ADS 468x60

31 December 2016

புதிய வருடத்துக்கான ஒற்றுமையை கட்டியெழுப்புதலும் நம்பிக்கையை அதிகரித்தலும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் கிருஸ்மஸ் விழாவினை கொண்டாடுவதில் இருந்த ழுரண்பாடுகளை எண்ணிப்பார்கிறேன். ஆனால் இம்முறை புதிய ஆண்டை வரவேற்கும் ஆயத்தங்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருக்கும் ஒற்றுமை, உறுதித்தன்மை, திடகாத்திரம் மற்றும் நம்பிக்கை என்பனவற்றை பிரதிபலிக்கும் முறை வித்தியாசமாக அமைந்திருக்கிறது குறிப்பாக ஆசியாவிலேயே மிக உயர்ந்த கிருஸ்மஸ் மரம் மூலம் இவைகள் அனைத்தும் அடையாளம் காட்டப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதொன்றே. 

27 December 2016

இத்தனையும் மனிதர்களாம்...

புரிந்து நடப்பவரும்
புரியாமல் கிடப்பவரும்
தெரிந்து கொடுப்பவரும்
திட்டமிட்டு கெடுப்பவரும்

துன்பத்தை துடைப்பவரும்
இன்பத்தை படைப்பவரும்
உறவை உடைப்பவரும்
உன்மைகளை அடைப்பவரும்

மழைய நம்பித் தானே- எங்க வெளச்சல் இருக்கு மானே!

பட்ட கௌப்புது பார்
பச்ச வயலு ஊருக்குள்ள
சிட்டுக் குருவி போல
சிறகடிச்சி மனம் பறக்குது
கொட்டு முழக்கம் கொட்டு -மழை 
சொட்ட சொட்ட கொட்டு
வெட்ட வயலில் பட்டு -வெள்ளம்
வரம்பு உயரக் கட்டு

19 December 2016

வாகரை சொந்தங்களை தேடி -ஒரு நிவாரணப் பயணம்.

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
குறிப்பாக வாகரை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கிராமங்கள், பல தசாப்த யுத்த சுவடுகளை இன்னும் சுமந்துகொண்டு, மிகவும் வருந்தித்தான் முன்னேறவேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக இங்கு காணப்படும் எல்லைக் கிராமங்கள் நெடுகிலும் கஸ்ட்டப்படும் ஒரு வறிய நிலையிலேயே இருந்து வருகிறது. இந்த நலிவான தன்மைதான் அவர்களை இலகுவாக அனர்த்தங்களில் அழிவடைய வைத்து விடுகிறது. இந்த நிலமையில் நீங்கள் கொடுத்துதவிய மீன் டின், அரிசு ( 05 கி.கி ), கோதுமை மா (02.கி.கி), பருப்பு (01.கி.கி), சீனி (01.கி.கி) போன்றன மிக மிக அத்தியாவசியமானவை, இந்த கிராமத்தில் உள்ள 38 குடும்பங்கள் சார்பாகவும் எமது பிரதேச செயலகத்தின் சார்பிலும் உங்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறேன்' என கிராம சேவகர் விஜயராஜன் அவர்கள் தெரிவித்தார். Jan 25-2013

மட்டக்களப்பு மக்களின் மறுமலர்ச்சி

//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு // 
இக்கட்டான நிலையில் வாழும் மக்களின் கல்வியினை மேம்படுத்தும் திட்டத்தினை சரியாக இனங்கண்டு மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருமலை மாவட்டங்களில் உள்ள யுத்தம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வியை மீள் எழுச்சி செய்யும் வண்ணம் கனடாவில் நிறுவப்பட்டுள்ள ChiDAES Canada (Children Development Association of Eastern Sri Lanka – Canada) எனும் நிறுவனத்தினரால் மட்டக்களப்பில் பாதிக்கப்பட்ட 5 பாடசாலைகள் இனங்காணப்பட்டு அங்குள்ள மாணவர்களுக்கு அத்தியாவசியத் தேவையாக உள்ள பெறுமதிமிக்க புத்தகப்பைகள் மற்றும் சப்பாத்துகள் என்பன வழங்கி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக உறுகாமம் மட்/ சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 89 மாணவர்களுக்கு இவை 10.02.2013 அன்று சிறப்பாக வழங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்கான அனைத்து ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளையும் எமது குழுமத்தினர் சிரமம் பாராது சிடாஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து ஏற்பாடு செய்ததுடன், அந்த நிகழ்வை சிறப்பிக்க எமது குழுவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அங்கத்துவர்கள் பிரசன்னமாகி இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் புதிய நம்பிக்கையினை எமது தமிழ் குழந்தைகள் மத்தியில் ஏற்ப்படுத்தியுள்மை தெட்டத்தெளிவாகும்.

கல்வியில் பின்னிற்கும் எமது சமுகம் கரைசேர்வது எப்போ??

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு //
'உங்கள் உறுப்பினர்கள் இந்த மிகவும் வசதி குறைந்த குழந்தைகளுக்கு வாஞ்சையுடன் கொடுக்கச் சொல்லி கேட்டுக்கொண்டதற்க்கிணங்க பாடசாலைக்கு கொண்டு செல்லும் ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் களிமடு மற்றும் கற்ப்பக்கேணியில் இருந்து பாவக்கொட்டிச்சேனை மற்றும் இருட்டுச்சோலைமடு போன்ற தூர இடங்களுக்கு பாடசாலைக்கு செல்லும் 79 பிள்ளைகளுக்கு வழங்கி வைத்தமை உண்மையில் எங்கள் அனைவருக்கும் ஒரு சந்தோசத்தினை ஏற்ப்படுத்தியுள்ளது' என இங்கு வந்திருந்த கிராமசேவகர் பாராட்டினார். மேலே குறித்த கிராமங்கள் வவுனதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள அழகான அதுபோல் கல்வி, பொருளாதாரம் என்பனவற்றில் மிகப் பின்தங்கிய கிராமங்களாகும். 'பாலும் தேனும் பனைக்கதிர் நெல்லும், சாலும் சாலும் எனத்தகு நாடு' என்பதற்க்கிணங்க பாலும் தேனும் மேவி வழிந்து கிழக்கு கரையில் இருந்து வருகின்றவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்த போடிமார்கள் வாழ்ந்த இடத்தில் இன்று கூலிவேலை செய்யும் கூட்டங்களை உருவாக்கி விட்டிருக்கும் கடந்த மூன்று தசாப்த கசப்பான காலங்கள் அதே மூன்று தசாப்த காலம் பின்னிற்கின்ற ஒரு பாவப்பட்ட மக்களாக எம்மினத்தை மாற்றியுள்ளமை கொடுமையிலும் கொடுமை. Feb, 22.2013.

தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//
தும்பங்கேணி விவசாயக் கிராமத்தில் செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கை (March 12-2013) பலனளித்துள்ளது. கிட்டத்தட்ட 5000 கிலோக்கிறாம் விளைச்சலை இது தந்துள்ளது. இம்முறை ஏற்ப்பட்ட பெரு வெள்ளம் காரணமாக அழிவுற்ற நிலையிலும் இந்த விளைவு கிடைத்துள்ளது. எமது குழுமத்தின் முயற்ச்சியில் இவர்களுக்கான முன்மாதிரி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பரீட்சிக்கப்பட்டுள்ளது. 

காந்திபுரத்தில் உடுபுடவைகள் கொடுத்து உதவினோம்

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு//. இன்றய நாள் (2013.04.13) முந்திய வருடங்களை விட இனிதாக இருந்தது என்றே எண்ணத்தோன்றுகின்றது. எமது குழுமத்தினர் நேரம் காலம் அறிந்து ஒரு மகத்தான சேவையை செய்து தற்போதுதான் திரும்பினர். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஒளிபொருந்திய புத்தாண்டாக விஜய வருடத்தினை வரவேற்க்க தயாராக இருந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் இன்னும் இருளில் வாழ்க்கையை கடத்திக்கொண்டு நாளாந்தம், விஷ ஜந்துக்களின் தொல்லையால் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சமுகத்தினை சின்னக்காந்திபுரம் எனும் இடத்தில் கண்டு அவர்களுக்கு ஒரு தொகுதி உடுபுடவைகளை கொடுத்து உதவினோம்.. 

கச்சக்கொடிஸ்வாமி மலை வித்தியாலய மாணவர்களுக்கு உதவி

//மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு // 
கிட்டத்தட்ட 1533 மக்கள் தொகையைக் கொண்டுள்ள கச்சக்கொடிஸ்வாமி மலை  ஒரு பழங்கிராமமாகும். இந்த பிரதேசம் பல காலமாக இடம்பெயர்ந்து யுத்தத்தின் கெடுபிடிக்குள் நேரடியாக அகப்பட்ட ஒரு வறிய கிராமமாகும். இவ்வாறான கிராமங்களில் அடிப்படைக் கல்வி கூட மிக மந்தமான நிலையில் இருக்கையில் தொழில்நுட்ப்பக் கல்வி, மருத்துவம் போன்றவற்றின் முன்னேற்றம் பற்றி நாங்கள் எதை எதிர்பார்ப்பது!! இந்த துறைகளில் ஒட்டுமொத்த உலகத்தினரும்; கால் நூற்றாண்டுக்கும் முன்பதாகவே கால் எடுத்து வைத்துள்ள நிலையில் நாங்கள் இன்னும் பின்னுக்கு நிற்ப்பது உலகத் தமிழரின் வளர்;ச்சிப் பங்கில் பின்னடைவையே ஏற்ப்படுத்தக்கூடும். பாடசாலையின் அதிபர் இவ்வாறு கூறுகிறார் கனடாவின் சிடாஸ் அமைப்பினர் எமது மட்டக்களப்பு கிராமங்களில் கல்வி கற்க்கும் வசதி குறைந்த சுமார் 50 மாணவர்களுக்கு, அடிப்படை வசதிகளைக் கொடுத்து உதவும் வகையில் கச்சகொடிஸ்வாமிமலை மகாவித்யாலயம் பாடசாலையில் 27.04.2013 அன்று பெறுமதி மிக்க பாடசாலை சப்பாத்துக்களையும், புத்தகப் பைகளையும் வழங்க உதவியமை வரவேற்க்க தக்க ஒன்றாகும்

கல்விக்கான உதவி நோக்கி- கட்டம் இரண்டு- இருநூறுவில் பாடசாலை

 //மக்களுடன் பயனித்த நினைவுகளின் ஒரு ஞாபகப்பகிர்வு// 
வவுனதீவு பிரதேசம் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தினுள் காணப்படுகின்றது. இது இம் மாவட்டத்துக்குள்ளேயே கல்வியில் மிகவும் பின்தங்கிய இடமாகும். இங்கு காணப்படுகின்ற அநேகம் பாடசாலைகளில் மாணவர்களின் வரவு மிகவும் மந்தமாகக் காணப்படுவதுடன் இங்குள்ள மக்களும் மாணவர்களும் கல்வியில் அக்கறையற்றவர்களாகவும், நாட்டம் குறைந்தவர்களாகவுமே காணப்படுகின்றமையை உணர்ந்து, இருநூறுவில் பாடசாலையில் கல்விகற்க்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்தகப்பை மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பான சப்பாத்துக்களை கனடா வாழ் எம் உறவுகளின் சிடாஸ் அமைப்பின் நிதி உதவியுடன் 03.03.2013 அன்று வழங்கி அவர்களை ஊக்குவித்து உதவினோம்..

17 December 2016

எல்லைப்புற பகுதி மக்களிடையே இந்து மத தத்துவங்கள் தெளிவுபடுத்தப்படவேண்டும்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் புறக்கிராமங்களில் எமது இந்து மதத்தின் அறக் கருத்துக்கள், தத்துவங்கள், அடங்கிய விடையங்களை தெளிவுபடுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட இந்து கலாசார உத்தியோகஸ்தர் கி.குணநாயகம் தெரிவித்தார்.
கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் மட்டக்களப்பு காந்திபுரம் சிவசக்தி இந்து கலா மன்றத்திற்கு இசைக் கருவிகள், வாழ்வாதார உதவி, உலர் உணவுப்பொதி, மாணவர்களுக்கான கற்றல் புத்தகங்கள், இந்துமத நன்நெறிக் கோவையான பகவத்கீதை, என்பன இன்று காலை வழங்கி வைக்கப்பட்டன.

15 December 2016

வம்மியடியூற்று அரும்புகள் பாலர் பாடசாலை நிகழ்வில்

கிழக்கிலங்கை இந்துசமய சமூக அபிவிருத்தி சபையினால் வம்மியடியூற்று இந்து இளைஞர் கலா மன்றத்தின் ஒழுங்கமைப்பில் அரும்புகள் பாலர் பாடசாலைக்கு தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள் சனிக்கிழமை(3) வழங்கி வைக்கப்பட்டன. 
http://battinaatham.com/description.php?art=6754
    
    

16 November 2016

கொம்புச்சந்தியானின் இசைக்கப்படாத எழுத்துகள்!!

கொம்புச்சந்தி அப்பன் மீது பாடிய எனது இசைக்கப்படாத எழுத்துகள்!!

இலங்காபரி உயர்ந்த இறைவா

காவல் நீயே கலியுக வரதா
காலடி நிதம் வந்து தொழுதேன்- உன்
காலடி நிதம் வந்து தொழுதேன் -நின்
அருள் மழையில் தினம் நனைவேன்

நித்தமுன் தரிசனம் நீங்காத பாக்கியம்
நான் என்றும் பாடனும் நாம சங்கீர்த்தனம்
நாயகனே நானுன் பாதம் அர்ப்பணம்
இலங்காபரி உயர்ந்த இறைவா  நின் சந்நிதானம்
(கவல் நீயே கலியுக வரதா)

11 November 2016

இன்னும் எத்தனை நாள்

இன்னும் எத்தனை நாள் இப்படியே வெறுமனே வரிசெலுத்தும் பரம்பரையாய் மட்டும் வாழ்ந்து போவது, மூலப்பொருட்களை மட்டும் விளைவித்து அறாவிலைக்கு தொலைக்கும் ஆதரவற்ற, கொடுப்பனவில்லாத சனங்களாய் மற்றவருக்காய் மாடாய் உழைத்த இந்த சமுகம் எப்போதுதான் அரசியல் விமோசனம் பெறப்போகின்றனவோ! தெரியவில்லை. சந்தர்ப்பங்களையெல்லாம் தட்டிப்பறிக்கும் இவர்கள் அரசியல் சாணக்கியர்களாம், அது அரசியல் சாணக்கியமல்ல அடக்கி ஒடுக்கும் சாணக்கியம் என்பதை புரியாதவர்கள் விரைவில் புரிவார்கள். இந்த சந்தர்ப்பம் இறைவன் கொடுத்த சந்தர்ப்பம் என்று ஒருவர் சொன்னதாக கொட்டை எழத்தில் பொறித்து கோசம் இட்டனர் அது இப்போது சரியாக மாறிவந்து நிற்க்கிறது, ஏனெனில் இப்போது மக்கள் அதனை உணரும் ஒரு சந்தர்ப்பத்தினை மக்களுக்கு காட்டிக்கொடுத்துள்ளார்.

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை,

வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை, இல்லாமல் மாறும் பொருள் தேடி, அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ, இந்நாட்டில் மலரும் சமநீதி. நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம், இருந்திடும் என்னும் கதை மாறும். இந்தக் கனவோடு மட்டும் வாழாமல் சமநீதி பெற்று மற்றவரையும் சமநீதியுடன் வாழவைக்க எண்ண வேண்டும். போடுங்க போடுங்க பார்க்கலாம் என்று சொல்ல இது என்ன கிடுகு மட்டை வியாபாரமா? பட்டினிச் சாவை தொலைக்க மானத்தையும் மாற்றானிடம் அடகு வைக்கும் பரம்பரையாய் மாற்றாமல் விட மாட்டோம் என்பது போல் அல்லவா நம்ம அரசியல் ஆசான்கள் இருக்கிறார்கள். பள்ளிப்படிப்பைத் தொலைத்து கொள்ளி விற்க்கப் போகும் சிறுவர்கள்இ வயலையும் வளவையும் அயலவர்க்கு விற்க்கும் எம்மவர்இ ஆசுபத்திரி கூலிவேலைக்கும் தேடிவைத்த சொத்தையெல்லாம் அடுத்தவனுக்கு லஞ்சம் கொடுக்கும் அரசியல் அனாதைகளாக இந்த வந்தோரை வாழவைத்த மக்களை மாற்றிவிட்டீர்களே!. யாரிடம்போய்ச் சொல்லட்டும். ஆற்றலும் அறிவும் நன்மைகள் ஓங்க, இயற்கை தந்த பரிசாகும், இதில் நாட்டினைக்கெடுத்து நன்மைகள் அழிக்க, நினைத்தால் எவர்க்கும் அழிவாகும். நல்லதை வளர்ப்பது அறிவாற்றல், அல்லதை நினைப்பது அழிவாற்றல்... நல்லதை நினைக்க எல்லோரும் தலைப்படுங்கள்

கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை

பல நூற்றுக் கணக்கானவர்கள் கால்களை இழந்திருந்தாலும் நம்பிக்கையை இழக்காமல் காத்துக்கொண்டிருந்தனர். 'வலிமை, வலிமை, அது நமது இந்த வாழ்க்கையில் என்றுமே நிறைய வேண்டும்இ நம் பாவம் மற்றும் துன்பம் அனைத்திர்க்கும் ஒரே காரணமாக உள்ளது நமது பலவீனம் மட்டுமே. பலவீனம் இருந்தால் அறியாமை வரும், அந்த அறியாமை துன்பத்தை தருகிறது' என்று விவேகாநந்தர் முழங்கியதற்கு ஏற்ப்ப அந்த வலிமையை எங்கள் குழுமத்தினர் விஷேச தேவையுடையவர்களுக்கு இன்று வழங்கினோம்.

எமது மகளிர் தின கௌரவிப்பில்

எமது குழுமத்தினர் 10.03.2013 அன்று திருப்பழுகாமம் கிராமத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டத்தினை கொண்டாடினர். பழுகாமம் கிராமத்தின் மிகவும் பாதிக்கப்பட்டு தங்களது கணவன்மாரை இழந்தஇ வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரவளைத்து அவர்களுக்கு ளால் திருவாளர் சிவர் அண்ணா அவர்ககனடாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சேலைகள் வழங்கி வைக்கப்பட்டது. 

விறகு ராட்டி அடுப்புகள் 50 குடியிருப்பு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


பட்டிருப்பு தொகுதியின் பழம் பெரும் கிராமங்களில் ஒன்றான குடியிருப்புக் கிராமம் 38 குடும்பங்களைத் தன்னகத்தே கொண்டு, மட்டக்களப்பின் தெற்கே சுமார் 24 கிலோ மீற்றருக்கு அப்பால் ஆற்றங்கரையில் அமைந்துள்ள வறிய கிராமமாகும். இந்தக் கிராமம் வயல்வெளிகள் சூழ வெண்மணற்த் திடலில் அமைந்திருக்கின்ற போதும், வருடா வருடம் ஏற்ப்படுகின்ற வெள்ள அனர்த்தத்தினில் பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றது. 

கல்வியில் வறுமை மட்டக்களப்புக்கு சொந்தமானதா?

வறுமை என்பத,, உணவு, உடை, உறைவிடம் பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும். 

எமது மாவட்டத்துக்குள்ளும் இந்த வறுமை காரணமாக பல ஏற்றத்தாழ்வு காணப்படுகிறது. இதில் குறிப்பாக கல்வி பெறும் வாய்ப்பு பல குடும்பத்தில் மிக கஸ்ட்டமானதொன்றாகவே காணப்படுகிறது. இதனால்தான் எம் குழுமத்தினர் அந்தக் கல்வியில் அதிக அக்கறை கொள்ளுகின்றமை தெரிந்த விடயம்.

என் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!


மீண்டும் ஒரு முறை உங்களுடன் உறவாடலாம் என நினைக்கிறேன். நாங்கள் பல காரணங்களால்; கடந்த தசாப்தங்களில் பிளவுபட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாலா பக்கமும் தாய் வேறு, பிள்ளை வேறென சிதைந்து, நாடு விட்டு நாடு போய், சில்லாங்கொட்டை போல் கலைந்து கிடக்கிறோம். 

தொழில் வாய்ப்பற்ற குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம்

தொழில் வாய்ப்பற்ற, தொழில் பாதுகாப்பற்ற ஒரு குடிமக்களாக மாற்றம் பெற்றுவிட்டோம். அறிவாளிகளாக உருவாக்கப்படுபவர்களும் இம்மக்களுக்கு பிரயோசனமற்றவர்களாக வெளியேறிச் சென்றுவிட்டனர்...கொச்சிக்காய் இருந்து கொள்ளிக் கட்டுவரைக்கும் இன்னொருவனிடம் கொடுக்கும் தரகு வர்த்தகத்துக்கு அப்பால் வியாபார தந்துரோபாயம் அற்று பெறுமதியான வளங்களை பெறுமதியற்று கொடுக்கும் எமது கூட்டத்தை நாங்கள்தான் வழிப்படுத்தனும். இன்றைக்கு இறைத்ததுபோதும் என நாம் ஓய்ந்துவிடலாகாது என்றைக்கும் இறைக்கவேண்டும் அப்போதுதான் எம் இனம் பசுமைபெறும்.

05 November 2016

காதல் வயப்பட்டதும் வயப்படுத்தியதும்

தெரிந்தும் தெரியாமலும்
புரிந்தும் புரியாமலும்
கண்ணில் கதையில்
பேச்சில் பெயரில்
சிரிப்பில்  செல்லத்தில்
கோபத்தில் பாவத்தில்
கவனிப்பில் கையணைப்பில்
செயலில்  சேவையில்
வயப்பட்டதும்.......

எழுத்தால் இதயத்தால்
சிரிப்பால் சினேகிதத்தால்
குரலால் கொள்கையால்
பாடால் பரிந்துரையால்
கொஞ்சலால் கெஞ்சலால்
கொடுமையால் கடுமையால்
கண்களால் கவிதையால்
வயப்படுத்தியதுமுண்டு.............

28 October 2016

தீபத்திருநாள் வாழ்துகள்!

ஒளிரும் ஒருநாள் உனக்காகவே எழுந்திடு மனமே!
இருள் போகும் போனால் மறையும் துன்பம்
வாழ்ந்திடு இனமே!!
எழுந்திடு மனமே! வாழ்ந்திடு இனமே!!
போருக்குள் வாழ்வைத் துலைத்து
போதாமை உள்ளே வைத்து
தூங்காமல் தொலைத்த காலம் போனதம்மா
கையுண்டு காலுமுண்டு கரைசேர்க்க ஆளுமுண்டு
நம்பிக்கை தீபம் கொண்டு முன்னேறுவோம்
ஒளியின் பக்கம் நடைபோடுவோம்
உன்மை பேசி உறவாடுவோம்
வாருங்கள் கொண்டாடுவோம்- ஒன்றாய்
சேருங்கள் முன்னேறுவோம்.

27 October 2016

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' .

'மட்டக்களப்பு மாநிலம் என்னும் மண்ணுக்கும் ஒரு வரலாறு உண்டு' என்பது மறுக்க முடியாத ஒன்று. இருந்தும், மட்டக்களப்பு பிரதேசத்துக்கு வரலாறு கிடையாது, அல்லது நீண்ட பண்டை வரலாறு இல்லை என்றுதான் அனேகர் நினைக்கின்றார்கள். மட்டக்களப்புக்கு போர்ந்த பண்பாடு இல்லை என்பது பலரது மனதில் தீர்க்கமாய் உறைந்திருக்கிறது.

இலக்கியம் கலை, மொழிச் செழுமை, வித்துவத்திறன், பிரதேச சமுக மேன்மை ஆகியவற்றில் மட்டக்களப்பு பிரதேச சமுதாயம் ரொம்பவும் பிற்ப்பட்டது என்கின்ற எண்ணப்பாடு நீண்ட காலமாக உலவுகிறது.

11 October 2016

நீர் ஓடிடும் தேனாட்டில்

அ) மீன்பாடுற நம்ம நாட்டில நம்மட நாட்டு வளம் கலை கலாசாரம் பற்றி ஏன் நம்ம ஒரு பாட்டு பாடக்கூடாது? 
ஆ) அது தானே

நீர் ஓடிடும் தேனாட்டில்
மீன் பாடுது கேளுங்களேன்
ஏர் பாய்ந்திடும் வளநாட்டில்
நெல் ஆடுது பாருங்களேன்

கூத்து கும்பி கரகம் வசந்தன்
பூத்துக் குலுங்கும் கலையிடும்
சேத்து காவியம் காதில் ஒலிக்க
உடுக்கை முழங்கும் தமிழ் நிலம்

29 September 2016

இயலுமானவரை இயன்றவரிடமிருந்து இயலாதவர்களுக்காய்!!!!


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியில் எல்லா வகையான கிராமப்புற மக்களின் பங்களிப்பை அதிகரிக்க முன்னேற்றகரமான நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணமிது. பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் இருந்து இங்கு ஊழிய வளம் புறக்கணிக்கப்படுவதனாலும், காலநிலை மாற்றம், புதிய நவீன இயந்திர இறக்குமதி, தொழில்நுட்ப வசதி இவற்றினால் பாரம்பரியமாக  நிலத்தினையும் நீரினையும் நம்பி இருந்த ஒரு பரம்பரை படிப்படியாக முடமாக்கப்பட்டு வருவதனையும் அதுபோல் அவர்கள் மாற்றுவழி இன்றி மன உழைச்சலுக்குள்ளாகி பல தீய விடயங்களில் திசை மாறிக்கொண்டு வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

20 September 2016

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள்

மட்டக்களப்பில் தொடர்சியாக அதிகரித்துவரும் விபத்துக்கள் மக்களிடையே மிக்க அதிர்சியையும் பயத்தையும் தோற்றுவித்துள்ளது.இன்றைய காலகட்டத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் ஒன்றாக வீதி விபத்துக்களும் விளங்கு கின்றது. ஏனைய விபத்துக்கள்போல் வீதிகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள்  அதிகாித்துள்ளன.

அந்த வகையில் இன்று வீதி விபத்துக்கள் இடம்பெறாத மணித்தி யாலமே இல்லை என்றளவுக்கு நிலைமை வளர்ச்சி அடைந்திருக்கின்றது. இந்த வீதி விபத்துக்களால் மரணங்கள் மாத்தி ரமல்லாமல் உடல், உள உபாதைகளும் ஏற்படவே செய்கின்றன. மேலும் வாகன விபத்துக்களால் ஏற்படும் சேதங் களையும் மறந்து விடமுடியாது.

30 August 2016

தோழில் சாய நீ இருந்தால் போதுமே!

என் இனிய தமிழ் நெஞ்சங்களே! எனது பிரதேசத்தின் வயல் காட்டிலும் கடற்கரை வாடிகளுக்குள்ளும் மலை ஓரங்களிலும் கட்டுண்டு கிடந்த கிராமத்து காதலை சிறைப்பிடித்து வந்து உங்கள் சாளரங்களின் ஓரம் வலைப்பூக்களின் வாசம் உரசி எண்ணி உருசிக்க கொண்டுவந்து தந்துள்ளேன். நீங்கள் ஒரு கணத்தை செலவிட்டு இந்த மாசற்ற காதலை மனதில் காணுங்கள்.

29 August 2016

உலகில் தமிழ் அழியக்கூடிய சாத்தியம் விழித்தெழுவோம்!

  கொழும்பு தமிழ் சங்கத்தில் இன்று நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டுக்கு நானும் ஒரு அதிதியாக அழைக்கப்பட்டிருந்தேன். நன்றி கௌசி அக்கா.
ஒரு நூல் என்னைப் பொறுத்த அளவில் அனுபவத்தில் இருந்தும், கற்றவை அல்லது பெற்றவையிலிருந்தும் மூன்றாவது இரண்டும் கலந்துமான மூன்று வகையில் பிரசிவிக்கப்படுகின்றன.

28 August 2016

கல்வியியல் கல்லூரிகளின் மாற்றத்தின் தேவைப்பாடு!!

கௌரவ ரணில் விக்ரமசிங்க கல்வி மந்திரியாக இருந்தபோது பாடசாலைகளில் பயிற்றப்பட்ட ஆசிரியர்களின் தேவையை உணர்ந்த அவர் கல்வியியல் கல்லூரிகளை நிறுவி அதை அமுல்படுத்தி வைத்தார். தற்போது இலங்கையில் மொத்தம் 19 கல்வியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டு 4000 ஆசிாியா்கள் அதன் மூலம் வெளியேற்றப்படுகின்றமை ஒரு சிறப்பாகும். இந்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் நல்ல திறமையுள்ள பயிற்றப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி அவர்கள் மூலம் பிரகாசமான எதிர்காலத்தினை மாணவர்கழூடாக தோற்றுவிப்பதனையே இது இலக்காக கொண்டிருந்தது. இந்த கல்லூரிகளுக்கு உ.த சித்தி பெற்ற மாணவர்கள் தெரிவாகி சுமார் மூன்று வருடங்கள் உள்ளேயும் வெளியேயும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். இவர்கள் பல பாடத் துறைகளில் ஆசிரியர்களாக வெளியேற்றப்படுகின்றனர் முறையே கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், சுகாதாரம், தொழில் நுட்பம், சமயப்பாடங்கள், விவசாயம், நடனம், மொழி போன்றவற்றை குறிப்பிடலாம். 

27 August 2016

காதலில் மாத்திரமே

காதலில் மாத்திரமே
நாயே எனத் திட்டுவதற்கும்
செல்லமே எனக் கட்டுவதற்கும்
கண்டங்கள் கடந்து நேசிப்பதற்கும்
கண்களில் நீர்சொட்ட யாசிப்பதற்கும் ஒண்ணுகிறது

25 August 2016

நம்ம பா.ம.உறுப்பினர்கள் எங்கே!!

"காலம் மாறுது கருத்தும் மாறுது
நாமும் மாற வேண்டும்
நம்மால் நாடும் மாற வேண்டும்"
கௌரவ பா.உறுப்பினர் திருமதி சாந்தினியை முந்தநாள் பாராளமன்றத்திற்கு ஒரு கலந்துரையாடலுக்கு சென்றிருந்த போது மீண்டும் இரு வருடங்களுக்கு பின் சந்தித்துக்கொள்ள நேர்ந்தது மகிழ்சி.இவர் போன்ற அனுபவமும் விடய அறிவும் படித்தவர்களும் பா.ம செல்வதை நான் மிகவும் வரவேற்கிறேன். இவர் அன்பானவர் அதேபோல் நுனி நாக்கில் புள்ளிவிவரங்களை வைத்து தொனி உயர்த்தி பேசும் பல்மொழி ஆற்றல் கொண்ட ஒரு திறமைசாலி. அவரை மீண்டும் கண்டு பேசியதில் மகிழ்சி. இவ்வாறானவ்களைத்தான் கௌரவ என அழைக்க தோணுகிறது.

24 August 2016

மட்டக்களப்பில் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.

 பொருளாதார, அரசியல், இனம், பிரதேசம் மற்றும் சமுக அபிலாசைகள் கடந்து சுகாதாரம் சுகாதாரம் அனைத்து உயிர்களுக்குமான ஒரு அடிப்படை உரிமையாகும். ஒரு சமுகத்தின் துடிப்பானஇ உற்பத்தித்திறனுடைய மனிதர்களை கட்டியெழுப்புவதில் ஒரு மனிதனின் உடல் மற்றும் உள சுகாதாரம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் இன்றய உலகில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் இது நடுநாயகமாக இருந்து வருகின்றதுஇ WHO கூறுவதற்கமைய ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் உளம் என்பனதான் அவனது பாடசாலைக் கல்வி மற்றும் அவனது அதிகளவான உற்பத்தி திறன் உன்பனவற்றுக்கு ஊற்றுக்கண் என தெரிவித்திருப்பது எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் சுகாதாரத்தின் மேலான கவனம் அதிகரிக்கப்படனும் எனக் கூறுகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கின்றனர் என UN அறிக்கை கூறுகின்றது

மட்டக்களப்பின் சுகாதாரமும் இடை குறைந்த பிள்ளைகளின் அதிகரிப்பும்.

 பொருளாதார, அரசியல், இனம், பிரதேசம் மற்றும் சமுக அபிலாசைகள் இவைகளைக்  கடந்து சுகாதாரம் என்பது அனைத்து உயிர்களுக்குமான ஒரு அடிப்படை உரிமையாகும். ஒரு சமுகத்தின் துடிப்பான, உற்பத்தித்திறனுடைய மனிதர்களை கட்டியெழுப்புவதில் அந்த சமுக அங்கிகளின் உடல் மற்றும் உள சுகாதார ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் இன்றய உலகில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வறுமை குறைப்பு ஆகியவற்றில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளில் சுகாதாரம் நடுநாயகமாக இருந்து வருகின்றது. "ஒரு மனிதனின் ஆரோக்கியமான உடல் உளம் என்பனதான் அவனது பாடசாலைக் கல்வி மற்றும் அவனது அதிகளவான உற்பத்தி திறன் என்பனவற்றுக்கு ஊற்றுக்கண் என" WHO தெரிவித்திருப்பது எமது நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்துவதில் சுகாதாரத்தின் மேலான கவனம் அதிகரிக்கப்படனும் என்பதனை கோடிட்டுக் காட்டுகின்றது.  இலங்கையைப் பொறுத்தவரையில் ஆண்களைவிட பெண்கள் சுகாதாரமான வாழ்க்கை வாழ்கின்றனர் என UN அறிக்கை கூறுகின்றது

இருந்தாலும் சிரிக்கின்றேன்

துளித் துளியாய்
துகள் துகளாய் ஒடஞ்சேனே
வெயில் வெயிலாய்
தினம் கலங்கி வறண்டேனே
இருந்தாலும் சிரிக்கின்றேன் -நீ
மறந்தாலும் மரிக்கின்றேன்
உன் நினைவால்

21 August 2016

மட்டக் களப்பின் ஓரம்

மாலை வருடும் நேரம்
மட்டக் களப்பின் ஓரம்
மெல்லச் சிவக்கும் வானம்
மேகம் கொள்ளுது நாணம்

16 August 2016

எடுத்துக்காட்டான ஒரு நிகழ்வு.

"சுயநலமே ஒழுக்க கேடு, சுயநலமின்மையே நல்லொழுக்கம் இதுவே நாம் ஒழுக்கத்துக்கு தரும் ஒரே இலக்கணம்" சுவாமி விகானந்தர் சொல்லி இருப்பதற்கு இணங்க பொதுநலத்தை கருத்தில்கொண்டு வருடா வருடம் நடைபெறும் அமரா் த.பாக்கியராசா அவர்களின் ஞாபகார்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பை ஏற்று 14.08.2016 அடியேனும் கலந்துகொண்டிருந்தேன். உங்களுக்கு மனமுவந்த நன்றிகள். அது மிகவும் பிரயோசனமாகவும் எடுத்து காட்டானதாகவும் முன்னோடியானதாகவும் இருந்தது. 


என்னைப் பொறுத்த அளவில் இரு நோக்கங்களை இந்த நிகழ்வு தன்னகத்தே கொண்டிருந்தது, ஒன்று எமது கல்வியை வருடாவருடம் எமது ஊர்மக்களை வைத்து அளவிடுவது, அடுத்தது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை தட்டிக்கொடுப்பது என்கின்ற மிகப் பெரிய இரு இலக்குகளை கொண்டு நடத்தப்படுவது இந்த நிகழ்வுக்கு சிறப்பு.


09 August 2016

பெருகும் இளைஞா்கள் வேலையின்மை

நம்ம நாட்டில வருடா வருடம் உ/த படிக்கிறவங்களில் பல்கலைக்கழகத்துக்கு தகுதியானவர்கள் என சுமார் 1,50,000 தெரிவாகுவர். பின் கிட்டத்தட்ட 25,000 பேர் அதில் தெரிவாகி அரச ப.க.கழகங்களில் கல்வியினை தொடா்வாா்கள். மிகுதியானவர்களில் 70,000 பேர் தொழில் பயிற்சி கல்லூரிகள் மற்றும் திறந்த ப.க.கழகங்கள், தனியாா் ப.க.கழகங்கள் போன்றவற்றில் வெளிவாரி பட்டம் என சேர்ந்து கொள்ள, கிட்டத்தட்ட ஒரு 5,000 பேர் வெளிநாடுகளில் திறனற்ற தொழிலாளிகளாக இணைந்து கொள்ளுவர். ,இப்படியாகபோக மிகுதி 50,000 போ் (43%) வருடாவரும் வருகின்ற படித்த இளம் இரத்தம் கொண்ட, கல்வியினை தொடர முடியாத, கிராமப்புற இளையோரின் நிலையை யோசித்து பார்த்தால் கிா்என தலை சுற்றுகிறது.

நான் கவிஞ்சனும் இல்லை!

கவிதை எழுதி கனகாலம்- என
கண்ணை மூடி அமர்தேன்
அடைத்த வீடு
ஆருமில்ல தனிமை
விருப்பமற்ற உணவு
வேலையில் அழுத்தம்
வீட்டுக் குறைகள்
நாட்டு நடப்புகள்!!
பந்திப பந்தியாய்
முந்தி வருகிறது! எனக்குள்!

மண்ணை நம்புங்க!

பெண்ணை நம்பாமல் 
மண்ணை நம்புங்க!
பெண் உளைச்சல்
மண் விளைச்சல்!!

08 August 2016

நினைக்க முடியாத பிரிவில்



என் இனத்தின் சாவைக்கூட
நினைக்க முடியாத பிரிவில்
நானும்!
கொத்துக் கொத்தாக உயிர்கள்
ஆகுதியான போது - அதில்
மகிழ்ந்து,
அதை
அரசியலாயும், வியாபாரமாயும்,
வெற்றியாயும் கொண்டாடும்
கூட்டத்தின் மத்தியில்,

இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைப்பு


இந்துசமய சமூக அபிவிருத்திச் சபையினால் இசைக் கருவிகள் வழங்கி வைத்தமை மிக்க நல்லதொரு முனைப்பு. குறிப்பாக கிராமப்புறங்களில், இன்று எமது மாவட்டத்தில் கல்வியின் வளர்ச்சி கணிசமான அளவு முன்னேற்றம் காணவில்லை என்றே குறிப்பிடவேண்டும்.
அன்று சமய வளர்சியுடன் ஒன்றித்த வகையில்தான் கல்வி முன்னேற்றம் கண்டு வந்தது. அது இன்று நகர அளவில் மட்டுப்படுத்தப்பட்டு விட்டது வெளிப்படை. இந்த நிலைமையினை மாற்றும் முனைப்பில் இந்தச் சபையினர் கிராமப்புற மாணவர்களை ஒன்று சேர்ந்து ஆலயத்துக்கு வந்து கூட்டு வளிபாடுகளில் ஈடுபட வைத்து, பல நடைமுறை ஒழுக்க, வழிபாட்டு முறைகளை தெழிவுறுத்தி மற்றும் கல்வியுடன் தொடபுபடுத்தும் ஒரு தந்திரோபாயத்தினை செய்து, மறைமுகமாகவும் நேரடியாகவும் நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், கல்வியையும் மற்றும் சமயத்தினையும் செழித்தோங்கச் செய்யும் இத்தகைய கைங்கரியத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதை இட்டு மகிழ்சியடைகிறேன்.

பட்டிப்பளைப் போடியார்களுடன்!


இன்னும் மதிப்பளிக்க வேண்டிய போடியார்கள் 
உண்ண உணவளித்த உத்தமர்கள்
வேட்டி கட்டி வேலை செய்பவர்கள்
வரம்பு வெட்டி வயலை வளர்ப்பவர்கள்
நான் பெருமைப் படுவதெல்லாம்
இந்த உழைப்பாளிகளின் உருத்தென்பதால்
நான் சிறுமைப் படுவதெல்லாம்
இவர்களை ஒதுக்கிவைக்கும் கருத்தென்பதால்
எப்பொழுதும் நானும் உங்களில் ஒருவனே!

அரசியல்வாதிகளை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.

அரசியல்வாதிகளை படம் எடுக்க என்றே பின்னால் திரிந்து அவர்கள் மாலை அணிவதையும், வரவேற்க்கப்படுவதையும் படமாகப் போடுவதை பார்து பார்த்து சலித்து போகிறது, வெறுப்பாகிறது.
இதை ஒரு ஆரோக்கியமான செய்தி அல்லது தகவல் என நாம் நினைக்கவில்லை. மாறாக என்ன திட்டங்களை வறுமை ஒளிப்பதற்கு, வேலைவாய்பினை அதிகரிக்க, திறன் அபிவிருத்தியினை ஏற்படுத்த, கல்வியில் அடைவு மட்டத்தினை அதிகரிக்க, விவசாயம் மற்றும் ஏனைய தொழில் விருத்தியினை ஏற்படுத்த செய்கிறார்கள் என்கின்ற ஆக்கபூர்வமான செய்தியை படிக்க கேட்க ஆவலாக இருக்கின்றோம்.
மாவட்ட, தொகுதி ரீதியான மனிதவள, பொருளாதார, இயற்கைவள பாதுகாப்பு மற்றும் அரசியல் ஸ்த்திரத்தன்னை போன்றவற்றை கட்டியெழுப்புவதற்கான மாநாடுகளை நடாத்தி அதில் இருந்து ஆய்வு பேப்பர்களை உருவாக்கி அதன் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தி வெற்றி காண விளையவேண்டும். சும்மா சும்மா நிகழ்சி பார்வையாளர்களாக கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்கும் அரசவியல்வாதிகளின் முகத்தை காண யாரும் விரும்பவில்லை அதிகாரிகளையும் சேர்த்து.

பூவே!

கோபமும் உனக்கு அழகு
ஓற்றை நாளுக்குள்
ஓராயிரம் சந்தோசம்
ஓராயிரம் பரவசம்
ஓராயிரம் வாசைன
ஓராயிரம் புன்னகை
உன்னால் மட்டுமே
ஒண்ணுகிறது
இதை மனிதன் கூட
ஏண்ணுவதில்லை

நிஸப்தத்தின் மடியில்!

பல நேரங்களில் இந்த முழு நிலாக்கால பயணம் மறக்கமுடியாத நிஸப்தத்தின் பதிவுகளாக மனதில் இடம் பிடித்து விடுகின்றது இடைவெளிகளுடன்.
தூரங்கள் பனியின் ஈரக்கசிவுகளுக்குள் காணாமல் போனாலும், உறங்கும் ஊர், உறங்காத தென்றல், பாடுகின்ற பறவைகள் பாடாத வானொலி, ஓடும் நதி ஓடாத நிலவு இவற்றுடன் பெறுமதிக்க முடியாத பொழுதுகளாய் பதிந்தன நேற்றய தாந்தாமலைப் யணம்.

எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள்.

எல்லா மனிதரும் யாராவது ஊக்கப்படுத்தவேணும், தட்டிக்கொடுக்கவேணும் என்று காத்துக்கிடக்கிறார்கள். அந்தப் பொறி எங்க இருந்து கிளம்புது என்பதை பலர் தமது ஈகோவால் அறிய மறுத்து விடுகின்றனர். நான் வழமைபோல கள விஜயம் போனேன், 1)ஒரு மக்கள் சந்திப்பு அவர்கள் தந்த குளிர்பானம் அருந்திவிட்டு அவர்களது சுகதுக்கங்களை கேட்டு அவர்களோடு உரையாடி வந்தேன், 2). இன்னும் ஒரு பாலர் பாடசாலைக்கு வரச் சொல்லி அங்கு போனேன் அவர்களுடன் பாடினேன் அவர்கள் ஊட்டிய கடலையை உண்டேன் ஆசிரியர்களை பாராட்டினேன், 3). இன்னும் ஒரு குடும்பம் பல இழப்புகளை சந்தித்த குடும்பம் உரையாடினேன் நாங்கள் கொண்டுபோன உணவுகளை பகிர்ந்து உண்டோம்.
இவர்கள் எல்லாம் யாராவது ஒருவர் உற்சாகச் சூழலை ஏற்ப்படுத்த மாட்டாரா என தாமரை மலர்கள் சூரியனது வருகையை மலர்வதற்க்காக பார்த்திருப்பதுபோல் காத்துக் கிடக்கின்றனர்.அதிலும் பாதிப்புக்குள்ளாகி நலிவுற்றுள்ள எம்மக்கள்.
ஆக இவர்கள் எல்லாம் நம்மைப் போன்றவர்கள் வந்து இவர்களோடு கதைப்பார்களா! என்று எதிர்பார்க்காதவர்கள். இதைத்தான் பல பொதுஜன அதிகாரிகள் மற்றும் சில படித்து பெரும் பதவியில் இருப்போரும், உழைத்து உச்சத்தில் இருப்போரும் செய்துவருகிறார்கள், ............இது என்னங்க நியாயம்!!!.
உங்கள மாதிரித்தானேங்க இவங்களும் தட்டிக்கொடுப்பு, உற்சாகத்தை எதிர்பார்ப்பாங்க!! றைபண்ணிப் பாருங்க நம்மளுக்கும் அவங்களுக்கும் நெறய சந்தோசம் கிடைக்குமுங்க! சில அரசியல்வாதிகளும் அந்தப் பரிபாரங்களும் இப்படித்தான் பல நேரங்களில! ................கிராமத்துப்பக்கம் அந்த வாக்குகள பெற மட்டும் போவாங்க! அப்புறம் மக்கள்தான் அவங்கட்டபோய் காத்துக்கிடக்கணும். மக்கள் பாவமுங்க அவங்களுடன் ஒன்றிணைந்து அவர்களை உற்சாகப்படுத்தலாமே!
// 'நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்'//

உண்மையைத் தேடி!!

இதயமும், மூளையும் சரியான விகிதத்தில் இயங்கப்பெற்ற சரியான வார்ப்புக்களாக நாங்கள் இருக்கவேண்டும். நமது பிரதேச மக்களின் வறிய, பின்தங்கிய நிலை குறித்து நம்மில் ஒவ்வொருவருக்கும் அக்கறையும் கவலையும், பல நேரங்களில் கொளுந்து விட்டு எரிந்து அவை அந்த பின்னடைவுகளை குறிவைத்து நகரவேண்டும். எமது கல்வி, அனுபவம், தொடர்பாடல்கள் என்பனவற்றை முற்றாக இந்த மக்களை முன்னேற்ற பயன்படவேண்டும் என்பதில் அதிக அக்கறை உடையவா்களாய் இருப்போம்.
அதனாலே சிலர் குறைகளையாவது வெளிச்சம்போட்டுக்காட்டஇந்த சிறு ஊடகத்தை பயன்படுத்துகிறேன். எமது மக்களுக்கு இன்று தேவையான முதல் விடயம் மனமாற்றம், தைரியம், வழிகாட்டல், தொழில்பயிற்சி, அன்பு அரவணைப்பு போன்ற எல்லோராலும் கொடுக்கக்கூடிய விடயமே. அதை என் அறிவுக்கு எட்டியவரை எடுத்துணர்த்தி வருகிறேன்.
ஒரு கிராமத்துக்கு சென்று திரும்பினேன். அதில் மனதை உருக்கிய ஒரு சம்பவம். ஒரு வயது போன அம்மாவை எனது நண்பர் ஒருவர் காட்டி அழைத்துச் சென்றார், அவர் நடக்க ஒரு காலை இழந்தும், பிடிக்க ஒரு கையை இழந்தும், கடிக்க உள்ள பற்களை இழந்தும் யானையின் துவம்சத்துக்கு ஆளாகி நடைப்பிணமாய் இருந்தவரைப் பார்த்தேன்.
'என்னால் எல்லோருக்கும் தொல்லை மகனே, மல சலம் கழிக்கும் நிலையிலும் இல்லாத நிலையில் என்னை ஆண்டவன் படைத்துள்ளான். அந்த யானை என்னை சாகடித்து இருக்கலாம். யாரிடம் இதை சொல்லி அழுவது என நினைத்து கவலைப்படுவேன் நீங்க வந்து இருந்து கதைத்து எனது நிலையை அறிந்து போவது எனக்கு மிகப் பெரும் ஆறுதலை தருகிறது. உன்ன என்ட பிள்ளையா நினைத்து ஒரு உதவி கேட்டால் செய்ய முடியுமா என்று என்னிடம் கேட்டார்."
"சொல்லுங்கள் அம்மா" என்று சொல்ல. என்னால் எனது மகள் கஸ்ட்டப்படுவதை சகிக்க முடியவில்லை அவர்களும் அன்றாடம் கூலித் தொழில் செய்து பிழைப்பவள் எனக்கொரு ‪#‎வீல்செயாரு‬இருந்தா பெரிய உதவியா இருக்கும்டா மகனே! என்றார்.'
தும்பங்கேணி கொச்சிப்பாம் எனும் குடியேற்ற கிராமத்தில் வாழ்ந்துவரும் இவர்களால், இன்னொரு இடத்துக்கு சென்று வாழ முடியாத வயதாலும் வறுமையாலும் நலிவுற்ற நிலை. இப்பொழுதும் தனது கணவனும் நடக்கமுடியாத வயதை அடைந்து இருவரும் பாதுகாப்பற்ற குடிலில் வாழ்ந்துவருகின்றனா்.
"தன்னுடைய சுயநலத்தை மட்டும் கவனித்துக் கொண்டு, சுக போகத்துடன் வாழும் ஒருவனுக்கு நரகத்திலும் இடம் கிடைக்காது."விவேகானந்தரின் சிந்தனை்

இங்கும் அங்கும்...


இது கிழக்கு
அது வடக்கு
இங்கு மீன் மகள்
அங்கு யாழ் தேவி
இங்கு தென்மோடி
அங்கு வடமோடி
இங்கு தென்னை
அங்கு பனை
இங்கு கல்லடி
அங்கு சங்குப்பிட்டி
இங்கு விபுலாநந்தர் தமிழ்
அங்கு நாவலர் புகழ்
ஆனால்.....
எங்கும் தமிழர்கள் தானேபா
வாழுறோம்..


அழகாய் வைத்துக் கொள்ளுவம்!

எதை எழுதலாம், ம்ம்ம் உலகத்தில் பல மனிதர்கள் பல மாதிரிப்பா. சிலர் சிரிக்கிறத, பேசிறத பார்த்துக்கொண்டே இருக்கலாம். அப்புறம் நாம பேசமுடியாம இரசிக்க தொடங்கிடுவம்.

சிலபேர் சாப்பிடுறத பாத்துக்கொண்டே இருக்கலாம் சிலபேர் சாப்பிடுறத பாத்தால் 10 நாளைக்கு சாப்பிட முடியாது. 

சிறிய சம்பவம் ஒண்ணு,மகாத்மா காந்தி தாகூருடன் இருவருமாக ஒரு நாள் தங்கி இருந்தனராம். அப்போ அவர்கள் இருவரும் வோக்கிங் போக ரெடியானாங்க. இருவரும் வீட்டைவிட்டு வெளியில் வந்து சிறிது நடந்த பிறகு, தாகூர் சொன்னாராம் ஒரு கணம் நில்லுங்க வந்துடுறன் என திரும்பவும் உள்ளே சென்றார், நேரம் போயிம் தாகூர் வெளியில் வரல்லயாம்.

மனம் நல்ல வேலைக்காரன் ஆனால் மோசமான எஜமானன்!!

நம்மை தோற்கடிக்க வந்தவர்களை தோற்கடிப்பது தான் நியாயம். நம்மைப் பற்றி பிறர் இழிவாக சொல்லும்போது அதற்கு துவளாமல் வாடாத மனநிலையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். ஏன்டா நம்ம என்ன பண்ணினாலும் அதனைக் குறைசொல்ல என ஒரு குறூப் இருக்கும் உலகத்தில.
அவர்கள் சொல்லும் வாசகத்துக்கு வாடினால் அவர்கள் வெற்றிபெற்றுவிடுகிறார்கள் நாம் வாழ் நாள் எல்லாம் வாடி இருக்கவேண்டியதுதான். இது என் வாழ்நாளில் கற்றுக்கொண்ட பாடம்.