ADS 468x60

29 December 2019

பொறுப்புக் கூறவேண்டிய அரசியல்வாதிகளும் பொறுமையிழக்கும் மட்டு மக்களும்.

எதிர்வரும் 2020 பொதுத் தேர்தலுக்காக எமது நாடு தயாராகிக்கொண்டிருக்கின்றது. அதே நேரம் இந்த நாட்டினை கொண்டு நடாத்த பதிய ஜனாதிபதி தெரிவாகி விட்டார். அவர் ஏற்கனவே செயலில் இறங்கி சேவை செய்ய ஆரம்பித்து விட்டார்.

எமது மக்களுக்கு சேவை செய்ய என ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்ய கிட்டத்தட்ட 600 கோடி ரூபாய்க்களை செலவு செய்து உள்ளோம். அத்தனை ரூபாக்களும் நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் உழைப்பாளரின் வரிப்பணத்தில் செலவிடப்பட்டுள்ளது.

அடுத்த தேர்தலுக்காக கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது. அந்தப் பணமும் வியர்வை சிந்தி, இரத்தத்தினை சாறாக்கி இராப்பகலாக செய்த வேலையில் கிடைத்த வேதனப் பணம் என்பதை அதைகொடுத்த மக்களே மறந்துவிடுவதுதான் வேதனைக்குரியது. 

22 December 2019

காலநிலைக்கு முகம்கொடுக்கும் அபிவிருத்தி இல்லாமையே அழிவுக்குக் காரணம்.

இந்நாட்களில் பெய்துவரும் அடைமழையானது மக்களுக்கும், பயணிகளுக்கு மிகவும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயமாக மாறிவிட்டது. மாலை நேரங்களில் திடீரென பெய்யும் இம்மழையினால் வீதிகளில் வெள்ளம் ஏற்படுவதோடு நீண்ட நேர போக்குவரத்து இடையூறையும் ஏற்படுத்துகின்றது. இவ்வாறு தடைப்பட்ட வீதிகளானது பயணிகளுக்கு தங்களுடைய வீடுகளுக்கான வழியை கண்டுபிடிப்பதே சாத்தியமற்றதாக மாற்றுகிறது. இலங்கையின் மழைவீழ்ச்சி ஒழுங்கானது மாற்றமடைவதோடு காலநிலையால் பாதிப்படையும் நாடுகளில் ஒன்றாக இலங்கையும் கருதப்பட்டு வருகின்றமயால் இன்று நாம் காலநிலை நெகிழ்திறனுடன் கூடிய உள்கட்டமைப்பு அமைப்பு பற்றிய தீர்வுகளை எடுக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.

21 December 2019

ஒற்றுமை வளர்க்கும் கி.ப.க நண்பர்களின் ஒன்றுகூடல்

ஒரு குழந்தை கனவானாகவோ, சீமாட்டியாகவோ இருக்கும்படி செய்வது கல்வியல்ல; நல்ல மனிதனாக இருக்கச் செய்வதே கல்வி! 
-ஹெர்பர்ட் ஸ்பென்ஸர்

எனும் நல்வாக்கியத்துடன், இன்றய நாளில் நாம் பல விடயங்களுக்காக ஒன்றுகூடவேண்டியிருக்கிறது. 

நமது வாழ்க்கை வட்டத்தில் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழகத்தில் கற்று இன்று ஒன்றரை தசாப்தம் கடந்து பல அனுபவம், கல்வி, திறன் மேம்பாடுடையவர்களாக ஒன்றுகூடியிருக்கின்றோம். இந்த ஒன்றுகூடல் எம்மை பனியிலும், வெயிலிலும், காட்டிலும், மேட்டிலும் கஷ்ட்டப்பட்டு உழைத்த வரிப்பணத்தில் நாம் இன்று இலவசமாகப் பயின்றவர்கள்.  இன்று நாம் ஊதியத்துக்காக மக்கள் பணியென செய்யும் வேலை தவிர, எமது சமுகத்துக்கு பிரதியுபகாரம் இன்றி எதை நாம் செய்துள்ளோம்? எனச் சிந்திக்க வேண்டிய உன்னத தருணத்தில் சிந்திக்கத் தூண்டியுள்ளது.

05 December 2019

பொருளாதார முன்னகர்வில் புதிய அரசிக்கு இருக்கவேண்டிய கருசனை என்ன?

புதிய ஜனாதிபதியும் அமைச்சரவையும் அவர்களுக்கு முன் பல சவால்களை எதிர்கொள்கின்றனர் , ஏனெனில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்கள் வரையில் அவர்கள் ஒரு சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பை கட்டியெழுப்ப வேண்டிய தேவை காணப்படுகின்றது . அவர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்று, இலங்கை மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வேலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாகும்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு ILO (ச.தொ.அ) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் மொத்த வேலைவாய்ப்புகளில் மூன்றில் இரண்டு பங்கு சிறிய பொருளாதார அலகுகளால் வழங்கப்படுகிறது, அதாவது கொள்கை வகுப்பாளர்கள் இந்த அலகுகளை பொருளாதாரத்தின் மையப் பகுதியாகவும், சமூக மேம்பாட்டு உத்திகளாகவும் கருத வேண்டும்.

24 November 2019

கி.ப.க.பழைய மாணவர்கள் -டெங்கு நோய் குறைப்பு விழிப்புணர்வு

இன்று இலங்கை முழுவதும் ஆபத்தான பேசுபொருளாலாக இருப்பது ஆட்கொல்லி நோயாக அடையாளங்காணப்பட்ட 'டெங்கு நோய் தொற்று' பற்றிய பேச்சாகும். 2018 சென்ற வருடத்தின் 12 மாதங்களிலும்; சேர்த்து 51,659 சந்தேகப்படும் டெங்கு நோய்களும்,  தீவு பூராகவுமுள்ள எல்லா நோய்பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு அறிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடத்தின் நொவம்பர் மாதத்தில் மாத்திரம் 73601 சந்தேகப்படும் டெங்கு நோயாளிகள் அடையாளங் காணப்பட்டிருப்பது மிகப்பெரிய ஆபத்தாக பதிவாகியுள்ளது.

இந்த ஆபத்து மட்டக்களப்பு மற்று கிழக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. பருவகால மழை ஆரம்பித்துள்ள இந்த வேளையில் இதன் பரவல் தீவிரமடைந்து வருகின்றது என அறிக்கை தெரிவிக்கின்றது. 

18 November 2019

புதிய ஜனாதிபதியிடம் மக்களின் நியாயமான வேண்டுதல்!

நாம் இன்று ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து 80 விகித வாக்களிப்பை நாட்டில் வழங்கி ஒரு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுத்த பெருமைக்குரிய குடிமக்களாக இருக்கின்றோம். எனவே புதிதாக பதவியேறறிருக்கும் இருக்கும் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களே உங்கள் செயற்பாடுகளை நாம் நம்புகின்றோம். புதிதாக உங்களை வாழ்த்துகின்றோம். இன்று ஜனாதிபதியாவதற்கு மக்கள் தமது கடமையையை நிறைவேற்றியுள்ள நிலையில் மக்களின் வேண்டுதலை ஜனாதிபதி அவர்கள் நிறைவேற்றும் நேரமிது. பாமர மக்கள் அவரிடம் எதிர்பார்த்து நிற்கும் வேண்டுதல்களை அவர்களில் ஒருத்தன் என்றவகையில் அவற்றை முன்னுரிமைப்படுத்தி இங்கு வேண்டுதல்களாக முன்வைத்துள்ளேன்.

17 November 2019

இலங்கையின் புதிய ஜனாதிபதியும் முன்னே உள்ள சவால்களும்.

வணக்கம், தேர்தலுக்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம், இப்போது அது முடிவடைவடைந்துவிட்டது. நாட்டின் எட்டாவது புதிய தலைவரை அமோக வாக்குவீதத்தில் வெற்றிபெறச் செய்துள்ளனர். அதற்கு முதலில் வெள்ளிச்சரம் தனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றது.

நாடும், நாட்டு மக்களும் பல இன்னல்களை சந்தித்து, கடந்த அரசாங்கத்தை வெறுத்து அந்த வெறுப்பினை கோபத்தினை புதிய கட்சி, புதிய வேட்பாளர் ஒருவரை தெரிவுசெய்வதன் ஊடாக தீர்த்துள்ளனர்.

08 November 2019

மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணம்: இனத்தால் ஒன்றானாலும் தேவையால் மாறுபட்டவர்கள்- ஐனாதிபதி தேர்தல் 1982-2015.

ஆய்வுக்கட்டுரை 

பின்புலம்.
வடகிழக்கில் உள்ள தமிழ் வாக்காளர்கள் பல தேர்தல் சூழலை கடந்து வந்த அனுபவசாலிகள். பல விதமான தேர்தல்களை பலவிதமான மனிதர்களுடன், கட்சிகளுடன், கொள்கைகளுடன், அதனால்  நாம் இத்தனை காலமும் வடக்குடன் ஒப்பிடும்பொழுது மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தின் கடந்துவந்த தேர்தல் களம், முற்றிலும் மாறுபட்டது, இந்த ஆண்டு ஒரு புதிய ஐனாதிபதியினையும் அடுத்த ஆண்டு ஒரு புதிய பிரதமரினையும் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு வாய்ந்த ஒரு கூட்டமாக வாக்காளர்கள் பார்க்கப்படுகின்றனர். 

வேறுபட்ட வாக்குப் பதிவுகள் கீழுள்ள அட்டவணையில் ஆண்டு மற்றும் மாவட்டம் கட்சி என்ற ரீதியில் தரப்பட்டுள்ளது

Source :https://en.wikipedia.org

05 November 2019

விவசாயிகளின் குரல்வளையை நசிக்கும் வெட்டுவாய்ப் பிரச்சாரம்.

இன்று ஒரு புதிதான சற்று விசனமான செய்தி ஒன்று பரவி வருவதனைப் சமுகவலைத் தளங்களில் பார்க்ககூடியதாக இருக்கின்றது. அது, திடீரென வந்த காட்டுவெள்ளம் காரணமாக இம்முறை மட்டக்களப்பில் செய்கை பண்ணப்பட்டுள்ள 150,000 ஏக்கர் வயல் நிலங்களில் கிட்டத்தட்ட 20-30 வீதம் வரையான வாவிக்கரையை அண்டிய வெறும் ஓரிருவார இளம் வேளாண்மைப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்ததே.

இவற்றின் மூலம் இந்த வெள்ளநீர் ஆரம்பத்திலேயே வடிந்து ஓடாவிடின் எமது மாவட்ட விவசாயிகள் பெறும் சுமார் 20-30 வரையான மெற்றிக்தொன் விளைச்சல் பாதிக்கப்படலாம் என்பது எனது கணிப்பு.

29 October 2019

இருவயது உலக ஆசான்- சுஜித்

என்ன வளம் திருநாட்டில் இல்லை
இந்தியாவே நாசாவின் பிள்ளை
உலகிற்கு உணவூட்டும் நாடு
ஊiமையும பேசிய இறை வீடு

விஞ்ஞானமும் அதை மிஞ்சிய மெய்ஞானமும்
அஞ்ஞானம் அகற்ற அருகதையான சொத்து
இருந்தும் பிள்ளையை எடுத்தென்ன செத்து

26 October 2019

அரசியலை தீர்மானிப்பது பொருளாதார வாக்குறுதிகளா?

ஒரு நாட்டின் ஜனநாயகதினை பலப்படுத்தும் அதே நேரம் பொருளாதாரத்தினை பலவீனப்படுத்தும் பாரிய செலவீனமாக தேர்தல் பார்க்கப்படுகின்றது. இலங்கையில் ஒவ்வொரு தேர்தல் நிறைவடையும் தறுவாயிலும் நமது நாடு செலவின் உச்சத்துக்கே சென்று விடுகின்றது. அதற்காக எமது பொருளாதாரம் பாரிய விலைகொடுக்க வேண்டி நேருவது அனைவருக்கும் தெரிந்த விடயம். 

இவ்வாறான தேர்தல் காலங்களில் எமது பொருளாதாரம் மூன்று வகையான சவால்களை எதிர்நோக்குகின்றது அவற்றையே இங்கு பார்க்க உள்ளோம். அதற்கு முன்னர் ஏன் பொருளாதாரம் வாக்களிப்பில செல்வாக்கு செலுத்தவேண்டும் என்பதனை சற்று பார்த்துவிட்டு வரலாம்.

13 October 2019

மாவட்டத்தின் வறுமையை ஒழிக்கும் கிராமப்புற முயற்சியாண்மை.

எமது நாட்டில் சுதந்திரம் கிடைத்து 7 தசாப்தம் கடந்தும் பல கைத்தொழில்மயமாக்கலை நிறுவியும் இன்னும் எமது நாடு அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளின் பட்டியலில் வறுமைக்கோட்டிற்குள் உள்ள மக்கள் தொகையினை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இருந்து விடுபடவில்லை.

அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழுகின்ற மொத்த சனத்தொகையில் கிட்டத்தட்ட 80 விகிதமானவர்கள்  விவசாய கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவர்களுக்கான பல புதிது புதிதாக அறிமுகப்படுத்தும் சேவைத்திட்டங்கள் உண்மையில் பாரபட்சமின்றி சென்றடைகின்றதா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆதனால்தான் இன்று வறுமை என்னும் குறை வருவாய் உள்ள கூடிய குடும்பங்களைக் கொண்ட மாவட்டமாக இன்னும் முதனிலை வகுப்பது வெட்கம் வெட்கம்.

05 October 2019

இப்படியே தமிழர் அரசியல்போனால் என்னவாகும்?

நாம் இன்று அரசியலை முழுமையாக அறியமுடியாதவர்களாக, அதில் இருந்து அப்பால் வைக்கப்பட்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றோம். இதனால் ஒவ்வொரு தடவையும் அரசியல் மூலம் நம்பிக்கை இழந்த ஒரு வர்க்கமாக நலிவுற்றவர்களை அதிகம் பெருக்கிக்கொள்ளும் இனமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். இவ்வாறான நிலை தொடராமல் இருக்க என்னவகையான அரசியல் எமக்கு இன்றய நிலையில் தேவையாக இருக்கின்றது? என்பதனையே இக்கட்டுரையில் உற்றுநோக்க இருக்கின்றோம். 

01 October 2019

சிறுவர்கள்- கல்வியறிவின்மை- வறுமை ஒரு மீள முடியாத நச்சு வட்டம்

இன்றைய குளந்தைகளே நாளைய தலைவர்கள். அவர்கள்தான் விஞ்ஞானிகளாகவும், விமானிகளாகவும், ஞானிகளாகவும், வழிகாட்டிகளாகவும் என பல வடிவங்களில் இந்த உலகத்தினை முன்னே கொண்டு செல்லும் மாபெரும் சக்திகள் என்பதை இந்த உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது. அதனால்தான் பல அபிவிருத்தியடைந்த நாடுகள் இவர்களை வளர்த்துவிடுவதில் அதிக செலவினையும், அக்கறையினையும் செலுத்திவருவதனைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

ஆகவேதான் சிறுவர்களிடையே காணப்படும் வறுமையை கணிசமான அளவு குறைத்து இல்லாமல் செய்யும் ஒரு செயற்திட்டம் எல்லா நாடுகளிடையேயும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் உள்ளடங்கலாக முக்கியமானதொன்றாகப் பார்க்கப்படுகின்றது. 

23 September 2019

அடி வாங்கும் போதும் அகிம்ஷையே மோதும்

சிறியோர் பெரியோர் வலியோர் என்பது
நாட்டினில் எதற்காக – வேண்டாம்
வேற்றுமை நமக்காக

சட்டம் நீதி ஒழுக்கம் எல்லாம் இருப்பது எதற்காக – அதை
சமமாய் மதித்து சகலரும் ஒன்றாய் வாழனும் அதற்காக

எமெக்கென களத்தில் எழுச்சி கொண்டு எழுவது எதற்காக
தர்மத்தை மதிக்கும் தமிழர்கள் எங்கள் உரிமை அதற்காக

21 September 2019

தமிழர்கள் இந்நாட்டின் தலைவரை தெரிவுசெய்துவிட்டனர்.

ஒரு நாடு வளர வேண்டும் என்றால் நல்ல தலைமை வேண்டும். நல்ல தலைமை வேண்டும் என்றால் சுயநலம் இல்ல தலைவன் வேண்டும்.. அவ்வாறு இல்லாத காரணத்தினால் ஓவ்வொருவரும் தமது வாழ்க்கையைக் கொணடுநடாத்த இன்று பல பிரச்சினைகள் சவால்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. பொருளாதார, சமுகஈ சுற்றுச்சூழல், வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழல் என பல சவால்களை நாளாந்தம் எதிர்நோக்கி வருகின்றனர்.

17 September 2019

நல்ல தலைவனை தெரிவுசெய்யும் சுய தீர்மானம் எடுக்கும் சக்தி.

நல்லிணக்கம் என்பது பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முழுமையான தேவையாக இருக்கவேண்டும். நம் நாட்டின் பன்முகத்தன்மையை பல இன, பல மத, மற்றும் பல மொழி தேசமாக உள்ளதை உணர்ந்து அதற்கமைவாக இல்லாது ஒரு நவீனமயமாக்கப்பட்ட, நிலையான, வளமான தேசமாக நமது திறனைப் பயன்படுத்தி முன்னேறுவதற்கான வழி எதுவுமில்லை. . '

14 September 2019

பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்தும்; அபிவிருத்திக்கான திட்டமிடல்

வளர்முக நாடுகள் உலக மயமாக்கத்தின் பின்னர் புதிய விடயங்களை அறிந்து கொண்டிருக்கின்றனர். இருப்பினும் எமது இலங்கை போன்ற அரசியல் சிக்கல் நிறைந்த நாடுகள் திட்டமிடல் முறையில் ஏற்படும் இழு பறியினால் ஒப்பீட்டளவில் பின் தங்கியே காணப்படுகின்றன.

அபிவிருத்தியடைந்த நாட்டிற்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டிற்கும் இடையே பாரிய இடைவெளி தொடர்ந்து அதிகரித்து செல்வதனை காணக்கூடியதாக உள்ளது. இது தலாவருமான ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் உணரப்பட்டுள்ளது.

கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!

திக்கெட்டும் உன் பெயர் தெரியாதார் யாரும் உண்டோ
தமிழ் திகழ் மட்டு மண் வந்தமர்ந்த நீல கண்டா
நிற்கட்டும் என்று சொல்ல நீண்டெழுந்த நந்தி கண்டு
நிலை கெட்டு வெள்ளையனை நெடுந்தூரம் விரட்டியவா
தக்கித் தகதி என நடம் ஆடி நலம் அருளும்
தான்தோன்றி ஈஸ்வரனாய் தமிழீழ மண்ணின் கிழக்கே
கொக்கட்டிச் சோலை தனில் குடி கொண்ட ஈஸ்வரனே!
கொடும் பாவி எந்தனுக்கு குறை களைவதென்நாளோ!

31 August 2019

பொருளாதார வளர்ச்சிக்கு கால்கோலாக இருப்பது மத்திய வங்கி

எமது நாட்டைபொறுத்தவரை பல அபிவிருத்திச் செயற்பாடுகளில் மத்தியவங்கியானது பல வகையிலும் முக்கிய வகிபாகத்தினை வகித்து வருகின்றது. அவைசார்ந்த பல விடயங்களை நாம் இக்கட்டுரை மூலமாக பார்க்கலாம். இது மாணவர்களுக்கும் மற்றும் வங்கித்துறைசார்ந்தவர்களுக்கும் பயனுள்ள முறையில் இருக்கும்.

1. இறுதிக் கடன் ஈவோன் (Lender of last resort)

வர்த்தக வங்கிகளுக்கு நிதிப் பிரச்சனைகள் ஏற்படுகின்ற வேளையில் இறுதியாக கடன் கொடுக்கும் பொறுப்பு மத்திய வங்கியே பொறுப்பெடுத்துள்ளது. எதிர்பாராத விதமாக ஒரு வர்த்தக வங்கிக்கு நிதிப் பிரச்சனை ஏற்படுகின்ற போது அதனை கொடுத்து உதவும் பொறுப்பு மத்திய வங்கியே கொண்டுள்ளது. இத் தொழிற்பாட்டினை மத்திய வங்கி ஆற்றும் போது ஏற்கனவே வர்த்தக வங்கிகளினால் கழிவு செய்யப்பட்ட உண்டியல்களை மறுகழிவுடன மாற்றிக் கொடுக்கின்றது. இதனால் வர்த்தக வங்கிகளுக்கும் திரவத்தன்மை குறைந்த சொத்துகளில் முதலீடு செய்து இலாபம் உழைக்கும் சந்தர்ப்பத்தினை பெறும் வாய்ப்பு இருக்கின்றது.

25 August 2019

எழுந்த வாருங்களேன்

எங்கள் உயிர்களே வந்து சேருங்களேன்
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!
வெற்றி நமதே சொந்த தேசம் நமதே!

உணர்வுகள் ஒன்றி அனைவரும் ஒன்றாய்
உரிமைகள் வெல்ல ஓர் வழி நின்றால்
வெற்றி நமதே!

குரோதங்கள் மறந்து மனங்களைத் திறந்து
வளங்களைக் காக்க கைகளைத் கோர்த்தால்
வெற்றி நமதே!

18 August 2019

தமிழனுக்கு நாடுதான் ஒன்றில்லை ஆள, நமக்கென்று ஒரு பண்பாடும் இல்லையா வாழ!

நாம் எதற்காக சண்டை போடுகின்றோம், அல்லது எதை வைத்துக்கொண்டு சண்டை போடுகின்றோம்?. நாம் தமிழர்கள், எமது கலாசாரம், பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு நாங்கள் ஒரு தனித்துவமான குடிகளாக சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே இத்தனை சண்டை, பேச்சுவார்த்தை மற்றும் அரசியல் எல்லாமே. ஆனால் நம்மில் எத்தனை பேர் எமக்கென்று இருக்கும் கலாசாரத்தினை, பண்பாட்டை, நாகரிகத்தினை பின்பற்றுவதனூடாக நாம் மற்றவர்களின் கலாசாரத்தில் இருந்து வேறுபட்டவர்கள் எனக் காட்டுகின்றோம் என்றால், அது பூச்சியமாகவே இருக்கும்.

11 August 2019

தேர்தல் கால வாக்குறுதிகளும் தெருவில் நிற்கும் பட்டதாரிகளும்.

இன்று எந்தச் செய்தித் தலைப்பினை எடுத்தாலும் வேலையில்லாப் பட்டதாரிகள் பற்றியே பேசப்படுகின்றன. இவ்வாறான ஒரு சூழலில், ஊழியச் சந்தையில் (Labour Market) என்ன வகையான வேலைவாய்ப்புக்கள் மற்றும் திறன்கள் தேவைப்படுகின்றன? எவ்வாறு கைநிறைய சம்பளம் கிடைக்கின்றன, அத்துடன் எவ்வாறு தொழில்வாய்ப்புக்கு இன்றய இளைஞர் யுவதிகளை நெறிப்படுத்துவது என்பன போன்றவற்றினை சிந்திக்கவேண்டிய நேரமிது.

10 August 2019

அன்றும்_இன்றும்.

அந்தக் காலங்களில் பொழுதுபோக்கு என்றால் விளையாட்டு மாத்திரமே இருந்தது. எமது ஊரின் மேற்குப் புறத்தில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அது எமது அழகான சொத்தாக இருந்தது. எங்கும் பச்சைப்புல்வெளி அங்கு ஒரு குப்பைகூடக் கிடையாது. உருண்டு பிரண்டு விளையாடி மகிழ்வோம். பாடசாலை விட்டதும் அந்த குளம்தான் தஞ்சம். இப்போதுபோல அந்தக்காலத்தில் நிறைய பிரத்தியேக வகுப்புக்களும் இருந்ததில்லை. இன்று அந்தக் குளத்தையே நாசமாக்கி விட்டார்கள். அதைப்பற்றி நான் சொல்ல வரவில்லை.
நாங்கள் சின்னவர்கள் என்பதனால் ரவுண்டப்புக்களில் பிடிபடவில்லை. ஆனால் கேம்களில் சென்றி அடிக்க களியேற்றுவதற்கு எங்களையெல்லாம் செட்டிபாளையம் கேம்புக்கு புடிச்சிக்கொண்டு போய் வேலைவாங்கியது ஞாபகம் வருகின்றது. ஆக இவர்கள் பிடித்துக்கொண்டு போகும் அளவுக்கு நாங்கள் பெரியவர்கள் இல்லை. அதனால் கொஞ்சம் பயம் இல்லாமல் விளையாடினோம்.

08 August 2019

கொள்கை பேசி ஏமாற்றும் கோமளிகளுக்காக!

கொள்கை அது எமது ஒவ்வொரு தமிழ் குடிமகனின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் சார்ந்த நிறைவாக இருக்கணும் முதலில். 'சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம்' என்பது அனைவருக்கும் தெரியும். எமது மக்கள் அனர்த்தம், வறுமை, வேலைவாய்ப்பின்மை, திறனின்மை, குடும்பச்சுமை, கடன்சுமை, தொழில் இழப்பு காரணமாக நலிவுற்று அன்றாட வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாமல் மாற்றானிடம் அடிமையாக, வேற்றானிடம் வேலையாளாக, வேண்டிய மதத்திற்கு மாற்றப்பட்டு நுண் கடனால் நுடங்கி நிற்கும் இவர்களிடம் ஏன்டா இன்னும் இன்னும் போய் கொள்கை என்று கொடுமைப்படுத்துறீங்க!

07 August 2019

அரசியன் தொழில் முயற்சியாண்மை திட்டம் அபிவிருத்திக்கான ஆரம்பமாகுமா?

நமது நாட்டை பொருளாதார ரீதியில் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள பல வேலைத்திட்டங்களை எமது அரசாங்கம் காலத்துக்கு காலம் முன்னெடுத்து வந்துள்ளது. தற்போதைய அரசும் மக்களுக்கு தொழில் முயற்சியாண்மையை ஊக்குவிக்க ஒரு திட்டத்தினை முன்னெடுத்து, கடந்த பாதீட்டில் அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் பரிந்துரை செய்திருந்தது. ஆதன் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தினை முன்னேற்றவும் முயற்சியாண்மையை ஊக்குவிக்கவும் இதுவரைக்கும் ரூபாய் 88 பில்லியன் பெறுமானமுள்ள 55,000 கடனுதவிகளை வழங்கியுள்ளது.

04 August 2019

சுற்றுச்சூழல் தூய்மை பற்றி எந்த மதம் எடுத்துரைக்கின்றது?

அனைவருக்கும் தெரியும், நாம் வாழும் இந்த பூமியில், எதிர்கால தலைமுறையும் நலமாக வாழ வேண்டுமெனில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது அவசியம். உலக நாடுகளுக்கு சவாலான பிரச்னையாக, சுற்றுச்சூழல் பாதிப்பு உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பநிலை உயர்கிறது. மழை குறைகிறது. அன்டார்டிகா, இமயமலை பகுதிகளில் பனிகட்டிகள் உருகுவதால், கடல்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவை இன்று அனைவருக்கும் பொதுவாக தெரிந்த விடயம்.

வேலையில்லாப் பட்டதாரி

இன்று கிராமமாகிக் கொண்டிருக்கும் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். அதனால் சவால்களை விட சந்தர்பங்கள் எம்மத்தியில் கொட்டிக்கிடப்பதனைக் காணுகின்றோம். நாம் ஒருவருடன் அல்லது ஒரு குழுவுடன் தொடர்பைப் பேணுவதற்கான மார்க்கங்கள் இன்று பட்டி தொட்டி எங்கும் பரவிக் கிடக்கின்றது. 

பட்டப்படிப்பு முடிக்காத எவரும், நாம் காணும்படியாக தொழிலுக்காக பாதைகளை நாடி பதாதைகளை தூக்கிய சரித்திரம் எனக்கு தெரிந்த வகையில் இருந்தது கிடையாது. அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் தொழிலில் தாமாகவே தேடி ஈடுபட, பட்டதாரிகள் இவ்வளவு கற்றுக்கொண்ட பின்னரும் தாமாகத் தொழிலில் ஈடுபட முடியாத நிலையை பலர் வன்மையாக விமர்சித்து வருகின்றார்கள். மறுபக்கம் எமது மனப்பாங்கில் 'கோழி மேய்ப்பதென்றாலும் கோர்ணமெண்டில் செய்யணும்' என்ற என்ற அகற்ற முடியாத எண்ணத்துடன் நமது சமுகம் இருந்து விட்டதனால் மிகவும் கஸ்ட்டப்பட்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் முடிப்பவர்களுக்கு அரச வேலை எடுத்து அரசாங்க ஊழியர்களாக இருப்பதற்கே விரும்புகின்றனர்.

03 August 2019

தான்தோன்றி அப்பன் ஊரு

தென்றல் வந்து வீசும்
தேன் கதலி வாசம்
திக்கெட்டும் உன்னைப் பேசும் 
தீராத நோய்கள் தீரும்
கொக்கட்டிச் சோலை வந்தவரே தேவா!!
தொண்டைக்குள்ள தான் நஞ்சை அடைத்தாய்!
தொல்லை கொடுத்தோர் நெஞ்சை உடைத்தாய்!
எல்லைத் தெய்வமாய் இங்கு உறைந்தாய்!
ஏற்றுத் தொழுவோர் நெஞ்சில் நிறைந்தாய்!

மீன்தோன்றி பாட்டிசைக்கும்
தான்தோன்றி அப்பன் ஊரு
நான்தோன்றி விட்டேனய்யா !!
நாயாக போனேன் பாரு

தெய்வத்துக்கே ஆதி
பார்வதியின் பாதி
உய்ய வழி இல்லாமலே
உந்தன் அடிவந்து சேர்ந்தேன்

வறுமை தமிழரை பீடித்துள்ள ஒரு பிணி; அது தற்காலிகமானதொன்று.

யுத்தத்தின் பின்னர் குறிப்பாக தமிழ் மக்களிடையே வறுமை ஒரு சவாலாகவே உள்ளது. இது எமது பரம்பரை வியாதியல்ல பாதியில் வந்ததுதான். எமது வறுமையான நிலைக்குக் காரணம் போர், இயற்கை சீற்றங்கள், காலநிலையில் சடுதியான ஏற்றத்தாழ்வுகள் கல்வி அறிவின்மை, அடிமைத்தனம் போன்றவைகளுடன் அரசியல் ரீதியான தாக்கங்களும் காரணமாக இருக்கின்றன.

02 August 2019

வறுமை இருக்கும் வரை அடிமைத்தனத்தை அழிக்க முடியாது.

வறுமையானது சிலரது வாழ்நாட்களில் கடந்துபோகும் ஒரு தற்காலிக நோய்மட்டுமே!

உழைப்பாளர் வர்க்கம் என்பது, அரசியல் விடுதலைக்காகவும் பண்ணையடிமை முறையின் எச்சங்களை ஒழித்துக் கட்டவும் விவசாயிகள் அனைவரின் போராட்டத்தை தலைமை தாங்க வல்ல ஓரே சக்தி என்பது மட்டுமல்ல, கிராமப்புற ஏழை மக்களுடன் கூட்டுசேர்ந்து உற்பத்திச் சாதன்ங்களின் மீதான தனியுடைமையை ஒழித்துக் கட்டி, சோஷலிச மாற்றங்களை நிறைவேற்ற வல்ல சக்தியும் இதுதான் என்று அறியமுடிகின்றது. இந்த வர்க்கத்தினை வாக்குக்காக மாத்திரம் பயன்படுத்தி வாக்கை காப்பற்ற விருப்பமில்லாத வர்க்கத்தை வேரறுக்கும் வர்க்கம் நாம். நாம் மிகப்பெரிய சக்தி என்பதை எப்பொழுதும் மனதில் வைக்கவேண்டும்.

01 August 2019

நல்ல தொண்டன் நல்ல தலைவனாகிறான்..

ஒரு நல்ல தலைவராக மாறுவது பற்றி நாங்கள் அதிகம் பேசுகிறோம், ஆனால் முதலில் ஒரு நல்ல தொண்டனாக அல்லது பின்தொடர்பவனாக மாறுவது பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நீங்கள் ஒரு சிறந்த தலைவராக இருக்க விரும்பினால், நீங்கள் முதலில் ஒரு சிறந்த தொண்டனாய் பின்பற்றுபவராக மாற வேண்டும்.

இது மிகவும் அரிதாகவே விவாதிக்கப்பட்டாலும், வரலாற்றின் மிகப் பெரிய தலைவர்கள் அனைவருமே தங்கள் தொடக்கத்தை தொண்டராகவே தொடர்ந்திருந்தனர். வரலாற்றின் மோசமான தலைவர்கள் ஒருபோதும் இன்னொருரு தலைவரை பின்பற்றக் கற்றுக்கொள்ளவில்லை.

24 July 2019

இளைஞர்களே இது இருந்தால் வேலை நிட்சயம்: தயாராகுங்கள்

இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! நீங்கள் பல்கலைக்கழகங்களில் படிக்கின்ற காலங்களில் உங்களை மேம்படுத்த தொழில்நுட்பத்துடன் கைகோர்த்துக்கொள்ளுதல் முக்கியமானதாகும் இதை நான் சொல்லித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

நேற்று நான் ஒரு வேலைக்காக அப்பிளிக்கேசன் போடுவதற்காக சென்றபோது, அவர்கள் ஒன்லைன் அப்ளிக்கேசன் போடச் சொன்னதும், அங்கு சென்று அதை திறந்து ஒவ்வொன்றாக நிரப்பத் துவங்கினேன். குறிப்பாக லிங்டிங் லிங்கை இணைக்கும்படி ஒரு இடைவெளியும், ஏனைய எமது சொந்த வுளக்ஸ்பொட், யூரியுப் ஆகியவற்றினை இணைக்கச் சொல்லி இன்னும் ஒரு இடைவெளியுமாக இருப்பதைப் பார்த்தேன்.

23 July 2019

கறுத்த நாள்!

மனித முகத்துடன் 
மிருகங்கள் நுழைந்த நாள்
வெள்ளையுள்ளம் கொண்டவர்களை
வெட்டி வீசி
கறுப்பாக்கிய நாள்!




முடியாதவர்களால்
முடிந்தவர்களை முழையோடு 
கிள்ளி எறிந்த நாள்!

வர்த்தகம் எல்லாம்
வழித்து எறியப்பட்ட நாள்!

வாசகங்கள் இடமாறிய நாள்!
நிராயுதபாணிகளின் குருதிகுடிக்க
வெலிக்கடைச் சிறையில் 
வேலிகளே பயிரை மேய்ந்த நாள்!

இளைஞர்களின் நெஞ்சில்
இறுமாப்பை விதைத்த நாள்!

18 July 2019

நரகமாக மாறும் நாட்டுபப்புற கடற்கரைகள்.


நான் கவலையுடன் ஒரு விடயத்தினை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். சென்ற ஞாயிறு எனது தேத்தாத்தீவு கிராமத்தில் உள்ள கடற்கரைக்கு மருமக்களுடன் வழமைபோல் சென்றேன். 
அது கடற்கரையாக அல்ல குப்பைக்கரையாக காட்சியளித்தது. பார்க்கும்போது எனக்கு ஒரு நரகலோக வெறுப்பை உண்டு பண்ணியது. செல்லும் வழியெல்லாம் உடைந்த போத்தல்களின் பீங்கான் துகள்களும், சொப்பின், பிளாஸ்ட்டிக் கழிவுகளும் பரந்து மணல் இடையே மறைந்தும் மறையாமலும் கரை நெடிகிலும் கண்டு கவலையடைந்தேன்.

14 July 2019

தேர்தல் என்றால் தெருத் தெருவாக வருவாரே!

நாங்கள் எல்லாம் காலா காலமாக தமிழரசிக்கட்சி, அதன் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அரசியலில் ஏதோ இவர்களுக்கு மாத்திரம் ஆதரவாக ஒரு வகையில் ஈடுபட்டுக்கொண்டு வருகின்றோம். தெரியாதவர்கள்கூட இந்தக் கட்சியில் கேட்டாலும், அவர்களுக்கு வாக்களித்து வழியனுப்புவதுதான் எமது வழக்கமாக இருந்து வருகின்றது.


இது இந்தக் கட்சியில் நிற்பவர்களுக்கான பெரிய செல்வாக்கில் அவர்களை தேர்வு செய்த காலம் மலையேறி இன்று கட்சிக்காக கிடைத்த வாக்கில் கரைசேந்தவர்களே அதிகம் அதிகம். இதை யாரும் மறுக்க முடியுமா?

07 July 2019

கதிர்காம பாதயாத்திரை: முருகன் அழைத்தால்தான் போகலாம்!-01

காலைப் பொழுது 'பில் பில்' என விடியத்துவங்கியதும், 'கரார் கரார்' என வீட்டின் வெளியே ஒரே சத்தம்.  வானொலிப் பெட்டி வெளியில் பக்திகானங்களை ஒலித்த வண்ணம் இருந்தது. 

'இஞ்சே உரிச்ச தேங்காயெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு சும்மா பாத்திட்டு இருக்காம அதுக்கு முடிகூட்டி எடுங்க பாப்பம்' என அம்மா அப்பாவுக்கு கட்டளை இடுவதுமாக ஒரே பரபரப்பாக இருப்பதை உணர்ந்து, நானும் நேரகாலத்துக்கு எழும்பி வெளியில் வந்தேன்.

06 July 2019

விடுதலைக்காய்!

மனிதாபிமானம்- அது
மனுக்குலத்துக்கு அவமானம்
மனச்சாட்சி இல்லாமல்
மன்றில் உரைக்கின்றீரே
கடத்தப்பட்டு காணாமல் போன
தடுக்கப்பட்டு சிறையில் உள்ள
எம் இனத்துக்கு மாத்திரம்
தடைச் சட்டமா!
சரண் புகுந்தோர்கு அங்கு
கொலைப் பட்டமா!
உண்மையை கண்டறிய
ஒன்பது வருடம் தேவையா!
நல்லாட்சி என்றால்
இல்லாதார்க்கு நீதி எங்கே!!
எல்லோரும் பிரார்த்திப்போம்!
எம்மினத்தின் விடுதலைக்காய்!

25 June 2019

மட்டக்களப்பு கிராமத்து மக்களும் அபிவிருத்தியாளர்களும்

எத்தனை தான் வசதிகள் நகரங்களில் இருந்தாலும், இன்னொருவரை பார்ப்பதற்கும், உறவாடவும் வசதியில்லாத நரகவாழ்க்கைதான் நகர வாழ்க்கை. கனகாலம் கண்டு தம்பிய இஞ்சால வாருங்கோ, மத்தியானம் சாப்பிட்டுத்துப்போங்கோ, இளணீர் ஒன்று குடிப்பமா, எருமைப்பால் இருக்கிறது போடவா, சோளத்த முறிச்செடுங்க தம்பி அப்பப்பா எத்தனை உபசரிப்பு, விருந்தோம்பல் வினாக்கள் எம் கிராமத்து மக்களின் வெள்ளை மனங்களின் வரவேற்பில்.

மரத்துக்கு கீழ பாயை தட்டி பணிய இருக்கச் சொல்லி, செம்பில தண்ணியக்கொண்டு செய்யும் சேமம் இருக்கே! அட 5 ஸ்டார்கொட்டலிலும் கிடையாது போங்க.

24 June 2019

எமக்கு எது வசதி என்பதில் எது சரி என்பதனை மறந்துவிடுகின்றோம்.

சரியானவற்றையே செய்யுங்கள், உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடிய நல்லவற்றை வழங்குங்கள், எப்பொழுதும் பிறர் மீது அக்கறையுடன் இருங்கள். என ஒரு பெரியவர் கூறினார். நமக்கு சரியானவற்றினை செய்யக்கூடியவர்கள் தேவை. சரியான செயற்பாடுகள் மாத்திரமே நல்ல மாற்றங்களை எம்மத்தியில் ஏற்படுத்தும். கடந்த 7,000 ஆண்டுகளில் சிறிய கிராமங்கள் பேரூர்களாகவும், பேரூர்கள் நகரங்களாகவும், நகரங்கள் பெரு நகரங்களாகவும் மாறின. அவ்வாறு நிகழ்கையில், சோலைகள் அழிந்து நகரங்களாகி, நகரங்கள் நரகங்களாகிவிட்டன. எல்லாம் தத்தமது வசதி கருதியே நடக்கின்றன.

22 June 2019

இந்த முகங்களில் நீங்கள் எதை படித்துக் கொள்ளுகிறீா்கள்!

இவைகள் இலகுவில் ஏமாறக்கூடிய முகங்கள்! ஏங்கித் தவிக்கும் முகங்கள், பசியில் வாடிய முகங்கள், பாசத்துக்கு ஏங்கும் முகங்கள் இல்லலையா! ஆம், பாதுகாப்பால், பணத்தால், இடத்தால், வசதியால் கல்வியால் மிகவும் பின்தங்கிய குழந்தைகள், மிக்க நலிவுற்றவர்கள் எதிலும் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்கள்... இதனால்தான் இவா்களை இலவில் மதமாற்றிக் கொள்ளுகிறார்கள், திருமணம் செய்து இடையில் விட்டுச் செல்லுகிறார்கள், இவர்களது வியர்வை சிந்திய உற்பத்தியை கண்ணைப் பொத்தி களவாடுகிறார்கள், இவா்களது ஆட்டையும் மாட்டையும் அடாத விலைக்கு ஆட்டைபோடுகிறார்கள், அஞ்சிக்கும் பத்துக்கும் நிலத்தை சுவீகரிக்கிறார்கள் பாவம்.

21 June 2019

கல்முனைக் கலவரம்: செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்.

எல்லா மனிதர்களையும் நம்பிவிடுவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது பேராபத்து. என ஆபிரஹாம் லிங்கன் அவர்கள் சொன்னார். உண்மை, நாம் நம்பி வாக்களித்த நம்பி இருந்த தலைவர்கள் எங்கே போய் ஒளிந்துகொண்டார்களோ தெரியவில்லை. 

ஆனால் நாம் இன்று நம்பாமல் இருந்த சிங்கள மதகுருமார்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர், எமது குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத்தர முன்வந்து இருப்பது பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. அவர்களின் அர்பணிப்பு அளப்பரியதாக இருக்கின்றது. இதனை தமிழர்;களாகிய நாங்கள் பெரிதும் மதிக்கின்றோம். இது எமது போராட்டத்துக்கு வலுவான பெறுமதி சேர்க்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

15 June 2019

பல்கலைக்கழகம் ஒரு வரம்!

நண்பர்கள் ஒன்றாகக் கூடி
நடந்தவை ஒன்றல்ல கோடி
எல்லாமே எமக்கங்கு படி
இருந்தாலும் இனிக்கின்ற நொடி

சிரித்தோம் சிறந்தோம்
சிறகடித்துப் பறந்தோம்
இருந்தோம் கிடந்தோம்
நடந்தோம் திரிந்தோம்

12 June 2019

தேனகத் தீவின் பெண்ணே!

தேனகத் தீவின் பெண்ணே!
தேவதை நீயடியோ! நீ
மீன்மகள் பாடிட ஆடும்-
மேனகை ஊர்வசியோ!

திரும்பிடும் போதொரு போதை- வன
வாகரைத் தேனல்லோ- நீ
துரு துரு துரு எனப் பேசும்
பைங்கிளி நீயல்லோ!

சல சல சல என ஓசை
நெல்மணி உன் கொலிசு
கல கல கல என வீசும்- குளிர்
கார்த்திகை தென்றலடி

இயற்கையின் அழகினில்
இளமையின் அரங்கத்தில்
இயல் இசை நாடகம் நீ
நாடகத்தினிலே உன்னை விரும்பும்
நாயகன் நான் தானே

09 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 02

தொடர்ச்சி.....

சுதந்திரத்துக்கு பின்னான சர்வாதிகார ஆட்சி

அநேகமாக சுதந்திரத்தின் பின் சுத்தமான ஐனநாயக ஆட்சி இடம்பெறாது சர்வாதிகாரம் கலந்த ஆட்சியே இடம்பெற்று வருவதாக விமர்சிக்கின்றனர். இதை ஒரு முழுமையான சர்வாதிகாரம் என்றுகூட அழைக்க முடியவில்லை. ஏனெனில் அது ஜனநாயகத்தின் பேரில் அதைப் பயன்படுத்தி செய்யப்படும் சர்வாதிகார ஆட்சியேயாகும்.

ஒரு சுதந்திர இலங்கையில் குடிமகனின் உரிமைப்படி பார்த்தால், அவருக்கு சுதந்திரமாகச் சிந்திப்பதற்கு, அதனை வெளிப்படுத்துவதற்கு, ஒன்று கூடுவதற்கு, சொத்துக்களைச் சேர்ப்பதற்கு மற்றும் தனக்கு பிடித்தமானவரை வாக்களித்து தெரிவு செய்வதற்கு அதுபோல் அனைவரையும் சமமாக நடாத்துவதற்கும் இலங்கைச் சட்டம் பரிந்துரைத்துள்ளது.

07 June 2019

புரட்சியை ஏற்படுத்துமா! புதிய தலைமைக்கான எதிர்பார்ப்பு. 01

மக்கள் எதிர்பார்கும் தலைமை

இன்று எம்மிடையே யாரிடமாவது தற்போது இலங்கையை ஆளுவதற்கான ஒரு பலமான தலைமை தேவையா? எனக் கேட்டால், ஆம் எனத்தான் பதில் வருகின்றது. 

இன்று நாங்கள் சுறுசுறுப்பாக ஓடியாடிக் கொண்டிருக்கும் தலைவர்களைப் பார்த்தால் உற்சாகம் பிறக்கிறது எமக்கு. பல பிரதேசங்களுக்கும் சுற்றி வருபவர்கள் என்றால், 'எல்லாமும் தெரிந்தவர்' என்பது போல் ஒரு மரியாதை பிறக்கிறது. அலுவலகமாக இருந்தாலும் , நாட்டை ஆளும் ஆட்சியாளர்களாக இருந்தாலும், அவர்கள் 'சிறந்த பேச்சாளார்களாக' இருந்து விட்டால் உச்சி மோர்ந்து கொண்டாடத் தொடங்கி விடுகிறோம்.

03 June 2019

கிழக்கின் தாகம்.


நாமும் ஒரு சிறுபான்மையினர், இதையெல்லாம்விடவும் எத்தனையோ கெடுபிடிகளை அனுபவித்து இழந்து இறந்து இன்னும் ஒரு கொடுமையின் நினைவில் வாழ்ந்து வருகின்றோம். இதனால் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீதியின்றி சிறையிலும், காணாமற்போனோர் பெற்றோர் கண்ணீரிலும், நிலமும், நீரும் பார்த்திருக்க பறிபோய்க்கொண்டிருக்கும் ஆபத்தினைவிட வேறெதுவும் முன்னுரிமையான பிரச்சனையாக இருக்கின்றதா?

02 June 2019

பொறுப்பில்லாத தலைவர்களும் அடையாளம் இழக்கும் தமிழர்களும்.

சாதாரண அரச உத்தியோகத்தர் ஒருவர் அரசாங்கத்தில் வெறும் 30 ஆயிரம் தொடங்கி 50 ஆயிரம் வரை சம்பளம் எடுக்ப்பதற்கு வாராந்த, மாதாந்த, காலாண்டு மற்றும் வருடாந்த என்ற வகையில் முன்னேற்ற அறிக்கைகளை முறையாக சமர்ப்பிக்க வேண்டும். அரசில் மக்களின் வரிப்பணத்தில் அவர்களுக்கு சேவை செய்பவர்கள் பொறுப்புள்ள முறையில் வகைகூற என AR மற்றும் FR என பல சட்டதிட்டங்கள் இருக்கின்றன. 

ஆனால்; அரசியல்வாதிகளில் அதிகமானோர் மக்கள் இவற்றை அறியாதவாறு மூளைச் சலவை செய்யப்பட்டுவருகின்றனர். நான் ஒரு சவாலை விடுகின்றேன் அது முடியுமானால் ஐந்து வருடத்தில் அல்லது கடந்த தசாப்தத்திலாவது தமிழர்களால் தெரிவுசெய்யப்பட்ட, குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் அவர்களுடய முன்னேற்ற அறிக்கையினை எமது மக்களுக்கு காட்ட முடியுமா? 

"Won the toss Loss the Test" இலங்கையணி எப்போ வெற்றிபெறும்?

ஒரு காலத்தில் இலங்கை வீரர்களின் கிரிக்கெட் என்றால் அலாதிப்பிரியம். அப்போது உள்ள அனைத்து வீரர்களின் பெயரும் எமக்கு தெரியும் அளவுக்கு அவர்கள் உலகில் சிறப்பான வீரர்களாக இருந்து எம்மை மகிழ்ச்சிப்படுத்தினர். உலகக் கோப்பையினை போராடி வென்று எமக்கு பெருமை சேர்த்துத்தந்தனர்.

அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவர்களின் குழுவலிமை, ஒற்றுமை என்பனவற்றுடன் இன, மொழிகடந்து அனைத்து இனத்தினையும் பிரதிபலிக்கும் வீரர்கள் இருந்தனர். அத்துடன்  அனைவரையும் அரவணைத்து உற்சாகப்படுத்தும் தலைமைத்துவம், நிதானமான உணர்ச்சிவசப்படாத வீரர்கள் என அடுக்கிக்கொண்டு போகலாம்.