்தறிவு பாசறை பக்கம் தலை, கால் வைத்துப் படுத்ததும் கிடையாது. படுக்கும் உத்தேசம் துளிக்கூட இல்லை. இதைக் கேட்டுவிட்டு 'கடவுளை நிந்திக்கிறாயா' என்று குடையாதீர்கள். மதத்தில் மண்வைக்கிறாயா என்று மிரட்டாதீர்கள். 'கடவுள் கண்ணை குத்தும்' என்று கவலை கொள்ளாதீர்கள்;. நம்மில் பலருக்கு பக்தி என்பது வேலைக்காரனைக் கூப்பிடும் அளவுக்கு வெரி; சிம்பிளாகப் போயிற்று.

03 December 2020

கொரோணாவுககு பின்னரான வர்த்தகத்தினை மேம்படுத்த தேசிய அறிவுசார் சொத்துரிமையைப் பயன்படுத்துவதின் முக்கியம்.

உலகம் வேறு ஒரு உலகத்துக்குள் காலடி எடுத்து வைத்திருக்கின்றது. இந்த புதிய மாற்றத்துக்குள் எம்மையும் எமது பொருளாதார வர்த்தக விடயங்களையும் பழக்கிக்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக இந்த நெருக்கடியான நிலைக்குள் கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்கவும் வியாபார நடவடிக்கைகளை விஸ்த்தரிக்கவும் தேசிய அறிவுசார் சொத்துரிமையை நாம் கையில் எடுக்க வேண்டும். இங்கு தேசிய அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவம் நாம் அறியாமல் இருக்கின்றோம். அவை பல்கலைக்கழக மட்டத்தில் திட்டங்களாக கொண்டுவரப்பட்டாலும் இன்னும் அவை அந்த சமுகத்திடம் ஏன் அந்த மாணவர்களிடையே அதேபோல் தொழில் முயற்சியாளர்களிடையேயும் மிகக் குறைந்தளவிலேயே கொண்டு சேர்க்கப்பட்டிருப்பது எமது துர்பாக்கியமே. எனவே இவ்வாறான நிலையை மாற்றி இந்த கொரோணாவுக்குப் பின்னரான புதிய நிலைமைக்குள் நாம் எவ்வாறு மீண்டெழுவது என்பனபற்றி இக்கட்டுரையில் ஆராயலாம்.

கொரோனாவுக்குப் பின்னர் இன்று 2020 ஆம் ஆண்டிற்கான உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ((World Intellectual Property Organisation’s (WIPO) உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் (Global Innovation Index (GII)  இலங்கை 101 வது இடத்தில் உள்ளது - கடந்த ஆண்டை விட 12 இடங்களின் கணிசமான வீழ்ச்சி - மற்றும் ஒரு பரிதாபகரமான மதிப்பெண் 23.78, இல் 0-100, ஆனால் 100 மிகவும் பெறுமதியான மதிப்பெண்.

02 December 2020

சீனப்பொருளாதார வளர்சி முறைமை இலங்கைக்கு எடுத்துக்காட்டு!

நாம் எந்த அளவில், எங்கு இருக்கின்றோம் என்பதனை இன்னொருவருடன் அல்லது இன்னொரு நாட்டுடன் ஒப்பீட்டு ரீதியிலே பார்க்க முடியும். பொருளாதாரத்திலும் அப்படித்தான் நாம் எம்மை அளவிட்டுக்கொள்ளுகின்றோம். கடந்த தசாப்தங்களில், பல கிழக்கு ஆசிய பொருளாதாரங்கள் தொடர்ச்சியான நிலையான பொருளாதார வளர்ச்சியை அனுபவித்துள்ளன, அதே நேரத்தில் தங்கள் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றங்களை அடைந்துள்ளன, இது ஒரு சாதனை புகழ்பெற்ற உலக வங்கி ஆய்வில் 'ஆசிய அதிசயம்' என்று விவரிக்கப்பட்டுள்ளது. ஹொங்கொங், தாய்வான், சிங்கப்பூர் மற்றும் கொரியா குடியரசு  ஆகியவை இந்த சாதனையின் பங்காளிகளாக இருந்தன.

ஒரு ஆய்வாளர் இந்த அதிசயத்தை 'ஒரு தலைமுறையை மேற்கு ஐரோப்பாவின் முன்னேறிய பொருளாதாரங்களை போல் சமூக பொருளாதார வளர்ச்சியில் மாற்றியமைத்துள்ளன' என்று விளக்கினார். இந்த நாடுகளின் குழு இப்போது வறுமையை நீக்கியுள்ள கம்யூனிஸ்ட் சீனாவினையே வியத்தகு முறையில் முந்தியுள்ளது.

01 December 2020

நாம் விவசாயத்தில் சாதிக்கும் தருணம் இது.

என்னதான் மாற்றம் வந்தாலும் நாம் உண்டுவாழ உணவு தேவை, அந்த உணவை உற்பத்தி செய்ய விவசாயிகள் தேவை. நாம் ஒவ்வொருவரும் நாள்தோறும் மூன்று வேளைக்கு சாப்பிட்டு உயிர்வாழ, கோடிக்கணக்கான இலங்கை மக்களின் பசியைப் போக்கும் மாபெரும் சேவை புரிபவர்கள் விவசாயிகள். நம் உழவர் பெருமக்கள், அன்னபூரணியைப் போல, வயிற்றுக்கு உணவு அளித்து வருகின்றனர். ஆனால் அவர்களில் பலர் வறுமையின் பிடியில் இருந்து இன்னும் மீண்டபாடில்லை. இதற்காக பல திட்டங்களை அரசு தனியார் என அனைவரும் எடுத்துவருவதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விவசாயிகள் விவசாயத்தில் புதிய வகையில் சிந்திக்க வேண்டும். அவர்களது பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

30 November 2020

வியாபார உலகில் டிஜிடல் மீடியா தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறியுள்ளது.

இன்று எமது நாடு மாத்திரமல்ல முழு உலகமே பாரிய மாற்றத்தினை வர்த்தக உலகில் சந்தித்துள்ளது. இதனை நாம் ஒரு இடராக நினைத்து முடங்கி விடாமல் இந்த இடருக்குள் எவ்வாறு எமது வியாபார செயற்பாடுகளையும் அதனோடிணைந்த சேவைகளையும் மக்களிடம் கொண்டு செல்வது, எப்படி எமது வியாபார நடவடிக்கைகளை நிருவகிப்பது என்பனவற்றையெல்லாம் நாம் இன்றய டிஜிடல் உலகில் மாற்றிக்கொள்ளவேண்டும் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான பல டிஜிடல் தளங்கள் உருவாகி எம்மத்தியில் அவை கல்வி வர்த்தக மற்றும் சேவைகள் செயற்பாடுகளில் மெதுமெதுவாக அறிமுகமாகி வருவதனை நாம் உணரத்துவங்கியுள்ளேம். இவற்றை எம் முயற்சிகளுக்குள் நிச்சயம் உள்வாங்கி எம்மை இந்த தொற்றுக்குள்ளும் வாழும் நிலையை உருவாக்கவேண்டும்.

29 November 2020

இளைஞர்கள் தொழில் முயற்சியாண்மையில் வெற்றிபெறுவது எப்படி?

இலங்கைப் பூர்வீக வரலாற்றின்படி எமது சமுகம் தமக்குத் தேவையானவற்றை தாமே உற்பத்தி செய்து தன்னிறைவானவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். அன்று அவரவர்கள் செய்த தொழில்களை இன்று 'முயற்சியாண்மை' என பிரத்தியேகமான துறையாக வளர்சி பெற்றுள்ளது. இந்த வியாபார முயற்சிகள் இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருந்துவருகின்றது. இருப்பினும் வேறு வளர்ந்துவரும் நாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கும்போது மிகக் குறைந்தளவே இவர்கள் இருந்துவருவது குறைபாடாக உள்ளது. அதற்குக் காரணம் இளைஞர்கள் மத்தியில் இன்னும் இவைபற்றிய குறைந்தளவான ஈடுபாடும் மறுபுறத்தில் அவர்களுக்கு அரச துறையில் இணைந்து வேலைசெய்வதற்கான ஈர்புமே இவற்றின் வளர்சிக்கு தடையாக உள்ள காரணம். இவற்றை மேவி, இன்றைய இளைஞர்கள் மத்தியில் எவ்வாறு இவற்றை ஊக்கப்படுத்தி வெற்றிபெறும்படியாக வழிப்படுத்துவது என்பது பலரது வினாவாக உள்ளது. 

27 November 2020

உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு!

 உறங்கியும் உறங்காத அற்புத வரலாறு 

உலகத்தில் நினைக்காட்டா தமிழனா நீ கூறு


வாய்ப்பேச்சில் வீரர்களாய் வாய்தவர்கள் கண்டேன்

வாய்பேசா மிருகங்களை வதைத்தவர்கள் கண்டேன்

அரசியலில் அராஜகங்கள் புரிந்தவர்கள் கண்டேன்

ஆள்வைத்து அடித்தவீர ஆம்பளைகள் கண்டேன்

13 November 2020

இப்படித்தான் இம்முறை தீபவளி இருக்கவேண்டும்!

நண்பர்கள் மற்றும் வெள்ளிச்சரம் வாசகர்கள் அனைவருக்கும் முதலில் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்! 

இது பண்டிகைக்காலம் அதனால் நீங்கள் தீபாவளி கொள்வனவு செய்ய துணிக்கடை, மளிகைக்கடை, நகைக்கடை செல்லும்போது கொரோனா இன்னும் நம்மைவிட்டு போகவில்லை என்பதை நினைவுபடுத்தி கொண்டு தனிமனித, சமுக இடைவெளியைக் கட்டாயம் கடைப் பிடியுங்கள். கடையில் மற்றவர்கள் மறந்தாலும் வாங்கச் செல்லும் நாம் மறக்கவே கூடாது.

நீங்கள் செல்லும்போது மாஸ்க் கட்டாயம் அணிந்து கொள்ளுங்கள். எந்தக் கடையில் பொருள்கள் வாங்கச் சென்றாலும், கடைக்குள் செல்வதற்கு முன்பும், வெளியே வரும்போதும் கட்டாயம் சானிடைசரால் கையை சுத்தம் செய்ய தவறாதீர்கள்.

12 November 2020

இப்படியும் ஒரு கல்வியை நாம் நினைக்கவில்லை!

கோவிட்-19 தொற்றுநோய் உலகளவில் கல்வி முறைகளை பாதித்துள்ளது, இது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுத்தது. கோவிட்-19 இன் பரவலைக் குறைக்கும் முயற்சியில் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான அரசாங்கங்கள் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூட முடிவு செய்தன என்பது நாம் அறிந்ததே.

அந்தவகையில், மிகமுக்கியமாக இந்த வளர்ந்து வருகின்ற நாடுகளில் அதிலும் எம்போன்ற யுத்தத்தினால் மற்றும் வேறுபல அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிராந்தியங்களுக்குள் ஏற்கனவே கல்வி பின்னடைந்துள்ள இந்தச் சூழலில், இது நமக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது.

இவற்றையெல்லாம் வெற்றிகொள்ளும் மனப்பாங்கை நாம் அனைவரும் சிந்தித்து வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் நாம் உண்மையான வெற்றியாளர்களாக கருதப்படுவோம். இதற்கு அனைத்து வகையான சுகாதார பாதுகாப்பு முறைகளையும் நாம் நிச்சயம் கடைப்பிடித்து வாழப்பழகவேண்டும்.

11 November 2020

நாடு கொரோணாவால் எதிர்நோக்கும் சவால்களுக்குள் நலிவுறும் வாழ்வாதாரம்: ஒரு பொருளியல் ஆய்வு.

கொரோனா ஊரடங்கு மார்ச் இல் ஆரம்பித்து பின்னர் சுமூக நிலை தோன்றி பின்னர் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த பெரிய நாடுகள்கூட கட்டுப்படுத்த முடியாத இந்த கொரோனா வைரஸ் பாதிப்பை (கோவிட்-19), நமது அரசாங்கங்கள் ஊரடங்கை அமுல்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதை பல நாடுகளும், உலக சுகாதார அமைப்பும் பாராட்டியுள்ளன. ஆனால், இதன் மறுபக்கம், மோசமான பொருளாதார வாழ்வாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாக உணர முடிகிறது. 

சென்ற மாதத்திலிருந்து கொவிட்-19 இன் புதிய அலை வாழ்வாதாரங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது. வறுமை, பட்டினி மற்றும் உயிர் இழப்பிற்கு வழிவகுப்பதுடன், அண்மைக்காலமாக மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை மேலும் இழக்க நேரிடும் என்பதால் பசியும் பட்டினியும் தாண்டவமாடத்துவங்கியுள்ளது. 

10 November 2020

கொரோணாவும் நாட்டின் பொருளாதார மாற்றமும்: ஒரு ஆய்வு.

உலக மக்கள்தொகையில் கால் பகுதியினர் தற்போது கொரோனாவினால் ஒரு இறுக்கமான கட்டுப்பாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். சமீபத்திய மனித வரலாற்றில் முதல்முறையாக, கொரோனா வைரஸானது பொருளாதாரம் இந்த உலகில் முதலில் வர வேண்டும் என்ற கட்டுக்கதையை சிதைத்துவிட்டது. கொவிட்-19 தொற்றுநோயைக் கையாளும் போது பொது சுகாதார சவால்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மற்ற எல்லா விடயங்களுக்குள்ளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றாலும், தற்போதைய சூழ்நிலையின் பொருளாதார செலவுகளை புறக்கணிப்பது விவேகமற்றது என்னே எண்ணத் தோணுது.

உலகத்தில் ஏற்பட்டுள்ள ஆபத்தான கொரோணா தொற்றால் பல எதிர்மறை மாற்றங்களை உண்டுபண்ணி இழப்புகளை தோற்றுவித்தவண்ணம் உள்ளன. சுகாதார, சமுக மற்றும் பொருளாதார சவால்களை இதனால் எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கும். இவ்வாறான பாதிப்பு எந்தவகையில் நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, அது எவ்வாறான அரசின் கொள்கை மாற்றத்துக்கு தூண்டுகோலாக இருந்துள்ளது? அதன் எதிர்கால பொருளாதார அரசியல் தன்மை எவ்வாறு அமையப்போகின்றது என்பன பற்றி இந்தக் கட்டுரையில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.

08 November 2020

"வேலைத்தளங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாரியசவால்கள்- கொவிட்-19"

 'வீட்டிலிருந்து வேலை செய்வது' (Work from home) என்பது கொவிட்-19 ஆல் புதிதாகத் தூண்டப்பட்ட ஒரு முறையாக இருக்கின்றது.  ஆனால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடமிருந்து அதிக உற்பத்தித்திறனை ஊக்குவிக்க விரும்பினால், அவர்கள் வீட்டிலிருந்து வேலையை ஒரு பாலின முன்னோக்குடன் (gendered perspective) வேறுபாடற்ற நிலையில் அணுக வேண்டும். மற்றும் புதிய கொள்கைகளை உருவாக்கும்போது தற்போதைய  நிலையைக் கருத்தில்கொண்டு உருவாக்க வேண்டும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. இந்த ஆய்வானது; உற்பத்தித்திறனுடைய பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்தில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

07 November 2020

நாம் ஏற்றுமதிசார் உற்பத்தியாளர்களாக மாறுவதற்கு சிந்திக்கவேண்டும்

உலகம் படிப்படியாக பல புரட்சிகளைச் செய்து ஒரு கண்டத்துக்கும் இன்னொரு கண்டத்துக்கும், ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பானது ஒரு கிராமத்திற்குள் நடப்பதுபோல் மாறி அதை 'உலகமயமாதல்' என்ற பதம் கொண்டு அழைத்து வந்தனர். ஆனால் இந்த தொடர்புகள் கொரோணா வைரஸ் பரவல் காரணமாக இன்று துண்டிக்கப்பட்டுள்ளது. 

ஒரு நாட்டில் செய்யும் மிகை உற்பத்தியை ஏற்றுமதி செய்தும், இன்னொரு நாட்டிற்கு மிகைத் தேவையாக இருக்கின்ற பொருட்களை இறக்குமதி செய்தும், வர்தகம் உலகத்தின் ஒரு மூலையில் இருந்து இன்னொரு முலைக்கு 24 மணித்தியாலங்களில் பரிமாறப்பட்டன. இதனைக் கருத்தில்கொண்டு இலங்கையிலும் பல தொழிற்கிராமங்கள், தொழிற்பேட்டைகள், வர்த்தக வலயங்கள் என முயற்சியாளர்களை பெருக்கி வர்த்தகத்தினை வளர்த்துக்கொண்டனர். ஆனால் இவையெல்லாம் இந்தக் கொரோணாவால் கணப்பொழுதில் மாறிவிட்டதனை அவதானித்து வருகின்றோம். அதனால்தான் கிராமத்துக்குள் இருப்பனவற்றையே இன்று பரிமாறிக்கொள்ளும் நிலையில் அந்தக் கிராமம் இன்று உலகமாக விரிந்துவிட்டதனை காணலாம்;. இவ்வாறு அந்த அந்த மக்களுக்கு தேவையானவற்றை அவர்களே உற்பத்தியாக்கிக்கொள்வதனை தன்னிறைவுப் பொருளாதாரம் என்றழைத்தனர்.

06 October 2020

மீண்டும் கோவிட்-19 சொல்லித்தரும் பாடம் என்ன?

ரு புதிய கோவிட்19 சந்தேகநபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டு, அமைதியாக இருந்த ஞாயிற்றுக் கிழமையன்று திடுக்கிடும்  செய்தி ஒன்று பொதுமக்களால் பெறப்பட்டது. ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு தொழிலாளி ஒருவர் கொரோணா வைரஸ் பாதிப்புள்ளதனை பரிசோதித்துக் கண்டறிந்துள்ளனர். இது கோவிட் -19 மீண்டும் எழுச்சி பெற்றால் இலங்கை எவ்வளவு பாதிக்கப்படக்கூடியது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, ஆகவே நாம் ஒவ்வொருவரும் முன்னெச்சரிக்கையினை வலுப்படுத்தவேண்டிய நிலையில் உள்ளோம்.

13 September 2020

எழுந்து வாடா தம்பி

காலை விடிந்தது உனக்காக- என்று
கத்தும் சேவலும் கணக்காக
கிழக்கில் உதிக்கும் சூரியனை- முந்தி
கிழர்தெழு நாளை நமதாகும்

கதிர்கள் ஆடும் வயல் நிலமும்
கரைகள் தோறும் கடல் வளமும்
காடு மேடுகள் குளங்களென
கொண்டது எமது பூர்வாங்கம்

உழுது வாழ உறுதி கொள்வோம்
ஊரைக் கூட்டி உலகை வெல்வோம்
அழுது வாழும் அவலமெல்லாம்
அறவே நம்முள் விலகச் செய்வோம்

10 September 2020

சமுகநலத்திட்டங்கள் வறுமையை குறைத்து தொழில் வாய்ப்பை உருவாக்கியுள்ளதா?

இன்று இலங்கை மாத்திரமல்ல இந்த உலகமே கொவிட்-19 என்ற பேராபத்தில் சிக்கி நலிவுற்றுள்ளது. யாருக்கு யார் ஆறுதல் சொல்லுவது என்ற நிலையில் அபிவிருத்தியடைந்த அடைந்துவருகின்ற நாடுகள் பாரிய பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித்தவிக்கின்றன. இந்த நிலையில் பல்வேறு சமுக பாதுகாப்பு நடைமுறைகள் நாட்டுக்கு நாடு நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் இலங்கையிலும் சமுகப் பாதுகாப்பு நடைமுறைகள் அரசாங்கத்தினால் அந்த மக்களை மீட்டெடுக்க நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமுர்த்தி அதில் உள்ளடங்கும் ஒரு பெரிய சமுக நலத்திட்டமாகும். இதனை நடைமுறைப்படுத்த நாடு பூராகவும் சுமார் 25,000 சமுர்த்திப் பணியாளர்கள் அந்தச்சேவையில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் ஓட்டுமொத்தமாக 2 மில்லியன் மக்கள் சமுர்த்தியினை பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு 600,000 மக்களால் சமூர்த்தியை விரிவுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இருப்பினும் சமுர்தி நாட்டின் மிகப்பெரிய சமூக நலத் திட்டமாகும், இது ரூ. 2017 ஆம் ஆண்டில் 43 பில்லியன் மற்றும் ஏற்கனவே 1.4 மில்லியன் குடும்பங்களை அதன் பட்டியலில் வைத்திருந்தது. அனைத்து அரசியல் பிரச்சாரங்களிலும் வறுமை ஒழிப்பு ஒரு முக்கிய செய்தியாக இருந்தாலும், சமுர்தி திட்டம் எவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பது குறித்து தெளிவு இல்லை.

06 September 2020

கோழி மேய்பதென்றாலும் கவர்மென்றில் சேரவேண்டுமாம்!

ஓவ்வொருமுறையும் ஒரு புதிய அரசு அமையும் பொழுது பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த எதிர்பார்ப்புத்தான் அவர்களது அரச வேலைவாய்ப்புக்கான கனவு. ஆதனால் புதிய அரசாங்கம் தங்களுக்கு புதிய மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிற வர்க்கத்தில் வேலையற்ற பட்டதாரிகள் மட்டும் அடங்கவில்லை, மீதமுள்ள தொழிலாளர்களும் அதில் அடக்கம். ஆனால் ஒரு புதிய பொருளாதாரத்தின் வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டுமானால் நிச்சயமாக அதுசார்ந்த புதிய கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்பதனை பொருளியலாளர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர்.

23 August 2020

சமுர்த்தி வறுமைய இல்லாது செய்துள்ளதா?

வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு கடந்த வாரத்தில்; பசில் ராஜபக்ஷ அவர்களை தலைமைதாங்க, நாட்டில் சமூக முன்னேற்றம் மற்றும் அதன் நலத்திட்டங்களின் தாக்கத்தைக் கண்டறிய சிறந்த தரவு சேகரிப்புக்கு அழைப்பு விடுத்தார்.

இது ஒரு நீண்ட கால தாமதமான நடவடிக்கையாகும், இதற்காக அரசியல் கலக்காத தூய்மையான தகவல்களை திரட்டுவதன் மூலமே இதன் உண்மைத்தன்மைகளை அறியக்கூடியதாக இருக்கும்.

1994 ஆம் ஆண்டில், வறுமையை ஒழிப்பதற்கான ஒரு தேசிய மூலோபாயமாக அன்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்தால் சமுர்தி (செழிப்பு) திட்டம் தொடங்கப்பட்டது, மேலும் சமுர்தி அமைச்சும் பிரத்தியேகமாக நிறுவப்பட்டது. தற்போதைய அரசாங்கமும் இதேபோல் திட்டத்தின் இலட்சியங்கள் மற்றும் குறிக்கோள்களுக்கு உறுதியளித்துள்ளதுடன், அதன் ஆரம்ப அனுபவங்களின் அடிப்படையில் அணுகுமுறையை மேலும் தீவிரப்படுத்தவும் மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

27 July 2020

மட்டக்களப்பு வாக்காளர்களின் 2020 பொதுத்தேர்தல் கருத்துக்கணிப்பு அறிக்கை வெளியிட்டு வைப்பு.

கிழக்குப் பல்கலைக்கழகங்கள் பழைய மாணவர் ஒன்றியத்தின் '2020 பொதுத் தேர்தலில் தமிழ் பிரதிநிதித்துவம், மட்டக்கக்களப்பு மாவட்டம்' எனும் கருத்துக்கணிப்பு ஆய்வறிக்கை இன்று ஒன்றியத்தினால் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாய்வானது 08.07.2020 தொடக்கம் 19.07.2020 வரையான காலப்பகுதியில் இணையம் (Online Survey) மூலமாக நடாத்தப்பட்டதாகும். இது பக்கச்சார்பற்ற முறையில் நடுநிலையாகவும்  மற்றும் வெளிப்படைத்தன்மையுடனும் நடாத்தப்பட்ட வரலாற்றில் மட்டக்களப்பின் முதலாவது ஆய்வாகும்.

இதில் பல அரசியல் மாற்றத்துக்கான விடயங்கள் இக் கருத்துக்கணிப்பு ஆய்வில் கோடிட்டுக் காட்ப்பட்டுள்ளது. இம்முறை எந்தக் கட்சிக்கு அதிக வாக்குக் கிடைக்க இருக்கின்றது என்பதும் இதில் கண்டறியப்பட்டிருப்பது முக்கியமாக "மக்களின் மனதில்" ஏற்பட்டிருக்கும் மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

முழு அறிக்கையின் விபரத்தினைப் பார்க்க கீழுள்ள இணைப்பை அழத்தவும்.

https://drive.google.com/file/d/1SuZAT8n3Hve43EvFiB_Q9XWhajE8HB6A/view?usp=sharing


05 July 2020

ஏன் இலங்கையினை நவீன வியட்நாமாக மாற்ற முடியாது?.

நாம் இன்று நம்மை சுய பரிசோதனை செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம். ஜப்பானுக்கு அடுத்ததாக சுதந்திரம் பெற்ற நேரத்தில் நமது பொருளாதாரம் இரண்டாவது சிறந்த நாடாக இருந்தது என்பதையும், லீ குவான் யூ சிங்கப்பூரை இலங்கையைப் போல உருவாக்க விரும்பினார் என்ற கதையைப் பற்றி நாம் அனைவரும் கேள்விப்பட்டிருக்கவில்லையா? அதையே எத்தனை நாட்களுக்கு சொல்லிக்கொண்டு திரிவது, அதன் பின் எத்தனை தசாப்தங்கள் கடந்தும் வேறு ன்றை சொல்ல வைக்க நாம் ஏன் முயற்சிக்கவில்லை என்கின்ற கேள்வி எழாமல் இல்லை.

04 July 2020

கொவிட்-19 இக்கு பின்னான பொருளாதாரத்தில் தொழிலாளர்களின் நிலை

இன்று இலங்கையில் மாத்திரமல்ல, அது கடந்து உலகம் பூராகவும் பாரிய பொருளாதாரச் சரிவினை ஏற்படுத்தி இருக்கின்றது. இந்தத்தாக்கம் இலங்கை போன்ற வளர்ந்துவரும் நாடுகளுக்கு விழுந்த பேரிடியாகவே பார்க்கப்படுகின்றது. ஆகவே கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தால் இன்று இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாக உலகப் பொருளாதாரம் ஸ்தம்பித்து நிற்கிறது. பொருட்களுக்கான தேவை குறைதல், சர்வதேச போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளை நிறுத்துதல் உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு பங்களித்திருக்கின்றன.

26 May 2020

கோவிட் 19ம் பாரம்பரிய வைத்திய மீள்சிந்தனைகளும்

ஆரம்ப காலங்களில் இலங்கையில் உள்ளவர்கள் கிராமத்தில் உள்ள நாட்டு வைத்தியர்களை நம்பியே  எந்த விதமான மருத்துவ சிகிச்சைக்காகவும் சென்றனர். அன்றய நாட்டு வைத்தியரிடம் இன்றய ஆங்கில வைத்தியர்கள் வைத்திருப்பதுபோல் விதவிதமான மருத்துவ உபகரணங்கள் அல்லது இயந்திரங்கள் இருந்திருக்கவில்லை. அவர் உடலின் உள் பிரச்சினைகளை அவரவர் நாடிபிடித்து அவரை தொட்டுப்பார்த்து ஏனைய அவையவங்களை கவனிப்பதன் மூலம் அவரது நோய்க்கான காரணிகள் கண்டறியப்பட்டு சிகிச்சையை தீர்மானிப்பார்.

17 May 2020

ஏதும் இருக்குதா இழந்தோர்கு பதிலுரை

முடிந்தது எங்கள் தலையில் போர்
முறிந்தது எங்கள் நிலத்தில் ஏர்
மடிந்தது கருகி ஆயிரம் பேர்
விடிந்தது குருதி மழையில் ஊர்

08 May 2020

கோவிட்-19 தொற்றும் அது மனநலம் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கமும்.

Pic by Shehan Gunasekara
மிகப் பயங்கரமாக உருவெடுத்திருக்கும் முன்னெப்பொழுதும் அறியாத ஒரு உலகலாவிய தொற்றுநோயாக கோவிட்-19 அனைவரையும் அச்சத்தில் உறைய வைத்திருக்கின்றது. இந்த நோய் பற்றி அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கிடையாது என நினைக்கின்றேன். 

இவ்வாறு அச்சத்தை மாத்திரம் ஏற்படுத்தாமல், பல கோடி மக்களை இயங்கவிடாமல் பல மாசங்களாக வீட்டினுள் அடைத்து வைத்திருக்கும் இந்த ஆபத்தான நோயில் சிக்குண்ட பலர் மானசீக அழுத்தத்துக்கு ஆளாகி வருகின்றமை நாம் அறிந்ததே.

இந்த நிலையில் பலர் தங்களது தொழில்களை தொடர்ந்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அன்றாட வருமானம் இழந்த நிலையில் அவர்களது நுகர்வு, ஏனைய சக்திகள் பின்னடைந்த நிலையிலும் கண்ணுக்கு முன்னே தத்தமது பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர்கள் அல்லல்படும் போது அவற்றை நேரே பார்த்து மனமுறிவுக்கு உள்ளாகி வருகின்றனர்.

06 May 2020

கிராமமட்டத்திலான மக்களை மையப்படுத்திய பல்தேவைக் கம்பனிகளின் இன்றய தேவை.

நாம் தூக்கி ஓதிக்கியவற்றினை இன்று தூக்கி நிறுத்தும் ஒரு உன்னத உணர்வை இன்றய நிலை தோற்றுவித்துள்ளது. இந்த உணர்வுடனே நாம் பல மாற்றங்களைக் கொண்டுவர ஒவ்வொரு புத்திஜீவிகளும் சிந்தித்து முன்மொழிய வேண்டிய நேரமிது. 

விவசாயத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் உற்பத்தி செய்யும் விவசாயப்; பொருட்களை கொள்வனவு செய்யவும்;, சேமித்து வைப்பதற்கும், விநியோகிப்பதற்கும் ஒரு பொறிமுறையை இயக்குமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அண்மையில் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்தவகையில்; மாவட்ட அளவில் உள்நாட்டு தொழில்கள் மற்றும் பிற உற்பத்தித் துறைகளை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

05 May 2020

சுதேசிய வழிமுறைகளினூடான தன்னிறைவை முதன்மைப்படுத்தும் கொவிட்-19

விவசாயமும் மருத்துவமும்.

இன்று கொவிட்- 19 வைரஸ் அனைத்து நாடுகளையும், முக்கியமாக விவசாயம் மற்றும் மருத்துவ அறிவியலில் அதன் தன்னிறைவை ஆய்வு செய்ய அழைத்து வந்துள்ளது. இந்த இரண்டு துறைகளும் நமது பண்டைய பாரம்பரியத்தில் கைகோர்த்துக் கொண்டிருப்பதாகக் காணப்பட்டது. இவை நமது மக்களின் நல்வாழ்வோடு மட்டுமல்லாமல் மண்ணின் நல்வாழ்வையும் அதனோடு தொடர்புடைய மரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பாதுகாப்பினையும் தொடர்புபடுத்தின.  

14 April 2020

நான்கு மில்லியன் தொழிலாளர்கள் வீட்டில் முடக்கம்.

இலங்கையில் 6 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு அதன் மூன்றாவது வாரமாக நீடிக்கிறது. பொது மக்களுக்கு (சேவையில் உள்ளவர்கள் அல்லாத) தொடர்ந்தும் கஷ்டங்கள் சொல்லமுடியாதவை, அவற்றை அவற்றை நாம் யாரும் புறக்கணிக்க முடியாது. 

முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் மற்றும் பஸ் ஓட்டுநர்கள் மற்றும் பஸ் நடத்துனர்கள் என, நாளாந்த வருமானத்துக்காக எமதுநாட்டில் வேலைசெய்யும் தொழிற்படையில் மொத்தமாக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். அதுபோல் தினசரி கூலிவேலை செய்து சம்பாதிக்கும் தொழிலாளர்கள், விவசாயிகள், காய்கறி மற்றும் மீன் விற்பனையாளர்கள் போன்றவர்கள் சுமார் 2.5 மில்லியன் மக்கள் தமது சுயதொழிலில் ஈடபடுகின்ற மக்கள். 

கொரோணா: இலங்கைக்கு சந்தர்ப்பமா சறுக்கலா?

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) பரவுவதால் உலகம் முழுவதும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது, மேலும் அனைத்து நாடுகளும் தங்கள் தங்கள் குடிமக்களை ஊரடங்கு உத்தரவுபோட்டு வெளியில் உலாவ விடாமல் வீட்டுக்குள்ளேயே முடக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

13 April 2020

அனைவருக்கும் பாதுகாப்பான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

இந்த வார இறுதியில், இலங்கையர்கள் தங்களது அனைத்து இயக்கங்களை தடைசெய்த உலகளாவிய தொற்றுநோயின் இருள்சூழ்ந்த மேகத்தின் கீழ் முக்கியமான தேசிய புத்தாண்டு மற்றும் மத நிகழ்வுகளை கொண்டாடுகிறார்கள். உண்மையில், ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட குறுகிய காலங்களைத் தவிர, இவர்கள்; வீடுகளில் இருந்து ஒருபோதும்; வெளியேற முடியவில்லை, அதுவும் சில பகுதிகளில் மட்டுமே அதுமுடியுமாக இருக்கின்றது.

12 April 2020

நாடு எதிர்நோக்கும் பிரச்சினையும் புதுவருட எதிர்வுகூறலும். #COVID19

இன்று மக்கள் பாரிய சவால்களை எதிர்கொண்டு வாழ்வாதாரம் முதற்கொண்டு தமது வாழ்க்கைக்கே ஆதாரம் இல்லை என்ற நிலையில் இலெட்சக்கணக்கான மக்கள் வீட்டில் முடங்கிய நிலையில் புத்தாண்டு பிறக்க இருக்கின்றது. ஆனால் வெறுமனே தமக்கிடையே பாரம்பரிய புத்தாண்டு வாழ்த்துக்களை மாத்திரம் தொலைவில் இருந்து தொலைபேசியில் பரிமாறிக்கொள்ளும் புத்தாண்டு வாழ்த்துக்கள் மூலம் ஒரு மகிழ்ச்சி ஊற்றெடுக்கும் என நம்புகின்றோம். அது ஒரு பிரகாசமான மற்றும் வளமான ஆண்டின் எதிர்பார்ப்பை விட அதிகமாக இருக்கும்;.

ஊரடங்கு காலத்தில் புதுவருடம் பிறப்பது வரலாற்றில் முதல்தடவையல்ல! #COVID19

இந்த பண்டிகை காலங்களில் நாடு ஊரடங்கு உத்தரவின் கீழ் இருப்பது சமகால வரலாற்றில் முதல் தடவையல்ல. 1971 ஆம் ஆண்டில், ஏப்ரல் 5 ஆம் தேதி தொடங்கிய தெற்கு இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட தூண்டுதல் அனைத்து நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்தியது.
அதுபோல மூன்று தசாப்த கால வடகிழக்கு கிளர்ச்சியின் போது ஒரு முறை அல்ல பலதடவைகள், பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அனைத்து தீவுக்குமான ஊரடங்கு உத்தரவின் கீழ் நாட்டோடு சீர்குலைந்தது.

11 April 2020

இன்றய உணவுத்தட்டுப்பாடு அன்றய நீர்வள நாகரிகத்தை நினைவுபடுத்துகின்றது. #COVID-19

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் இலங்கையர்கள் 'உணவுப் பற்றாக்குறையை' சந்தித்து வருகின்றனர். உணவுத்தட்டுப்பாடானது புதிதாக இந்த வைரஸ் தொற்று முடக்கத்தினால் மாத்திரமல்ல அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றம் காரணமாக வரும் வரட்சி மற்று வெள்ளப்பெருக்குக் காரணமாகவும் அவை ஏற்பட்டு வந்துள்ளது. எமது நாட்டினுடைய பொருளாதார நிலையங்களில் கொணடடுவருகின்ற காய்கறிகள் அழுகக்கூடும் என்று ஏகப்பட்ட கதைகள் பரவி இருந்தாலும்;, மக்கள் சுகாதார விதிமுறைகளை சரிவரப் பின்பற்றாததாலும் அவற்றை மூடுவதற்கு அரசாங்கம் உறுதியான முடிவை எடுக்க வேண்டியிருந்தது.

10 April 2020

ஓளித்து விளையாடுபவர்களை ஊரடங்குபோட்டுக் கட்டுப்படுதமுடியாது. #COVID-19


கொரோனா வைரஸ் நாம் வருத்தப்படுவதற்கான தனது இடைவிடாத அறிகுறிகளைக் அது காட்டுவதில்லை, ஆனால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுடன் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் அதன் கொடிய விஷத்தைத் தொடர்ந்து பரப்பி வருகிறது, தன் பரவலையும் அதன் பேரழிவினையும் உலகிற்கு கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் அந்த வைரஸ் செய்து வருகின்றது.

09 April 2020

மூடிய பொருளாதாரத்தை புதிய தலைமுறைக்கு கற்றுத்தரும் கொரோணா.

இன்று உருவாகி இருக்கும் உலக பொருளாதார மந்தம் ஏற்கனவே எமது நாட்டில் இறக்குமதி அதிகரித்து அதனால் ஏற்பட்ட சென்மதி நிலுவை நெருக்கடி அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் உதவியாகப் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவது ஏற்கனவே முடங்கியுள்ளது இந்தச்சூழலில் சர்வதேச நாணயங்களுக்கு ரூபாயில் தொடர்சியாக ஒரு சரிவைத் தூண்டி வருகின்றது. இவ்வாறு எல்லாவிதத்திலும் ஏற்கனவே பலவீனமான பொருளாதாரத்தினை கொவிட்-19 எனும் கொடிய கொலையாளி புதிதாகவந்து மேலும் ஒரு அடியினை பொருளாதாரத்தின்மீது போட்டிருக்கின்றது. இது 'மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல்' உள்ளது.

08 April 2020

கண்ணுக்குத் தெரியாத கொரோணாவும் கண்ணுக்குப் புலனாகும் தலைமைத்துவமும்

இன்று உலகத்திலேயே தீயாய் பரவி வருகின்றது கொரோணா என்று அழைக்கப்படும் கொடிய தொற்றுநோய். இந்த கொடிய நோயினைத் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்த உலக நாடுகளின் வரிசையில் இலங்கை முதன்மையாக இருக்கின்றது. ஆகவே நாம் வேகமாகப் பரவி உயிர்களைக் கொள்ளை கொள்ளும் இந்த கொடிய நோயினை தடுப்பதற்கு ஆரம்பத்தில் பல நடவடிக்கைகளை எடுத்ததன் மூலம் ஏனைய நாடுகளுடனான இழப்புகளை ஒப்பிடும் பொழுது அது எமது நாட்டுமக்களை பாரிய அளவில் பாதிக்காத சாதகமான ஒன்றாகவே இருக்கின்றது.

13 February 2020

கிழக்கு மாகாணமே இணையத் திறனறிவில் கடைசியாக உள்ளமை வேலையற்ற இளைஞர்களுக்கு பஞ்சமில்லாதாக்கியுள்ளது.

நம் நாடு பல பிரச்சினைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சந்தித்து வருகின்றது.  2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பற்றாக்குறை அல்லது துண்டுவிழும் தொகை 7 வீதம் என மதிப்பிடப்பட்ட ஒரு சவாலான பொது நிதி நிலைமையில் அது ஆக்கப்பட்டுள்ளது. அத்தோடு இது 2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருவாயில் அதிகூடிய குறைப்பைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுவதனால் அதற்கான பல ஊக்கத்தொகைகளை தயார்பண்ணவேண்டிய ஒரு சங்கடத்தில் இருந்து வருகின்றது எமது நாடு. இத்தனை பிரச்சினைகளுக்கும் அப்பால் புதிதாக வந்துள்ள அரசு 150,000 பேரினை அரச துறையில் இணைத்துக்கொள்ளவும் எத்தணித்து வருவது  எமது திறைசேரி அல்லது கஜானாவில் உள்ள பணத்தொகையுடன் ஒப்பிடும்போது பாரிய சவாலாகவும் தலையிடியாகவும் அரசுக்கு மாறி இருக்கின்றது இன்று. 

12 February 2020

அரச ஊழியர்களின் சேவைகள் சுதந்திரமானதாக வழங்க இடமளிக்கவேண்டும்.

எமது நாட்டில் அரச அதிகாரிகளுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன, அதனால்தான் அவற்றைச் செய்வதற்கு அவர்களின் நேர்மை மிக முக்கியமானது. இன்று ஒரு பொது அதிகாரி பொது நலனுக்காக எழுந்து நின்று அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளை எழுப்புவதும், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தாவுக்கு பதிலளிப்பதும் இந்த வாரம் சமுக ஊடகங்கள் முழுவதும் வைரலாகியது. இது அடிக்கோடிட்டுக் காட்டுவது என்னவென்றால், அரசியல்வாதிகள் எடுக்கும் கேள்விக்குரிய முடிவுகளையும் கொள்கைகளையும் எதிர்கொள்வதற்கும், இந்த நிலைமையை மாற்ற வேண்டியதன் அவசியத்திற்கும் இந்த நாட்டில் பொது அதிகாரியின் அதிகாரங்கள் எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதனையே.