கரிம அல்லது இயற்கை உரங்கள் மற்றும் இயற்கை பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஏப்ரல் 27, 2021 திகதியிட்ட அமைச்சரவைப் பத்திரம் மூலம் கனிம உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி தடை செய்யப்பட்டது. வுpவசாய அமைச்சி; உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் மற்றும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திரவ உரமான நானோ யூரியாவின் பயன்பாட்டை ஊக்குவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு இயற்கை உரங்கள் மற்றும் நானோ யூரியாவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். களைகள் மற்றும் பிற பூச்சிகளைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லிகள் எதுவும் கிடைக்கவில்லை என்பது யாவரும் அறிந்ததே.
29 January 2022
இயற்கையுர இறக்குமதி பொருளாதாரத்தை பாதிக்குமா?
23 January 2022
கொவிட்டினை முறியடித்து மூன்று துறையால் முன்னேவரும் இலங்கைப் பொருளாதாரம்- 2022.
இன்று மக்கள் அதிகம் பொருளாதாரம் பற்றி படிப்படியாக அறியத் துவங்கியுள்ளனர். நாடு எதிர்கொண்டுவரும் சவால்களுக்கு மத்தியில் இவ்வாறான பின்னடைவை மக்கள் தமது வாழ்க்கையில் முதல் தடைவ அனுபவித்து வருவதனால் அதனுடைய தாக்கத்தை அவர்கள் உணர்ந்துவருகின்றனர். அதற்கு வலுவூட்டும் வகையில், தற்போதைய பொருளாதார நிலை குறித்து சமூகத்திலும் ஊடகங்களிலும் பரபரப்பான விவாதம் நடந்து வருகிறது. கொவிட்-19 தாக்கம் இலங்கையைப் பொறுத்தவரை வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் பொருளாதாரங்கள் இரண்டையும் மோசமாகப் பாதித்துள்ளது. எமது நாட்டிற்கு அதிக அந்நிய வருவாய் ஈட்டித்தரும் மூன்று துறைகளான சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலைவபாய்ப்பு மற்றும் ஏற்றுமதி ஆகியன கொண்டுள்ள சவால்கள் இத்துறைகள் மூலமான உட்பெறுகையை அல்லது அந்நிய ஈட்டத்தினை கேள்விக்குள்ளாக்கியமையே டொலர் நெருக்கடிக்கான நேரடிக்காரணங்கள்.
22 January 2022
மட்டக்களப்பு மாவட்டத்தை கொவிட்டின் பின்னரான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க உள்ள யோசனைகள்!
18 January 2022
பணிப்பாளர் Dr.சுகுணன் புதிய நியமனம்- காலத்தின் கட்டாயம்!
நண்பர் வைத்தியர் சுகுணன் அவர்கள் எனக்கு நெடுநாளாக தெரிந்த ஒரு பெரு முயற்சியாளர், வேலையில் புதுமை புனைகின்ற ஒரு அசாத்திய நிருவாகத் திறமை மற்றும் தலைமைத்துவப் பண்புக்கு சான்றாக உள்ளவர். பிற உத்தியோகத்தர்களுடன் மிகச் சாதுரியமாக தொடர்பாடலை மேற்கொண்டு திட்டமிட்ட பல செயற்பாடுகளை நடத்திக்காட்டும் வல்லவர்.
13 January 2022
நாம் நமது பொங்கல் விழாவுக்கு முக்கியம் கொடுப்பதில்லை.
நமக்கென்று இருக்கின்ற அடையாளம், பண்பாடு, விழா அதை நாம் போற்ற வேண்டும் அல்லவா! ஆனால் நாம் அதை விடுத்து நட்சத்திரங்களை முதன்மைப்படுத்தி ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஆரிய விழாக்களைக் கொண்டாடுகின்றோம். நமக்கென தமிழருக்கென பிரத்தியேகமாக இருக்கின்ற தை மாதத்தில் வருகின்ற தமிழ் முதலாம் திகதியினை கொண்டாடுவது குறைந்து வருகின்றது.
02 January 2022
எமது நாட்டில் கொவிட்டின் பின் கட்டியெழுப்பவேண்டிய தொழில்துறைகள்!
இலங்கையில் உள்ள நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறை (MSME) துறையானது நாட்டிலுள்ள அனைத்து துறைகளுக்குள்ளும் 90% வீதம் பங்களிப்பை வழங்குகிறது, அது மொத்த வேலைவாய்ப்பில் 45% வீதம் வேலைவாய்ப்பை வழங்குகிறது மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அது 52% வீதம் பங்களிப்பை வழங்குகிறது. கடந்த சில தசாப்தங்களாக, சேவைத் தொழில், உற்பத்தி, பேக்கேஜிங், உள்கட்டமைப்பு, உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய MSME துறையானது, இலங்கைப் பொருளாதாரத்தின் மிகவும் ஆற்றல்மிக்க ஆதாரமாக வளர்ந்துள்ளது.
01 January 2022
புத்தாண்டில் எடுக்கும் உறுதிப்பாடுகளை பலர் தொடர்கின்றோமா!
நம்மில் பலர் பொதுவில் ஒவ்வொரு புத்தாண்டிலும் அநேகர் பல பல உறுதிகளை எடுப்பார்கள். உதாரணமாக
• நான் இனி வீணாகக் காலம் கழிக்கமாட்டேன்.
• நான் இனி முறையாய் உடற்பயிற்சி செய் வேன்.
• நான் இனி குடிக்க மாட்டேன்.
• நான் நன்றாகப் படிக்கவேண்டும்.