ADS 468x60

29 January 2022

இயற்கையுர இறக்குமதி பொருளாதாரத்தை பாதிக்குமா?

இன்று நாடு எல்லாவிதத்திலும் பல இடர்பாடுகளை மற்றும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. அடிப்படையில் விவசாய நாடாக உள்ள இலங்கை, திடீர் கொள்கை மாற்றங்களால் பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. நீண்டகாலத்தில் பலன் கொடுக்கும் கொள்கைகளாக இருந்தாலும் குறுங்காலத்தில் பல பின்னடைவினை நாட்டு விவசாயிகளுக்கு இது ஏற்படுத்தத் தவறவில்லை என்றே சொல்லவேண்டும். அதுபோக இதற்கு மாற்றீடாகக் கொண்டுவரப்பட்ட கரிம உர இறக்குமதிகள் ஒரு விமர்சனப் பொருளாகவே பார்க்கப்படுகின்றது.

கரிம அல்லது இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 27, 2021 திகதியிட்ட அமைச்சரவைப் பத்திரம் மூலம் கனிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. வுpவசாய அமைச்சி; உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரமான நானோ யூரியாவின் பயன்பாட்டை ஊக்குவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மற்றும் நானோ யூரியாவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.

23 January 2022

கொவிட்டினை முறியடித்து மூன்று துறையால் முன்னேவரும் இலங்கைப் பொருளாதாரம்- 2022.

இன்று மக்கள் அதிகம் பொருளாதாரம் பற்றி படிப்படியாக அறியத் துவங்கியுள்ளனர். நாடு எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான பின்னடைவை மக்கள் தமது வாழ்க்கையில் முதல் தடைவ அனுபவித்து வருவதனால் அதனுடைய தாக்கத்தை அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதற்கு வலுவூட்டும் வகையில், தற்போதைய பொருளாதார நிலை குறித்து சமூகத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. கொவிட்-19 தாக்கம் இலங்கையைப் பொறுத்தவரை வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இரண்டையும் மோசமாகப் பாதித்துள்ளது.  எமது நாட்டிற்கு அதிக அந்நிய வருவாய் ஈட்டித்தரும் மூன்று துறைகளான சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவபாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியன கொண்டுள்ள சவால்கள் இத்துறைகள் மூலமான உட்பெறுகையை அல்லது அந்நிய ஈட்டத்தினை கேள்விக்குள்ளாக்கியமையே டொலர் நெருக்கடிக்கான நேரடிக்காரணங்கள்.

22 January 2022

மட்டக்களப்பு மாவட்டத்தை கொவிட்டின் பின்னரான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க உள்ள யோசனைகள்!

பல வளக்குவியல்களுடன் ஒரு அழகான பாரம்பரிய வரலாற்றை தன்னகத்தே கொண்ட மாவட்டம் மட்டக்களப்பாகும். உலகில் பல நாடுகள் வளர்சியடைய இருந்த சவால்கள் என்றால் அந்தந்த நாட்டில் காணப்பட்ட வளப்பற்றாக்குறைகளே. ஆனால் பகைமை காரணமாக வளம் இருந்தும் வழாமல் போன சரித்திரம் எமது மக்களுக்குக் கிடைத்த சாபக்கேடு. இதற்கிடையில் பல முதலைகளின் வளச்சுரண்டல்கள் இன்று பூதாகரமாக ஆரம்பித்து இருப்பது நம்மை நாம் இன்னும் அறியவில்லை என்பதனை காட்டுகின்றது. நாம் நமது சந்ததிகளுடன் பல ஆண்டுகள் வாழ இங்குள்ள இயற்கை மனித வளங்கள் மிகத் தாராளமானவை.

18 January 2022

பணிப்பாளர் Dr.சுகுணன் புதிய நியமனம்- காலத்தின் கட்டாயம்!

இன்று ஒரு செய்தி கேட்டு அகமகிழ்ந்து போனேன். நண்பரும் வைத்தியருமாகிய சுகுணன் எமது மாவட்டத்துக்கு பிராந்தியப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஒரு மாற்றத்துக்கான ஆண்டாக இருக்கின்றது என்பதற்கு இது சான்றாக இருக்கும்.

நண்பர் வைத்தியர் சுகுணன் அவர்கள் எனக்கு நெடுநாளாக தெரிந்த ஒரு பெரு முயற்சியாளர், வேலையில் புதுமை புனைகின்ற ஒரு அசாத்திய நிருவாகத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புக்கு சான்றாக உள்ளவர். பிற உத்தியோகத்தர்களுடன் மிகச் சாதுரியமாக தொடர்பாடலை மேற்கொண்டு திட்டமிட்ட பல செயற்பாடுகளை நடத்திக்காட்டும் வல்லவர். 

13 January 2022

நாம் நமது பொங்கல் விழாவுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதமாக தை மாதம் விளங்குகின்றது. தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக, பொங்கல் தினமாக உலகத் தமிழினம் கொண்டாடி வருகிறது. தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும் இந்த நாள் ஆரம்பத்தில் கொண்டாடப்பட்டது. இனியும் கொண்டாடவேண்டும்.

நமக்கென்று இருக்கின்ற அடையாளம், பண்பாடு, விழா அதை நாம் போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் நாம் அதை விடுத்து நட்சத்திரங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆரிய விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நமக்கென தமிழருக்கென பிரத்தியேகமாக இருக்கின்ற தை மாதத்தில் வருகின்ற தமிழ் முதலாம் திகதியினை கொண்டாடுவது குறைந்து வருகின்றது. 

02 January 2022

எமது நாட்டில் கொவிட்டின் பின் கட்டியெழுப்பவேண்டிய தொழில்துறைகள்!

கொவிட்டின் பின்னர் பல முக்கிய துறைகள் பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ளன. அரசாங்கம் என்ற வகையில் பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதும் அவை மீட்டெடுக்க பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. இருப்பினும் எமது நாட்டினைப் பொறுத்தவரையில் சிறிய மற்றும் நடுதடதர தொழில்துறையினரே அதிக பங்களிப்பினை எமது நாட்டின் பொருளாதார வளர்சிக்கு கொடுத்துவந்தாலும் இவை இன்னும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கின்றது.

இலங்கையில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறையானது நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்குள்ளும் 90% வீதம் பங்களிப்பை வழங்குகிறது, அது மொத்த வேலைவாய்ப்பில் 45% வீதம் வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 52% வீதம் பங்களிப்பை வழங்குகிறது. கடந்த சில தசாப்தங்களாக, சேவைத் தொழில், உற்பத்தி, பேக்கேஜிங், உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய MSME துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல்மிக்க ஆதாரமாக வளர்ந்துள்ளது. 

01 January 2022

புத்தாண்டில் எடுக்கும் உறுதிப்பாடுகளை பலர் தொடர்கின்றோமா!

தமிழரின் புதிய ஆண்டு பிறக்கப்போகின்றது, ஆங்கிலப் புதுவருடம் பிறந்திருக்கின்றது இந்தவேளையில் எத்தனை பேர் நம்மை வாழ்த்தினார்கள்! வாழ்த்துவார்கள்! எவ்வளவு பேர் நமக்கு வாழ்த்து செய்திகள் அனுப்பினார்கள்! அனுப்புவார்கள்! இந்த ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் மனதுக்கு மகிழ்ச்சியாய் இருக்கின்றன இருக்கும் ஊக்குவிக்கின்றன மற்றும் ஊக்குவிக்கும். இவை அனைத்தும் நிகழவேண்டும் என்பதே அனைவரின் ஆசையாக இருக்கும். நிகழும் என்று நம்புவோம்.

நம்மில் பலர் பொதுவில் ஒவ்வொரு புத்தாண்டிலும் அநேகர் பல பல உறுதிகளை எடுப்பார்கள். உதாரணமாக 

நான் இனி வீணாகக் காலம் கழிக்கமாட்டேன்.

நான் இனி முறையாய் உடற்பயிற்சி செய் வேன்.

நான் இனி குடிக்க மாட்டேன்.

நான் நன்றாகப் படிக்கவேண்டும்.

அரசு 2022 இல் என்ன செய்ய வேண்டும்?

நாம் பல வரலாறுனகளைப் பார்த்திருக்கின்றோம், கடந்து வந்திருக்கின்றோம். அவற்றில் வெற்றிகளும் தோல்விகளும் அந்தந்த தலைமையின் நம்பிக்கையிலேயே தங்கியிருந்துள்ளது என்பது நாம் கற்றுக்கொண்ட பாடங்கள் இல்லையா. 

மிகவும் அவநம்பிக்கையான நேரங்களில் கூட, ஒரு நல்ல நாளுக்கான நம்பிக்கை எப்போதும் இருக்கும். 2022 விடியும் போது, இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது என்பது இரகசியமல்ல. இருப்பினும், மீண்டு வருவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது, மேலும் இந்த தாமதமான நேரத்திலும் சரியான முடிவுகள் எடுக்கப்பட்டால் பேரழிவு தரும் பொருளாதாரச் சரிவைத் நாம் தவிர்க்கலாம். இப்போதைய தேவை மீழெழுச்சி கொண்ட ஒரு தலைமைத்துவம், அந்தத் தலைமையின் மூலம் இந்தப் படுகுழியில் இருந்து வெளிவர விரும்பும் இலங்கையின் அனைத்து மக்களினதும் ஒருங்கிணைந்த மற்றும் ஒருங்கிணைந்த முயற்சியுமாகும்.