ADS 468x60

19 May 2019

இலங்கையில் சிங்களவரும் தமிழரும்-01.

விஜயன் காலம் இருந்து இன்றுவரை இரு சமுகத்துக்குமான ஒற்றுமை மற்றும் வேறுபாடுகள் பலவாறு பல சாஸ்த்திரங்கள், நுர்ல்கள் ஊடாக தெரியப்படுத்து வந்துள்ளது. சிவபக்தனான இலங்கை வேந்தன் இராவணன் ஆண்ட கால அளவுக்கு தமிழர்களது பூர்வீகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்ன சண்டை சச்சரவு இருந்தாலும் அவை அனைத்தும் அரசியல் இலாபம் கருதி உருவாக்கப்பட்டவையே தவிர வேறு ஒன்றும் இல்லை. பல கசப்பான காலப்பகுதிகள் எம் கண்முன்னே தோன்றி மறையாமல் இல்லை. இருப்பினும் பல புரிதலும் ஒற்றுமைகளும் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. அவற்றை தேடி வளர்த்தெடுக்கவேண்டிய காலத்தனை நாம் உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

16 May 2019

முள்ளிவாய்க்கால் முடிவல்ல! போராடு இந்த எழில் தேசத்தைக் கட்டியெழுப்பலாம்.

நான் யுத்தத்தின்பின், கொடுமையான போரின் அனல் சற்றும் மாறாத தமிழ் மாவட்டங்களில் நேரடியாக மக்களுடன் வேலை செய்து, இம்மக்களின் தேவை, வேதனை, வலிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளை ஒன்றாய் வேலை செய்து அறிந்தவன் என்ற முறையில் இக்கட்டுரையை உரிமையுடன் வரைகின்றேன். 

அழகிய இலங்காபுரியின் வடக்கே வன்னி நிலத்தின் நடுநாயகமாக விளங்கும் 'வடக்கின் நெற்களஞ்சியம்' என கிளினொச்சி மாவட்டம் புகழ்தேத்தப்படுகிறது. இதன் அழகை 
'விழிகளில் வன்னி நிலம் அழகள்ளிச் சொரியும்
வேரில்லாச் செடியைப்போல் மயிலாடித் திரியும்
எழில் தோய்ந்த கிளினொச்சி வயல்கள் குலுங்கும்
எங்கும்; தமிழ் மணம் இன்பம் பரப்பும்' 

12 May 2019

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்.

இது காலத்துக்குப் பொருத்தமான ஒரு கூற்றாகும். அதாவது 'ஆட்சி செய்வதில் தவறிழைத்தவர்களை அறம் தண்டிக்கும்' என்பது இதனது பொருள். இது தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மை பெறும் சிலப்பதிகாரத்தில் உள்ள ஒரு சாராம்சம். நமக்கு தெரியாமல் அரசியலில் தவறு செய்தாலும் அதனை அறத்தின் வழியில் தண்டிக்கப்படும் அதனால் மன்னனும் மதுரையும் எரிந்து சாம்பராகியது. ஆனால் தெரிந்து, திட்டமிட்டு நமக்கெல்லாம் தெரியாமல் மக்களை மடையர்களாக்கி அரசியலை பாவித்து அடித்து நொறுக்குபவர்களும் இருக்கின்றனர். அவர்களை அவர்கள் செய்த ஊழ்வினை கைவிடாது. இந்த கண்ணகி விழாக்காலத்தில் இவற்றை தொடர்புபடுத்தி இந்த கட்டுரையை வரைகின்றேன்..

11 May 2019

மருந்தும் விருந்தும் மட்டக்களப்பிலல்லோ இருக்குதப்பா!

வசந்த காலம் வந்தால் ஐம்புலனுக்கும் விருந்துதான் கேளுங்கோ!. பூத்துக்குலுங்கும் மரங்கள் கண்களுக்கு விருந்து, அதில் புதிதாய் வரும் மணம் மூக்கினிற்கு விருந்து, காத்துக்கிடக்கும் தேனீக்கள் கள்ளையுண்ணும் சப்தம் காதினிற்கு விருந்து, கனிந்து கிடக்கும் பழங்கள் எங்கள் நாவினிற்கு விருந்து, காவடியும் காவியமும் கற்பூரச்சட்டிகளும், சேவடியைப் பணியும் திருப்தியும் மெய்யினிற்கு விருந்து அதுவே சொர்க்கத்தின் மருந்து.

04 May 2019

மேதினியை குளிர் ஆக்கிடுவாய்

வெந்து எரியுது எங்கள் குலம்- கண்ணில்
வேதனை கூடுது ஏது பலம்
முந்தி அறம் காத்த மூத்தவளே- வந்து
மேதினியில் சுகம் மேவுமம்மா!

03 May 2019

எது உண்மை? பயங்கரவாதமும் தமிழர்களும்!

மற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்குக் கருணை காட்டப்படும்.யேசுகிறிஸ்த்து.

இலங்கைத் திருநாடு இன்னும் ஈஸ்ட்டர் திருநாளில் இடம்பெற்ற இஸ்லாமிய தீவிரவாதத் தாக்குதலினால் பட்ட ரணத்தில் இருந்து மீளவில்லை. ஞாபகம் இருக்கிறது இறப்புக்களின் எண்ணிக்கையினை அதிகரித்தவண்ணம் இருந்த அன்றய காலைப் பொழுது. இத்தாக்குதல்கள் இலங்கையின் தேவாலயங்களில் தமிழர்கள் கலந்துகொள்ளும் பூசை நேரங்களை மையப்படுத்தியே நடைபெற்றிருக்கின்றமை தெரியவந்துள்ளது. அதுபோல் பிரபல நட்சத்திர கோட்டல்களில் குறிப்பாக அதிகம் வெளிநாட்டவர்கள் வந்துசெல்லும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளன. ஆனால் இங்கு தமிழர்கள் தாக்குப்படவேண்டும் என்ற பெரும்பாலான நோக்கத்தின் பின் இருக்கும் உண்மை என்ன என்பது எல்லோரது கேள்வியாக இருக்கின்றது. 

01 May 2019

உழைப்பாளன் வீழ்வதில்லை.


உழைப்பே உயர்வையும், மன நிறைவையும் தரும் - ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையுடன், தளர்வறியா உழைப்பின் மூலம், நம் பிரதேசத்தின்; பெருமையை உயர்த்தியவர், வைத்தியர், சமுக அக்கறையாளர், பேச்சாளர், கவிஞ்ஞர், சிந்தனையாளர், நிருவாகி, எழுத்தாளர், ஒருங்கிணைப்பாளர், நல்ல சாரதி, பாடகர், ஆற்றுப்படுத்துனர் அதற்கும் மேல் ஒரு அரசியலாளர் என பல தொழில் தகமைகளை தன்னகத்தே கொண்ட ஒருவரைப்பற்றி சொல்ல நினைக்கின்றேன். இவரை வைத்திய அத்தியட்சகர் எனத்தான் பலருக்கும் தெரியும் ஆனால் தனது கடின உழைப்பினால் அது தவிர்ந்த ஏனைய திறன்களை தன்னகத்தே வளர்த்துக்கொண்ட ஒரு சாதனையாளன்தான் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவி உயர்த்தப்பட்டிருக்கும் வைத்தியர் கு.சுகுணன் எனில் மிகையில்லை.