ADS 468x60

04 January 2014

கடவுளாப்பாத்து அனுப்பி இருக்கிறாரு

 கிளிநொச்சி அன்று யுத்தவேக்காடு மாறாத பூமியாக இருந்தது. அது மனிதர்களை மாத்திரமல்ல மரம் செடி கொடிகளையும் இழந்த பூமி. எனக்கு இந்த மக்களோடு பழக கிடைத்த நாட்கள் கடவுள் தந்த தருணங்கள் தான் என நினைக்கிறேன் . 

'என்னுடய கணவர் நித்தியானந்தராசா, என்னுடைய மகன் மார்களான ஜெயராசா, மகேந்திரன் மற்று என்னுடைய மகள் ஜெகலதா என்னுடைய அம்மா, தங்கச்சி, அவன்ட ரெண்டு பிள்ளைகள், என்ட மூத்த அண்ணா அசோக்குமார், என்னுடைய மருமகள் அருந்ததி எல்லாமாக பத்து உயிர்களை பறிகொடுத்து பரிதவிக்கிறன் தம்பி' என ஆரம்பித்தார் இராசலெட்சுமி. திருநகர் கிளிநொச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பின்தங்கிய கிராமமாகும். அங்குதான் இவர்கள் வாழ்ந்து வருகின்றர்கள்.

01 January 2014

முடியுமானால் முன்னுக்கு வா !!

என் நூறாவது கவிதை... மகிழ்சியுடன்  மண் வாசம் சேர்த்தவாறே!!







ஜலதரங்கம் பாடும் கடற்கரை வெற்றிலை போட்ட கிழக்குவாணம் வீடு சென்று திரும்பும் தென்னறல்
நெழிந்து நெழிந்து
வளைந்து வளைந்து ஒளிந்து ஒளிந்து ஓடுகின்ற வாவி
சங்கீதம் பாடும் மழை-அதில் நனைந்து நனைந்து சலங்கை ஒலிக்குத் வேளான்மை வயல்

என்னதான் என்றாலும் எண்ட ஊர்போலில்லை

தங்க மணல் ஜொலிக்கும் கடற்கரை
தாவி மீன் பாடிடும் குளக்கரை
செல்லும் இடம் எல்லாம் ஆற்றங்கரை
சேர்ந்து மணம் பரப்பும் தாமரை

ஒரு தாய்மக்கள் நாம்!

நெறிப்படுத்தும் மதம்
நேசிக்கும் இனம்
தொழிலுக்கான சாதி
பிரிந்து வாழும் பிரதேசம்
இவையெல்லாம்
மனிதாபிமானத்தின் வேர்கள்